என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • கூகுள், மெட்டா, அமேசான் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பணிநீக்கம் செய்கின்றன
    • ப்ளிசார்டு தலைவர் மற்றும் தலைமை டிசைன் அதிகாரியும் வெளியேறுகின்றனர்

    உலக பொருளாதாரம், பல்வேறு காரணங்களுக்காக நலிவடைந்து வருவதாக செய்திகள் வெளிவரும் நிலையில் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்கள் வருவாய் வீழ்ச்சியை சமாளிக்க ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

    கூகுள், மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் பணியாளர்களை பெருமளவில் பணிநீக்கம் செய்கின்றன.

    இப்பட்டியலில் தற்போது ஆபரேட்டிங் சிஸ்டம் எனப்படும் "இயங்குதள முறைமை" தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனமான அமெரிக்காவின் "மைக்ரோசாஃப்ட்", விளையாட்டு மென்பொருள் துறைகளில் ஊழியர்களை குறைக்கிறது.

    மைக்ரோசாஃப்ட் கேமிங் பிரிவில் "ஆக்டிவிஷன் ப்ளிசார்டு" (Activision Blizzard) மற்றும் "எக்ஸ்பாக்ஸ்" (Xbox) ஆகியவற்றில் சுமார் 22,000 பேர் பணியாற்றுகின்றனர்.

    இப்பிரிவுகளில் 1900 பேர் பணி இழக்கின்றனர்.

    ப்ளிசார்டு தலைவர் மைக் பாரா (Mike Ybarra) மற்றும் முதன்மை டிசைன் அதிகாரி ஆலன் அதாம் (Allen Adham) ஆகியோரும் நிறுவனத்தை விட்டு வெளியேறுகின்றனர்.

    ஆனால், வேலை இழக்கும் பணியாளர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய இருப்பதாகவும், விளையாட்டுத் துறையில் மக்களுக்கு பயன்படும் வகையில் புதுமைகளை கொண்டு வருவதில் தொடர்ந்து செயல்படுவோம் என்றும் மைக்ரோசாப்ட் தெரிவித்தது.

    சுமார் 1 வருடம் முன்பு 10 ஆயிரம் பணியாளர்களை மைக்ரோசாப்ட் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    • ஐகான் ஆஃப் தி ஸீஸ் கப்பலின் மதிப்பு சுமார் 2 பில்லியன் டாலர்கள்
    • இதன் 6 எஞ்சின்கள் எல்என்ஜி (LNG) எரிபொருளில் செயல்படுகின்றன

    நேற்று, புளோரிடா மாநில மியாமி பகுதியில் உள்ள பிஸ்கேன் பே (Biscayne Bay) கடற்கரை பகுதியிலிருந்து உலகின் மிகப் பெரிய சொகுசு கப்பலான "ஐகான் ஆஃப் தெ ஸீஸ்" (Icon of the seas) தனது முதல் பயணத்தை தொடர்ந்தது.


    7 நாள் சுற்றுப்பயணத்திற்காக பயணிகளுடன் புறப்பட்ட ராயல் கரிபியன் (Royal Caribbean) எனும் கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த சொகுசு கப்பலின் மொத்த நீளம் 1200 அடி ஆகும்.


    "இக்கப்பல், உலகின் தலைசிறந்த விடுமுறை கால அனுபவத்தை மக்களுக்கு வழங்க 50 வருடங்களாக நாங்கள் இத்துறையில் பெற்ற அனுபவத்தின் சங்கமம். பல தலைமுறையினருடன் குடும்பங்கள் தங்களின் சுற்றுலா கனவுகளை ஒரே நேரத்தில் நிறைவேற்றி கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது" என ராயல் கரிபியன் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜேசன் லிபர்டி தெரிவித்தார்.

    இக்கப்பலின் மதிப்பு, சுமார் $2 பில்லியன் ஆகும்.

    குவான்டம் வகை கப்பல்கள் எனப்படும் இத்தகைய உல்லாச கப்பல்களில் அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டாலும் சுற்றுச்சூழலுக்கு நன்மை விளைவிக்கும் பொருட்களே இதை உருவாக்குவதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.


