என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த டி20 போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரஸல் ஓய்வு பெற்றார்.
- ரஸலுக்கு வேஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் GUARD OF HONOUR அளித்து கௌரவித்தனர்.
ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் 2 ஆவது போட்டி இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் அடித்தது. அதிரடியாக விளையாடிய ரஸல் 15 பந்துகளில் 36 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஜாம்பா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 15.2 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜாஸ் இங்கிலீஸ் 78 ரன்களும் க்ரீன் 56 ரன்களும் அடித்தனர்.
இந்த வெற்றி மூலம் 5 போட்டிக் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த டி20 போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரஸல் ஓய்வு பெற்றார். தனது கடைசி சர்வதேச போட்டியில் களமிறங்கிய ரஸலுக்கு வேஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் GUARD OF HONOUR அளித்து கௌரவித்தனர்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரஸல் ஓய்வு பெறுகிறார்.
- இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ரஸல் 15 பந்துகளில் 36 ரன்கள் அடித்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் அந்த்ரே ரஸல். 37 வயதான இவர், ரஸல் 2019ஆம் ஆண்டில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டி20 கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார். இதுவரை 84 போட்டிகளில் விளையாடி 1078 ரன்கள் அடித்துள்ளார். 61 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
ரஸல் அவருடைய சொந்த ஊரான ஜமைக்காவில் இன்று நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
தனது கடைசி சர்வதேச போட்டியில் களமிறங்கிய ரஸலுக்கு வேஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் GUARD OF HONOUR அளித்து கௌரவித்தனர். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ரஸல் 15 பந்துகளில் 36 ரன்கள் அடித்தார்.
இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் நிலையில், ரஸல் ஓய்வு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பாதிப்ப ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் தனது 29 வயதிலேயே ஓய்வை முடிவை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஸல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடியுள்ளார். 56 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1034 ரன்கள் அடித்துள்ளார். 70 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
அடுத்த தலைமுறை கரீபியன் கிரிக்கெட்டர்களுக்கு ரோல் மாடலாக இருக்கும் வகையில், எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை உயரிய நிலையில் முடிக்க விரும்புகிறேன் என ரஸல் தெரிவித்துள்ளார்.
- முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது.
- 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வங்கதேசம் கைப்பற்றியது.
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் யாரும் எதிர்பாரத வகையில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேசம் அணி 20 ஓவர் முடிவில் 133 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜகர் அலி 55 ரன்கள் குவித்து ஆட்டழந்தார். பாகிஸ்தான் தரப்பில் சல்மான் மிர்சா, அகமது டேனியல், அப்பாஸ் அஃப்ரிடி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து பாகிஸ்தான் அணி களமிறங்கியது. முதல் 6 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். இதில் 3 வீரர்கள் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 47 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதனை தொடர்ந்து ஃபஹீம் அஷ்ரஃப்- அப்பாஸ் அஃப்ரிடி ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அப்பாஸ் 19 ரன்னில் அவுட் ஆனார். கடைசி வரை போராடிய ஃபஹீம் அஷ்ரஃப் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் பாகிஸ்தான் அணி 19.2 ஓவரில் 125 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் வங்கதேச அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி வருகிற 24-ந் தேதி நடக்கிறது.
- டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 318 ரன்கள் குவித்தது.
லண்டன்:
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. இரு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகிக்கின்றன.
இந்நிலையில், இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய மகளிர் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகளாக பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா களமிறங்கினர்.
முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்த நிலையில் பிரதிகா ராவல் 26 ரன்னில் அவுட்டானார். 45 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்மிருதி மந்தனா வெளியேறினார்.
ஹர்லின் தியோல் உடன் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் இணைந்தார். நிதானமாக ஆடி 3வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்த நிலையில் ஹர்லின் தியோல் 45 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கேப்டனுடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணைந்து அதிரடியை வெளிப்படுத்தினார். ஜெமிமா 45 பந்தில் அரை சதம் கடந்து ஆட்டமிழந்தார்.
பொறுப்புடன் ஆடிய கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் சதமடித்து அசத்தினார். அவர் 82 பந்துகளில் 102 ரன்கள் குவித்து அவுட்டானார்.
இறுதியில், இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 318 ரன்கள் குவித்தது. ரிச்சா கோஷ் 38 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 319 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.
- தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரீசா ஹென்ட்ரிக்ஸ் 41 ரன்கள் எடுத்தார்.
- சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிம் சீபர்ட் 66 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஹராரே:
ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெற்று வரும் 5-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி, நியூசிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான் இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரீசா ஹென்ட்ரிக்ஸ் 41 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி, மில்னே, சாண்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர் கான்வே 19 ரன்னிலும் ரச்சின் ரவீந்திரா 3, மார்க் சேப்மன் 10 என்ற அவுட் ஆகினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிம் சீபர்ட் 66 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனால் நியூசிலாந்து அணி 15.5 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 135 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
- முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது.
