என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- போட்டி 4ஆவது நாள் முடிந்திருந்தால், சுப்மன் கில் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டிருப்பார்.
- மைக் ஆதர்டன் சுப்மன் கில்லுக்கான அனைத்து கேள்விகளையும் தயார் செய்து வைத்திருந்தார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. கடைசி நாளான நேற்று 35 ரன்கள் தேவை என்ற நிலையில், இங்கிலாந்து கையில் 4 விக்கெட்டுகள் இருந்தன.
முகமது சிராஜ் அபாரமாக பந்து வீச இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தொடரை 2-2 என சமன் செய்தது.
இந்த தொடரில் இங்கிலாந்து பயிற்சியாளர் இந்திய வீரரில் ஒருவரை தொடர் நாயகனாக தேர்வு செய்ய வேண்டும். அதன்படி மெக்கல்லம் 754 ரன்கள் குவித்த இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்லை தேர்வு செய்தார்.
இந்த நிலையில் மெக்கல்லம் சுப்மன் கில்லிற்குப் பதிலாக முகமது சிராஜை தொடர் நாயகனாக தேர்வு செய்ய விரும்பினார் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
"போட்டி 4ஆவது நாள் முடிந்திருந்தால், சுப்மன் கில் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டிருப்பார். வர்ணனையாளரான மைக் ஆதர்டன் பரிசளிப்பு விழாவை தொகுத்து வழங்க இருந்தார். ஆகவே, அவர் அனைத்து கேள்விகளை தயார் செய்து வைத்திருந்தார். எல்லாமே கில்லுக்காக தயாராக இருந்தது.
ஆனால் கடைசி நாளில் முகமது சிராஜ் அபாரமாக பந்து வீசினார். அரைமணி நேரத்திற்குள் மெக்கல்லம் தொடர் நாயகன் விருது முடிவை மாற்றி முகமது சிராஜிக்கு மாற்ற விரும்பினார். போட்டிக்குப் பிறகு கூட ஸ்கை ஸ்போர்ட்ஸ் சேனலில் பேசும்போது, முகமது சிராஜ் குறித்து பேசினார். சிராஜ் பந்து வீச்சு பார்த்து எப்படி மகிழ்ந்தார், அவரை பற்றிய அனைத்து அருமையான விசயங்கள் குறித்து பேசினார்" என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
- இந்த தொடரில் சிராஜ் மொத்தம் 23 விக்கெட் வீழ்த்தினார்.
- இலங்கையை சேர்ந்த முரளீதரன் தலா 6 முறை 4 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளார்.
ஓவல்:
இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த பரபரப்பான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் 5 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
ஓவல் டெஸ்டில் இந்தியாவின் வெற்றிக்கு முகமது சிராஜ் முக்கிய பங்கு வகித்தார். அவர் 5 விக்கெட் வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் 4 விக்கெட் கைப்பற்றினார். இந்த டெஸ்டில் மொத்தம் 9 விக்கெட் வீழ்த்தினார். இதனால் ஆட்ட நாயகன் விருது அவருக்கு கிடைத்தது.
இந்த தொடரில் சிராஜ் மொத்தம் 23 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் அவர் பும்ராவின் சாதனையை சமன் செய்தார். பும்ரா 2021-22 இங்கிலாந்தில் தொடரில் 23 விக்கெட் கைப்பற்றி இருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரராக இருவரும் இருக்கிறார்கள்.
இங்கிலாந்தில் அதிக முறை 4 விக்கெட்டுக்கு மேல் எடுத்த முதல் ஆசிய பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை சிராஜ் படைத்தார். அவர் 7-வது முறையாக 4 விக்கெட்டுக்கு மேல் (11 போட்டி) எடுத்துள்ளார்.
இலங்கையை சேர்ந்த முரளீதரன் (6 டெஸ்ட்), பாகிஸ்தானின் வாக்கர் யூனுஸ் (10 போட்டி) ஆகியோர் தலா 6 முறை 4 விக்கெட்டுக்கு மேல் எடுத்து இருந்தனர். இவர்களை சிராஜ் முந்தினார். மற்ற இந்திய வீரர்களில் பும்ரா 5 தடவையும், இஷாந்த் சர்மா 4 முறையும் 4 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளனர்.
