என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டி செப்டம்பர் 14ம் தேதி நடைபெற உள்ளது.
    • ஒரு குறிப்பிட்ட நாளில் நீங்கள் சிறப்பாக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றார்.

    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று இரவு தொடங்குகிறது. இந்திய அணி நாளை துபாயில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சை சந்திக்கிறது.

    இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டி செப்டம்பர் 14ம் தேதி நடைபெற உள்ளது.

    இந்நிலையில், சமீபத்தில் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி ஆசியக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாகக் கருதப்படுகிறதே என பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவிடம் செய்தியாளர் ஒருவர் கேட்டார்.

    இதற்கு பதிலளித்த சல்மான் ஆகா, டி20 கிரிக்கெட்டில் எந்த அணியையும் ஃபேவரிட் என நான் நினைக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட நாளில் நீங்கள் சிறப்பாக கிரிக்கெட் விளையாட வேண்டும். இது ஒரு வேகமான விளையாட்டு. ஓரிரு மணி நேரம் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும் என தெரிவித்தார்.

    • ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று இரவு தொடங்குகிறது.
    • இந்திய அணி முதல் லீக் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சை சந்திக்கிறது.

    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று இரவு தொடங்குகிறது.

    இந்திய அணி நாளை துபாயில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சை சந்திக்கிறது.

    இதற்கிடையே, ஐக்கிய அரபு அமீரக அணியில் ஹர்ஷித் கவுசிக், சிம்ரன்ஜித் சிங், துருவ் பராஷர், அலிஷான் ஷராபு, ஆர்யன்ஷ் ஷர்மா, ராகுல் சோப்ரா ஆகிய 6 இந்திய வம்சாவளி வீரர்கள் உள்ளனர்.

    இந்நிலையில், இந்திய கேப்டன் சுப்மன் கில்லுக்கு நான் பந்து வீசியுள்ளேன், என்னை அவர் நினைவில் வைத்திருப்பாரா என தெரியவில்லை என ஐக்கிய அரபு அமீரக பந்துவீச்சாளர் சிம்ரன்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் சிம்ரன்ஜித் சிங் கூறியதாவது:

    மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க அகாடமியில் ஒரு இளம் சுழற்பந்து வீச்சாளராக இருந்தேன். எனக்கு சுப்மனை சிறு வயதிலிருந்தே தெரியும்.

    அது 2011 அல்லது 2012 வாக்கில். நாங்கள் காலை 6 மணி முதல் காலை 11 மணி வரை பயிற்சி செய்வோம். சுப்மன் கடைசியில் தனது தந்தையுடன் வருவார். நான் அவருக்கு எண்ணற்ற முறை பந்து வீசியிருப்பேன். அவர் என்னை நினைவில் வைத்திருப்பாரா என தெரியவில்லை என்றார்.

    • 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் அணிகள் இடம்பிடித்தன.
    • 'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகள்ம் இடம் பெற்றுள்ளன.

    துபாய்:

    17-வது ஆசிய கோப்பை போட்டி (டி20) இன்று தொடங்கி 28-ம் தேதி வரை துபாய், அபுதாபியில் நடைபெறுகிறது. இதில் 8 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

    'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும்.

    இந்தச் சுற்றில் விளையாடும் 4 அணிகளும் ரவுண்டு ராபின் முறையில் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

    அபுதாபியில் இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை நாளை எதிர்கொள்கிறது.

    இந்நிலையில், ஆசிய கோப்பையை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகளின் கேப்டன்களும் கலந்துகொண்டு கூட்டாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோஷின் நக்வி உடனிருந்தார்.

    • இந்திய அணி அதிகபட்சமாக 8 முறை ஆசிய கோப்பையை கைப்பற்றியுள்ளது.
    • இலங்கை 6 தடவையும், பாகிஸ்தான் 2 முறையும் சாம்பியன் பட்டம் பெற்று உள்ளன.