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் யாரும் எதிர்பாரத வகையில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேசம் அணி 20 ஓவர் முடிவில் 133 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜகர் அலி 55 ரன்கள் குவித்து ஆட்டழந்தார். பாகிஸ்தான் தரப்பில் சல்மான் மிர்சா, அகமது டேனியல், அப்பாஸ் அஃப்ரிடி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரீசா ஹென்ட்ரிக்ஸ் 41 ரன்கள் எடுத்தார்.
- நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி, மில்னே, சாண்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
ஹராரே:
ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெற்று வரும் 5-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி, நியூசிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான் இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரீசா ஹென்ட்ரிக்ஸ் 41 ரன்கள் எடுத்தார்.
நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி, மில்னே, சாண்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
- ஒருநாள் போட்டியில் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா 10 இடங்கள் முன்னேறினார்.
- இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா முதல் இடத்தில் நீடிக்கிறார்.
துபாய்:
ஐ.சி.சி. சார்பில் பெண்கள் ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், பேட்டிங் வரிசையில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா அதிரடியாக 10 இடங்கள் முன்னேறியுள்ளார்.
33வது இடத்தில் இருந்த தீப்தி சர்மா தற்போது 23வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா முதல் இடத்தில் நீடிக்கிறார். மற்றொரு வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் 15-வது இடம் பிடித்துள்ளார்.
தீப்தி சர்மா பந்துவீச்சு தரவரிசையிலும் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்து வருகிறார்.
- இங்கிலாந்து இந்தியா அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
- இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனான ரிஷப் பண்டுக்கு 3-வது டெஸ்டின் போது காயம் ஏற்பட்டது.
மான்செஸ்டர்:
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் தொடரில் 3 போட்டி முடிவில் இந்தியா 1-2 என்றகணக்கில் பின்தங்கி இருக்கிறது.
இரு அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராபோர்டு மைதானத்தில் நாளை (23-ந்தேதி) தொடங்குகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனான ரிஷப் பண்டுக்கு 3-வது டெஸ்டின் போது காயம் ஏற்பட்டது. இதனால் அவர் பேட்டிங் மட்டுமே செய்தார். அவருக்கு பதிலாக துருவ் ஜூரல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். இதனால் அவர் விக்கெட் கீப்பர் பேட்டராக செயல்படுவாரா அல்லது பேட்டராக மட்டும் விளையாடுவாரா என்ற சந்தேகம் இருந்து வந்த நிலையில் அவர் விக்கெட் கீப்பர் பேட்டராக களமிறங்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
- இந்த டெஸ்டிலும் இந்தியா தோற்றால் தொடரை இழந்து விடும்.
- இதுவரை நடந்த 139 டெஸ்டில் இந்தியா 36-ல், இங்கிலாந்து 53-ல் வெற்றி பெற்றுள்ளன. 50 போட்டி டிரா ஆனது.
மான்செஸ்டர்:
சுப்மன்கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் தொடரில் 3 போட்டி முடிவில் இந்தியா 1-2 என்றகணக்கில் பின்தங்கி இருக்கிறது.
லீட்சில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், லார்ட் சில் நடந்த 3-வது போட்டியில் 22 ரன்னிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது. பர்மிங்காமல் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 336 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராபோர்டு மைதானத்தில் நாளை (23-ந்தேதி) தொடங்குகிறது.
லார்ட்ஸ் டெஸ்டில் வெற்றிக்கு அருகே வந்து தோற்றது ஏமாற்றத்தை அளித்தது. இதற்கு இந்திய அணி பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யுமா? என்று ஆவலடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த டெஸ்டிலும் தோற்றால் தொடரை இழந்து விடும். இதனால் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணிக்கு இருக்கிறது. ஓல்ட் டிராபோர்டில் இதுவரை வெற்றி பெற்றது கிடையாது. இதனால் கடுமையான சவால் காத்திருக்கிறது.
வீரர்களின் காயத்தால் இந்திய அணி தத்தளிக்கிறது. முழங்கால் காயம் காரணமாக நிதிஷ்குமார் ரெட்டி எஞ்சிய 2 போட்டியில் இருந்து விலகி உள்ளார். இதுவரை வாய்ப்பு கிடைக்காத அர்ஷ்தீப் சிங்கும் நாளைய டெஸ்டில் ஆடவில்லை. இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் ஆகாஷ் தீப்பும் ஆடுவது சந்தேகமே.
இதனால் 24 வயதான அன்ஜுல் கம்போஜ் அணியோடு இணைந்துள்ளார். அவர் டெஸ்டில் அறிமுகமாகும் நிலை உள்ளது.
முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா இந்த டெஸ்டில் ஆடுவது உறுதியாகியுள்ளது. ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா ஆகியோரும் வாய்ப்பில் இருக்கிறார்கள்.
தமிழக வீரர் சாய் சுதர்ஷனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அவர் முதல் டெஸ்டில் மொத்தம் 34 ரன்களே எடுத்தார்.
முன்னணி பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் உடல் தகுதியுடன் இருப்பதால் விளையாடுவார். ஆனால் அவர் விக்கெட் கீப்பிங் செய்வாரா? என்பது தெரியவில்லை. அதே நேரத்தில் விக்கெட் கீப்பரான துருவ் ஜூரல் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறலாம் என்று கருதப்படுகிறது.