சிராஜ் 3-வது முறையாக ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார். 2023 ஆண்டு வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான போர்ட் ஆப் ஸ்பெயின் டெஸ்டிலும், 2024-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டிலும் ஆட்ட நாயகன் விருது அவருக்கு கிடைத்தது.
- சுப்மன்கில் அணியில் மிகவும் விரும்பப்படும் வீரர்களில் ஒருவராவார்.
- 2-வது டெஸ்டில் கில் குவித்த 269 ரன் மிகவும் சிறப்பானது.
லண்டன்:
சுப்மன்கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரின் ஓய்வுக்கு பிறகு இளம் வீரர்களை கொண்ட அணி இங்கிலாந்தில் சாதித்து காட்டியது. தொடரை இழக்காமல் சமன் செய்தது பாராட்டுதலுக்குரியதாகும்.
சுப்மன்கில் கேப்டனாக பொறுப்பேற்று முதல் தொடரிலேயே சாதித்து காட்டினார். மேலும் பேட்டிங்கிலும் அவர் அபாரமாக செயல்பட்டார். 5 டெஸ்டில் 754 ரன்கள் (10 இன்னிங்ஸ்) குவித்தார். சராசரி 75.40 ஆகும். இதில் 4 சதம் அடங்கும். அதிகபட்சமாக 269 ரன் குவித்துள்ளார்.
இந்த நிலையில் ஒருநாள் போட்டிக்கும் சுப்மன் கில்லை கேப்டனாக்கலாம் என்று முன்னாள் கேப்ட னும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் யோசனை தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக கூறியதாவது:-
ஒரு நாள் போட்டிக்கும் கேப்டனாக சுப்மன்கில்லை தேர்வு செய்ய தேர்வுக்குழு பரிசீலனை செய்யலாம். ரோகித் சர்மா, விராட் கோலி ஒரு நாள் போட்டியில் விளையாட தயாராக உள்ளனர். அவர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இந்த விஷயங்கள் தேர்வுக் குழுவை பொறுத்தது.
ஆஸ்திரேலியா அல்லது வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தேர்வுக்குழு விரும்பினால் சுப்மன்கில்லை கேப்டனாக தேர்வு செய்யலாம். இதுவே சரியான நேரமாகும்.
சுப்மன்கில் அணியில் மிகவும் விரும்பப்படும் வீரர்களில் ஒருவராவார். 2-வது டெஸ்டில் அவர் குவித்த 269 ரன் மிகவும் சிறப்பானது. ஒவ்வொரு ரன்னும் முக்கியமானது என்பதை அவர் அந்த டெஸ்டில் உறுதிப்படுத்த விரும்பினார்.
இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.
- ஓவல் டெஸ்டில் இந்தியாவின் வெற்றிக்கு முகமது சிராஜ் முக்கிய பங்கு வகித்தார்.
- கடைசி டெஸ்டில் சிராஜுக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.
ஓவல்:
இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த பரபரப்பான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் 5 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. முதல் டெஸ்டில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், 3-வது டெஸ்டில் 22 ரன் வித்தியாசத்திலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 2-வது டெஸ்டில் இந்தியா 336 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4-வது டெஸ்ட் டிரா ஆனது.
ஓவல் டெஸ்டில் இந்தியாவின் வெற்றிக்கு முகமது சிராஜ் முக்கிய பங்கு வகித்தார். அவர் 5 விக்கெட் வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் 4 விக்கெட் கைப்பற்றினார். இந்த டெஸ்டில் மொத்தம் 9 விக்கெட் வீழ்த்தினார். இதனால் ஆட்ட நாயகன் விருது அவருக்கு கிடைத்தது.