    துபாய்:

    17-வது ஆசிய கோப்பை போட்டி (20 ஓவர்) இன்று தொடங்கி 28-ந்தேதி வரை துபாய், அபுதாபியில் நடைபெறுகிறது. இதில் 8 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். இந்த சுற்றில் விளையாடும் 4 அணிகளும் ரவுண்டு ராபின் முறையில் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

    அபுதாபியில் இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- ஆங்காங் அணிகள் மோதுகின்றன. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை நாளை (10-ந்தேதி) எதிர்கொள்கிறது. துபாயில் இந்த ஆட்டம் நடக்கிறது.

    இந்திய அணி ஐக்கிய அரபு எமிரேட்சை வீழ்த்தி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது.

    டெஸ்ட் கேப்டனான சுப்மன் கில் 20 ஓவர் அணிக்கு துணை கேப்டனாக தேர்வு பெற்றுள்ளார். இதனால் வீரர்கள் தேர்வு சவாலாக இருக்கும். அபிஷேக் சர்மாவுடன் இணைந்து சுப்மன் கில் தொடக்க வரிசையில் ஆடுவார். விக்கெட் கீப்பர் வாய்ப்பில் சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா இடையே போட்டி நிலவுகிறது. இதில் ஜிதேஷ் சர்மா முதல் தேர்வாக இருப்பார் என்று கருதப்படுகிறது.

    சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் 3-வது வரிசையில் ஆடுவாரா? அல்லது 5-வது நிலையில் ஆடுவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல் ஆகியோரும் அணியில் இடம்பெறுவார்கள். வேகப்பந்தில் ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்கும், சுழற்பந்தில் குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தியும் தேர்வு பெறுவார்கள்.

    இந்திய அணி கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடியது.

    சொந்த மண்ணில் நடந்த 5 போட்டிக் கொண்ட தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனால் ஆசிய கோப்பையில் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும்.

    முகமது வாசிம் தலைமையிலான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் விளையாடும் வேட்கையில் உள்ளது. அந்த அணி சமீபத்தில் நடைபெற்ற 3 நாடுகள் போட்டியில் ஒரு ஆட்டத்தில் கூட வெல்லவில்லை. தான் மோதிய 4 ஆட்டத்திலும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிடம் தோற்றது.

    இந்தியாவும், ஐக்கிய அரபு எமிரேட்சும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் மோதியுள்ளன. 2016-ம் ஆண்டு மிர்பூரில் நடந்த இந்த ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் சோனி ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப் படுகிறது.

    இந்திய அணி அதிகபட்சமாக 8 முறை ஆசிய கோப்பையை கைப்பற்றியுள்ளது. இலங்கை 6 தடவையும், பாகிஸ்தான் 2 முறையும் சாம்பியன் பட்டம் பெற்று உள்ளன. 

    • இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை நாளை எதிர்கொள்கிறது.
    • குல்தீப் யாதவுக்கும் ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

    துபாய்:

    17-வது ஆசிய கோப்பை போட்டி (20 ஓவர்) இன்று தொடங்கி 28-ந்தேதி வரை துபாய், அபுதாபியில் நடைபெறுகிறது. இதில் 8 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    அபுதாபியில் இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- ஆங்காங் அணிகள் மோதுகின்றன. நாளை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை எதிர்கொள்கிறது. துபாயில் இந்த ஆட்டம் நடக்கிறது.

    டெஸ்ட் கேப்டனான சுப்மன் கில் 20 ஓவர் அணிக்கு துணை கேப்டனாக தேர்வு பெற்றுள்ளார். இதனால் வீரர்கள் தேர்வு சவாலாக இருக்கும். அபிஷேக் சர்மாவுடன் இணைந்து சுப்மன் கில் தொடக்க வரிசையில் ஆடுவார்.