மிகவும் முக்கியமான இந்த டெஸ்டில் இந்திய வீரர்கள் அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்துவது அவசியமாகும். மிகப்பெரிய ஸ்கோரை குவித்தால் மட்டுமே இங்கிலாந்துக்கு சவால் கொடுக்க முடியும்.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்த டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்துடன் உள்ளது.
11 பேர் கொண்ட அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டு உள்ளது. காயமடைந்த சுழற்பந்து வீச்சாளர் சோயிப் பஷீருக்கு பதிலாக லியம் டாசன் இடம்பெற்று உள்ளார். அவர் 8 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்டில் விளையாடுகிறார்.
இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டி சோனி சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இரு அணிகளும் நாளை மோதுவது 140-வது டெஸ்ட் போட்டியாகும். இதுவரை நடந்த 139 டெஸ்டில் இந்தியா 36-ல், இங்கிலாந்து 53-ல் வெற்றி பெற்றுள்ளன. 50 போட்டி டிரா ஆனது.
மான்செஸ்டரில் 9 டெஸ்டில் ஆடி இந்திய அணி வெற்றி பெற்றதில்லை. 4-ல் தோற்றது. 5 டெஸ்ட் டிரா ஆனது.
- இனிமேல் எங்களுடன் உலகக்கோப்பையில் மட்டுமின்றி எந்த ஐசிசி தொடரிலும் விளையாட வேண்டாம்.
- நீங்கள் எந்த மட்டத்திலும் எங்களுக்கு எதிராக விளையாட வேண்டாம்.
2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இங்கிலாந்தில் கடந்த 18-ந் தேதி தொடங்கியது. ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் இந்த போட்டி அடுத்த மாதம் 2-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டி தொடரில் இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் சயித் அப்ரிடி தலைமையினான பாகிஸ்தான் அணியை பர்மிங்காமில் நேற்று சந்திக்க இருந்தது. ஆனால் இந்திய அணியின் ஷிகர் தவான் உள்ளிட்ட சில வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான இந்த ஆட்டத்தை புறக்கணிப்பதாக போட்டி அமைப்பு குழுவினருக்கு ஏற்கனவே தெரிவித்து இருந்தனர்.
பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் என்பதால் அந்த நாட்டை சேர்ந்த அணியினருடன் தங்களால் விளையாட முடியாது என்று மறுத்து விட்டனர். இதனால் நேற்று நடக்க இருந்த இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக போட்டி அமைப்பு குழுவினர் அறிவித்தனர்.
இந்நிலையில் இந்த தொடரில் விலகிய இந்தியா முடிந்தால் ஐ.சி.சி. தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடாமல் விலகுமா? என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் சல்மான் பட் சவால் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
உலகம் முழுவதும் அவர்களைப் (இந்திய கிரிக்கெட் அணி) பற்றி பேசுகிறார்கள். அவர்கள் ஒட்டுமொத்த கிரிக்கெட்டுக்கும் ரசிகர்களுக்கும் என்ன செய்தியை அனுப்பியுள்ளனர்? அவர்கள் என்ன நிரூபிக்க முயற்சிக்கிறார்கள்? இனிமேல் எங்களுடன் உலகக்கோப்பையில் மட்டுமின்றி எந்த ஐசிசி தொடரிலும் விளையாட வேண்டாம். இதை ஒரு வாக்குறுதியாகக் கொடுங்கள். பாருங்கள், எல்லாவற்றுக்கும் ஒரு இடம் இருக்கிறது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
ஆனால் இப்போது நீங்கள் எந்த மட்டத்திலும் எங்களுக்கு எதிராக விளையாட வேண்டாம். ஒலிம்பிக்கில் கூட வேண்டாம். முடிந்தால் அதைச் செய்யுங்கள். நான் பார்க்க விரும்புகிறேன். இந்த முடிவை யார் எடுத்தார்கள்? வெறும் 4 - 5 இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடவில்லை. அவர்களால் விளையாட விரும்பிய மற்ற இந்திய வீரர்களும் அழுத்தத்திற்குள் தள்ளப்பட்டார்கள். இதை இப்படியே வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இதற்கான பதிலடிகளை நாங்கள் இந்தியாவுக்கு நினைவூட்டுவோம்.
என்று சல்மான் பட் கூறினார்.
- முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.
- இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 4-வது போட்டி வரும் 23-ம் தேதி மான்செஸ்டரில் தொடங்க உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் மோதும் 4-வது போட்டி வரும் 23-ம் தேதி மான்செஸ்டரில் தொடங்க உள்ளது.
தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க இந்த 4-வது டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்குள் இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. இதனிடையே இந்திய அணியில் நிறைய வீரர்கள் காயத்தை சந்தித்துள்ளனர். இதனால் இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் 4-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் பஷிருக்கு பதிலாக லியாம் டாசன் இடம் பெற்றுள்ளார்.
4-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன்:-
க்ராலி, டக்கெட், போப், ரூட், ப்ரூக், ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஸ்மித், லியாம் டாசன், வோக்ஸ், கார்ஸ், ஆர்ச்சர்.






