என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- பரூக் இன்ஜினீயர் இந்திய அணிக்காக 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
- கிளைவ் லாய்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, ரசிகர்கள் அமர்ந்து போட்டியை பார்வையிடும் கேலரியின் ஒரு பகுதிக்கு (Stand) பரூக் இன்ஜீனியர், கிளைவ் லாய்டு எனப் பெயரிடப்பட்டிருந்தது. அதை இருவரும் திறந்து வைத்தனர். மேலும், மணி அடித்து போட்டியை தொடங்கி வைத்தனர்.
பரூக் இன்ஜினீயர் இந்தியாவின் முன்னாள் வீரர் ஆவார். இவர் இந்திய அணிக்கான 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 சதம், 16 அரைசதங்களுடன் 2611 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 31.08 ஆகும். 121 அதிகபட்ச ஸ்கோராகும்.
கிளைவ் லாய்டு வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஆவார். இவர் 110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 19 சதம், 39 அரைசதங்களுடன் 7515 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 46.67 ஆகும். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 242 ரன்கள் அடித்துள்ளார்.
87 ஒருநாள் போட்டியில் ஒரு சதம், 11 அரைசதங்களுடன் 1977 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 39.54 ஆகும். அதிகபட்ச ஸ்கோர் 102 ஆகும்.
டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டும், ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.
- சச்சின், டிராவிட், கவாஸ்கர், விராட் கோலி 1000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர்.
- 1000 ரன்களை கடந்த 5ஆவது இந்திய வீரர் கே.எல். ராகுல் ஆவார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் சற்று தடுமாற, கே.எல். ராகுல் நேர்த்தியாக விளையாடினார். 18ஓவர் வரை இருவரும் விக்கெட் இழக்காமல் விளையாடி வருகின்றனர். கே.எல். ராகுல் 59 பந்தில் 32 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் டெஸ்டில் ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். இதற்கு முன்னதாக இந்திய வீரர்களான சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர், விராட் கோலி ஆகியோர் 1000 ரன்களை கடந்துள்ளனர். தற்போது அவர்கள் பட்டியலில் கே.எல். ராகுல் இணைந்துள்ளார்.
- மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கைதான் தேர்வு செய்யும்.
- பந்து வீச்சுக்கு சாதகமான சீதோஷ்ணநிலை நிலவி வருவதால், பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் மான்செஸ்டரில உள்ள ஓல்டு டிராஃபோர்டில் இன்று தொடங்கியது. இங்கு நடைபெறும் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற அணி கண்ணை மூடிக்கொண்டு பேட்டிங் தேர்வு செய்யுமாம். அதையும் மீறி பீல்டிங் கேட்டால், ஒருபோதும் அந்த அணி வெற்றி பெற்றது கிடையாதாம்.
இதனால் இன்றைய போட்டியில் டாஸ் வெல்லும் அணி பேட்டிங் தேர்வு செய்யும் என இரு அணி ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இது கிரிக்கெட் வல்லுனர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்த பென் ஸ்டோன்ஸ் "பழைய கதையின் பின்னால் நான் செல்ல விரும்பவில்லை. இன்றைய சீதோஷ்ண நிலையை பார்த்தால் முதலில் பந்து வீசினால் நன்றாக இருக்கும் எனத் தோன்றுகிறது. இதனால் பந்து வீச்சை தேர்வு செய்தேன்" என்றார். இங்கிலாந்தில் மழை வருவது போன்ற சீதோஷ்ண நிலையில் பந்து அதிக அளவில் ஸ்விங் ஆகும். பேட்டிங் செய்வது மிகவும் கடினம். இதை கருத்தில் கொண்டுதான் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
சீதோஷ்ண நிலையை தாண்டி, மைதானத்தின் வரலாறு இந்தியாவுக்கு கைக்கொடுக்குமா? என்று பார்ப்போம். இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் தொடர்ச்சியாக 4 போட்டியில் டாஸ் தோற்றுள்ளார்.
