என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
சோதனை ஓட்டத்திற்காக 1,000 மைல் தூரம் கார் ஓட்டிய மாணவி
- வடகிழக்கு ஸ்காட்லாந்தில் உள்ள அபர்டின் பகுதியில் தான் சோதனை ஓட்டத்திற்கு அனுமதி கிடைத்தது.
- முன்பதிவு செயலிகளில் புக்கிங் செய்த போது பலமுறை ரத்து செய்யப்பட்டதால் 1 வருடமாக சோதனை ஓட்டத்திற்கான தேதியை பெற முடியவில்லை.
அனுபவம் வாய்ந்த டிரைவர்கள் கூட ஒரு புதிய நகரத்தில் வாகனத்தை ஓட்டுவதற்கு கொஞ்சம் சிரமப்படுவார்கள். இந்நிலையில் ஒரு மாணவி சோதனை ஓட்டத்திற்காக 1,000 மைல் தூரம் கார் ஓட்டிய சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.
அங்குள்ள பெர்க்ஷயர் பகுதியை சேர்ந்தவர் எமிலி டாய்ல். 22 வயதான இவர் அங்குள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார். இவர் கார் டிரைவிங் சான்றிதழுக்கு விண்ணப்பித்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றார். அதைத்தொடர்ந்து சோதனை ஓட்டத்திற்கு விண்ணப்பித்த அவருக்கு அந்த பகுதியில் உள்ள போக்குவரத்து அலுவலகங்களில் முன்பதிவு செய்தார். ஆனாலும் பல முறை முயற்சித்தும் அவரால் குறிப்பிட்ட தேதியை பெற முடியாத நிலை இருந்தது. இதனால் சோதனை ஓட்டத்திற்காக பல இடங்களில் விண்ணப்பித்த அவருக்கு கடைசியாக வடகிழக்கு ஸ்காட்லாந்தில் உள்ள அபர்டின் பகுதியில் தான் சோதனை ஓட்டத்திற்கு அனுமதி கிடைத்தது.
இதைத்தொடர்ந்து தனது வீட்டில் இருந்து சுமார் 1,000 மைல் தொலைவில் உள்ள அந்த நகரத்திற்கு சென்று சோதனை ஓட்ட தேர்வில் பங்கேற்ற எமிலி டாய்ல் தேர்ச்சி பெற்றார். அதன்பிறகே நிம்மதி அடைந்த அவர் முதல் விஷயமாக தான் பயிலும் பல்கலைக்கழகத்திற்கு கார் ஓட்டி சென்றுள்ளார்.
இதுகுறித்து அவரது தாயார் ஆட்ரி கூறுகையில், எமிலி சோதனை ஓட்டத்திற்காக பலமுறை முன்பதிவு செய்தும் குறிப்பிட்ட தேதியை பெற முடியவில்லை. முன்பதிவு செயலிகளில் புக்கிங் செய்த போது பலமுறை ரத்து செய்யப்பட்டதால் 1 வருடமாக சோதனை ஓட்டத்திற்கான தேதியை பெற முடியவில்லை. ஆனாலும் எமிலி தீவிரமாக இருந்து சோதனை ஓட்டத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்