    ஐகான் ஆஃப் தெ ஸீஸ் கப்பலில் 20 தளங்கள் உள்ளன.

    இதில் 6 நீர்சறுக்கு விளையாட்டு அரங்கங்கள், 7 நீச்சல் குளங்கள், பனிச்சறுக்கு விளையாட்டு மைதானம், பெரிய திரையரங்கம், 40 உணவகங்கள், பல மதுபான கூடங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கங்கள், ஓய்வு அறைகள் என அனைத்து விதமான உல்லாச மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளது.

    இதில் அதிகபட்சமாக 7,600 பயணிகள் மற்றும் 2350 பணியாளர்கள் தங்க அனைத்து வசதிகளும் உள்ளன.

    எல்என்ஜி (LNG) எரிபொருளில் இதன் 6 எஞ்சின்கள் செயல்படுகின்றன.

    50க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் மற்றும் நகைச்சுவை கலைக்குழுவினரும், பெரிய ஆர்கெஸ்ட்ரா குழுவும் பயணிகளை மகிழ்விக்க உள்ளனர்.

    பின்லாந்து நாட்டின் டுர்கு (Turku) கப்பல் கட்டுமான தளத்தில் 900 நாட்களில் இக்கப்பல் உருவாக்கப்பட்டது.

    பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஈஃபில் கோபுரத்தின் உயரத்தை விட ஐகான் ஆஃப் தெ ஸீஸ் கப்பலின் உயரம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகளுக்கான முகமை, காசாவில் மனிதநேய உதவிகளை செய்து வருகிறது.
    • 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்களது உயிர்வாழ்விற்காக சார்ந்து உள்ளனர்.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

    இதில் 1200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்தனர்.

    இதையடுத்து ஹமாஸ் நிர்வகித்து வரும் காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. இதில் 26 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். மூன்று மாதங்களுக்கு மேலாக போர் நீடித்து கொண்டிருக்கிறது.

    இதற்கிடையே இஸ்ரேல் மீதான அக்டோபர் 7-ந்தேதி தாக்குதலில் ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் முகமையை சேர்ந்த ஊழியர்கள் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு தெரிவித்தது.

    ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகளுக்கான முகமை, காசாவில மனிதநேய உதவிகளை செய்து வருகிறது. இதில் 13 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் பாலஸ்தீனியர்கள். இந்த முகமை மீதான குற்றச்சாட்டையடுத்து சில ஊழியர்களை ஐ.நா. பணிநீக்கம் செய்தது.

    இந்நிலையில் ஐ.நா. வின் பாலஸ்தீன அகதிகள் முகமைக்கு நிதி உதவியை நிறுத்துவதாக அமெரிக்கா, இங்கிலாந்து அறிவித்தன. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறும்போது, "இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் அமைப்பு ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப் படும் குற்றச்சாட்டு அதிர்ச்சி அளிக்கிறது. அந்த அமைப்புக்கு நிதிஉதவி அளிப்பது நிறுத்தி வைக்கப்படுகிறது" என்று தெரிவித்தது. இதே கருத்தை இங்கிலாந்தும் தெரிவித்து உள்ளது.

    இதற்கிடையே ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் முகமைக்கு நிதிஉதவியை நிறுத்துவதாக மேலும் 7 நாடுகள் அறிவித்தது. கனடா, ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, சுவிட்சர் லாந்து, பின்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் நிதிஉதவி அளிப்பதை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. நிதிஉதவியை நிறுத்தியதற்கு பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. முகமை தலைவர் பிலிப் லாசரினி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, "நிதிஉதவியை நிறுத்துவதாக அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த அமைப்பு காசாவில் முதன்மையான மனிதாபிமான நிறுவனமாகும். அதில் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்களது உயிர்வாழ்விற்காக சார்ந்து உள்ளனர். போருக்கு மத்தியில் இதுபோன்ற முடிவுகள் ஏற்கனவே தலைவிரித்தாடும் பஞ்சத்தை அதிகரிக்க செய்யும். காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு மேலும் ஒரு கூட்டுத் தண்டனையை கொடுக்காதீர்கள்" என்றார்.