சிராஜ் கூறும்போது, "தான் வீசிய ஒவ்வொரு பந்தும் நாட்டுக்கானது. எனக்கானது அல்ல" என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த சிராஜை தெலங்கானா காவல்துறை பாராட்டி போஸ்டர் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- டெஸ்ட் கிரிக்கெட் முழுமையாக மெய்சிலிர்க்க வைக்கிறது.
- டெஸ்ட் போட்டி மிகவும் சிறப்பானது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.
மும்பை:
லண்டன் ஓவல் மைதானத்தில் பரபரப்பான 5-வது டெஸ்ட்டில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிகிறது.
கிரிக்கெட்டின் சகாப்தமான டெண்டுல்கர் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறி இருப்பதாவது:-
டெஸ்ட் கிரிக்கெட் முழுமையாக மெய்சிலிர்க்க வைக்கிறது. தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்து உள்ளது. இந்திய அணியின் செயல்பாடுகளுக்கு 10-க்கு10 மதிப்பெண் கொடுப்பேன். இந்திய அணியின் சூப்பர்மேன்கள் கலக்கி விட்டனர். என்ன ஒரு அற்புதமான வெற்றி.
கங்குலி:-
இந்திய அணி மிகவும் அற்புதமாக செயல்பட்டு டெஸ்ட் தொடரை சமன் செய்துள்ளது. டெஸ்ட் போட்டி மிகவும் சிறப்பானது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.
சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணிக்கும், பயிற்சியாளர்கள் குழுவுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் எந்த பகுதியில் விளையாடினாலும் சிராஜ் இந்திய அணியை அவ்வளவு எளிதாக தோற்கவிடமாட்டார். ஓவல் டெஸ்டை பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது. பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் மற்றும் ஜெய்ஸ்வால் சிறப்பாக செயல்பட்டனர்.
வீராட் கோலி:-
இந்திய அணியின் சிறந்த வெற்றி. சிராஜ், பிரசித் கிருஷ்ணாவின் மன உறுதியும், தொடர் முயற்சியும் இந்த அற்புதமான வெற்றியை நமக்கு கொடுத்துள்ளது. அணிக்காக எல்லாவற்றையும் அர்ப்பணிக்கும் சிராஜுக்கு சிறப்பு பாராட்டு. அவரை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
அனில் கும்ப்ளே:-
இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடியது. என்ன ஒரு அருமையான டெஸ்ட் தொடர். அற்புதமாக ஆடிய 2 அணி வீரர்களுக்கும் எனது வாழ்த்துகள். முகமது சிராஜ் , பிரசித் கிருஷ்ணா அபாரமாக செயல்பட்டனர் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள்.
புஜாரா:-
வரலாற்று வெற்றி. இந்திய அணியின் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி பிரமிப்பை ஏற்படுத்துகிறது. சுவாரசியமாக சென்ற இந்த தொடரில் சிறப்பான முடிவு கிடைத்து உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டைப்போன்று சிறந்தது வேறு ஒன்றுமில்லை.
ஹர்பஜன் சிங்:-
முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா அபாரமாக பந்துவீசினார்கள். இந்திய அணிக்கு என்ன ஒரு சிறப்பான வெற்றி. அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
ரகானே:-
டெஸ்ட் கிரிக்கெட் இதைவிட சிறப்பானதாக இருக்க முடியாது. மிகவும் பரபரப்பான போட்டி. அழுத்தமான சூழலில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள்.
- இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.
- 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என சமனில் முடிந்தது.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பான இன்றைய ஆட்டத்தில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என சமனில் முடிந்தது.
கடைசி டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 28 புள்ளிகளுடன் இந்தியா 3வது இடத்திற்கு முன்னேறியது.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மெதுவாக பந்துவீசியதற்காக இங்கிலாந்து அணிக்கு 2 புள்ளிகள் குறைக்கப்பட்டது. இதனால் 26 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி 4வது இடத்தில உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 36 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அணி முதல் இடத்தில உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- 5-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இந்த வெற்றியின் மூலம் தொடர் 2-2 என்ற கணக்கில் சமன் ஆனது.
