என் மலர்tooltip icon

    உலகம்

    • ஈராக், சிரியாவில் பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் அமெரிக்க ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • அமெரிக்க ராணுவ வீரர்கள் மீது ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றன.

    மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள பெரும்பாலான நாடுகளில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக அமெரிக்கா தனது துருப்புகளை நிறுத்தியுள்ளது.

    அமெரிக்க வீரர்கள் தங்கியிருக்கும் வீடுகள் மற்றும் ராணுவ நிலைகள் மீது ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அதுபோன்று நடத்தப்படும் தாக்குதலுக்கு அமெரிக்காவும் பதிலடி கொடுத்து வருகிறது.

    அந்த வகையில் சிரியாவில் ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்களின் நிலைகள் மீது அமெரிக்கா வான்தாக்குதல் நடத்தியது. இதில் 9 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    இரண்டு அமெரிக்க எஃப்-15 போர் விமானங்கள் சிரியாவில் குண்டுமழை பொழிந்ததாக, அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் லாய்டு ஆஸ்டின் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்க அதிகாரிகளின் பாதுகாப்பை விட உயர்ந்தது ஏதும் எல்லை என ஜோ பைடன் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    கடந்த இரண்டு வாரங்களில் அமெரிக்காவின் இரண்டாவது தாக்குதல் இதுவாகும். கடந்த மாதம் 17-ந்தேதியில் இருந்து அமெரிக்க துருப்புகள் மீது குறைந்தது 40 முறையாவது தாக்குதல் நடத்தியிருப்பார்கள் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    • பாகிஸ்தானில் தற்போது காபந்து அரசு நடந்து வருகிறது
    • எங்கள் மண்ணை ஆப்கன் பயங்கரவாதிகள் பயன்படுத்துகிறார்கள்

    கடந்த 2018ல் பாகிஸ்தான் பாராளுமன்றத்திற்கான தேர்தலில் பெரும்பான்மைக்கு குறைவான எண்ணிக்கையில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சியை அமைத்தார் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும் தெஹ்ரிக்-ஏ-இன்சாஃப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான்.

    கடந்த 2022ல் இம்ரான்கான் மீது கூட்டணி கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை அடுத்து அவரது ஆட்சி முடிவுக்கு வந்தது.

    இதையடுத்து, 2022 ஏப்ரல் மாதம், ஷாபாஸ் ஷெரீப் பதவியேற்றார்.

    கடந்த 2023 ஆகஸ்ட் மாதம், பாராளுமன்றத்தை கலைக்குமாறு ஷாபாஸ் ஷெரீப், அதிபர் ஆரிப் ஆல்விக்கு சிபாரிசு செய்தார். அதை ஆல்வி ஏற்று கொண்டதை அடுத்து அந்நாட்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.

    காபந்து பிரதமராக அன்வர் உல் ஹக் ககர் (Anwar Ul Haq Kakar) ஆகஸ்ட் 14 அன்று பதவியேற்றார். அங்கு தற்போது காபந்து அரசு நடைபெற்று வருகிறது.

    2024 பிப்ரவரி 8 அன்று அங்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்கிடையே சமீப சில மாதங்களாக பாகிஸ்தானில் ஆங்காங்கே குண்டு வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

    இது குறித்து அந்நாட்டின் காபந்து பிரதமர் அன்வர் கருத்து தெரிவித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    எங்கள் அண்டை நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் 2021ல் தலிபான்கள் பதவியேற்றது முதல் எங்கள் நாட்டில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. முன்பை விட 60 சதவீதம் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. தற்கொலைப்படை தாக்குதல்களில் 500 சதவீத அதிகரிப்பை பார்க்கிறோம். எங்கள் மண்ணை பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தும் போக்கை ஆப்கானிஸ்தான் தடுத்து நிறுத்த வேண்டும். தெஹ்ரிக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் (TTP) போன்ற பாகிஸ்தானுக்கு எதிரான அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2 வருடங்களில் 2,267 பாகிஸ்தானியர்கள், அந்த அமைப்பினரால் இங்கு நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்; 15 ஆப்கான் தற்கொலைபடையினரும் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானிலிருந்து சட்டவிரோதமாக இங்கு குடியேறியவர்களை வெளியேற்றுவது உள்நாட்டு அமைதிக்கான நடவடிக்கை. இதை செய்வதற்கு எங்களுக்கு முழு உரிமை உள்ளது.

