search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian Consulate"

    • சிட்னியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
    • நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் பங்கேற்றார்.

    இந்திய பிரதமர் மோடி, ஜப்பான் மற்றும் பப்புவா நியூ கினியா சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். சிட்னி நகருக்கு சென்றடைந்த மோடிக்கு ஆஸ்திரேலிய அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் மோடிக்கு ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி இன்று ஆஸ்திரேலியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    சிட்னியின் கியுடாஸ் பேங்க் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, இந்திய சமூகத்தினரின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பிரிஸ்பேனில் புதிய இந்திய தூதரகம் விரைவில் திறக்கப்படும் என அறிவித்தார். நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் பங்கேற்றார். 

    தற்போது சிட்னி, மெல்போர்ன் மற்றும் பெர்த் ஆகிய நகரங்களில் இந்திய தூதரகங்கள் உள்ளன. பிரிஸ்பேனில் தற்போது இந்தியாவின் கெளரவ தூதரகம் உள்ளது.

    ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகத்தின் 2016 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ஆஸ்திரேலியாவில் 619164 பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். இது ஆஸ்திரேலிய மக்கள் தொகையில் 2.8 சதவீதம் ஆகும். அவர்களில் 592000 பேர் இந்தியாவில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆஸ்திரேலியாவில் இந்திய தூதரகத்துக்கு வந்த மர்ம பார்சலால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #Australia #IndianConsulate
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாகாணத்தின் தலைநகர் மெல்போர்னில் இந்தியா உள்பட பல்வேறு சர்வதேச நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ளன.

    இந்த நிலையில் நேற்று அங்குள்ள இந்திய தூதரகத்துக்கு மர்ம பார்சல் ஒன்று வந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதே போல் பாகிஸ்தான், அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, சுவிட்சர்லாந்து, கிரீஸ், இந்தோனேசியா, இங்கிலாந்து மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் தூதரகங்களுக்கும் மர்ம பார்சல்கள் வந்தன.

    இதன் காரணமாக மெல்போர்ன் நகரம் முழுவதும் பதற்றமான சூழல் உருவானது. இதையடுத்து அனைத்து தூதரகங்களிலும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசர சேவைகள் குழுவினர் குவிந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூதரகங்களில் இருந்த ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

    பின்னர் தீயணைப்பு வீரர்கள் அந்த மர்ம பார்சல்களை கைப்பற்றி, ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவற்றில் ஆபத்து விளைவிக்கக்கூடிய வகையிலான பொருட்கள் ஏதும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர்தான் மெல்போர்ன் நகரில் இயல்பு நிலை திரும்பியது.

    சர்வதேச நாடுகளின் தூதரகங்களுக்கு மர்ம பார்சல் வந்த விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.   #Australia #IndianConsulate
    ×