    • ஏஐ மூலம் மிகவும் எளிதாக இத்தகைய வீடியோக்களை தயாரிக்க முடிகிறது
    • முறையான சட்டங்கள் இல்லாததால் பாதிப்படைந்தவர்கள் செய்வதறியாமல் தவிக்கின்றனர்

    பிரபலங்களை மையமாக வைத்து பொய்யாக உருவாக்கப்பட்ட வீடியோக்களின் மூலம் தவறான செய்திகளை பரப்புவது நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது.

    டீப் ஃபேக் (deep fake) எனப்படும் இத்தகைய வீடியோக்கள் டிஜிட்டல் முறையில் ஃபேஸ் ஸ்வேப்பிங் (face swapping) எனப்படும் முகமாற்று முறையில் தயாரிக்கப்படுபவை.

    ஆனால், சமீப சில மாதங்களாக ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் அத்தகைய வீடியோக்களை உருவாக்குதல் மிக எளிதாகி வருகிறது. இணையத்தில் பல வலைதளங்கள் இத்தகைய வீடியோக்களை உருவாக்க விரும்புபவர்களுக்கு இலவசமாக ஆலோசனைகள் தந்து உதவுகின்றன.

    ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியால், இணையத்திலோ பொதுவெளியிலோ உள்ள எவரது முகத்தையும் வேறு ஒருவரது முகத்தில் பொருத்தி தத்ரூபமாக ஒரு பொய்யான வீடியோவை தயாரிக்க முடியும். இவற்றை பொய்யானவை என கண்டறிவது சுலபமும் அல்ல. மேலும், இவற்றை நீக்கும் முயற்சியும் நீண்ட நேரம் ஆவதால், இவற்றால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் நிவாரணம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

    பெண்களை, அதிலும் குறிப்பாக பிரபலமான பெண்களை குறி வைத்து இவை உருவாக்கப்படுவது அரசாங்கங்களின் கவனத்திற்கு வந்துள்ளது.

    சில தினங்களுக்கு முன் அமெரிக்காவின் முன்னணி பாடகியான டேலர் ஸ்விஃப்ட் (Taylor Swift) குறித்த அத்தகைய வீடியோ வைரலானது.

    இந்த பொய் வீடியோ, எக்ஸ் சமூக வலைதளத்தில் பல லட்சம் பார்வையாளர்களை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கெரீன் ஜீன்-பியர், "பொய்யான வீடியோக்கள் மிகவும் அதிகரித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சிக்கலை சமாளிக்க என்ன செய்ய வேண்டுமோ அதனை அரசு உடனடியாக செய்யும். பயனர்கள் இத்தகைய வீடியோக்களை பொய்யானவை என எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் அவற்றில் குறியீடுகளை செய்யும் வழிவகைகளை ஏற்படுத்த ஏஐ நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறோம்" என தெரிவித்தார்.

    ஏஐ தொழில்நுட்பத்தால் பெருகி வரும் இத்தகைய உள்ளடக்கங்களை கையாள்வது சமூக வலைதளங்களுக்கும் சிக்கலாக இருக்கிறது. இவற்றை உடனடியாக நீக்குவது இந்நிறுவனங்களின் கட்டமைப்புக்கும் பெரும் சவாலாக உள்ளது.

    • முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர், இரண்டிலும் சுவீடன் பங்கேற்கவில்லை
    • சில தினங்களுக்கு முன் சுவீடன் நேட்டோவில் அங்கத்தினராவதை துருக்கி ஆதரித்தது

    இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அமெரிக்கா தலைமையில் 31 உலக நாடுகள் ஒருமித்து உருவாக்கிய அமைப்பு நேட்டோ (NATO) எனும் வட அட்லான்டிக் கூட்டமைப்பு.

    இக்கூட்டணியில் உள்ள ஒரு நாட்டின் மீது வேறொரு நாடு தாக்குதல் நடத்தினால், அது 31 நாடுகளையும் தாக்குவதற்கு சமமாக கருதப்பட்டு பதிலடி கொடுக்கப்படும்.

    முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர், இரண்டிலும் சுவீடன் பங்கேற்கவில்லை.