    இவ்வாறு அன்வர் தெரிவித்தார்.

    • ஹமாஸ் அமைப்பை ஆதரிப்பவர்களுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் இயற்றியது
    • ஐ.நா. சபை எடுக்கும் முடிவுகளைத்தான் மலேசியா ஆதரிக்கும்

    தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சிறிய நாடு, மலேசியா. இதன் தலைநகரம் கோலாலம்பூர்.

    இந்தியாவை விட 10 மடங்கு பரப்பளவில் குறைந்த நாடான மலேசியாவில் இஸ்லாமிய சன்னி பிரிவினர் பெருமளவு (63 சதவீதம்) வாழ்கின்றனர். இந்நாட்டின் பிரதமர் அன்வர் இப்ராஹிம் (Anwar Ibrahim).

    இஸ்ரேல்-ஹமாஸ் போரில் அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன; பெரும்பாலான அரபு நாடுகள் ஹமாஸ் அமைப்பை ஆதரிக்கின்றன. ஹமாஸ் அமைப்பை ஆதரிக்கும் வெளிநாட்டு அமைப்புகளுக்கும், அரசாங்கங்களுக்கும் எதிராக அமெரிக்க பாராளுமன்றம் கடந்த வாரம் தீர்மானம் இயற்றியது.

    இந்நிலையில், இது குறித்து மலேசிய பாராளுமன்றத்தில் அன்வர் இப்ராஹிம் பேசினார்.

    அப்போது அன்வர், "மலேசிய மக்கள் ஹமாஸ் அமைப்பினருக்கு ஒருங்கிணைந்து ஆதரவளிக்க வேண்டும். ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதை ஏற்று கொள்ள போவதில்லை. இனவெறியை எதிர்த்து ஆப்பிரிக்க மக்களுக்காக போராடிய நெல்சன் மண்டேலாவை போல் ஹமாஸ் அமைப்பினர் தங்கள் மக்களுக்காக போராடி வருகின்றனர். அமெரிக்கா எனும் தனிநாடு கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கோ, அச்சுறுத்தலுக்கோ நான் அஞ்ச போவதில்லை. ஐக்கிய நாடுகள் சபை எடுக்கும் முடிவுகளைத்தான் நாங்கள் அங்கீகரிப்போம்" என திட்டவட்டமாக அறிவித்தார்.

    காசாவின் மீதான் இஸ்ரேல் தாக்குதலை "காட்டுமிராண்டித்தனம்" என அன்வர் சில தினங்களுக்கு முன் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • 20க்கும் மேற்பட்ட சிறுமியர்களின் ஆபாச வீடியோக்கள் வலம் வந்தது
    • விரைவில் இணையத்தில் சுனாமி போல் பரவும் என சூசி ஹார்க்ரீவ்ஸ் தெரிவித்தார்

    ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஏற்படுத்தும் தாக்கங்கள் மற்றும் அதனால் விளையும் நன்மை-தீமைகள் ஆகியவை குறித்து அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல உலக நாடுகள் விவாதித்து வருகின்றன.

    இது குறித்து ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் எடுத்த முயற்சிகளின் காரணமாக வளர்ச்சி அடைந்த நாடுகளின் பிரதிநிதிகளை கொண்ட ஒரு சந்திப்பு, இங்கிலாந்தில் சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. சீனாவும் இச்சந்திப்பில் கலந்து கொண்டு இந்த முயற்சிக்காக தனது முழு ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதி அளித்தது.

    இதற்கிடையே, ஐரோப்பிய நாடுகளில் புதுவித சிக்கல் ஒன்றை ஏஐ ஏற்படுத்தி உள்ளது.

    ஸ்பெயின் நாட்டை சேர்ந்த அல்மென்ட்ராலெஹோ (Almendralejo) நகரில் சில நாட்களுக்கு முன் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் 11லிருந்து 17 வயது வரை உள்ள 20க்கும் மேற்பட்ட சிறுமியர்களின் ஆபாச புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவின.