லண்டன்:
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 'ஆண்டர்சன் - டெண்டுல்கர்' டிராபிக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முடிவடைந்த முதல் 4 போட்டிகளின் முடிவில் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் (4-வது போட்டி டிரா) முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.
இதன் மூலம் இங்கிலாந்துக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மெகா இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 85.1 ஓவர்களில் 367 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
இந்நிலையில் இந்தியா அணி தொடரை சமன் செய்தது குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அதில் நாம் சிலவற்றை வெல்வோம், சிலவற்றை இழப்போம்.... ஆனால் நாம் ஒருபோதும் சரணடைய மாட்டோம்! சபாஷ் பாய்ஸ் என பதிவிட்டுள்ளார்.
- 4-வது நாளில் ஏன் அரை மணி நேரத்திற்கு முன்பே போட்டியை முடித்தார்கள்.
- நடுவர்கள் இரண்டு அணியிடமும் இது குறித்து கேட்டிருக்க வேண்டும்.
லண்டன்:
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
கடைசி நாளன இன்று இந்தியாவின் வெற்றிக்கு 4 விக்கெடுகள் தேவையாக இருந்தது. ஆனால் யாருமே எதிர்பாராத வகையில், சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அபாரமாக செயல்பட்டு இந்தியாவுக்கு வெற்றியைத் தேடி தந்தனர்.
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில் போட்டி நான்காவது நாள் முடிந்து இருந்தால் இங்கிலாந்து வெற்றி பெற்றிருக்கும் எனவும் நடுவர்கள் தவறு செய்து விட்டதாகவும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நாசர் உசைன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
திங்கட்கிழமை வேலை ரசிகர்கள் இந்த போட்டியை பார்க்க பெருமளவு பணத்தை செலவழித்து இருக்கிறார்கள். அவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டம் கூடியிருந்தது. அவர்களுக்கு ஆட்டத்தின் கிளைமாக்ஸ் 4-வது நாளிலே அரங்கேற அனுமதித்து இருக்க வேண்டும்.
நான்காவது நாளில் இந்த போட்டி நடந்திருந்தால் ஒருவேளை இங்கிலாந்து அணி வெற்றிக்கு தேவையான 35 ரன்கள் அடித்திருக்கலாம். ஆட்டம் மேலும் 42 முதல் 43 நிமிடம் வரை நடத்தலாம் என்ற விதி இருந்த போதும். ஏன் அரை மணி நேரத்திற்கு முன்பே போட்டியை முடித்தார்கள் என்ற கேள்வியை தவிர்க்க முடியவில்லை.
நடுவர்கள் இரண்டு அணியிடமும் இது குறித்து கேட்டிருக்க வேண்டும். இரண்டு அணிகளில் யாராவது ஒருவர் கூட நாங்கள் நாளை விளையாடுகிறோம் என்று சொல்லி இருந்தால் பரவாயில்லை. நடுவர்களுக்கு கொஞ்சம் கூட அறிவு என்பதே கிடையாது. நேற்று ஆட்டம் நடைபெறாமல் இருந்தது நிச்சயம் அவமானம் தான்.
என்று நாசர் உசேன் கூறியிருந்தார்.
- இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விராட் கோலியை சில நேரம் மிஸ் செய்கிறேன்.
- ஆனால் ஒவல் டெஸ்டில் எப்போதும் மிஸ் செய்கிறேன் எனக் கூறியிருந்தார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இங்கிலாந்து அணிக்கு இந்தியா 574 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. நேற்றைய 4ஆவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பென் டக்கட் (54), ஜோ ரூட் (106), ஹாரி ப்ரூக் (11) ஆகியோரின் ஆட்டத்தால் இங்கிலாந்து இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்தது.
நேற்றைய ஆட்ட நேரம் முடியும் நேரத்தில் ஜோ ரூட், ப்ரூக் ஆட்டமிழந்தனர். அத்துடன் வெளிச்சம் இல்லாததால் போட்டி முன்னதாகவே முடிவடைந்தது. அப்போது இங்கிலாந்து வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது.
