என் மலர்tooltip icon

    உலகம்

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேல் பயணம் - வெளியுறவு மந்திரி தகவல்
    X

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேல் பயணம் - வெளியுறவு மந்திரி தகவல்

    • காசா மீது இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
    • இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு இடையே போர் சூழல் நிலவி வரும் நிலையில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. தனது 2 போர் கப்பல்களை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பி உள்ளது.

    மேலும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் பேசினார். இதற்கிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்வதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

    இதுதொடர்பாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரீன்-ஜீன்-பியர் கூறும்போது, "இஸ்ரேலுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேலுக்குச் செல்ல உள்ளார். அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

    பின்னர் ஜோ பைடன், ஜோர்டான் தலைநகர் அம்மானுக்குச் சென்று அங்கு ஜோர்டான் மன்னர் அப்துல்லா, எகிப்து அதிபர் அப்தெல் பக்தா எல்-சிசி, பாலஸ்தீனிய மேற்கு கரை அதிபர் மஹ்மூத் அப்பாஸ் ஆகியோரை சந்திக்கிறார்.

    அப்போது பாலஸ்தீன மக்களின் கண்ணியம் மற்றும் உரிமைக்காக ஹமாஸ் நிற்கவில்லை என்பதை வலியுறுத்துவார். மேலும் காசாவில் உள்ள பொதுமக்களின் மனிதாபிமான தேவைகள் குறித்து விவாதிப்பார் என்றார்.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நாளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்துப் பேசுகிறார். ஹமாஸ் அமைப்பு மீதான தாக்குதல் குறித்து இருவரும் விவாதிக்கிறார்கள்.

    ஏற்கனவே அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன், இஸ்ரேலுக்குச் சென்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்து பேசி இருந்தார். இதற்கிடையே ஜோ பைடனின் இஸ்ரேல் பயணம் குறித்து ஆன்டனி பிளிங்கன் கூறும்போது, இஸ்ரேலுடன் அமெரிக்காவின் ஒற்றுமையை ஜோ பைடன் மீண்டும் உறுதிப்படுத்துவார். ஹமாஸ் பிடித்த பணயக் கைதிகளை விடுவிக்கவும் அவர் முயற்சி செய்வார்.

    ஹமாசுக்கு பயனளிக்க கூடிய வகையிலும், பொது மக்களின் உயிரிழப்புகளை குறைக்கும் மனிதாபிமான உதவிகள் காசாவுக்குள் நுழைய அனுமதிக்கும் வகையிலும் இஸ்ரேல் எவ்வாறு தனது நடவடிக்ைக களை மேற்கொள்ளும் என்பதை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கேட்பார் என்றார்.

    ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் காசா மீது இஸ்ரேலின் முப்படைகளும் தாக்குதல் நடத்த தயார் நிலையில் உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் இஸ்ரேல் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    Next Story
    ×