    மிரியம் அல் அடிப் (Miriam Al Adib) எனும் பெண்மணி தனது மகள் உட்பட பல சிறுமிகளின் புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்றப்பட்டு, ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு இணையத்தில் வெளி வந்துள்ளதாக புகாரளித்தார். பாதிப்புக்குள்ளான சிறுமிகளின் பெற்றோர்கள் இது குறித்த விழிப்புணர்வு குழு அமைத்து இதனை எதிர்த்து வருகின்றனர்.

    "தங்கள் பெற்றோரிடம் இது குறித்து பேச தயங்கும் சிறுமிகள் தற்போது எங்கள் குழுவிடம் மனம் திறக்கிறர்கள் " என மிரியம் தெரிவித்தார். இவரை தொடர்ந்து பல தாய்மார்கள் இதே குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர்.

    அங்குள்ள பள்ளிகளில் சிறுவர் சிறுமியர்களுக்கு ஏஐ-யினால் ஏற்பட கூடிய அபாயங்களை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனும் கோரிக்கை வலுத்து வருகிறது.


    இங்கிலாந்தில் நடந்த ஏஐ குறித்த சந்திப்பில், அந்நாட்டின் உள்துறை செயலர் சுவெல்லா ப்ரேவர்மேன், "குழந்தைகள் ஆபாச உள்ளடக்கங்களை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதியளித்தார்.

    "அனைத்து நாடுகளும் இது குறித்த நடவடிக்கையை உடனடியாக எடுத்தாக வேண்டும். எதிர்காலத்தில் இது போன்று செயற்கை நுண்ணறிவின் உதவியில் உருவாக்கப்படும் ஆபாச உள்ளடக்கங்கள், சமூக வலைதளங்களிலும், இணையத்திலும் சுனாமியை போல் பரவி விடும். இது இனிமேல்தான் ஆரம்பமாக போகும் ஆபத்து அல்ல; ஆரம்பமாகி விட்ட ஆபத்து" என இணைய உள்ளடக்க கண்காணிப்பு அமைப்பின் (Internet Watch Foundation) தலைவர் சூசி ஹார்க்ரீவ்ஸ் (Susie Hargreaves) தெரிவித்தார்.

    குழந்தைகள் மற்றும் பெண்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை கொண்டு செயற்கை நுண்ணறிவின் மூலம் அச்சு அசலாக அவர்களை போலவே பிம்பங்களை உருவாக்கி ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கும் செயலிகளை இணையத்திலிருந்து இலவசமாகவே பயனர்கள் பதிவிறக்கம் (download) செய்து கொள்ளலாம். இது குற்றவாளிகளை சுலபமாக செயல்பட உதவுகிறது.

    சில தினங்களுக்கு முன் இந்தியாவில் புகழ் பெற்ற இரு நடிகைகளை, ஏஐ தொழில்நுட்ப உதவியால் ஆபாசமாக சித்தரித்த வீடியோக்கள் இணையத்தில் பரவியது. இவை ஏஐ தொழில்நுட்பத்தால் சுலபமாக உருவாக்கப்பட்டவை  என்பது பெண்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


    ஒரு பெண், சிறுமி அல்லது சிறுவன் மீதான நேரடியான பாலியல் தாக்குதல்களில், அவர்களை குற்றவாளிகள் நேரில் சந்தித்துதான் தாக்குதலை அரங்கேற்ற வேண்டும். ஆனால், தற்போது கிளம்பியுள்ள புது சிக்கலில், இணையத்தில் தாங்களாகவே பெண்கள் அல்லது குழந்தைகள் பதிவேற்றம் செய்யும் புகைப்படத்தையோ அல்லது வீடியோவையோ குற்றவாளிகள் சுலபமாக உலகின் எந்த மூலையிலிருந்தும் பதிவிறக்கம் செய்து, ஏஐ மூலம் ஆபாசமாக சித்தரித்து வெளியிட முடியும்.