இந்தியா 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடியதால் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. முக்கியமான தருணத்தில் வெற்றி பெற முடியவில்லை. முன்னாள் வீரர்களான ரோகித் அல்லது விராட் கோலி இருந்திருந்தால் இந்த போட்டியின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும் என விமர்சனம் செய்தனர். அதில் சச தரூரும் தனது வேதனையை வெளிப்படுத்தியிருந்தார். இவர் ஒரு சிறந்த கிரிக்கெட் ரசிகர் ஆவார்.
ஆனால் இன்று காலை 5ஆவது நாள் ஆட்டம் தொடங்கியதும் பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் அபாரமாக பந்து வீசி 367 ரன்னில் இங்கிலாந்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன்செய்தது.
இந்த நிலையில் நமது ஹீரோக்களுக்கு சபாஷ் என சச தரூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சசி தரூர் தனது எக்ஸ் பக்கத்தில் "வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை... என்ன ஒரு வெற்றி (WHAT A WIN!) இங்கிலாந்துக்கு எதிரான தொடரை சமன் செய்ததில் இந்திய அணிக்கு மிகவும் உற்சாகமும் மகிழ்ச்சியும்! அணியில் காணப்பட்ட மன உறுதி, மன உறுதி மற்றும் ஆர்வம் நம்பமுடியாதவை. இந்த அணி சிறப்பு வாய்ந்தது.
நேற்று முடிவு குறித்து நான் ஒரு சந்தேகத்தை வெளிப்படுத்தியதற்கு வருந்துகிறேன். ஆனால் முகமது சிராஜ் ஒருபோதும் நம்பிக்கையை நிறுத்தவில்லை! நம் ஹீரோக்களுக்கு வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய போட்டிக்குப்பின் "இந்தத் தொடரில் விராட் கோலியை நான் சில முறை தவற விடுகிறேன். ஆனால், இந்த போட்டியில் எப்போதும் மிஸ் செய்கிறேன். அவருடைய பேட்டிங்கை தவிர்த்து கிரிட், தீவிரம், ஆடுகளத்தில் இருக்கும் உத்வேகம் உள்ளிட்டவை போட்டியின் முடிவை மாற்றியிருக்கலாம்" எனத் தெரிவித்திருந்தார்.
- போட்டியில் எங்களால் வெற்றிபெற முடியாமல் போனது வருத்தமாக உள்ளது.
- இந்த தொடரில் எங்களது அணியின் வீரர்கள் விளையாடிய விதத்தை நினைத்து பெருமை அடைகிறேன்.
இங்கிலாந்து- இந்தியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் 4 ஆட்டங்களின் முடிவில் (2-1) என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகித்தது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 5-வது போட்டி கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. கடைசி நாளான இன்று இங்கிலாந்து அணிக்கு 35 ரன்களும் இந்தியா 4 விக்கெட்டுகள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசியிருந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது :
உண்மையிலேயே இந்த கடைசி போட்டியில் என்னால் விளையாட முடியாமல் போனது சற்று வருத்தம் தான். இந்த போட்டியும் 5-ம் நாள் வரை வந்து மிகச் சிறப்பாக முடிவடைந்துள்ளது. இரண்டு அணிகளுமே களத்தில் நல்ல செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் இந்த ஒட்டுமொத்த தொடர் முழுவதுமே மிகச் சிறப்பாக அமைந்தது.
போட்டியில் எங்களால் வெற்றிபெற முடியாமல் போனது வருத்தமாக உள்ளது. இருந்தாலும் இந்த தொடரில் எங்களது அணியின் வீரர்கள் விளையாடிய விதத்தை நினைத்து பெருமை அடைகிறேன். ஏனெனில் அணியில் இடம்பிடித்திருந்த ஒவ்வொருவருமே இந்த தொடரில் தங்களது முழு பங்களிப்பை வழங்கி உள்ளனர்.
