என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- 21 வருடங்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.
- 708 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் தலைசிறந்த ஸ்விங் பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஜேம்ஸ் ஆண்டர்சன். இங்கிலாந்து மண்ணில் இவரை எதிர்த்து பேட்டர்கள் விளையாடுவது சுலபமல்ல. 41 வயது வரை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் கடைசி போட்டியில் விளையாடினார்.
இந்த நிலையில் தான் முழு விருப்பத்துடன் ஓய்வு பெறவில்லை என ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆண்டர்சன் கூறுகையில் "நான் கடந்த வருடம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றேன். ஆனால் முழு விருப்பத்துடன் ஓய்வு பெறவில்லை. கேப்டன், பயிற்சியாளர் மற்றும் கிரிக்கெட் வாரிய இயக்குனருடன் ஆலோசனையில் ஈடுபட்டேன். அப்போது அவர்கள் வேறு திசையில் செல்ல விரும்புவதாக தெரிவித்தார்கள்" என்றார்.
2003ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கெதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். 21 வருடங்கள் டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார்.
188 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 704 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீ்ழ்த்திய வீரர்கள் பட்டியலில் 3ஆவது இடத்தை பிடித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
முரளீதரன் 800 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். வார்னே 708 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஆண்டர்சன் 704 விக்கெட்டுகள் வீழ்த்தியள்ளார். அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
- ரிஷப் பண்ட் 37 ரன்கள் அடித்திருந்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார்
- கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்து ரிஷப் பண்ட்டின் காலை நேராக தாக்கியதால் காயம் ஏற்பட்டது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மான் செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரா போர்ட் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
இந்திய அணியில் 3 மாற்றம் செய்யப்பட்டது. கருண் நாயர், நிதிஷ்குமார் ரெட்டி , ஆகாஷ் தீப் ஆகியோருக்கு பதிலாக சாய் சுதர்ஷன், ஷர்துல் தாக்கூர், புதுமுக வீரர் அன்சுல் கம்போஜ் ஆகியோர் இடம் பெற்றனர். முதலில் விளை யாடிய இந்தியா ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 264 ரன் எடுத்து இருந்தது.
சாய் சுதர்ஷன் 61 ரன்னும், ஜெய்ஸ்வால் 58 ரன்னும், கே.எல்.ராகுல் 46 ரன்னும், கேப்டன் சுப்மன் கில் 12 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் தலா 19 ரன் களுடன் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். ரிஷப்பண்ட் 37 ரன்னில் காயத்தால் வெளியேறினார்.
கிறிஸ்வோக்ஸ் வீசிய யார்க்கர் பந்தில் ரிஷப் பண்ட் காயம் அடைந்தார். அவரது வலது கால் பெரு விரலில் பந்து தாக்கியது. ரத்தம் கசிந்தது. காலில் பயங்கரமான வீக்கம் ஏற் பட்டது. வலியால் அவர் துடித்தார். உடனடியாக அணியின் உடல் இயக்க நிபுணர் வந்து முதலுதவி அளித்தார்.
ஆனாலும் வலி குறையாததால் ஆம்புலன்ஸ் பெயர டப்பட்ட கோல்ப் வண்டி மூலம் மைதானத்தில் இருந்து வெளியே அழைத்து செல்லப்பட்டார்.அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவகுழு அவரது முன்னேற்றம் குறித்து கண்காணித்து வருகிறது.
காயம் காரணமாக ரிஷப் பண்ட் இன்று விளையாடு வாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் ஆட முடியாமல் போனது இந்திய அணிக்கு மிகப்பெரிய பாதிப்பு என்று சாய் சுதர்ஷன் தெரிவித்துள்ளார். நேற்றைய போட்டிக்கு பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி வந்த போது காயம் அடைந்தார். கடுமையான வலியால் துடித்தார். அவர் மீண்டும் பேட்டிங் செய்ய வராவிட்டால், அது அணிக்கு பாதிப்புதான். ஆனாலும் களத்தில் இருக்கும் மற்ற பேட்ஸ் மேன்கள் தங்களால் முடிந்த வரை சிறப்பாக விளையாடி, அந்த இழப்பை ஈடுகட்ட முயற்சிப்பார்கள். ரிஷப் பன்ட் தொடரில் இருந்து விலகினால் நாங்கள் நிச்சயமாக கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
இவ்வாறு சாய்சுதர்ஷன் கூறியுள்ளார்.
