என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "test drive"
- வடகிழக்கு ஸ்காட்லாந்தில் உள்ள அபர்டின் பகுதியில் தான் சோதனை ஓட்டத்திற்கு அனுமதி கிடைத்தது.
- முன்பதிவு செயலிகளில் புக்கிங் செய்த போது பலமுறை ரத்து செய்யப்பட்டதால் 1 வருடமாக சோதனை ஓட்டத்திற்கான தேதியை பெற முடியவில்லை.
அனுபவம் வாய்ந்த டிரைவர்கள் கூட ஒரு புதிய நகரத்தில் வாகனத்தை ஓட்டுவதற்கு கொஞ்சம் சிரமப்படுவார்கள். இந்நிலையில் ஒரு மாணவி சோதனை ஓட்டத்திற்காக 1,000 மைல் தூரம் கார் ஓட்டிய சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.
அங்குள்ள பெர்க்ஷயர் பகுதியை சேர்ந்தவர் எமிலி டாய்ல். 22 வயதான இவர் அங்குள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார். இவர் கார் டிரைவிங் சான்றிதழுக்கு விண்ணப்பித்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றார். அதைத்தொடர்ந்து சோதனை ஓட்டத்திற்கு விண்ணப்பித்த அவருக்கு அந்த பகுதியில் உள்ள போக்குவரத்து அலுவலகங்களில் முன்பதிவு செய்தார். ஆனாலும் பல முறை முயற்சித்தும் அவரால் குறிப்பிட்ட தேதியை பெற முடியாத நிலை இருந்தது. இதனால் சோதனை ஓட்டத்திற்காக பல இடங்களில் விண்ணப்பித்த அவருக்கு கடைசியாக வடகிழக்கு ஸ்காட்லாந்தில் உள்ள அபர்டின் பகுதியில் தான் சோதனை ஓட்டத்திற்கு அனுமதி கிடைத்தது.
இதைத்தொடர்ந்து தனது வீட்டில் இருந்து சுமார் 1,000 மைல் தொலைவில் உள்ள அந்த நகரத்திற்கு சென்று சோதனை ஓட்ட தேர்வில் பங்கேற்ற எமிலி டாய்ல் தேர்ச்சி பெற்றார். அதன்பிறகே நிம்மதி அடைந்த அவர் முதல் விஷயமாக தான் பயிலும் பல்கலைக்கழகத்திற்கு கார் ஓட்டி சென்றுள்ளார்.
இதுகுறித்து அவரது தாயார் ஆட்ரி கூறுகையில், எமிலி சோதனை ஓட்டத்திற்காக பலமுறை முன்பதிவு செய்தும் குறிப்பிட்ட தேதியை பெற முடியவில்லை. முன்பதிவு செயலிகளில் புக்கிங் செய்த போது பலமுறை ரத்து செய்யப்பட்டதால் 1 வருடமாக சோதனை ஓட்டத்திற்கான தேதியை பெற முடியவில்லை. ஆனாலும் எமிலி தீவிரமாக இருந்து சோதனை ஓட்டத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார் என்றார்.
சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து திட்டம் உருவாக்கப்பட்டது.
கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை - விமான நிலையம் வரை உயர்மட்டப் பாதையிலும், திருமங்கலம் - சென்ட்ரல், சைதாப்பேட்டை - டி.எம்.எஸ். வரை சுரங்கப்பாதையிலும் தற்போது பயணிகள் போக்குவரத்து சேவை நடந்து வருகிறது.
பயணிகள், பொது மக்கள் வரவேற்பை தொடர்ந்து மெட்ரோ ரெயில் திட்டம் சென்னை மாநகரம் முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.
அண்ணாசாலை வழித்தடத்தில் டி.எம்.எஸ். - வண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ ரெயில் பாதை பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதையொட்டி இன்று டி.எம்.எஸ். - வண்ணாரரப்பேட்டை வரை 15 கிலோ மீட்டர் தூரம் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நிகழ்ச்சி நடந்தது.
மெட்ரோ ரெயில் அதிகாரிகள், என்ஜினீயர் குழுவினர் தலைமையில் இன்று முதன் முறையாக சோதனை ஓட்டம் நடந்தது. சுரங்க மெட்ரோ ரெயில் தண்டவாள பாதையில் மெட்ரோ ரெயில் என்ஜின் வெற்றிகரமாக ஓடியது.
இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் மெட்ரோ ரெயில் பெட்டிகளுடன் சோதனை ஓட்டம் நடக்கிறது.
டி.எம்.எஸ். - வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் வருகிற டிசம்பர் மாதம் முதல் பயணிகள் சேவை நடைபெற உள்ளது. இனிமேல் மெட்ரோ ரெயில் பயணிகள் வண்ணாரப்பேட்டையில் இருந்து அண்ணாசாலை வழியாக நேரடியாக விமான நிலையத்துக்கு மெட்ரோ ரெயிலில் எளிதில் செல்லலாம்.
அண்ணாசாலை வழித்தடத்தில் தற்போது டி.எம்.எஸ்., ஆயிரம்விளக்கு, எல்.ஐ.சி., அரசினர் தோட்டம், ஐகோர்ட்டு, மண்ணடி, வண்ணாரப்பேட்டை ஆகிய ரெயில் நிலையங்கள் நவீன வடிவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. #ChennaiMetroTrain
பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் படிப்பாதை, யானைப்பாதை, மின்இழுவை ரெயில், ரோப்கார் ஆகியவற்றின் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர். இதில் ரோப்கார் மூலம் 3 நிமிடங்களில் மலைக்கோவிலுக்கு சென்றுவிடலாம் என்பதால் பகதர்களின் முதல் தேர்வாக ரோப்கார் சேவை உள்ளது.
இத்தனை சிறப்பு வாய்ந்த ரோப்காரில் பக்தர்களின் பாதுகாப்புக்காக தினசரி, மாதாந்திர மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அதன்படி தினசரி மதிய உணவு இடைவேளையின் போது ஒரு மணி நேரமும், மாதத்துக்கு ஒரு முறை நாள் முழுவதும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
இதேபோல் வருடாந்திர பராமரிப்பு பணியின் போது சுமார் 40 நாட்களுக்கு ரோப்கார் சேவை நிறுத்தப்படும். அந்த வகையில், கடந்த மாதம் 12-ந்தேதி ரோப்காரில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் தொடங்கியது. ரோப்கார் நிலையத்தின் மேல், கீழ் தளங்களில் உள்ள உபகரணங்கள் கழற்றப்பட்டு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை ரோப்கார் மேல்தளம், கீழ்தளத்தில் உள்ள சக்கரங்களுடன் கம்பிவடம் பொருத்தப்பட்டு பெட்டிகளை இணைக்கும் பணி நடந்தது. பின்னர் மாலையில் ரோப்காரில் முதற்கட்ட சோதனை ஓட்டம் நடந்தது. இதுகுறித்து கோவில் அதிகாரிகளிடம் கேட்ட போது, ரோப்கார் பராமரிப்பு பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. முதற்கட்ட சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. விரைவில் அனைத்து பரிசோதனைகளும் நிறைவு செய்யப்பட்டு ரோப்கார் சேவை பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்