    விக்கெட் கீப்பர் வாய்ப்பில் சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா இடையே போட்டி நிலவி வந்த நிலையில் சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக ஜிதேஷ் சர்மா அணியில் இடம் பெறுவார் என தகவல் வெளியாகி உள்ளது. இது சஞ்சு சாம்சன் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் குல்தீப் யாதவுக்கும் ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

    • கேரளா பிரீமியர் லீக் தொடரில் கொச்சி அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
    • கேப்டனாக சாம்பியன் பட்டம் வென்ற தம்முடைய தம்பிக்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    கேரளாவில் கேரள பிரீமியர் லீக் டி20 2025 தொடர் நடைபெற்றது. அந்தத் தொடரில் கொச்சி அணிக்காக 26.80 லட்சம் என்ற பெரிய தொகைக்கு சஞ்சு சாம்சன் வாங்கப்பட்டார். அந்த அணிக்காக ஓப்பனிங்கில் களமிறங்கி மிரட்டலாக விளையாடிய அவர் 5 போட்டிகளில் ஒரு சதம் உட்பட 368 ரன்கள் குவித்து அசத்தினார்.

    இருப்பினும் ஆசியக் கோப்பையில் இந்தியாவுக்காக தேர்வு செய்யப்பட்ட அவர் பிளே ஆப் சுற்றுக்கு முன்பாக கொச்சி அணியிலிருந்து வெளியேறினார். மறுபுறம் சஞ்சு சாம்சன் தம்பி ஷாலி சாம்சன் தலைமையில் தொடர்ந்து அசத்திய கொச்சி அணி 2025 கேரளா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

    இந்நிலையில் கோப்பையை வென்ற தங்களுடைய கொச்சி அணிக்கு சாம்சன் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் கேப்டனாக சாம்பியன் பட்டம் வென்ற தம்முடைய தம்பிக்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    அத்துடன் ஏலத்தில் தமக்கு கொடுக்கப்பட்ட சம்பளத் தொகையை கொச்சி அணியின் சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு பரிசாக வழங்குவதாகவும் சாம்சன் அறிவித்துள்ளார்.

    எனவே தம்முடைய மாநிலத்தில் நடைபெறும் தொடரின் சம்பளத்தை அவர் சக வீரர்களுக்கு சிறிய ஊக்கத்தொகைப் பரிசாக வழங்கியுள்ளார். அவருடைய இந்த செயலுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டு வருகின்றனர். அவருக்கு 2025 ஆசியக் கோப்பையில் இந்திய அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் வாழ்த்துகிறார்கள்.

    • ஒரு வீரரால் செய்யக்கூடிய அனைத்தையும் ஷ்ரேயாஸ் செய்துள்ளார்.
    • டி20 உலகக் கோப்பையை முன்னோக்கிய பயணத்தில் அவரும் அங்கமாக இருந்திருக்க வேண்டும்.

    ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் இன்று முதல் ஐக்கிய அரபு நாடுகளில் தொடங்குகிறது. இந்த தொடரில் விளையாடுவதற்காக அறிவிக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் கழற்றி விடப்பட்டது ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

    2025 ஐபிஎல் தொடரில் 604 ரன்களை 175 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்த அவர் பஞ்சாப்பை 11 வருடங்கள் கழித்து இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அப்படிப்பட்ட அவருக்கு ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட இடம் கொடுக்கவில்லை.

    இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயரை 2026 டி20 உலகக் கோப்பையிலிருந்து கழற்றி விடுவதற்காகவே இப்போதே கவுதம் கம்பீர் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட சேர்க்கவில்லை என்று முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஒரு வீரரால் செய்யக்கூடிய அனைத்தையும் ஷ்ரேயாஸ் செய்துள்ளார் என்பதை ஒருபுறம் வையுங்கள். கவுதம் கம்பீர் பயிற்சியாளராக வந்ததிலிருந்து இந்தியா 20 டி20 போட்டிகளில் விளையாடி 17 வெற்றிகள் பெற்றுள்ளது. எனவே ஒரு பயிற்சியாளராக தமக்கு வெற்றிகளைக் கொடுத்த வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிப்பதற்காக அவர் சில வீரர்களை கழற்றி விட்டு கடினமான முடிவுகளை எடுப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

    ஆசியக் கோப்பை அறிவித்த பின் அவர்கள் ரிசர்வ் வீரர்கள் பட்டியலையும் வெளியிட்டார்கள். ஆனால் அந்தப் பட்டியலில் கூட ஷ்ரேயாஸ் இல்லாதது எனக்கு சரியாகப்படவில்லை.