    இந்தியாவில் இது குறித்து விழிப்புணர்வோ, சட்டங்களோ இதுவரை இல்லை என்பதே உளவியல் வல்லுனர்களின் கவலையாக உள்ளது.

    • கிட்டெல்சன் வெளியிட்டுள்ள டிக்-டாக் வீடியோ பதிவு 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    பற்பசைக்கு (டூத்பேஸ்ட்) பதிலாக வலி நிவாரண கிரீம் மூலம் பல் துலக்கிய இளம்பெண் பற்றிய வீடியோ டிக்-டாக்கில் வைரலாகி வருகிறது. மியா கிட்டெல்சன் என்ற அந்த பெண் வலி நிவாரண கிரீம்களான டீப்ஹீட் குழாய்களை பெற்றுள்ளார். அவை பார்ப்பதற்கு பற்பசை போலவே இருந்துள்ளது. இதனால் பற்பசை என நினைத்து அந்த கிரீம்களை கலந்து பல் துலக்கி உள்ளார். அதன் பிறகே நடந்த தவறை அவர் உணர்ந்துள்ளார்.

    உடனே அவர் தனது காதலனிடம் தெரிவித்துள்ளார். பின்னர் அவர் விஷக்கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை கூறினார். அங்கிருந்த மருத்துவர்கள் மூலம் கிட்டெல்சனுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக கிட்டெல்சன் வெளியிட்டுள்ள டிக்-டாக் வீடியோ பதிவு 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் போலீசாரின் விரைவான செயலை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
    • ஒரு பயனர், பாதிக்கப்பட்டது நாய் குட்டியாக இருந்தாலும், அதனை காப்பாற்றிய அதிகாரிகள் மிகவும் மரியாதைக்குரியவர்கள், கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.

    நியூயார்க்கின் குயின்சில் உள்ள பூங்கா ஒன்றில் சிறிய குளம் ஒன்று உள்ளது. அதில் ஏராளமான வண்ண, வண்ண செடிகள் பூத்து குலுங்குகின்றன. இந்த செடிகள் நிறைந்த குளத்தில் பார்வையற்ற நாய் ஒன்று தவறி விழுந்துள்ளது. இதனால் அந்த நாய் நீரில் சிக்கி தவிப்பதை பார்த்த பூங்கா ஊழியர்கள் போலீசாருக்கு புகார் தெரிவித்தனர்.

    உடனடியாக அங்கு விரைந்து சென்று செடிகளுக்குள் சிக்கி தவித்த பார்வையற்ற நாயை போராடி மீட்டனர். இதுதொடர்பான வீடியோ பேஸ்புக் பக்கத்தில் வெளியானது. இதனை பார்த்த பயனர்கள் பலரும் போலீசாரின் விரைவான செயலை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், பாதிக்கப்பட்டது நாய் குட்டியாக இருந்தாலும், அதனை காப்பாற்றிய அதிகாரிகள் மிகவும் மரியாதைக்குரியவர்கள், கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.

    மற்றொரு பயனர், அருமையான வேலை. அந்த நாய் விரைவில் குணமடையும் என்று நம்புகிறேன் என கூறி உள்ளார். இதே போன்று ஏராளமான பயனர்களும் போலீசாரின் செயலை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • வடகிழக்கு ஸ்காட்லாந்தில் உள்ள அபர்டின் பகுதியில் தான் சோதனை ஓட்டத்திற்கு அனுமதி கிடைத்தது.
    • முன்பதிவு செயலிகளில் புக்கிங் செய்த போது பலமுறை ரத்து செய்யப்பட்டதால் 1 வருடமாக சோதனை ஓட்டத்திற்கான தேதியை பெற முடியவில்லை.

    அனுபவம் வாய்ந்த டிரைவர்கள் கூட ஒரு புதிய நகரத்தில் வாகனத்தை ஓட்டுவதற்கு கொஞ்சம் சிரமப்படுவார்கள். இந்நிலையில் ஒரு மாணவி சோதனை ஓட்டத்திற்காக 1,000 மைல் தூரம் கார் ஓட்டிய சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.

