search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "England Women"

    • ஏழு ஆண்டுகளின் வருவாயுடன் ஒப்பிடும்போது வாடகை மிகவும் உயர்ந்திருக்கிறது.
    • முழு நேர வேலையில் ஈடுபட்டுள்ள ஒரு பெண்ணின் வருவாயில் 3ல் 2 பங்கு வாடகைக்கு செலவாகிறது.

    இந்தியாவில் மட்டுமல்லாது, உயர்ந்து வரும் வீட்டு வாடகை என்பது உலகெங்கும் ஒரு பிரச்சனையாகி வருகிறது.

    இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வீட்டு வாடகை மிகவும் அதிகரித்து வருகிறது. சராசரி சம்பளம் வாங்கும் ஒரு பெண் இந்த உயர்வை ஈடு கட்ட வேண்டுமென்றால், தற்போது வாங்கும் சம்பளத்தை விட இரண்டு மடங்கு வாங்கினால்தான் சமாளிக்க இயலும் எனும் நிலை உருவாகியுள்ளது.

    பாலின பாகுபாட்டால் ஒரே வேலைக்கு ஆண்களை விட பெண்கள் வாங்கும் சம்பளம் குறைவு.

    புளூம்பர்க் செய்திக்கான ஹாம்ப்டன்ஸ் இன்டர்நேஷனல்ஸ் எனும் அமைப்பு அளிக்கும் தகவல்களின்படி, அங்கு குடியிருப்புகளுக்கான வாடகை சமீபத்திய மாதங்களில் பெரிதும் அதிகரித்துள்ளது. ஏழு ஆண்டுகளின் வருவாயுடன் ஒப்பிடும்போது வாடகை மிகவும் உயர்ந்திருக்கிறது. மே மாத கணக்கின்படி, கிரேட்டர் லண்டன் பகுதி முழுவதும் சராசரி வாடகை சுமார் ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் என அதிகரித்திருக்கிறது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட 13% அதிகமாகும். இதனால் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். முழு நேர வேலையில் ஈடுபட்டுள்ள ஒரு பெண்ணின் வருவாயில் 3ல் 2 பங்கு வாடகைக்கு செலவாகிறது.

    "ஊதிய உயர்வு தேக்கம் மற்றும் அதிகரிக்கும் வாடகையினால் தங்களின் வருமானத்தின் பெரும்பகுதி பறிபோவதால் ஆண், பெண் இருபாலரும் மிகவும் சிரமப்படுகின்றனர்" என்று ஹாம்ப்டன்ஸ் இன்டர்நேஷனல்ஸின் ஆராய்ச்சித் தலைவர் அனீஷா பெவரிட்ஜ் தெரிவிக்கிறார்.

    சராசரி 5 ஆண்டு நிலையான வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 6.01% ஆக உயர்ந்த பிறகு, நாட்டில் அடமான செலவுகள் 14 ஆண்டு உச்சத்தை நெருங்கியிருக்கிறது.

    வரும் காலங்களில் குறைந்தளவே புதிய வீடுகளுக்கான தேவை இருக்கும் என்பதால், கட்டுமான நிறுவனங்கள் புதிய வீடுகளை கட்டுவதை கணிசமாக குறைத்துள்ளன.

    கடந்த 10 ஆண்டுகளாக, ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்தின் வடகிழக்கு பகுதிகளைத் தவிர நாட்டின் பிற பகுதிகளில் பெண்கள் பெறும் சம்பளத்தில் 30 சதவிகிதத்திற்கும் குறைவாக வாடகை இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆன்டிகுவாவில் நடைபெறும் 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி, முன்னாள் சாம்பியன் இங்கிலாந்துடன் நாளை பலப்பரீட்சை நடத்துகிறது. #WomenWorldT20 #India #England
    ஆன்டிகுவா:

    6-வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு ஆன்டிகுவாவில் நடைபெறும் 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி, முன்னாள் சாம்பியன் இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்திய அணி லீக் சுற்றில் நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை வரிசையாக வீழ்த்தி தனது பிரிவில் (பி) முதலிடத்தை பிடித்து கம்பீரமாக அரைஇறுதிக்குள் நுழைந்தது. அத்துடன் இந்த போட்டி தொடரில் இந்திய அணி தான் அதிகபட்ச ஸ்கோரை (நியூசிலாந்துக்கு எதிராக 194/5) பதிவு செய்துள்ளது.

    இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (167 ரன்கள்) ரன் குவிப்பில் முதலிடத்தில் உள்ளார். மந்தனா (144 ரன்கள்), மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் (107 ரன்கள்) ஆகியோரும் நல்ல பார்மில் உள்ளனர். கடைசி லீக் ஆட்டத்தில் காயம் காரணமாக களம் இறங்காத மிதாலி ராஜ் இந்த ஆட்டத்தில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் சுழற்பந்து வீச்சாளர்கள் பூனம் யாதவ் (8 விக்கெட்), ராதா யாதவ் (7 விக்கெட்), ஹேமலதா (5 விக்கெட்), தீப்தி சர்மா (4 விக்கெட்) ஆகியோர் எதிரணியினருக்கு சவாலாக விளங்கி வருகிறார்கள். இவர்களின் சுழல் ஜாலம் நீடித்தால், இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி விடும்.

    இங்கிலாந்து அணியை பொறுத்தவரை லீக் ஆட்டங்களில் வங்காளதேசம், தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்தது. வெஸ்ட்இண்டீசிடம் தோல்வி கண்டது. ஒரு ஆட்டம் (இலங்கைக்கு எதிராக) முடிவில்லாமல் போனது. ‘ஏ’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்து இங்கிலாந்து அணி அரைஇறுதியை எட்டியது.

    ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணியின் பேட்டிங் மெச்சும்படி இல்லை. அந்த அணி இந்த போட்டி தொடரில் அதிகபட்சமாக 115 ரன்கள் (வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக) தான் எடுத்துள்ளது. எந்தவொரு வீராங்கனையும் 50 ரன்களை தாண்டவில்லை. ஆனால் அந்த அணியின் பந்து வீச்சு அபாரமாக உள்ளது. அன்யா சிருப்சோல் (7 விக்கெட்), கிறிஸ்டி கோர்டான் (6 விக்கெட்), நதாலி ஸ்வியர் (4 விக்கெட்) ஆகியோர் பவுலிங்கில் மிரட்டக்கூடியவர்கள். கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கு இந்திய அணி வரிந்து கட்டும். அதே சமயம் இங்கிலாந்து அணி தனது ஆதிக்கத்தை தொடர போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி இதுவரை இறுதிப்போட்டிக்கு வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இவ்விரு இதுவரை 20 ஓவர் போட்டியில் 13 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இந்திய அணி 3 முறையும், இங்கிலாந்து அணி 10 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன. இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    முன்னதாக இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 1.30 மணிக்கு ஆன்டிகுவாவில் நடைபெறும் முதலாவது அரைஇறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் வெஸ்ட்இண்டீஸ் அணி, 3 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. 
    முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிகா பெண்கள் அணி. #ENGWvSAW
    இங்கிலாந்தில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா வீராங்கனைகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தொடக்க வீராங்கனை டாமி பியூமோன்டின் (59 பந்தில் 71 ரன்கள்) சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்தது.

    பின்னர் 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா வீராங்கனைகள் களம் இறங்கினார்கள். அந்த அணி 19 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் லூயஸ் முதல் இரண்டு பந்திலும் பவுண்டரி அடித்ததுடன், 3-வது பந்தை சிக்சருக்கு தூக்கி அணியை வெற்றிபெற வைத்தார். இவரது ஆட்டத்தால் 19.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



    தொடக்க வீராங்கனையும் விக்கெட் கீப்பரும் ஆன லீ 37 பந்தில் 68 ரன்களும், லூயஸ் 52 பந்தில் 63 ரன்களும் (அவுட் இல்லை) எடுத்து அணியை வெற்றி பெற வைத்தனர்.

    மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து வீராங்கனைகள் மோதினார்கள். இதில் முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது.

    பின்னர் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து வீராங்கனைகள் 118 ரன்னில் சுருண்டார்கள். இதனால் இங்கிலாந்து பெண்கள் அணி 54 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    ×