    அது உலகக் கோப்பை உட்பட வருங்கால தொடர்களில் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட மாட்டீர்கள் என்பதற்கான சமிக்கையாகும். அடுத்த டி20 உலகக் கோப்பைக்கு முன் ஆசியக் கோப்பைக்கு பின் இந்தியா சில இருதரப்பு தொடர்களில் விளையாட உள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் டாப் 5 ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட ஷ்ரேயாஸ் இல்லாதது எனக்கு நியாயமாகத் தோன்றவில்லை.

    டி20 உலகக் கோப்பையை முன்னோக்கிய பயணத்தில் அவரும் அங்கமாக இருந்திருக்க வேண்டும். அந்த உலகக் கோப்பையில் அவர் இருப்பார் என்று நான் உண்மையாக நம்புகிறேன். ஏனெனில் அவர் அதற்குத் தகுதியானவர்.

    என்று தினேஷ் கார்த்திக் கூறினார்.

    • இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா படுதோல்வி அடைந்தது.
    • 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதலிரண்டு போட்டியில் வென்ற தென் ஆப்ரிக்க 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜேக்கப் பெத்தெல் 110, ஜோ ரூட் 100 ரன்களையும் விளாசினர். மேற்கொண்டு ஜேமி ஸ்மித் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் தலா 62 ரன்களைச் சேர்க்க அந்த அணி, 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 414 ரன்களை குவித்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் கார்பின் போஷ், கேசவ் மஹாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 20.5 ஓவரில் 72 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 4 விக்கெட்டுகளையும், ஆதில் ரஷித் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். இதன் மூலம் இங்கிலாந்து அணி 342 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

    இந்நிலையில் இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக ஐசிசி அபராதம் விதித்துள்ளது. அதன்படி இந்த போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக தென் ஆப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடித்திருந்த அனைவருக்கும் தலா 5 சதவீதம் போட்டி கட்டணத்தில் இருந்து அபராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. 

    • தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, ஹாங்காங்கை சந்திக்கிறது.
    • ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இதற்கு முன்பு 4 முறை பங்கேற்றுள்ள ஹாங்காங் ஒன்றில் கூட ஜெயித்ததில்லை.

    அபுதாபி:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 28-ந்தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் நடக்க இருந்த இந்த போட்டி பாகிஸ்தான் அணி வருவதில் எழுந்த சிக்கல் காரணமாக அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.

    இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறும். அதில் இருந்து இரு அணி இறுதிப்போட்டிக்கு தேர்வாகும்.

    2016-ம் ஆண்டில் இருந்து ஆசிய கோப்பை போட்டிக்கான வடிவம், உலக கோப்பை அடிப்படையில் மாற்றப்படுகிறது. அதாவது அடுத்த ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி வருவதால் அதற்கு தயாராகும் வகையில் தற்போது 20 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது. அடுத்த சீசனில் 50 ஓவர் அடிப்படையில் நடைபெறும். இதுவரை 50 ஓவர் வடிவில் 14 முறையும், 20 ஓவர் வடிவில் 2 முறையும் ஆசிய கோப்பை போட்டி நடந்துள்ளது. இதில் இந்தியா 8 முறையும், இலங்கை 6 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் ஆசிய கோப்பையை வென்றுள்ளன. இந்த தடவையும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

    ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் அணிகள் களத்தில் நேருக்கு நேர் சந்திக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. கணிப்புபடி எல்லாம் சரியாக அமைந்தால் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் இந்த ஆசிய கோப்பை போட்டியில் 3 முறை மோத வேண்டி இருக்கும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை நாளை எதிர்கொள்கிறது.

