என் மலர்
நீங்கள் தேடியது "US crimes"
- 62 வயதான பெண் நீதிபதி தீர்ப்பை வாசிக்க தொடங்கினார்
- நீதிமன்ற மார்ஷல் ஒருவர் காயத்திற்கு சிகிச்சை பெறுகிறார்
லாஸ் வேகாஸ் நகரில், ஓரு தாக்குதல் வழக்கில் கைதானவர் டியோப்ரா ரெட்டன் (30).
உடல் ரீதியான கடுமையாக தாக்குதல் நடத்தியதற்காகவும், அத்தாக்குதலால் பாதிக்கப்பட்டவருக்கு கடுமையான உடல் சீர்கேடு உருவானதாலும், இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நிவேடா நகர நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
விசாரணை நிறைவுற்ற நிலையில், நீதிபதி மேரி கே ஹால்தஸ் எனும் 62 வயதான பெண் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
ரெட்டன் தன் குற்றத்தை ஒப்பு கொண்டதால் அவருக்கு சிறை தண்டனை வழங்கும் தனது தீர்ப்பை நீதிபதி படித்து கொண்டிருந்தார். ரெட்டனின் வக்கீல் தனது கட்சிக்காரரை பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை எழுப்பிய போது, அதனை நீதிபதி மேரி மறுத்தார்.
இதில் கடுமையாக கோபம் கொண்ட ரெட்டன், நீதிபதி அமர்ந்திருக்கும் இருக்கைக்கு முன் உள்ள மேசையின் மீது அவரை அடிக்க பாய்ந்தார். அந்த மேசையில் இருந்த கொடி சின்னங்கள் கீழே விழுந்தன. இதையடுத்து அங்குள்ளவர்களில் 3 பேர் ரெட்டனை மடக்கி பிடித்தனர்.
காயங்கள் ஏதும் இல்லையென்றாலும் நீதிபதி மேரியின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நீதிமன்ற மார்ஷல்கள் எனப்படும் பாதுகாவலர்களில் ஒருவருக்கும் இந்த சம்பவத்தில் காயம் ஏற்பட்டு அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் முழுவதும் நீதிமன்ற கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்தது. அக்காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
முன்னர் பதிவாகியிருந்த தாக்குதல் வழக்குகளுடன் இந்த வழக்கும் ரெட்டன் மீது பதிவாகியுள்ளது.
கட்டுப்பாடுகளுக்கு பெயர் பெற்ற அமெரிக்காவில், நீதிமன்றத்திலேயே ஒரு பெண் நீதிபதி மீது நடைபெற்ற இத்தாக்குதல் சம்பவம் உலகையே அதிர வைத்துள்ளது.
- வால்மார்ட் கடைகளில் அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும்
- மெண்டோசா சுமார் 7 ஆயிரம் டாலர் மதிப்பிலான பொருட்களை நாசம் செய்தார்
உலகெங்கும் பல முக்கிய நகரங்களில் செயல்பட்டு வரும் பன்னாட்டு பல்பொருள் விற்பனை அங்காடி, வால்மார்ட்.
வால்மார்ட், அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் நிறுவனம். இங்கு அன்றாட உபயோக பொருட்கள், மளிகை, மருந்து, விளையாட்டு பொருட்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கும்.
டெக்சாஸ் மாநில ரியோ கிராண்டே (Rio Grande) நகரில் வால்மார்ட்டின் கிளை ஒன்று செயல்படுகிறது. இங்கு பல முன்னணி மின்னணு பொருட்கள் விற்கப்படுகின்றன.
இரு தினங்களுக்கு முன் எசக்கியல் மெண்டோசா (Ezequiel Mendoza) என்பவர் பொருட்கள் வாங்குபவர் போல் கடைக்குள் நுழைந்தார்.
அக்கடையில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த ஒரு பேஸ்பால் பேட்டை கையில் எடுத்த மெண்டோசா, திடீரென அங்கு சுவற்றில் தொங்க விடப்பட்டிருந்த அகன்ற திரை கொண்ட தொலைக்காட்சிகளை ஒன்றன் பின் ஒன்றாக தாக்க தொடங்கினார்.
ஊழியர்கள், அவரது இந்த செயலை எதிர்பாராததால், செய்வதறியாது திகைத்து நின்றனர்.
மெண்டோசா, வரிசையாக ஒவ்வொரு தொலைக்காட்சியாக உடைத்து கொண்டே சென்றார்.
கடை ஊழியர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரை மடக்கி, கைது செய்து, விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
அதற்குள் மொத்தம் 19 தொலைக்காட்சிகளை மெண்டோசா அடித்து நொறுக்கி விட்டார்.
அவற்றின் மதிப்பு சுமார் ரூ. 6 லட்சம் ($7178) ஆகும்.
தொடர்ந்து மெண்டோசா ஸ்டார் கவுன்டி (Starr County) சிறையில் அடைக்கப்பட்டார்.
மெண்டோசாவின் செய்கைக்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை.






