என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பிரிட்டன் சென்றடைந்தார்.
    • இருதரப்பு உறவு தொடர்பாக அந்நாட்டு வெளியுறவு மந்திரி உடன் ஆலோசனை நடத்துகிறார்.

    லண்டன்:

    உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போரை நிறுத்த அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது. இதனால் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் அந்த முயற்சியை தொடங்கின.

    இதற்கிடையே, இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பிரிட்டன் சென்றடைந்தார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இருதரப்பு உறவு தொடர்பாக அந்நாட்டின் வெளியுறவு மந்திரி டேவிட் லாமி உள்பட பலருடன் ஆலோசனை நடத்துகிறார்.

    பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர் அங்கு அமைக்கப்பட்டுள்ள தூதரகங்களையும் திறந்து வைக்கிறார்.

    இந்நிலையில், லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:

    நாம் இந்தியாவை தீவிரமாக உலகமயமாக்கி வருவதால், ரூபாயின் சர்வதேசமயமாக்கலை நாங்கள் தெளிவாக ஊக்குவிக்கிறோம். அதிகமான இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வாழ்கின்றனர், மேலும் இந்தியாவின் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகள் விரிவடைந்துள்ளன. இதனால், ரூபாயின் பயன்பாடும் அதிகரிக்கும்.

    பல சமயங்களில் இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்கும் இடையே பணமில்லா பணம் செலுத்துவதற்கான வழிமுறைகளை நாங்கள் நிறுவியுள்ளோம் மற்றும் வர்த்தகத் தீர்வுகளை ஆதரித்துள்ளோம்.

    இந்தியாவின் உலகமயமாக்கலின் ஒரு பகுதியாக ரூபாய் பரிவர்த்தனைகளின் நிலையான வெளிப்புறமயமாக்கலை இது பிரதிபலிக்கிறது.

    டாலரின் பங்கு குறித்து நாங்கள் யதார்த்தமாக இருக்கிறோம். டாலருடன் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. அமெரிக்கா உடனான எங்கள் உறவுகள் மிகச் சிறந்தவை. டாலரை குறைப்பதில் எங்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை என தெரிவித்தார்.

    • 5 மன்னர்களின் ஆட்சியையும் கண்டுள்ளார்.
    • இரண்டு உலக போர்களை கடந்து வந்திருக்கிறார்.

    இங்கிலாந்தின் யார்க்ஷையர் பகுதியை சேர்ந்த எடித் ஹில் என்ற 106 வயது மூதாட்டி தனது மகிழ்ச்சியான வாழ்க்கையின் ரகசியம் குறித்து பகிர்ந்துள்ளார்.

    1919-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி பிறந்த இவர் தனது வாழ்க்கையில் இதுவரை இங்கிலாந்தில் 23 பிரதமர்கள் ஆட்சிக்கு வந்துள்ளதை கண்டுள்ளாராம். இரண்டு உலக போர்களை கடந்து வந்திருக்கிறார்.

    5 மன்னர்களின் ஆட்சியையும் கண்டுள்ளார். இவர் இனிப்புகளை விரும்பி சாப்பிடுகிறார். நிறைய சாக்லேட் சாப்பிடுவது, விருந்துகளுக்கு சென்று மகிழ்ச்சியாக இருப்பது ஆகியவை தான் எனது நீண்ட ஆயுளுக்கு பங்களிப்பதாக கூறியுள்ள எடித் ஹில், தான் ஒருபோதும் புகைபிடித்ததில்லை, அதிக அளவு மது அருந்தியதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    சாக்லேட் மட்டுமல்லாது, ஈஸ்டர் பண்டிகையின் போது இனிப்பு வகைகளை விரும்பி ருசிப்பதாகவும் கூறுகிறார்.

    • வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார்.
    • ஜெலென்ஸ்கியின் பேச்சை மறுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியது பதற்றத்தை அதிகரித்தது.

    மாஸ்கோ:

    ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.

    அதேநேரம் உக்ரைனுக்கு அமெரிக்கா இதுவரை வழங்கிய ஆயுதம் மற்றும் நிதியுதவிகளுக்கான தொகையை திருப்பித்தர வேண்டும் அல்லது உக்ரைனில் உள்ள அரிய கனிமங்களை அமெரிக்காவுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று அமெரிக்கா சென்றார்.