    முதல் நாளான இன்றிரவு 8 மணிக்கு அபுதாபியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் ரஷித்கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, யாசிம் முர்தசா தலைமையிலான ஹாங்காங்கை சந்திக்கிறது. சுழல்ஜாலத்தால் வலுவாக காணப்படும் ஆப்கானிஸ்தான், நேற்று முன்தினம் முத்தரப்பு தொடரில் அடைந்த தோல்வியை மறந்து விட்டு புத்துணர்ச்சியுடன் தொடங்கும் ஆவலில் உள்ளது.

    அதே சமயம் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இதற்கு முன்பு 4 முறை பங்கேற்றுள்ள ஹாங்காங் ஒன்றில் கூட ஜெயித்ததில்லை. விளையாடியுள்ள 11 ஆட்டங்களிலும் தோற்றுள்ள ஹாங்காங், அந்த மோசமான வரலாற்றை மாற்றிக்காட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    ஆப்கானிஸ்தான்: ரஷித்கான் (கேப்டன்), ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன், டார்விஷ் ரசூலி, செடிகுல்லா அடல், அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், கரிம் ஜனத், முகமது நபி, முஜீப் ரகுமான் அல்லது கசன்பார், நூர் அகமது, பசல்ஹக் பரூக்கி.

    ஹாங்காங்: யாசிம் முர்தசா (கேப்டன்), அன்ஷூமன் ராத், பாபர் ஹயாத், ஜீஷன் அலி, நிஜாகத் கான், மேத்யூ ஜோட்ஜீ, இசன் கான், அஜாஸ் கான், அதீக் இக்பால், நஸ்ருல்லா ராணா, ஆயுஷ் சுக்லா.

    இந்த போட்டி சோனி ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • 2018ஆம் ஆண்டு பஞ்சாப் அணியில் இணைந்தார்.
    • கொரோனா காலத்தில் விளையாடியபோது, ஏமாற்றம் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

    டி20 யுனிவர்ஸ் பாஸ் என அழைக்கப்படுபவர் கிறிஸ் கெய்ல். தனது அதிரடி ஆட்டத்தால் உலகில் உள்ள ஏறக்குறைய அனைத்து டி20 லீக்கிலும் விளையாடி முத்திரை பதித்தார். ஐபிஎல் தொடரில் ஆர்சிபி, பஞ்சாப் அணிகளுக்காக அதிகப்படியான போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆர்சிபி ஒரு கட்டத்தில் ஏலத்தில் எடுக்காத நிலையில், பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. அந்த தொடரில் செஞ்சூரி அடித்து அசத்தினார்.

    2018ஆம் ஆண்டு 2 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். 41 போட்டிகளில் விளையாடி 1339 ரன்கள் அடித்துள்ளார். 2021 ஐபிஎல் தொடரின்போது கொரோனா காலம் என்பதால், வீரர்கள் பயோ-பப்பிள் என்ற பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டல்களை யாரும் அணுக முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டது. அப்போது அணி தன்னை அவமரியாதையாக நடத்தியதாக உணர்ந்ததாக கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கிறிஸ் கெய்ல் கூறியதாவது:-

    என்னுடைய ஐபிஎல் கிரிக்கெட் முன்னதாகவே முடிந்து விட்டது. பஞ்சாப் அணியில் நான் அவமதிக்கப்பட்டேன். ஐபிஎல் தொடருக்கு பெரிய பங்காற்றிய சீனியர் வீரர் என்ற மரியாதை அளிக்கப்படவில்லை. சிறுபிள்ளை போல என்னை நடத்தினார்கள். இதனால் ஒரு பெரிய கட்டிடம் என்னுடைய தோளில் இருப்பது போல் உணர்ந்தேன். என்னுடைய வாழ்க்கையில் ஒருபோதும் எதிர்கொள்ளாத அழுத்தத்தை எதிர்கொண்டதாக உணர்ந்தேன்.

