search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Home rent"

    • ஏழு ஆண்டுகளின் வருவாயுடன் ஒப்பிடும்போது வாடகை மிகவும் உயர்ந்திருக்கிறது.
    • முழு நேர வேலையில் ஈடுபட்டுள்ள ஒரு பெண்ணின் வருவாயில் 3ல் 2 பங்கு வாடகைக்கு செலவாகிறது.

    இந்தியாவில் மட்டுமல்லாது, உயர்ந்து வரும் வீட்டு வாடகை என்பது உலகெங்கும் ஒரு பிரச்சனையாகி வருகிறது.

    இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வீட்டு வாடகை மிகவும் அதிகரித்து வருகிறது. சராசரி சம்பளம் வாங்கும் ஒரு பெண் இந்த உயர்வை ஈடு கட்ட வேண்டுமென்றால், தற்போது வாங்கும் சம்பளத்தை விட இரண்டு மடங்கு வாங்கினால்தான் சமாளிக்க இயலும் எனும் நிலை உருவாகியுள்ளது.

    பாலின பாகுபாட்டால் ஒரே வேலைக்கு ஆண்களை விட பெண்கள் வாங்கும் சம்பளம் குறைவு.

    புளூம்பர்க் செய்திக்கான ஹாம்ப்டன்ஸ் இன்டர்நேஷனல்ஸ் எனும் அமைப்பு அளிக்கும் தகவல்களின்படி, அங்கு குடியிருப்புகளுக்கான வாடகை சமீபத்திய மாதங்களில் பெரிதும் அதிகரித்துள்ளது. ஏழு ஆண்டுகளின் வருவாயுடன் ஒப்பிடும்போது வாடகை மிகவும் உயர்ந்திருக்கிறது. மே மாத கணக்கின்படி, கிரேட்டர் லண்டன் பகுதி முழுவதும் சராசரி வாடகை சுமார் ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் என அதிகரித்திருக்கிறது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட 13% அதிகமாகும். இதனால் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். முழு நேர வேலையில் ஈடுபட்டுள்ள ஒரு பெண்ணின் வருவாயில் 3ல் 2 பங்கு வாடகைக்கு செலவாகிறது.

    "ஊதிய உயர்வு தேக்கம் மற்றும் அதிகரிக்கும் வாடகையினால் தங்களின் வருமானத்தின் பெரும்பகுதி பறிபோவதால் ஆண், பெண் இருபாலரும் மிகவும் சிரமப்படுகின்றனர்" என்று ஹாம்ப்டன்ஸ் இன்டர்நேஷனல்ஸின் ஆராய்ச்சித் தலைவர் அனீஷா பெவரிட்ஜ் தெரிவிக்கிறார்.

    சராசரி 5 ஆண்டு நிலையான வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 6.01% ஆக உயர்ந்த பிறகு, நாட்டில் அடமான செலவுகள் 14 ஆண்டு உச்சத்தை நெருங்கியிருக்கிறது.

    வரும் காலங்களில் குறைந்தளவே புதிய வீடுகளுக்கான தேவை இருக்கும் என்பதால், கட்டுமான நிறுவனங்கள் புதிய வீடுகளை கட்டுவதை கணிசமாக குறைத்துள்ளன.

    கடந்த 10 ஆண்டுகளாக, ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்தின் வடகிழக்கு பகுதிகளைத் தவிர நாட்டின் பிற பகுதிகளில் பெண்கள் பெறும் சம்பளத்தில் 30 சதவிகிதத்திற்கும் குறைவாக வாடகை இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னையில் பல்வேறு இடங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து ரூ.5 கோடி மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

    சென்னை:

    வீடுகளை வாடகைக்கும், குத்தகைக்கும் வாங்கி கொடுக்கும் நிறுவனம் நடத்தி வந்தவர், அறிவுநம்பி (36).

    இவர், பரங்கிமலை, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், திருவான்மியூர், அடையார், கீழ்க்கட்டளை, மேடவாக்கம், நீலாங்கரை, துரைப்பாக்கம், ஆகிய இடங்களில் வாடகைக்கு வீடு வாங்கி கொடுப்பதாக விளம்பரம் செய்தார்.

    குத்தகைக்கும் வீடு பிடித்து கொடுப்பதாக அறிவித்தார். இதற்கு குறிப்பிட்ட தொகையை கமி‌ஷனாக தர வேண்டும் என்று வாடிக்கையாளர்களிடம் கூறினார்.

    இதற்காக ஏராளமானவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு வாடகை வீடுகளை பிடித்துக் கொடுத்தார். ஆனால், அதற்கான வாடகையை இவரே வாங்கிக் கொண்டு வீட்டு உரிமையாளர்களிடம் கொடுக்கவில்லை.

    குத்தகைக்கு எடுத்த வீடுகளுக்கு லட்சக்கணக்கான ரூபாயை பெற்றுக் கொண்டு அதை வீட்டு உரிமையாளருக்கு முழுமையாக செலுத்த வில்லை. இந்த தில்லுமுல்லு மூலம் பெரும் தொகையை மோசடி செய்துவிட்டதாக புகார்கள் குவிந்தன.

    வாடிக்கையாளர்களையும், வீட்டு உரிமையாளர்களையும், ஏமாற்றிய அறிவுநம்பி 168 பேர்களிடம் ரூ.5 கோடிக்கும் மேல் திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்தது தெரிய வந்தது. இது தொடர்பான புகார் குறித்து மத்திய குற்றபிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    இதையடுத்து, அறிவு நம்பி நடத்தி வந்த 3 அலுவலங்களை மூடிவிட்டு தலைமறைவானார். அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தர விட்டார்.

    அதை தொடர்ந்து தனிப்படை போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் அறிவுநம்பி சிக்கினார். ஆதம்பாக்கத்தில் புதிய பெயரில் மீண்டும் வாடகை வீட்டுக்கான அலுவலகம் தொடங்கிய அவரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் புழல் ஜெயிலில் அடைக்கபபட்டார். அறிவு நம்பி மீது தொடர்ந்து மோசடி புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இவர் 300-க்கும் அதிகமானவர்களிடம் மோசடி செய்து இருக்கலாம் என்று தெரிகிறது.

    ×