- ரிஷப் பண்ட் 37 ரன்கள் அடித்திருந்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார்.
- கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்து ரிஷப் பண்ட்டின் காலை நேராக தாக்கியதால் காயம் ஏற்பட்டது.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்களும் ஜெய்ஸ்வால் 58 ரன்களும் அடித்து அவுட்டாகினர்.
இப்போட்டியில் ரிஷப் பண்ட் 37 ரன்கள் அடித்திருந்த நிலையில் காயம் காரணமாக ரிட்டையர் அவுட் முறையில் வெளியேறினார்.
கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்து ரிஷப் பண்ட்டின் காலை நேராக தாக்கிய நிலையில், வலியால் அவதிப்பட்ட பண்ட் மைதானத்தை விட்டு பாதியில் வெளியேறினார். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் பண்ட் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.
முதல் நாள் முடிவில் ஜடேஜாவும், ஷர்துல் தாக்கூரும் தலா 19 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறும். இன்றைய போட்டியில் பண்ட் விளையாடுவது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது.
- ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து, 58 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- சாய் சுதர்சன் 134 பந்தில் அரைசதம் கடந்தார்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
ஜெய்ஸ்வால்- கே.எல். ராகுல் ஜோடி நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தது. இந்திய அணியின் ஸ்கோர் 94 ரன்னாக இருக்கும்போது கே.எல். ராகுல் 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து சாய் சுதர்சன் களம் இறங்கினார். மற்றொரு முனையில் ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து, 58 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த சுப்மன் கில் 12 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அப்போது இந்தியா 140 ரன்கள் எடுத்திருந்தது.
4ஆவது விக்கெட்டுக்கு சாய் சுதர்சன் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். சாய் சுதர்சன் நிதானமாக விளையாட, ரிஷப் பண்ட் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
69ஆவது ஓவரை ஜோ ரூட் வீசினார். இந்த ஓவரின் 2ஆவது பந்தை பவுண்டரிக்கு விரட்டி சாய் சுதர்சன் 134 பந்தில் அரைசதம் கடந்தார். 61 ரங்களில் அவரும் ஆட்டம் இழந்தார்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 83 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜாவும், ஷர்துல் தாக்கூரும் தலா 19 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இரண்டாம் நாள் ஆட்டம் நாளை நடைபெறும்.
- முதல் டெஸ்டிற்குப் பிறகு அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
- தனது 3ஆவது இன்னிங்சில் அரைசதத்தை பதிவு செய்துள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
ஜெய்ஸ்வால்- கே.எல். ராகுல் ஜோடி நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தது. இந்திய அணியின் ஸ்கோர் 94 ரன்னாக இருக்கும்போது கே.எல். ராகுல் 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து சாய் சுதர்சன் களம் இறங்கினார். மற்றொரு முனையில் ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து, 58 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த சுப்மன் கில் 12 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அப்போது இந்தியா 140 ரன்கள் எடுத்திருந்தது.
4ஆவது விக்கெட்டுக்கு சாய் சுதர்சன் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். சாய் சுதர்சன் நிதானமாக விளையாட, ரிஷப் பண்ட் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
69ஆவது ஓவரை ஜோ ரூட் வீசினார். இந்த ஓவரின் 2ஆவது பந்தை பவுண்டரிக்கு விரட்டி சாய் சுதர்சன் 134 பந்தில் அரைசதம் கடந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 3ஆவது இன்னிங்சில் அரைசதத்தை பதிவு செய்துள்ளார்.
- இன்னொரு வாய்ப்புக்கு தகுதியானவர் என்பதை உறுதிப்படுத்த சுப்மன் கில்லுக்கு இன்று வாய்ப்பு இருந்தது.
- அவர் கருண் நாயரை தேர்வு செய்திருக்க வேண்டும்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் இன்று தொடங்கியது. இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. காயம் காரணமாக ஆகாஷ் தீப், நிதிஷ் ரெட்டி ஆகியோர் நீக்கப்பட்டு அன்ஷுல் கம்போஜ், ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டனர்.