    கொரோனா பயோ-பப்பிள் பாதுகாப்பில் இருக்கும்போது, பணத்தை விட உடல்நலம்தான் முக்கியம் என உணர்ந்தேன். இதனால் அனில் கும்ப்ளேயிடம் விவாதித்தேன். அணியை விட்டுச் செல்வதாக கும்ப்ளேவிடம் பேசியபோது மனமுடைந்து அழுதேன். பயிற்சியாளர் மற்றும் அணி ஆகியவை தன்னை நடத்திய விதத்தினால் ஏமாற்றம் அடைந்தேன்.

    போகாதீர்கள் இருங்கள், அடுத்த போட்டியில் விளையாடுங்கள் என கே.எல். ராகுல் என்னை அழைத்துப் பேசினார். உங்களுக்கு வாழ்த்துகள் என்று மட்டும் கூறிவிட்டு கிளம்பி விட்டேன்.

    இவ்வாறு கிறிஸ் கெய்ல் தெரிவித்தார்.

    • இந்தியா- பாகிஸ்தான் போட்டி வருகிற 14ஆம் தேதி நடக்கிறது.
    • விராட் கோலி, ரோகித் சர்மா, பாபர் அசாம், ரிஸ்வான் போன்ற முன்னணி வீரர்கள் இல்லை.

    8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. இந்தியா முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 10ஆம் தேதியும், பாகிஸ்தானை 14ஆம் தேதியும் எதிர்கொள்கிறது. இந்தியா- பாகிஸ்தான் போட்டியை ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீ்ச்சாளரான உமர் குல் இந்தியா- பாகிஸ்தான் போட்டி குறித்து கூறியதாவது:-

    இந்திய அணி பாகிஸ்தானை குறைத்து மதிப்பிட வேண்டாம். கடினமான காலத்தில், பாகிஸ்தான் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இந்திய அணி வலுவானதாக தோன்றுகிறத. ஆனால், டி20 கிரிக்கெட்டில் ஒரு நல்ல பேட்டிங் (ஒரு பேட்ஸ்மேன் சிறப்பாக விளையாடினால்) அல்லது ஒரு பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினால், போட்டியை மாற்ற முடியும்.

    அனைத்து முக்கியமான தொடர்களிலும் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் மூலமாகவே வெற்றி பெற்றுள்ளது. ரசிகர்கள் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்களை நிச்சயமாக மிஸ் செய்வார்கள்.

    இவ்வாறு உமர் குல் தெரிவித்தார்.

    இந்தியா கடந்த சில மாதங்களாக டி20 போட்டிகளில் விளையாடவில்லை. பாகிஸ்தான் முத்தரப்பு தொடரில் விளையாடியது.

    • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 23 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
    • ஜிம்பாப்வே அணிக்கெதிரான தொடரில் ஹென்றி 16 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மாதந்தோறும் சிறந்த வீரரை தேர்வு செய்து கவுரவிக்கிறது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரரை தேர்வு செய்ய கடைசியாக 3 வீரர்கள் கொண்ட இறுதிப் பட்டியலை தயாரித்துள்ளது. இங்கிலாந்து தொடரில் சிறப்பாக பந்து வீசிய முகமது சிராஜ் இதில் இடம் பிடித்துள்ளார். இவர் ஐந்து போட்டிகளில் 23 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முக்கிய காரணமாக இருந்தார்.

    இவருடன் இறுதிப் பட்டியலில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றியுடம் இடம் பிடித்துள்ளார். இவர் ஜிம்பாப்வே அணிக்கெதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 16 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஜிம்பாப்வே அணிக்கெதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 2-0 எனக் கைப்பற்றியது.

    இறுதிப் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜெய்டன் சீல்ஸ் இடம் பிடித்துள்ளார். இவர் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3 போட்டிகளில் 10 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 3 போட்டிகள் கொண்ட தொடரை வெஸ்ட் இண்டீஸ் 2-1 எனக் கைப்பற்றியது.

    ×