    பெரும்பாலான உலக நாடுகளின் போர்களிலும் சுவீடன் பங்கேற்காமல் நடுநிலை வகித்து வந்தது.

    இந்நிலையில், 2022ல் தனது அண்டை நாடான உக்ரைனை ரஷியா "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் ஆக்கிரமித்தது. இதைத் தொடர்ந்து நேட்டோ கூட்டமைப்பில் உறுப்பினராக சேர சுவீடன் முடிவெடுத்தது.

    2022ல், பின்லாந்து (Finland) மற்றும் சுவீடன் ஆகியவை நேட்டோ உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பித்தன.

    பின்லாந்தின் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டது.

    ஆனால், துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) மற்றும் ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பான் (Viktor Orban) ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததால் சுவீடனின் விண்ணப்பம் ஏற்கப்படவில்லை.

    சில தினங்களுக்கு முன் சுவீடன் நேட்டோவில் அங்கத்தினராவதை துருக்கியும் ஆதரித்தது.


    இதைத் தொடர்ந்து துருக்கிக்கு $23 பில்லியன் மதிப்பிற்கு எஃப்-16 ரக ராணுவ போர் விமானங்களை தர முன்வந்துள்ளதாக அமெரிக்க பாராளுமன்றத்திடம் அமெரிக்க அரசு தெரிவித்தது.

    இதில் 40 புதிய எஃப்-16 ரக போர் விமானங்களும், தற்போது துருக்கியிடம் உள்ள 79 எஃப்-16 விமானங்களை மேம்படுத்துவதற்கான அதி நவீன தொழில்நுட்ப உபகரணங்களும் அடங்கும்.

    விமானங்களை வழங்குவதை விரைவாக செய்து முடிக்கும்படி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

    • 20 அடுக்குகளை கொண்டதாக இந்த கப்பல் கட்டப்பட்டுள்ளது.
    • பிரமாண்டமான கப்பலில் 7,600 பயணிகள் பயணம் செய்ய முடியும்.

    உலகின் மிக நீளமான பிரமாண்ட பயணிகள் பொழுது போக்கு கப்பலை ராயல் கரீபியன் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த கப்பல் 365 மீட்டர் நீளம் கொண்டது. இந்த கப்பலில் அனைத்து பொழுது போக்கு அம்சங்களும் இருக்கின்றன. 20 அடுக்குகளை கொண்டதாக இந்த கப்பல் கட்டப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு அடுக்கிலும் ஒவ்வொரு பிரிவு சுற்றுலா செல்வோர் தங்க நவீன வசதிகளுடன் அறைகள் கட்டப்பட்டுள்ளன. 6 நீர் வீழ்ச்சி, 7 நீச்சல் குளங்கள், ஒரு பனிக்கட்டி சறுக்கு மைதானம் இந்த கப்பலுக்குள் இருக்கிறது. 3 தியேட்டர்கள், 40 ஓட்டல்கள், பார்கள் இருக்கின்றன.

    இந்த பிரமாண்டமான கப்பலில் 7,600 பயணிகள் பயணம் செய்ய முடியும். அவர்களுக்கு உதவி செய்ய 2,350 பணியாளர்கள் கப்பலில் இடம் பெற்றுள்ளனர். மொத்தத்தில் 10 ஆயிரம் பேருடன் இந்த பிரமாண்ட கப்பல் தனி உலகமாக கடலில் உலா வரும். இந்த கப்பலின் முதல் சேவை இன்று அமெரிக்காவில் உள்ள மியாமி துறைமுகத்தில் இருந்து தொடங்கி உள்ளது.

    • குற்றச்சாட்டை மறுத்த டிரம்ப், ஜீன் கரோலை கடுமையாக விமர்சித்தார்.
    • தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி டிரம்ப் மீது ஜீன் கரோல், நியூயார்க் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

    நியூயார்க்:

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் ஜீன் கரோல் என்பவர் பாலியல் துன்புறுத்தல் புகார் கூறினார்.

    1990-ம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள வணிக வளாகத்தில் ஒரு அறையில் தன்னை டிரம்ப் பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2019-ம் ஆண்டு ஜீன் கரோல் கூறினார். இந்த குற்றச்சாட்டை மறுத்த டிரம்ப், ஜீன் கரோலை கடுமையாக விமர்சித்தார். அவர் ஒரு பொய்யர், அவரை தான் சந்தித்ததில்லை என்று டிரம்ப் கூறினார்.