சுமார் 8 வருடத்திற்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்த கருண் நாயர், 6 இன்னிங்சில் 0, 20, 31, 26, 40 மற்றும் 14 ரன்களே அடித்ததால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக சாய் சுதர்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கருண் நாயருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தனது எக்ஸ் பக்கத்தில் "கருண் நாயர் குறிப்பிடத்தகுந்த வகையில் விளையாட வில்லை என்றாலும், இன்னொரு வாய்ப்புக்கு தகுதியானவர் என்பதை உறுதிப்படுத்த சுப்மன் கில்லுக்கு இன்று வாய்ப்பு இருந்தது. அவர் கருண் நாயரை தேர்வு செய்திருக்க வேண்டும். அணித் தலைவராக கடினமான முடிவு எடுக்கும்போது, மரியாதை பெறுவதற்கான வாய்ப்பை இழந்து விட்டார்" எனத் தெரிவித்துள்ளார்.
- கே.எல்.ராகுல் 46 ரன்னிலும், ஜெய்ஸ்வால் 58 ரன்னிலும் அவுட்டாகினர்.
- கவாஸ்கரின் சாதனையை கே.எல்.ராகுல் சமன் செய்துள்ளார்.
மான்செஸ்டர்:
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது..
அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 49.1 ஓவரில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 46 ரன்னிலும், ஜெய்ஸ்வால் 58 ரன்னிலும், சுப்மன் கில் 12 ரன்னிலும் அவுட்டாகினர்.
இந்நிலையில், இந்தப் போட்டியில் கே.எல்.ராகுல் ரன் குவித்ததன் மூலம் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
அதாவது, வெளிநாட்டு மண்ணில் ஒரு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 1,000 ரன்களைக் கடந்த 2வது துவக்க வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதற்குமுன், இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவாஸ்கர், வெஸ்ட் இண்டீஸ் (1,404), இங்கிலாந்து (1,152), பாகிஸ்தான் (1,001) ஆகிய நாடுகளில் 1,000 ரன்களை விளாசி இருந்தார். தற்போது அவரது சாதனையை கே.எல்.ராகுல் சமன் செய்துள்ளார்.
- மோஹ்சின் கான், மயங்க் அகர்வால், ஆவேஷ் கான் ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வந்தனர்.
- தற்போது அவர்களுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.
இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய அதிவேக பந்து வீச்சாளராக உருவாகி வந்தவர்கள் மோஹ்சின் கான், மயங்க் அகர்வால், ஆவேஷ் கான். இந்த மூன்று பேரும் தொடர்ச்சியாக 140 கி.மீ. வேகத்தில் பந்து வீசக்கூடியவர்கள். இந்திய அணியில் இடம் பிடித்து, சர்வதேச கிரிக்கெட் பேட்டர்களுக்கு மிகப்பெரிய அளவில அச்சுறுத்தலாக இருப்பார்கள் என கணிக்கப்பட்டவர்கள்.
ஆனால் உள்ளூர் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி அடிக்கடி காயம் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறார்கள். மூன்று பேருக்கும் அறுவை சிகிச்சை செய்யக் கூடிய அளவிற்கான காயம் ஏற்பட்டது. இந்த நிலைவர்கள் அவரவருக்குரிய அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளையில் ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதாரை ஓய்வு எடுக்கும்படி பிசிசிஐ மருத்துவக்கு குழு அறிவுறுத்தியுள்ளது.
இங்கிலாந்து எதிரான தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங், ஆகாஷ் தீப் மற்றும் ஆல்ரவுண்டர் நிதிஷ் ரெட்டி ஆகியோர் காயம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜெய்ஸ்வால் 96 பந்தில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார்.
- கே.எல். ராகுல் 98 பந்தில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் சற்று தடுமாற, கே.எல். ராகுல் நேர்த்தியாக விளையாடினார்.
முதல் ஒருமணி நேரம் (Drinks) வரை ஜெய்ஸ்வால் சற்று தடுமாறி விளையாடினார். ஆனால் கே.எல். ராகுல் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். Drinks இடைவேளைக்குப் பின் ஜெய்ஸ்வால் ஆட்டத்தில் வேகத்தை கூட்டினர். அதேவேளையில் இங்கிலாந்து வீரர்கள் பந்தை சிறந்த வகையில் ஸ்விங் செய்தனர். என்றபோதிலும் ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் நேர்த்தியாக விளையாடி விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.
