search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cheating arrest"

    சென்னையில் பல்வேறு இடங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து ரூ.5 கோடி மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

    சென்னை:

    வீடுகளை வாடகைக்கும், குத்தகைக்கும் வாங்கி கொடுக்கும் நிறுவனம் நடத்தி வந்தவர், அறிவுநம்பி (36).

    இவர், பரங்கிமலை, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், திருவான்மியூர், அடையார், கீழ்க்கட்டளை, மேடவாக்கம், நீலாங்கரை, துரைப்பாக்கம், ஆகிய இடங்களில் வாடகைக்கு வீடு வாங்கி கொடுப்பதாக விளம்பரம் செய்தார்.

    குத்தகைக்கும் வீடு பிடித்து கொடுப்பதாக அறிவித்தார். இதற்கு குறிப்பிட்ட தொகையை கமி‌ஷனாக தர வேண்டும் என்று வாடிக்கையாளர்களிடம் கூறினார்.

    இதற்காக ஏராளமானவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு வாடகை வீடுகளை பிடித்துக் கொடுத்தார். ஆனால், அதற்கான வாடகையை இவரே வாங்கிக் கொண்டு வீட்டு உரிமையாளர்களிடம் கொடுக்கவில்லை.

    குத்தகைக்கு எடுத்த வீடுகளுக்கு லட்சக்கணக்கான ரூபாயை பெற்றுக் கொண்டு அதை வீட்டு உரிமையாளருக்கு முழுமையாக செலுத்த வில்லை. இந்த தில்லுமுல்லு மூலம் பெரும் தொகையை மோசடி செய்துவிட்டதாக புகார்கள் குவிந்தன.

    வாடிக்கையாளர்களையும், வீட்டு உரிமையாளர்களையும், ஏமாற்றிய அறிவுநம்பி 168 பேர்களிடம் ரூ.5 கோடிக்கும் மேல் திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்தது தெரிய வந்தது. இது தொடர்பான புகார் குறித்து மத்திய குற்றபிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    இதையடுத்து, அறிவு நம்பி நடத்தி வந்த 3 அலுவலங்களை மூடிவிட்டு தலைமறைவானார். அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தர விட்டார்.

    அதை தொடர்ந்து தனிப்படை போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் அறிவுநம்பி சிக்கினார். ஆதம்பாக்கத்தில் புதிய பெயரில் மீண்டும் வாடகை வீட்டுக்கான அலுவலகம் தொடங்கிய அவரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் புழல் ஜெயிலில் அடைக்கபபட்டார். அறிவு நம்பி மீது தொடர்ந்து மோசடி புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இவர் 300-க்கும் அதிகமானவர்களிடம் மோசடி செய்து இருக்கலாம் என்று தெரிகிறது.

    ×