    இதையடுத்து தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி டிரம்ப் மீது ஜீன் கரோல், நியூயார்க் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் அவதூறு வழக்கில் ஜீன் கரோலுக்கு 83.3 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.690 கோடி) நஷ்டஈட்டை டிரம்ப் வழங்க வேண்டும் என்று கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

    அதில், 2019-ம் ஆண்டு டிரம்ப் தனது தவறான மற்றும் தீங்கு இழைக்கும் கருத்துக்களால் ஜீன் கரோலின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக 18.3 மில்லியன் அமெரிக்க டாலரும் தண்டனைக்குரிய சேதமாகவும், மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக 65 மில்லியன் அமெரிக்க டாலரும் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தீர்ப்பு முற்றிலும் அபத்தானமானது என்று தெரிவித்த டிரம்ப், தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்யப்படும். நமது சட்ட அமைப்பு கட்டுப்பாட்டில் இல்லை. அது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. அனைத்து உரிமைகளையும் மறித்து விட்டனர். இது அமெரிக்கா அல்ல என்றார்.

    ஏற்கனவே பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஜீன் கரோலுக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். குடியரசு கட்சி வேட்பாளராக தேர்ந்தெடுக்க அவருக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இத்தீர்ப்பு வெளியாகி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பூமியில் இருந்து 97 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கிரகம்.
    • வளிமண்டலத்தில் நீர் நிறைந்து இருப்பதை நாசாவின் ஹப்பிள் தொலை நோக்கி கண்டுபிடித்துள்ளது.

    வாஷிங்டன்:

    பூமியை போன்று வேறு கிரகங்களில் உயிர்கள் வாழ வாய்ப்பு உள்ளதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இதில் சூரிய குடும்பத்துக்கு வெளியே பல கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பூமியில் இருந்து 97 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கிரகத்தின் வளிமண்டலத்தில் நீர் நிறைந்து இருப்பதை நாசாவின் ஹப்பிள் தொலை நோக்கி கண்டு பிடித்துள்ளது.

    நாசாவின் கெப்லர் விண்வெளி தொலைநோக்கி மூலம் கடந்த 2017-ம் ஆண்டு ஜிஜே 9827டி என்று பெயரிடப்பட்ட கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது. பூமியின் விட்டத்தில் ஏறக்குறைய இரண்டு மடங்கு இருக்கும் இந்த கிரகத்தில் நீர் நிறைந்த வளிமண்டலங்கள் இருப்பதை ஹப்பிள் தொலைநோக்கி தற்போது கண்டறிந்துள்ளது. இந்த கிரகத்தில் நீர் மூலக்கூறுகள் அதிகமாக இருப்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். மீனம் நட்சத்திர மண்டலத்தில் இருக்கும் ஒரு குறு விண்மீனை சுற்றி வரும் இந்த கிரகம் ஒவ்வொரு முறை இந்த சூரியனை கடந்து செல்லும் நேரத்தில் எடுக்கப்படும் நிறமாலை தரவுகளின் அடிப்படையில் அந்த கிரகத்தில் உள்ள மூலக்கூறுகள் கண்டறியப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்த கிரகத்தில் நீர் மூலக்கூறு நிறைந்த வளிமண்டலம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பூமியில் உள்ள கடலை போன்று இரண்டு மடங்கு அதிகமாக நீராவியை இந்த கிரகம் பெற்றிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த கிரகம் வெள்ளி கிரகத்தை போல 800 டிகிரி பாரன்ஹீட் வெப்பமாக இருப்பதால், வளிமண்டலம் நீராவியாக இருப்பதாக கூறப்படுகிறது.

    பாறைகள் நிறைந்த கிரகங்களில் வளிமண்டலங்களின் நீர் மூலக்கூறுகள் இருப்பது உயிர்கள் வாழ்வதற்கான இது ஒரு முக்கியமான படியாகும் 97 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் மீனம் நட்சத்திர மண்டலத்தில் பூமியைப் போன்ற வளிமண்டலம் பெற்ற ஒரு கிரகத்தை கண்டறிந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது.