    அங்குள்ள பெர்க்ஷயர் பகுதியை சேர்ந்தவர் எமிலி டாய்ல். 22 வயதான இவர் அங்குள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார். இவர் கார் டிரைவிங் சான்றிதழுக்கு விண்ணப்பித்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றார். அதைத்தொடர்ந்து சோதனை ஓட்டத்திற்கு விண்ணப்பித்த அவருக்கு அந்த பகுதியில் உள்ள போக்குவரத்து அலுவலகங்களில் முன்பதிவு செய்தார். ஆனாலும் பல முறை முயற்சித்தும் அவரால் குறிப்பிட்ட தேதியை பெற முடியாத நிலை இருந்தது. இதனால் சோதனை ஓட்டத்திற்காக பல இடங்களில் விண்ணப்பித்த அவருக்கு கடைசியாக வடகிழக்கு ஸ்காட்லாந்தில் உள்ள அபர்டின் பகுதியில் தான் சோதனை ஓட்டத்திற்கு அனுமதி கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து தனது வீட்டில் இருந்து சுமார் 1,000 மைல் தொலைவில் உள்ள அந்த நகரத்திற்கு சென்று சோதனை ஓட்ட தேர்வில் பங்கேற்ற எமிலி டாய்ல் தேர்ச்சி பெற்றார். அதன்பிறகே நிம்மதி அடைந்த அவர் முதல் விஷயமாக தான் பயிலும் பல்கலைக்கழகத்திற்கு கார் ஓட்டி சென்றுள்ளார்.

    இதுகுறித்து அவரது தாயார் ஆட்ரி கூறுகையில், எமிலி சோதனை ஓட்டத்திற்காக பலமுறை முன்பதிவு செய்தும் குறிப்பிட்ட தேதியை பெற முடியவில்லை. முன்பதிவு செயலிகளில் புக்கிங் செய்த போது பலமுறை ரத்து செய்யப்பட்டதால் 1 வருடமாக சோதனை ஓட்டத்திற்கான தேதியை பெற முடியவில்லை. ஆனாலும் எமிலி தீவிரமாக இருந்து சோதனை ஓட்டத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார் என்றார்.

    • துபாயில் உள்ள அட்லாண்டிஸ் தி ராயல் மேன்ஷன் என்ற அந்த ஓட்டலில் உள்ள பல்வேறு சிறப்பம்சங்களை தொகுத்து வழங்கி உள்ளார்.
    • துபாயின் பரந்த நிலப்பரப்பை மொட்டை மாடியில் நின்று பார்க்கும் வசதி, தியேட்டர், நூலகம், பார், விளையாட்டு அறை என பல்வேறு வசதிகள் அதில் உள்ளது.

    சமூக ஊடகங்களில் பிரபலமானவர்களில் ஒருவர் அலன்னா பாண்டே. இந்தி நடிகை அனன்யா பாண்டேவின் உறவினரான இவருக்கு சமூக ஊடகங்களில் ஏராளமான பாலோயர்கள் உள்ளனர்.

    இந்நிலையில் அலன்னா பாண்டே தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு ஆடம்பர ஓட்டல் தொடர்பான காட்சிகள் வைரலாகி வருகிறது. துபாயில் உள்ள அட்லாண்டிஸ் தி ராயல் மேன்ஷன் என்ற அந்த ஓட்டலில் உள்ள பல்வேறு சிறப்பம்சங்களை தொகுத்து வழங்கி உள்ளார். அதிநவீன 2 நிலைகள் கொண்ட 4 படுக்கை அறைகள் மற்றும் 12 இருக்கைகள் கொண்ட சாப்பாட்டு அறை, பொழுதுபோக்கு அறை, நீச்சல் குளம் மற்றும் துபாயின் பரந்த நிலப்பரப்பை மொட்டை மாடியில் நின்று பார்க்கும் வசதி, தியேட்டர், நூலகம், பார், விளையாட்டு அறை என பல்வேறு வசதிகள் அதில் உள்ளது.

    வீடியோவுடன் அலன்னா பாண்டேவின் பதிவில், உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த ஓட்டல் தொகுப்பின் சுற்றுப்பயணம் இது. இங்கு ஒரு நாள் இரவு தங்குவதற்கு வாடகை 1 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.83 லட்சம்) ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.