    வெள்ளை மாளிகையில் அவர் ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை அடுத்து ஓவல் அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் பேச்சை மறுத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பேசியது பதற்றத்தை அதிகரித்தது.

    இந்த கடுமையான பேச்சுவார்த்தையால் திட்டமிடப்பட்டிருந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிகழ்வு ரத்தானது. பின்பு வெள்ளை மாளிகையில் இருந்து உக்ரைன் அதிபர் வெளிறிய முகத்துடன் வெளியேறினார்.

    இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இங்கிலாந்து சென்றார். அங்கு அவரை பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உற்சாகமாக வரவேற்றார். அப்போது அங்கிருந்தோர் உக்ரைனுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். உங்கள் ஆதரவுக்கு நன்றி என அதிபர் ஜெலன்ஸ்கி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    • பார்முலா 1 கார் பந்தயம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
    • 2025 ஆம் ஆண்டுக்கான பார்முலா 1 கார் பந்தய துவக்க நிகழ்ச்சி லண்டனில் நடைபெற்றது.

    கார் பந்தயங்களில் மிகவும் பிரபலமான பார்முலா 1 கார் பந்தயம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான பார்முலா 1 கார் பந்தய துவக்க நிகழ்ச்சி லண்டனில் நடைபெற்றது.

    இதில் பல்வேறு இசை கலைஞர்கள் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். இந்த நிகழ்வில் கார் பந்தயத்தில் கலந்து கொள்ளவுள்ள 10 அணிகளை சேர்ந்த 20 ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

    7 முறை உலக சாம்பியனான ஹாமில்டனுக்கு இந்த நிகழ்ச்சியில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்தாண்டுக்கான பார்முலா 1 கார் பந்தயம் மார்ச் 14 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் துவங்குகிறது குறிப்பிடத்தக்கது. 

    • 78-வது பாப்டா விருதுகள் வழங்கும் விழா லண்டனில் நடைபெற்றது.
    • இதில் சிறந்த நடிகராக அட்ரியன் பிராடி தேர்வு செய்யப்பட்டார்.

    லண்டன்:

    சர்வதேச அளவில் ஆஸ்கர் விருதுக்கு அடுத்தபடியாக கவுரமிக்க விருதாகக் கருதப்படுவது பிரிட்டிஷ் அகாடமியின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி விருதுகள் (பாப்டா) ஆகும்.

    இந்நிலையில், 78-வது பாப்டா விருதுகள் வழங்கும் விழா லண்டனில் நடைபெற்றது.

    இதில் சிறந்த நடிகராக அட்ரியன் பிராடி தேர்வு செய்யபட்டார். தி புரூடலிஸ்ட் படத்தில் நடித்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டது.

    ஏற்கனவே இம்மாதம் நடைபெற்ற கோல்டன் குளோப் விருது மற்றும் கிரிட்டிக் சாய்ஸ் விருதிலும் புரூடலிஸ்ட் படம் விருது வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த ஒரு மாதமாக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
    • பூங்கா விரிவாக்க பணியை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஒரு சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவை விரிவாக்கம் செய்ய அரசாங்கம் முடிவு செய்தது. அதன் ஒருபகுதியாக கடந்த மாதம் பூங்காவில் பள்ளம் தோண்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.

    இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இதுகுறித்து போலீசில் தகவல் அளித்தனர். அதன்பேரில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே அந்த வெடிகுண்டுகள் இரண்டாம் உலகப்போர் கால கட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டவை என்பது உறுதியானது. இதனால் பூங்காவின் மற்ற இடங்களையும் தோண்டி பார்க்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    அதன்படி கடந்த ஒரு மாதமாக அங்கு பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வில் இதுவரை 170-க்கும் மேற்பட்ட வெடிக்காத குண்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. அவற்றின் மொத்த எடை சுமார் 500 கிலோ ஆகும்.

    இதனையடுத்து அவற்றை செயலிழக்கச் செய்யும் பணியில் வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சிறுவர் பூங்காவில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே பூங்கா விரிவாக்க பணியை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.

    • ஆன்லைன் மூலம் கடந்த சனிக்கிழமை ஏலம் நடைபெற்று உள்ளது.
    • ஏலம் நடத்தும் டேனியல் பியர்ஸ் என்பவர், உயிரிழந்த ஒருவரின் உடைமைகளுடன் இப்புத்தகத்தைக் கண்டெடுத்துள்ளார்.