இன்றைய போட்டியில் நிதிஷ் ரெட்டி, கருண் நாயர், ஆகாஷ் தீப் ஆகியோர் நீக்கப்பட்டு சாய் சுதர்சன், ஷர்துல் தாகூர், அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். அன்ஷுல் கம்போஜுக்கு இது அறிமுக போட்டியாகும்.
- இரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் தொடங்கியது.
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பவுலிங் தேர்வு செய்தார்.
மான்செஸ்டர்:
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்- தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
லீட்சில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்தும், பர்மிங்காமில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியாவும், லார்ட்சில் நடந்த 3வது டெஸ்டில் இங்கிலாந்தும் வென்றன.
இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று தொடங்குகிறது.
இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பவுலிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்திய அணியில் கருண் நாயர், ஆகாஷ் தீப், நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக சாய் சுதர்சன், அனில் கம்போஜ் மற்றும் ஷர்துல் தாக்குர் இடம்பிடித்துள்ளனர்.
- முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 208 ரன்கள் எடுத்தது.
- இந்தியா 111 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று தென் ஆப்பிரிக்கா லெஜண்ட்ஸ் மற்றும் இந்தியா லெஜண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்தியா 111 ரன்னில் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக தென் ஆப்பிரிக்கா அணி பீல்டிங் செய்வதற்காக மைதானத்திற்குள் நுழைந்து ஆலோசனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ரசிகர்கள் ஆர்சிபி, ஆர்சிபி என முழக்கமிட்டனர். இதனை கேட்டதும் டிவில்லியர்ஸ் சிரித்தபடி கைகளை உயர்த்தி ஆதரவு தெரிவித்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
- முன்னணி வேகப்பந்து வீரரான ஜஸ்பிரித் பும்ரா இந்த டெஸ்டில் ஆடுவது உறுதியாகியுள்ளது.
- இங்கிலாந்தில் முரளிதரன் சாதனையை சமன் செய்வார்.
மான்செஸ்டர்:
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரா போர்ட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
5 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக் கிறது. இதனால் இந்த டெஸ் டில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.
நிதிஷ்குமார் ரெட்டி, ஆகாஷ்தீப், அர்ஷ்தீப் ஆகி யோர் காயம் அடைந்ததால் இந்திய அணியோடு இணைந்துள்ள 24 வயது வேகப்பந்து வீரர் அன் சுதல் கம்போஜ் டெஸ்டில் அறிமுகம் ஆகிறார்.
முன்னணி வேகப்பந்து வீரரான ஜஸ்பிரித் பும்ரா இந்த டெஸ்டில் ஆடுவது உறுதியாகியுள்ளது. இந்த தொடரில் அவர் 5 டெஸ்டில் 3 போட்டியில் மட்டுமே விளையாடுவார் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. அதன்படி அவர் முதல் டெஸ்டிலும், 3-வது டெஸ்டிலும் விளையாடினார். 2-வது டெஸ்டில் இடம் பெறவில்லை. அவர் 2 டெஸ்டில் 12 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.
இன்று தொடங்கும் 4-வது டெஸ்டில் பும்ரா பல சாதனைகளை படைக்க வாய்ப்பு உள்ளது. 5 விக்கெட் கைப்பற்றினால் புதிய வரலாறு படைப்பார். ஒரு விக்கெட் எடுத்தால் இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்தில் 50 விக்கெட் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.
5 விக்கெட் வீழ்த்தினால் இங்கிலாந்தில் அதிக விக்கெட் கைப்பற்றிய ஆசிய வீரர் என்ற சாதனையை படைப்பார். அவர் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீரர் வாசிம் அக்ரமை (53 விக்கெட்) முந்துவார்.
பும்ரா மேலும் ஒருமுறை 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்தால் சேனா நாடுகளில் (தென் ஆப்பிரிக்கா , இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) அதிக முறை (12 தடவை) 5 விக்கெட் எடுத்த முதல் ஆசிய பவுலர் என்ற பெருமையை பெறுகிறார். மேலும் இங்கிலாந்தில் முரளிதரன் சாதனையை சமன் செய்வார்.
- முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 208 ரன்கள் எடுத்தது.
- இந்தியா 111 ரன்கள் மட்டுமே எடுத்தது.
உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று தென் ஆப்பிரிக்கா லெஜண்ட்ஸ் மற்றும் இந்தியா லெஜண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 30 பந்தில் 63 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் யூசப் பதான், சால்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்தில் இருந்தே தடுமாறியது. இதனால் 55 ரன்களுக்கு 6 முக்கிய விக்கெட்டுகளை இழந்த இந்தியா, 111 ரன்னில் 9 விக்கெட்டுகளை இழந்தது. யுவராஜ் சிங் காயம் காரணமாக பேட்டிங் செய்ய வரவில்லை. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பின்னி 37 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஆரோன் ஃபாங்கிசோ 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- காயம் காரணமாக நிதிஷ் குமார், ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் விலகி உள்ளனர்.
- கம்போஜ் அல்லது பிரசித் கிருஷ்ணா ஆகியோரில் ஒருவரை முடிவு செய்வோம் என்றும் கில் குறிப்பிட்டார்.
மான்செஸ்டர்:
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட போட்டி மான்செஸ்டரில் உள்ள ஒல்டு டிராப்போர்டில் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. தொடரில் இருந்து நிதிஷ் குமாரும், 4-வது போட்டியில் இருந்து ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் விலகி உள்ளனர்.
நிதிஷ் குமாருக்கு பதிலாக ஷர்துல் தாகூரும், ஆகாஷ் தீப்புக்கு பதிலாக புதுமுக வேகப்பந்து வீச்சாளர் அன்ஜூல் கம்போஜ் இடம் பெறுவதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது. இருப்பினும் 'டாஸ்' போடுவதற்கு முன்பே கம்போஜ் அல்லது பிரசித் கிருஷ்ணா ஆகியோரில் ஒருவரை முடிவு செய்வோம் என்றும் கில் குறிப்பிட்டார்.

மேலும் 8 ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் அணிக்கு திரும்பிய கருண் நாயரின் ஆட்டம் மெச்சும்படி இல்லை. 6 இன்னிங்சில் ஆடி ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இதனால் அவருக்கு பதிலாக சாய் சுதர்சனை சேர்ப்பது குறித்து அணி நிர்வாகம் தீவிர பரீசிலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா:
ஜெய்ஸ்வால், லோகேஷ் ராகுல், கருண் நாயர் அல்லது சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் அல்லது குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர், பும்ரா, முகமது சிராஜ், அன்ஜூல் கம்போஜ் அல்லது பிரசித் கிருஷ்ணா.
- டி20 தொடரை இந்தியா ஏற்கனவே 3-2 என்ற கணக்கில் முதல் முறையாக கைப்பற்றி புதிய வரலாறு படைத்து இருந்தது.
- இங்கிலாந்தில் இந்திய அணி 2-வது முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதித்தது.
செஸ்டர் லீ ஸ்ட்ரீட்:
இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 318 ரன் குவித்தது.
கேப்டன் ஹர்மன்பிரீத் கவூர் சதம் அடித்தார். அவரது 7-வது (149-வது போட்டி) செஞ்சூரியாகும். அவர் 84 பந்தில் 102 ரன்னும் (14 பவுண்டரி), ஜெமீமா ரோட்ரிக்ஸ் 45 பந்தில் 50 ரன்னும் (7 பவுண்டரி), ஸ்மிருதி மந் தனா, ஹர்லீன் தியோல் தலா 45 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய இங்கிலாந்து 49.5 ஓவரில் 305 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கேப்டன் நேட் ஸ்கிவர்-பிரண்ட் 98 ரன்னும் (11 பவுண்டரி), எம்மா லேம்ப் 68 ரன்னும் (5 பவுண்டரி) எடுத்தனர். கிராந்தி கவுட் மிகவும் அபாரமாக பந்து வீசி 52 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் கைப்பற்றிய 4-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார். தீப்தி சர்மா (2 முறை), மம்தா மாபென், ஜூலன் கோஸ்வாமி ஆகியோர் வரிசையில் அவர் இணைந்தார். ஸ்ரீ சரணிக்கு 2 விக்கெட்டும், தீப்தி சர்மாவுக்கு 1 விக்கெட்டும் கிடைத்தது.
இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. 2-வது போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந்தது.
இங்கிலாந்தில் இந்திய அணி 2-வது முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதித்தது. இதற்கு முன்பு 2022-ம் ஆண்டு 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்று இருந்தது. 5 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா ஏற்கனவே 3-2 என்ற கணக்கில் முதல் முறையாக கைப்பற்றி புதிய வரலாறு படைத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த டி20 போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரஸல் ஓய்வு பெற்றார்.
- ரஸலுக்கு வேஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் GUARD OF HONOUR அளித்து கௌரவித்தனர்.
ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் 2 ஆவது போட்டி இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் அடித்தது. அதிரடியாக விளையாடிய ரஸல் 15 பந்துகளில் 36 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஜாம்பா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 15.2 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜாஸ் இங்கிலீஸ் 78 ரன்களும் க்ரீன் 56 ரன்களும் அடித்தனர்.
இந்த வெற்றி மூலம் 5 போட்டிக் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த டி20 போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரஸல் ஓய்வு பெற்றார். தனது கடைசி சர்வதேச போட்டியில் களமிறங்கிய ரஸலுக்கு வேஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் GUARD OF HONOUR அளித்து கௌரவித்தனர்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரஸல் ஓய்வு பெறுகிறார்.
- இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ரஸல் 15 பந்துகளில் 36 ரன்கள் அடித்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் அந்த்ரே ரஸல். 37 வயதான இவர், ரஸல் 2019ஆம் ஆண்டில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டி20 கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார். இதுவரை 84 போட்டிகளில் விளையாடி 1078 ரன்கள் அடித்துள்ளார். 61 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
ரஸல் அவருடைய சொந்த ஊரான ஜமைக்காவில் இன்று நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
தனது கடைசி சர்வதேச போட்டியில் களமிறங்கிய ரஸலுக்கு வேஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் GUARD OF HONOUR அளித்து கௌரவித்தனர். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ரஸல் 15 பந்துகளில் 36 ரன்கள் அடித்தார்.
இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் நிலையில், ரஸல் ஓய்வு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பாதிப்ப ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் தனது 29 வயதிலேயே ஓய்வை முடிவை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஸல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடியுள்ளார். 56 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1034 ரன்கள் அடித்துள்ளார். 70 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
அடுத்த தலைமுறை கரீபியன் கிரிக்கெட்டர்களுக்கு ரோல் மாடலாக இருக்கும் வகையில், எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை உயரிய நிலையில் முடிக்க விரும்புகிறேன் என ரஸல் தெரிவித்துள்ளார்.
- முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது.
- 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வங்கதேசம் கைப்பற்றியது.
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் யாரும் எதிர்பாரத வகையில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேசம் அணி 20 ஓவர் முடிவில் 133 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜகர் அலி 55 ரன்கள் குவித்து ஆட்டழந்தார். பாகிஸ்தான் தரப்பில் சல்மான் மிர்சா, அகமது டேனியல், அப்பாஸ் அஃப்ரிடி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து பாகிஸ்தான் அணி களமிறங்கியது. முதல் 6 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். இதில் 3 வீரர்கள் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 47 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதனை தொடர்ந்து ஃபஹீம் அஷ்ரஃப்- அப்பாஸ் அஃப்ரிடி ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அப்பாஸ் 19 ரன்னில் அவுட் ஆனார். கடைசி வரை போராடிய ஃபஹீம் அஷ்ரஃப் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் பாகிஸ்தான் அணி 19.2 ஓவரில் 125 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் வங்கதேச அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி வருகிற 24-ந் தேதி நடக்கிறது.






