என் மலர்
நீங்கள் தேடியது "nitrogen hypoxia"
- 2022ல் விஷ ஊசி செலுத்த நரம்பு கிடைக்காமல் கென்னத் சிறையில் அடைக்கப்பட்டார்
- "தண்டனைக்கான வழிமுறைக்கு காத்திருப்பது சித்ரவதையாக உள்ளது" என்றார் கென்னத்
அமெரிக்க தென்கிழக்கு மாநிலம், அலபாமா (Alabama).
1988 மார்ச் 18ல் இம்மாநில கோல்பர்ட் கவுன்டி (Colbert county) பகுதியில் 45 வயதான எலிசபெத் சென்னட் (Elizabeth Sennett), சுமார் 8 முறை மார்பிலும், ஒரு முறை கழுத்திலும் குத்தப்பட்டு இறந்து கிடந்தார். எலிசபெத்தின் கணவர் சார்ல்ஸ் சென்னட், ஒரு சர்ச்சில் பாதிரியாராக இருந்தார்.

இக்கொலையை செய்ததாக (தற்போது 58 வயதாகும்) கென்னத் யூஜின் ஸ்மித் (Kenneth Eugene Smith) மற்றும் ஜான் ஃபாரஸ்ட் பார்க்கர் எனும் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், கடன் சுமையில் இருந்த சார்ல்ஸ், மனைவியின் காப்பீட்டு தொகையை பெற, இருவருக்கும் தலா $1000 கொடுத்து தனது மனைவியை கொல்ல சதி செய்திருந்ததும் தெரிய வந்தது.
விசாரணையின் போதே சார்ல்ஸ் தற்கொலை செய்து கொண்டார்.
1996ல் இருவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது.
2010ல் ஜான் பார்க்கருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஆனால், 2022ல் கென்னத்திற்கு தண்டனையை நிறைவேற்றும் விதமாக அதிகாரிகள், விஷ ஊசி செலுத்த முயன்ற போது, நரம்புகள் கிடைக்காமல், முயற்சி கைவிடப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பல கலந்தாலோசிப்பிற்கு பிறகு, "நைட்ரஜன் ஹைபாக்சியா" எனும் புதிய முறையில் கென்னத்திற்கு மரண தண்டனை வழங்க முடிவு செய்யப்பட்டது. அது ஜனவரி 25 நிறைவேற்றப்பட இருந்தது.
இந்த புதிய முறையில் சுவாச முக கவசம் போல் ஒரு உபகரணத்தை குற்றவாளியின் மூக்கிலும், வாயிலும் வைத்து, அதில் நைட்ரஜன் வாயுவை சுமார் 15 நிமிடங்களுக்கு உள்ளே செலுத்துவார்கள்.

ஆனால், இம்முறையில் தன்னை கொல்ல கூடாது என ஸ்மித் தரப்பில் வாதிடப்பட்டது.
சில தினங்களுக்கு முன் இவ்வழக்கில் நீதிபதி ஆர். ஆஸ்டின் ஹஃபேகர் (Judge R. Austin Huffaker), "நைட்ரஜன் ஹைபாக்சியா முறையில் ஸ்மித்திற்கு தண்டனை நிறைவேற்றலாம்" என தீர்ப்பளித்தார்.
கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கென்னத்தின் வழக்கறிஞர்கள் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தை நாடினர்.
ஆனால், இப்புதிய முறை மரண தண்டனைக்கு எந்த தடையும் விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
இதையடுத்து, கென்னத்திற்கு எப்போது வேண்டுமானாலும் மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என தெரிகிறது.
சில தினங்களுக்கு முன், "மரணத்தை விட மரண தண்டனைக்கான வழிமுறை குறித்து தெரிந்த கொள்ள காத்திருப்பது சித்ரவதையாக உள்ளது" என கென்னத் தெரிவித்திருந்தார்.
அலபாமாவில் மரண தண்டனைக்காக மட்டுமே 165 பேர் பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