    • அடுத்தடுத்து 4 தடவை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் பாகிஸ்தான் நிலை குலைந்துள்ளது.
    • பாகிஸ்தான் நாட்டை பொறுத்தவரை அண்டை நாடான ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ஏராளமான அகதிகள் தங்கி உள்ளனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாதிகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்தடுத்து 4 தடவை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் பாகிஸ்தான் நிலை குலைந்துள்ளது. பயங்கரவாதிகள் அகதிகள் போர்வையில் பாகிஸ்தானில் தங்கி இருந்து இந்த தாக்குதலில் ஈடுபடலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    பாகிஸ்தான் நாட்டை பொறுத்தவரை அண்டை நாடான ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ஏராளமான அகதிகள் தங்கி உள்ளனர். இதையடுத்து ஆவணங்கள் எதுவும் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் ஆப்கானிஸ்தான் அகதிகளை வெளியேற்றும் முயற்சியில் பாகிஸ்தான் அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வேலை வாய்ப்பு கொள்கைகளில் இஸ்ரேல் அரசு திருத்தம் கொண்டு வந்து மாற்றி அமைத்தது.
    • ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.

    டெல்அவிவ்:

    இஸ்ரேல்- ஹமாஸ் படை இடையே போர் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளதால் இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனர்களை உடனடியாக வெளியேறும் படி அந்நாடு உத்தரவிட்டது.

    இஸ்ரேலில் சுமார் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பணியாற்றி வருகின்றனர். போர் தொடங்கியதும் இவர்களின் பணி உரிமத்தை இஸ்ரேல் ரத்து செய்து விட்டது. உடனடியாக அங்கு வேலை பார்த்து வந்த பாலஸ்தீனர்கள் வெளியேறிவிட்டனர்.

    இதையடுத்து வேலை வாய்ப்பு கொள்கைகளில் இஸ்ரேல் அரசு திருத்தம் கொண்டு வந்து மாற்றி அமைத்தது. இதன் மூலம் சுமார் 1 லட்சம் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. கட்டுமான பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இஸ்ரேல் கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. ஐ.நா. சபையில் இஸ்ரேல் போர் நிறுத்தம் தொடர்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்காமல் இந்தியா புறக்கணித்தது. இஸ்ரேலிடம் இருந்து ராணுவ படைகளுக்கான ஆயுதங்களை இந்தியா கொள்முதல் செய்து வருகிறது. இப்படி இந்தியாவுடன் நட்புணர்வோடு திகழ்ந்து வரும் இஸ்ரேல் தற்போது பாலஸ்தீனர்களுக்கு பதில் இந்திய தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளதால் இருதரப்புக்கு இடையேயான உறவு மேலும் வலுப்பெறும் நிலை உருவாகி இருக்கிறது.

    • இடைநிறுத்தம் எனும் பேச்சுக்கே இடமில்லை என்றார் நேதன்யாகு
    • மத்திய காசா பகுதியை அடைந்து விட்டதாக ராணுவம் அறிவித்துள்ளது

    தங்கள் நாட்டின் மீது அக்டோபர் 7 அன்று தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்துள்ள இஸ்ரேல், அவர்கள் மறைந்திருக்கும் பாலஸ்தீன காசா முனை பகுதியில் தரைவழியாகவும் மற்றும் வான்வழியாகவும் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடங்கி ஒரு மாத காலத்திற்கும் மேலான நிலையில், காசா பகுதியில் உள்ள பொதுமக்கள் 10 ஆயிரத்திற்கும் மேல் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது.

    மனிதாபிமான அடிப்படையில் போர்நிறுத்தத்தை இஸ்ரேல் பரீசிலிக்க வேண்டும் என பல உலக நாடுகள் விடுத்த கோரிக்கையை இஸ்ரேல் புறக்கணித்தது.