    இங்கிலாந்து:

    1997ஆம் ஆண்டு ஜே.கே.ரவுலிங் எழுதிய 'ஹாரி பாட்டர் அண்ட் தி ஃபிலாசஃபர்ஸ் ஸ்டோன்' புத்தகம் வெளியானது. இந்த புத்தகம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களை எழுதினார் ரவுலிங். இதனையடுத்து ஹாரி பாட்டர் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு திரைப்படங்களும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன.

    இந்த நிலையில், குப்பையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஹாரி பாட்டர் நாவலின் முதல் பதிப்பு புத்தகம் சுமார் ரூ.22 லட்சத்திற்கு ஏலம் போய் உள்ளது. ஆன்லைன் மூலம் கடந்த சனிக்கிழமை ஏலம் நடைபெற்று உள்ளது.

    ஏலம் நடத்தும் டேனியல் பியர்ஸ் என்பவர், உயிரிழந்த ஒருவரின் உடைமைகளுடன் இப்புத்தகத்தைக் கண்டெடுத்துள்ளார்.

    500 புத்தகங்களே அச்சிடப்பட்டது என்றும் பொது நூலகங்களுக்கு விநியோகிக்கப்பட்ட 300 பிரதிகளில் ஒன்று இது என்றும் கூறப்படுகிறது. 

    • இங்கிலாந்தில் வாரத்தில் 4 நாட்கள் வேலை பார்க்கும் திட்டம் வெற்றி பெற்றுள்ளது.
    • இத்திட்டம் ஊழியர்களின் மனநலனையும் உடல்நலனையும் மேம்படுத்தும் என நிறுவனங்கள் கூறியுள்ளது.

    வாரத்துக்கு 5 நாட்கள் வேலை முறை என்பது சோர்வை ஏற்படுத்துவதாக கூறி 4 நாட்கள் மட்டுமே வேலை பார்க்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த பல நாடுகள் முயற்சித்து வருகின்றன.

    அவ்வகையில், இங்கிலாந்தில் வாரத்துக்கு 4 நாட்கள் வேலை திட்டம் சோதனை முயற்சியாக அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்துக்கு 100 நிறுவனங்கள் ஒப்புதல் அளித்தன. இந்த திட்டத்தால் சம்பளம், சலுகைகள் எதுவும் குறைக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் இங்கிலாந்தில் இந்த திட்டம் வெற்றிபெற்றுள்ள நிலையில், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டத்தை பிரிட்டனை சேர்ந்த 200 நிறுவனங்கள் நிரந்தரமாக நடைமுறைப்படுத்தி உள்ளன. இந்த 200 நிறுவனங்களில் மொத்தமாக 5000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    வாரத்திற்கு 4 நாட்கள் பணிபுரிவதால் ஊழியர்கள் தங்களின் வாழ்க்கையை சந்தோஷமாகவும், நிறைவுடனும் வாழ முடியும் என தெரிவித்துள்ள நிறுவனங்கள், இது ஊழியர்களின் மனநலனையும் உடல்நலனையும் மேம்படுத்தும் எனவும் கூறியுள்ளது.

    • கொண்டாட்ட நிகழ்வு விபரீதத்தில் முடிந்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
    • கருவின் பாலினத்தை அறிவிப்பதற்காக கலர் வண்ணப்பொடிகளால் ஆன உலர்பனிக்கட்டி (டிரை ஐஸ்) பயன்படுத்தப்பட்டது.

    டிஜிட்டல் உலகில் வளைகாப்பு விழாவும் பரிணாமம் அடைந்து அதனை விளம்பரத்திற்காக நடத்தும் அளவிற்கு வந்துவிட்டனர். குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் வளைகாப்பு நிகழ்வுக்கு மாற்றாக நடத்தப்படும் விழாவில் சூட்டோடு சூடாக கருவின் பாலினத்தை அறிந்து கொள்ளும் வகையில் விளையாட்டு அல்லது வேடிக்கை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.

    அத்தகைய கொண்டாட்ட நிகழ்வு விபரீதத்தில் முடிந்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

    இங்கிலந்தை சேர்ந்தவர் ஏமி. பெண் தொழிலதிபரும் கோடீஸ்வரருமான இவா், காதலர் பிராட் என்பவரை கரம்பிடித்தார். தொடர்ந்து கர்ப்பம் அடைந்த நிகழ்வை கொண்டாடுவதற்காக பங்களா வீட்டில் பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. கருவின் பாலினத்தை அறிவிப்பதற்காக கலர் வண்ணப்பொடிகளால் ஆன உலர்பனிக்கட்டி (டிரை ஐஸ்) பயன்படுத்தப்பட்டது.