    இதற்கு முன்பு கண்டறிந்த நீர் மூலக்கூறு ஆக்சிஜன் இருக்கும் கிரகங்களை ஒப்பிடுகையில், தற்போது கண்டறிந்துள்ள கிரகம் மிக அருகில் இருக்கிறது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    • பிஷப் லேமர் வைட்ஹெட் என்பவரிடம் ஷமார் $1 மில்லியன் கொள்ளையடித்தவர்
    • மறைந்திருந்த ஷமார் மார்ஷல்ஸை சுட்டு கொண்டே தப்பி ஓட முயன்றார்

    அமெரிக்காவின் நீதி துறைக்கு கீழ் இயங்கும் சட்ட ஒழுங்கு காவல்துறை, "யு. எஸ். மார்ஷல்ஸ்" (US Marshals) படை.

    நியூயார்க் மாநிலத்தின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் 3-ஆம் இடத்தில் இருந்தவர், 41 வயதான ஷமார் லெக்கெட் (Shamar Leggette).

    வங்கி கொள்ளை உட்பட பல குற்றங்களில் ஈடுபட்டு காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தவர் ஷமார்.

    2022ல் புரூக்ளின் நகரத்தை சேர்ந்த பிஷப் லேமர் வைட்ஹெட் என்பவரிடமிருந்து $1 மில்லியனுக்கு மேல் மதிப்புடைய நகைகளை திருடியதாக அவர் தேடப்பட்டு வந்தார்.

    இந்த வழக்கு "ப்ளிங்க் பிஷப்" என மிக பிரபலமாக அழைக்கப்பட்டது.

    குயின்ஸ் பகுதியில் கொலை மற்றும் $7000 பணம், ரோட் ஐலேண்ட் பகுதியில் துப்பாக்கிச் சூடு மற்றும் $50,000 மதிப்புள்ள நகை கொள்ளை ஆகியவை அவர் மீது இருந்த பிற முக்கிய வழக்குகள்.

    இந்நிலையில், நியூ ஜெர்சி மாநில மான்மவுத் ஜங்க்ஷன் பகுதியில் ஒரு தங்கும் விடுதியில் இருந்த அவரை யு.எஸ். மார்ஷல்ஸ் கைது செய்ய சென்றனர்.

    அப்போது அங்கு மறைந்திருந்த ஷமார், மார்ஷல்சை நோக்கி சுட்டு கொண்டே வெளியே ஓடினார்.

    வேறு வழியின்றி தற்காப்புக்காக மார்ஷல்ஸ் அவரை நோக்கி சுட்டனர். இதில் அவர் உயிரிழந்தார்.

    நியூ ஜெர்சி நீதி துறை இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

    • வால்மார்ட் கடைகளில் அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும்
    • மெண்டோசா சுமார் 7 ஆயிரம் டாலர் மதிப்பிலான பொருட்களை நாசம் செய்தார்

    உலகெங்கும் பல முக்கிய நகரங்களில் செயல்பட்டு வரும் பன்னாட்டு பல்பொருள் விற்பனை அங்காடி, வால்மார்ட்.

    வால்மார்ட், அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் நிறுவனம். இங்கு அன்றாட உபயோக பொருட்கள், மளிகை, மருந்து, விளையாட்டு பொருட்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கும்.

    டெக்சாஸ் மாநில ரியோ கிராண்டே (Rio Grande) நகரில் வால்மார்ட்டின் கிளை ஒன்று செயல்படுகிறது. இங்கு பல முன்னணி மின்னணு பொருட்கள் விற்கப்படுகின்றன.

    இரு தினங்களுக்கு முன் எசக்கியல் மெண்டோசா (Ezequiel Mendoza) என்பவர் பொருட்கள் வாங்குபவர் போல் கடைக்குள் நுழைந்தார்.

    அக்கடையில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த ஒரு பேஸ்பால் பேட்டை கையில் எடுத்த மெண்டோசா, திடீரென அங்கு சுவற்றில் தொங்க விடப்பட்டிருந்த அகன்ற திரை கொண்ட தொலைக்காட்சிகளை ஒன்றன் பின் ஒன்றாக தாக்க தொடங்கினார்.