அதிலும் குறிப்பாக போட்டியின் சூழல் கடினமாக இருந்த போதெல்லாம் தனித்தனியே வீரர்கள் அணியின் நலனுக்காக நின்று இருக்கிறார்கள். இப்படி ஒரு அணியாக இணைந்து நாங்கள் இந்த தொடரில் செயல்பட்ட விதத்தை நினைத்து உண்மையிலேயே பெருமையாக உள்ளது.
என பென் ஸ்டோக்ஸ் கூறினார்.
- 5-வது டெஸ்ட் போட்டியின் ஆட்டநாயகனாக சிராஜ் தேர்வு செய்யப்பட்டார்.
- 5 போட்டிகள் கொண்ட போட்டிகள் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் சிராஜ் உள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-2 என்ற கணக்கில் தொடர் சமமானது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக சிராஜ் தேர்வு செய்யப்பட்டார்.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியை கூட மிஸ் செய்யாமல் அனைத்து போட்டியிலும் சிராஜ் விளையாடி அசத்தியுள்ளார். 5 போட்டிகளில் விளையாடி 185.3 ஓவர்கள் (1113 பந்துகள்) வீசி 26 மெய்டனுடன் 23 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட போட்டிகள் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் சிராஜ் உள்ளார்.
இந்நிலையில் சிராஜை நான் பெருமளவில் மதிக்கிறேன் என இங்கிலாந்து அணியின் பேட்டர் ஹாரி புரூக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சிராஜை நான் பெருமளவில் மதிக்கிறேன். 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி, ஒவ்வொரு முறையும் 135kmph+ வேகத்தில் பந்து வீசினார். அவர் சிறந்தவர். இந்த வெற்றி அவருக்கு உரித்தானது.
என ஹாரி ப்ரூக் கூறினார்.
- தொடர் 2-2 என சமனில் முடிந்தது நியாயமான பிரதிபலிப்பு.
- இந்தத் தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பதே எனது நோக்கமாக இருந்தது. அவ்வாறு அமைந்தது திருப்திகரமாக இருக்கிறது.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் 2-2 என டிராவில் முடிந்துள்ளது. இந்த டெஸ்டில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் அபாரமான விளையாடி 4 சதங்களுடன் 700 ரன்களுக்கு மேல் குவித்தார்.
இதனால் இங்கிலாந்து தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் சுப்மன் கில்லை தொடர் நாயகனாக தேர்வு செய்துள்ளார்.
ஆட்ட நாயகன் தொடர் விருது வென்ற சுப்மன் கில் கூறியதாவது:-
இரண்டு அணிகளும் விளையாடிய விதம் மிகவும் சிறப்பானது. இறுதி நாளான இன்று முடிவு யாருக்கு என்பது தெரியாமல் இரு அணிகளும் தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தின. சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா போன்ற பந்து வீச்சாளர்கள் இருக்கும்போது, கேப்டன்ஷியை எளிதாக நோக்கலாம். நாங்கள் இன்று காலை விளையாடியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
நாங்கள் மிகவும் உறுதியாக இருந்தோம். நேற்று கூட, அவர்களுக்கு நெருக்கடி இருந்தது எங்களுக்கு தெரிந்தது. நாங்கள் அதை முழுவதுமாக அப்படியே வைத்துக் கொள்ள விரும்பினோம். சிராஜ் கேப்டனுடைய கனவு. ஒவ்வொரு ஸ்பெல் மற்றும் ஒவ்வொரு பந்திலும் தனது பங்களிப்பை கொடுத்தார். தொடர் 2-2 என சமனில் முடிந்தது நியாயமான பிரதிபலிப்பு.
இது இரண்டு அணிகளும் எவ்வளவு ஆர்வமாக இருந்தன மற்றும் எப்படி வெளிப்படுத்தின என்பதை காட்டுகிறது. இந்தத் தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பதே எனது நோக்கமாக இருந்தது. அவ்வாறு அமைந்தது திருப்திகரமாக இருக்கிறது. நாங்கள் ஒருபோதும் விட்டுக்கொடுப்பதில்லை. கடந்த ஆறு வாரங்களிலிருந்து கற்றுக்கொண்டது இதுதான்.
இவ்வாறு சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.