இதனால் இருவரும் முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்தியா முதல்நாள் உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி 26 ஓவரில் 78 ரன்கள் எடுத்திருந்தது, அப்போது கே.எல். ராகுல் 40 ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 36 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. கிறிஸ் வோக்ஸ் வீசிய ஆட்டம் தொடங்கிய 4ஆவது ஓவரின் (இன்னிங்சின் 30ஆவது ஓவர்) கடைசி பந்தில் கே.எல். ராகுல் 46 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 94 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து சாய் சுதர்சன் களம் இறங்கினார். இவர் நிதானமாக விளையாட மறுமுனையில் 35ஆவது ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் அடித்து 96 பந்தில் அரைசதம் அடித்தார். அவரது ஸ்கோரில் 9 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும்.
- சுப்மன் கில் தொடர்ந்து 4 போட்டிகளில் டாஸ் தோற்றுள்ளார்.
- ஜனவரியில் இருந்து தொடர்ச்சியாக 14 போட்டிகளில் இந்தியா டாஸ் தோற்றுள்ளது.
இங்கிலாந்து- இந்தியா இடையிலான 4ஆவது டெஸ்ட் மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் இன்று தொடங்கியது. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டபோது, இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் ஹெட் கேட்டார். ஆனால் டெய்ல் விழ பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இங்கிலாந்து- இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்தான் சுப்மன் கில் முதன்முறையாக கேப்டன் பதவியை ஏற்கிறார். இவருக்கும் டாஸ்க்கும் ராசியில்லாமல் உள்ளது. இந்த நான்கு போட்டிகளிலும் சுப்மன் கில் டாஸ் தோற்றுள்ளார்.
சுப்மன் கில்லுக்கு மட்டுமல்ல. இந்திய அணிக்கும் டாஸ்க்கும் வெகுதூரமாக உள்ளது. இந்திய ஆண்கள் சர்வதேச அணி கடந்த ஜனவரில் இருந்து 14 போட்டிகளில் டாஸ் வென்றதே கிடையாது. இந்த மோசமான சாதனை அடுத்த போட்டியிலாவது முடிவுக்கு வரும் என எதிர்பார்ப்போம்..!
- கே.எல். ராகுல் 40 ரன்களும், ஜெய்ஸ்வால் 36 ரன்களும் அடித்து களத்தில் உள்ளனர்.
- இந்தியா 26 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 78 ரன்கள் அடித்துள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணியின் ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் சற்று தடுமாற, கே.எல். ராகுல் நேர்த்தியாக விளையாடினார்.
முதல் ஒருமணி நேரம் (Drinks) வரை ஜெய்ஸ்வால் சற்று தடுமாறி விளையாடினார். ஆனால் கே.எல். ராகுல் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். Drinks இடைவேளைக்குப் பின் ஜெய்ஸ்வால் ஆட்டத்தில் வேகத்தை கூட்டினர். அதேவேளையில் இங்கிலாந்து வீரர்கள் பந்தை சிறந்த வகையில் ஸ்விங் செய்தனர். என்றபோதிலும் ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் நேர்த்தியாக விளையாடி விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.
இதனால் இருவரும் முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்தியா முதல்நாள் உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி 26 ஓவரில் 78 ரன்கள் எடுத்துள்ளது.
கே.எல். ராகுல் 40 ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ், ஆர்ச்சர் தலா 8 ஓவர்கள் வீசினர்.
- பரூக் இன்ஜினீயர் இந்திய அணிக்காக 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
- கிளைவ் லாய்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, ரசிகர்கள் அமர்ந்து போட்டியை பார்வையிடும் கேலரியின் ஒரு பகுதிக்கு (Stand) பரூக் இன்ஜீனியர், கிளைவ் லாய்டு எனப் பெயரிடப்பட்டிருந்தது. அதை இருவரும் திறந்து வைத்தனர். மேலும், மணி அடித்து போட்டியை தொடங்கி வைத்தனர்.
பரூக் இன்ஜினீயர் இந்தியாவின் முன்னாள் வீரர் ஆவார். இவர் இந்திய அணிக்கான 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 சதம், 16 அரைசதங்களுடன் 2611 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 31.08 ஆகும். 121 அதிகபட்ச ஸ்கோராகும்.
கிளைவ் லாய்டு வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஆவார். இவர் 110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 19 சதம், 39 அரைசதங்களுடன் 7515 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 46.67 ஆகும். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 242 ரன்கள் அடித்துள்ளார்.
87 ஒருநாள் போட்டியில் ஒரு சதம், 11 அரைசதங்களுடன் 1977 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 39.54 ஆகும். அதிகபட்ச ஸ்கோர் 102 ஆகும்.
டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டும், ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.