    ஊழியர்கள், அவரது இந்த செயலை எதிர்பாராததால், செய்வதறியாது திகைத்து நின்றனர்.

    மெண்டோசா, வரிசையாக ஒவ்வொரு தொலைக்காட்சியாக உடைத்து கொண்டே சென்றார்.

    கடை ஊழியர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரை மடக்கி, கைது செய்து, விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

    அதற்குள் மொத்தம் 19 தொலைக்காட்சிகளை மெண்டோசா அடித்து நொறுக்கி விட்டார்.

    அவற்றின் மதிப்பு சுமார் ரூ. 6 லட்சம் ($7178) ஆகும்.

    தொடர்ந்து மெண்டோசா ஸ்டார் கவுன்டி (Starr County) சிறையில் அடைக்கப்பட்டார்.

    மெண்டோசாவின் செய்கைக்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை.

    • 2022ல் விஷ ஊசி செலுத்த நரம்பு கிடைக்காமல் கென்னத் சிறையில் அடைக்கப்பட்டார்
    • "தண்டனைக்கான வழிமுறைக்கு காத்திருப்பது சித்ரவதையாக உள்ளது" என்றார் கென்னத்

    அமெரிக்க தென்கிழக்கு மாநிலம், அலபாமா (Alabama).

    1988 மார்ச் 18ல் இம்மாநில கோல்பர்ட் கவுன்டி (Colbert county) பகுதியில் 45 வயதான எலிசபெத் சென்னட் (Elizabeth Sennett), சுமார் 8 முறை மார்பிலும், ஒரு முறை கழுத்திலும் குத்தப்பட்டு இறந்து கிடந்தார். எலிசபெத்தின் கணவர் சார்ல்ஸ் சென்னட், ஒரு சர்ச்சில் பாதிரியாராக இருந்தார்.

    இக்கொலையை செய்ததாக (தற்போது 58 வயதாகும்) கென்னத் யூஜின் ஸ்மித் (Kenneth Eugene Smith) மற்றும் ஜான் ஃபாரஸ்ட் பார்க்கர் எனும் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

    விசாரணையில், கடன் சுமையில் இருந்த சார்ல்ஸ், மனைவியின் காப்பீட்டு தொகையை பெற, இருவருக்கும் தலா $1000 கொடுத்து தனது மனைவியை கொல்ல சதி செய்திருந்ததும் தெரிய வந்தது.

    விசாரணையின் போதே சார்ல்ஸ் தற்கொலை செய்து கொண்டார்.

    1996ல் இருவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது.

    2010ல் ஜான் பார்க்கருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    ஆனால், 2022ல் கென்னத்திற்கு தண்டனையை நிறைவேற்றும் விதமாக அதிகாரிகள், விஷ ஊசி செலுத்த முயன்ற போது, நரம்புகள் கிடைக்காமல், முயற்சி கைவிடப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    பல கலந்தாலோசிப்பிற்கு பிறகு, "நைட்ரஜன் ஹைபாக்சியா" எனும் புதிய முறையில் கென்னத்திற்கு மரண தண்டனை வழங்க முடிவு செய்யப்பட்டது. அது ஜனவரி 25 நிறைவேற்றப்பட இருந்தது.

    இந்த புதிய முறையில் சுவாச முக கவசம் போல் ஒரு உபகரணத்தை குற்றவாளியின் மூக்கிலும், வாயிலும் வைத்து, அதில் நைட்ரஜன் வாயுவை சுமார் 15 நிமிடங்களுக்கு உள்ளே செலுத்துவார்கள்.

    ஆனால், இம்முறையில் தன்னை கொல்ல கூடாது என ஸ்மித் தரப்பில் வாதிடப்பட்டது.

    சில தினங்களுக்கு முன் இவ்வழக்கில் நீதிபதி ஆர். ஆஸ்டின் ஹஃபேகர் (Judge R. Austin Huffaker), "நைட்ரஜன் ஹைபாக்சியா முறையில் ஸ்மித்திற்கு தண்டனை நிறைவேற்றலாம்" என தீர்ப்பளித்தார்.

    கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கென்னத்தின் வழக்கறிஞர்கள் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தை நாடினர்.

    ஆனால், இப்புதிய முறை மரண தண்டனைக்கு எந்த தடையும் விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

    இதையடுத்து, கென்னத்திற்கு எப்போது வேண்டுமானாலும் மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என தெரிகிறது.

    சில தினங்களுக்கு முன், "மரணத்தை விட மரண தண்டனைக்கான வழிமுறை குறித்து தெரிந்த கொள்ள காத்திருப்பது சித்ரவதையாக உள்ளது" என கென்னத் தெரிவித்திருந்தார்.

    அலபாமாவில் மரண தண்டனைக்காக மட்டுமே 165 பேர் பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முன்னரே போதை பழக்கம் உள்ள பிரின், அன்று மரிஜுவானாவை பயன்படுத்தினார்
    • 2 வருட புரொபேஷன் மற்றும் 100 மணி நேர சமூக சேவைக்கு நீதிபதி உத்தரவிட்டார்

    கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த 33 வயதான பெண் பிரின் ஸ்பெசர் (Bryn Spejcher).

    பிரின், "அக்கவுன்டன்ட்" பணியில் இருந்த சாட் ஒமேலியா (Chad O'Melia) எனும் 26-வயது ஆண் நண்பரை அடிக்கடி சந்தித்து வந்தார்.

    பிரின் போதை மருந்து உட்கொள்ளும் பழக்கம் உள்ளவர்.

    2018 மே மாதம், தனது ஆண் நண்பர் ஒமேலியாவை சந்திக்க பிரின் சென்றார். அப்போது பிரின் மரிஜுவானா எனும் போதை பொருளை பயன்படுத்தினார். அதில் அவர் தனது சுயகட்டுப்பாட்டை இழந்தார்.

    அந்நிலையில் அவருக்கும் ஒமேலியாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    கோபத்திலும், போதை மருந்தின் மயக்கத்திலும், என்ன செய்கிறோம் என்பதை அறியாத பிரின், ஒமேலியாவை ஒரு கத்தியால் 108 முறை கத்தியால் குத்தினார்.


    இதில் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் ஒமேலியா.

    தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போது உடல் முழுவதும் ரத்தத்துடன், கையில் கத்தியை பிடித்தவாறு, அழுது கொண்டே இருந்தார் பிரின்.

    காவல்துறையினர் அவரை பிடிக்க முற்பட்ட போது தனது கையில் இருந்த கத்தியால் தன் கழுத்தில் குத்தி தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக காவல் அதிகாரிகள் அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    ஒமேலியாவை மட்டுமின்றி தனது நாயையும் குத்தி கொன்றார், பிரின் என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

    நீண்ட காலம் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில், பிரின் தரப்பு வழக்கறிஞர்கள் போதை மருந்தின் தாக்கத்தில் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் அவர் கொலை செய்து விட்டதாக வாதிட்டனர்.

    இந்நிலையில், வென்சுரா கவுன்டி நீதிமன்ற நீதிபதி டேவிட் வோர்லி, பிரின் தனது செயலிலும் எண்ணத்திலும் கட்டுப்பாடே இல்லாமல் இந்த கொலையை செய்துள்ளதால் அவருக்கு சிறை தண்டனை வழங்காமல், 2 வருட "ப்ரொபேஷன்" (ஒரு நன்னடத்தை கண்காணிப்பு அதிகாரியின் மேற்பார்வையில் வாழுதல்) மற்றும் 100 மணி நேரம் சமூக சேவை புரியவும் உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.


    நீதிமன்றத்தில் சாட் ஒமேலியாவின் தந்தை ஷான் ஒமேலியாவிடம் அழுது கொண்டே மன்னிப்பு கேட்டார், பிரின்.

    ஆனால் இத்தீர்ப்பு குறித்து ஷான், "நீதிபதி தனது தீர்ப்பின் மூலம் மரிஜுவானா புகைப்பதற்கு அனைவருக்கும் உரிமம வழங்கி விட்டார்" என கோபத்துடன் தெரிவித்தார்.

    ×