    "போர்நிறுத்தம் அல்லது இடைநிறுத்தம் போன்ற பேச்சுகளுக்கே இடமில்லை. போர் முடிந்த பிறகும் கூட காசாவின் பாதுகாப்பு இஸ்ரேலின் கட்டுப்பாட்டில்தான் முழுமையாக இருக்கும்", என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

    "உலகிலேயே பெரிய பயங்கரவாத முகாம் காசா. அதை அழித்தாக வேண்டும்" என இஸ்ரேலிய ராணுவ அமைச்சர் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் காசாவின் மத்திய பகுதியை அடைந்து விட்டதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்திருக்கிறது.

    வான்வழியாகவோ, தரைவழியாகவோ இஸ்ரேல் அறியாமல் ஆயுத கடத்தலில் ஈடுபட முடியாததால் பூமிக்கு அடியில் நீண்ட சுரங்கம் அமைத்து அதன் மூலம் தனது ஆதரவு நாடுகளிலிருந்து தாக்குதலுக்கான ஆயுதங்களை ஹமாஸ் அமைப்பினர் பெற்று வந்தனர். இதை அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பிறகுதான் இஸ்ரேல் தாமதமாக கண்டறிந்ததாக தகவல்கள் வெளியாகின.

    தற்போது காசாவில் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பினர் அங்கு அமைத்துள்ள சுரங்கங்களை தேடி கண்டுபிடித்து அவற்றை அழித்து வருகின்றது. அதில் ஒரு சில சுரங்கங்கள் நூறு கிலோமீட்டருக்கும் மேல் நீண்டு செல்வதாகவும் ராணுவம் தெரிவித்தது.

    போர் விரைவில் முடிவடைந்து அமைதி திரும்ப வேண்டும் என்பதே உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இங்கிலாந்தை சேர்ந்த பிரபலம் ஆண் நண்பர் பெயரை நெற்றியில் பச்சை குத்தியுள்ளார்.
    • இது பொய் என சமூக வலைத்தளங்களில் கருத்து பரிமாற்றம்.

    ஒரு ஆண் தனது தோழி (காதலி) மீது வைத்திருக்கும் அன்பையும், ஒரு பெண் ஆண் நண்பர் (காதலன்) மீது வைத்துள்ள அன்பையும் பல்வேறு விதத்தில் வெளிப்படுத்தி வருவதுண்டு. சிலர் மக்கள் கூடியிருக்கும் பொது நிகழ்ச்சி நடைபெறும் இடம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட சிறப்பு வாய்ந்த இடம், சிலர் விமான பயணத்தின்போது கூட அன்பை வெளிப்படுத்துவார்கள். தற்போதைய நவீன காலத்தில் செல்போன் மெசேஜ் உள்ளிட்டவைகள் மூலமும் கவரும் வகையில் அன்பை வெளிப்படுத்துவார்கள். உடலில் பல இடங்களிலும் பச்சைக்குத்துவதும் உண்டு.

    ஆனால், இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது ஆண் நண்பர் (காதலன்) பெயரை நெற்றியில் பச்சைக்குத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோவை அந்த பிரபலம் அனா ஸ்டான்ஸ்கோவ்ஸ்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக நேர்மறை விமர்சனங்களும், எதிர்மறை விமர்சனங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன. ஒருவர் இது போலியானது எனத் தெரிவித்துள்ளார்.

    ஆனால், அனா ஸ்டான்ஸ்கோவ்ஸ்கி வீடியோவிற்கு கீழ் "எனது முகத்தில் ஆண் நண்பரின் பெயரை பெற்றுள்ளேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

    "இது அந்த பெண் பின்தொடர்பவர்களை அதிகரிக்கச் செய்யவும், டாட்டூ கலைஞர் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ளவும் செய்யும் முயற்சி" எனத் தெரிவித்துள்ளார்.

    மற்றொருவர் "டாட்டூ மெஷினில் ஊசி இல்லை எனவும், இது பிராங்க் வீடியோ. ரத்தம் வரவில்லை. அந்த இடம் சிகப்பாக மாறவில்லை" எனத் தெரிவித்துளள்ளார்.

    இன்னொருவர் "அதை யாரும் உங்களிடம் சொல்லவில்லையா? உங்கள் காதலரின் பெயரை உங்கள் உடலில் வைத்தால். நீங்கள் பிரிந்து விடுவீர்கள், அது உண்மை" என பதிவிட்டுள்ளார்.

    ×