    அப்போது அந்த அடர் பனிப்புகை வீடு முழுவதும் பரவியது. இதில் ஏமி உள்பட அறையில் இருந்த பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி 50 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.

    • இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் இன்னிங்சில் 316 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அந்த அணியின் ராக்கி பிளின்டாப் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் உள்ளூர் போட்டி ஒன்றில் இங்கிலாந்து லயன்ஸ் அணியும், ஆஸ்திரேலியா லெவன் அணியும் மோதின. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய லெவன் அணி முதல் இன்னிங்சில் 214 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    அடுத்து ஆடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் இன்னிங்சில் 316 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ராக்கி பிளின்டாப்

    பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.

    ராக்கி பிளின்டாப் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் ஆன்ட்ரூ பிளின்டாப்பின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், ராக்கி பிளின்டாப் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்காக முதல் சதம் அடித்த இளைய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    ஆன்ட்ரூ பிளின்டாப் 20 வயது மற்றும் 28 நாளில் சதமடித்திருந்தார். அதை 16 வயது 291 நாளில் கடந்து சாதனை படைத்துள்ளார் ராக்கி பிளின்டாப்.

    • 2025-ம் ஆண்டுக்கான கவுரவ விருதை பெறுபவர்களின் பட்டியலை இங்கிலாந்து மந்திரிசபை வெளியிட்டுள்ளது.
    • பல்வேறு துறைகளை சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்டோருக்கு விருது வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டையொட்டி விளையாட்டு, சுகாதாரம், கல்வித்துறை மற்றும் தன்னார்வ சேவை ஆகியவற்றில் முன்மாதிரியாக இருப்பவர்களுக்கு கவுரவ விருது வழங்கப்படுகிறது.

    அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான கவுரவ விருதை பெறுபவர்களின் பட்டியலை இங்கிலாந்து மந்திரிசபை வெளியிட்டுள்ளது.

    பல்வேறு துறைகளை சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்டோருக்கு விருது வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்திய வம்சாவளியினர் 30 பேருக்கு இந்த கவுர விருது வழங்கப்பட உள்ளது. பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு மன்னர் சார்லஸ் விருது வழங்கி கவுரவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விமான கதவை திறந்து கீழே இறங்க முயன்றுள்ளார்.
    • ஏணிப்படி இல்லாததை கவனிக்காமல் கால் எடுத்து வைத்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    TUI-க்கு சொந்தமான விமானம் இங்கிலாந்தின் கிழக்கு மிட்லேண்ட்ஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் பயணிகள் ஏறுவதற்காக ஏணிப்படி வைக்கப்பட்டிருக்கும். விமானம் புறப்படும் முன் கதவு அடைக்கப்பட்டு, அந்த ஏணிப்படிகள் அகற்றப்படும். அதன்பின் விமானம் புறப்படும்.

    அந்த வகையில் ஏணிப்படிகள் பொருத்தப்பட்டு பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறினர். விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்தது. அப்போது விமான பணிப்பெண் ஒருவர் கதவை திறந்து கீழே இறங்க முயன்றார். ஆனால் படிக்கட்டு விமானத்துடன் இணையாமல் தனியாக இருந்துள்ளது. விமானம்தான் புறப்படவில்லையே என அந்த பணிப்பெண் கதவை திறந்தது படிக்கட்டில் கால் வைப்பது போல் வைக்க, நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். விமான ஓடுதளத்தில் விழுந்த பணிப்பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனடியாக ஆம்புலன்ஸ் சர்வீஸ் அழைக்கப்பட்டு முதலுதவி கொடுக்கப்பட்டது. பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விமான பணிப்பெண் கீழே விழுந்தது எப்படி என விசாரணை நடத்து வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    விமான பணிப்பெண் கதவை திறந்து, ஏணிப்படி இருக்கும் என காலை எடுத்து வைத்தார். ஆனால் அங்கே இருக்க வேண்டிய ஏணிப்படி இருக்கவில்லை. அது ஏன் எனத் தெரியவில்லை. அதனால் கீழே விழுந்தார். அவருக்கு பயங்கர காயம் ஏற்பட்டது என விமான நிலையத்தில் இருந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

    ×