என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது.
    • சைப் ஹசன் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார்.

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

    லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.

    இந்நிலையில், துபாயில் நடைபெறும் சூப்பர் 4 சுற்றுக்கான போட்டியில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற வங்கதேசம் அணி பவுலிங் தேர்வு செய்தள்ளது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா, சுப்மன் கில் இறங்கினர்.

    முதலில் நிதானமாக ஆடிய இந்த ஜோடி அடுத்து அதிரடியில் இறங்கியது. பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் குவித்தது.

    முதல் விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்த நிலையில் சுப்மன் கில் 29 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா அரை சதம் கடந்தார். அவர் 37 பந்தில் 5 சிக்சர், 6 பவுண்டரி உள்பட் 75 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    ஷிவம் துபே 2 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 5 ரன்னும், திலக் வர்மா 5 ரன்னும் எடுத்து வெளியேறினர்.

    கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய பாண்ட்யா 38 ரன்னும், அக்சர் படேல் 10 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக சைப் ஹசன் மற்றும் டான்சித் ஹசன் தமீம் களம் கண்டனர்.

    சைப் ஹசன் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார். இருப்பினும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர்.

    19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வங்கதேச அணி 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

    இதன் மூலம் 41 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.   

    • டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்துள்ளது.
    • அதன்படி முதலில் ஆடிய இந்தியா 168 ரன்களை எடுத்தது.

    துபாய்:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

    லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.

    இந்நிலையில், துபாயில் நடைபெறும் சூப்பர் 4 சுற்றுக்கான போட்டியில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற வங்கதேசம் அணி பவுலிங் தேர்வு செய்தள்ளது.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா, சுப்மன் கில் இறங்கினர்.

    முதலில் நிதானமாக ஆடிய இந்த ஜோடி அடுத்து அதிரடியில் இறங்கியது. பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் குவித்தது.

    முதல் விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்த நிலையில் சுப்மன் கில் 29 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா அரை சதம் கடந்தார். அவர் 37 பந்தில் 5 சிக்சர், 6 பவுண்டரி உள்பட் 75 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    ஷிவம் துபே 2 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 5 ரன்னும், திலக் வர்மா 5 ரன்னும் எடுத்து வெளியேறினர்.

    கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய பாண்ட்யா 38 ரன்னும், அக்சர் படேல் 10 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்துள்ளது.

    இதையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்குகிறது.

    • இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.
    • இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்துள்ளது.

    துபாய்:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

    லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.

    இந்நிலையில், இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஆட்டம் தொடங்கும் நிலையில், 7.30 மணியளவில் டாஸ் போடப்பட்டது. இதில், இந்தியாவுக்கு எதிராக வங்கதேசம் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது.

    இதையடுத்து, வங்கதேசம் அணி பந்து வீச, இந்திய அணி பேட் செய்ய களமிறங்குகிறது.

    • ஆசிய கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் இலங்கை- பாகிஸ்தான் அணிகள் மோதின.
    • இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

    அபுதாபி:

    ஆசிய கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தது.

    இந்த போட்டியில் இலங்கை அணியின் ஆல்-ரவுண்டர் தசுன் ஷனகா, டக் அவுட் ஆகி வெளியேறினார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் ஒரு மோசமான உலக சாதனையை படைத்துள்ளார்.

    அதன்படி சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர் என்ற சோகமான சாதனையை ஷனகா படைத்துள்ளார். இது அவரது 14-வது டக் அவுட் ஆகும். இதன் மூலம், தலா 13 டக் அவுட்களுடன் இருந்த வங்கதேசத்தின் சௌமியா சர்க்கார் மற்றும் அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங் ஆகியோரை அவர் பின்னுக்குத் தள்ளியுள்ளார். இந்தப் பட்டியலில் இந்தியாவின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா 12 டக் அவுட்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    டி20 போட்டிகளில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள் விவரம்:

    தசுன் ஷனகா (இலங்கை): 14 டக் அவுட்கள்

    சௌமியா சர்க்கார் (வங்கதேசம்): 13 டக் அவுட்கள்

    பால் ஸ்டிர்லிங் (அயர்லாந்து): 13 டக் அவுட்கள்

    கெவின் ஓ'பிரைன் (அயர்லாந்து): 12 டக் அவுட்கள்

    ரோஹித் சர்மா (இந்தியா): 12 டக் அவுட்கள்

    • நாங்கள் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று, ஆசிய கோப்பையை வெல்வதற்காக இங்கே வந்துள்ளோம்.
    • எந்த அணி வந்தாலும், நாங்கள் அவர்களை வீழ்த்த தயார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. குரூப் பிரிவு லீக் மற்றும் சூப்பர் 4 சுற்று போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வியை சந்தித்துள்ளது.

    இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேற வாய்ப்புள்ளது. இந்தியா இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக விளையாட வேண்டியுள்ளது. இரண்டில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் வாய்ப்புள்ளது.

    பாகிஸ்தான் வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும். வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைவோம் என்ற நம்பிக்கை பாகிஸ்தானுக்கு உள்ளது.

    இந்த நிலையில் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், அவர்களை வீழ்த்துவோம் என அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஷாஹீன் அப்ரிடி கூறியதாவது:-

    இந்தியா இதுவரை இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை. அவர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்போது பாரப்போம். நாங்கள் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று, ஆசிய கோப்பையை வெல்வதற்காக இங்கே வந்துள்ளோம். எந்த அணி வந்தாலும், நாங்கள் அவர்களை வீழ்த்த தயார். அவர்களை நாங்கள் வீழ்த்துவோம்.

    இவ்வாறு ஷாஹீன் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

    • கே.எல். ராகுல் 11 ரன்னிலும், என். ஜெகதீசன் 38 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    • சாய் சுதர்சன் மட்டும் தாக்குப்பிடித்து 75 ரன்கள் சேர்த்தார்.

    இந்தியா "ஏ"- ஆஸ்திரேலியா "ஏ" அணிகளுக்கு இடையில் அதிகாரப்பூர்வமற்ற 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 420 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

    அந்த அணியைச் சார்ந்த யாரும் சதம் அடிக்கவில்லை என்றாலும் ஜேக் எட்வர்ட்ஸ் 88 ரன்களும், நாதன் மெக்ஸ்வீனி 74 ரன்களும், சாம் கோன்டாஸ் 49 ரன்களும் அடித்தனர். இந்தியா "ஏ" தரப்பில் மனவ் சுதர் 5 விக்கெட் சாய்த்தார்.

    பின்னர் இந்தியா "ஏ" முதல் இன்னி்ங்சை தொடங்கியது. ஆஸ்திரேலியா "ஏ"வின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுக்களை அடுத்தடுத்து இழந்தது.

    கே.எல். ராகுல் 11 ரன்னிலும், என். ஜெகதீசன் 38 ரன்னிலும், ஆயுஷ் படோனி 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மற்றவர்கள் சொதப்ப, சாய் சுதர்சன் மட்டும் தாக்குப்பிடித்து விளையாடினார். அவர் 75 ரன்னில் ஆட்டமிழக்க இந்தியா ஏ 194 ரன்னில் சுருண்டது.

    பின்னர் 2ஆவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா ஏ 16 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

    • ஐசிசி தரவரிசையில் 900 புள்ளிகளை கடந்து சாதனை.
    • இதற்கு முன்னதாக விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் 900 புள்ளிகளுக்கு அதிகமாக பெற்றிருந்தனர்.

    இந்திய டி20 அணியின் அதிரடி வீரராக இளம் வீரர் அபிஷேக் சர்மா திகழ்ந்து வருகிறார். தொடக்க வீரராக விளையாடி வரும் அவர், குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் குவித்து வருகிறார். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக 39 பந்தில் 6 பவுண்டரி, 5 சிக்சருடன் 74 ரன்கள் விளாசினார்.

    இந்த நிலையில் ஐசிசி தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில் டி20 கிரிக்கெட்டில் பேட்டர்கள் தரவரிசையில் அபிஷேக் சர்மா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். மேலும் தரவரிசைக்கான புள்ளிகளில் 900-த்தை தாண்டியுள்ளார். தற்போது 907 புள்ளிகள் பெற்றுள்ளார்.

    இதற்கு முன்னதாக விராட் கோலி 2014ஆம் ஆண்டு 909 மற்றும் சூர்யகுமார் யாதவ் 2023ஆம் ஆண்டு 912 புள்ளிகள் பெற்றிருந்தனர். அதன்பின் 900 புள்ளிகளை கடந்த வீரர் என்ற பெருமையை அபிஷேக் சர்மா பெற்றுள்ளார்.

    • சமீபகாலமாக அமெரிக்க அணி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது.
    • அமெரிக்க கிரிக்கெட் வாரியத்தை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிரடியாக இடைநீக்கம் செய்தது.

    துபாய்:

    சமீபகாலமாக அமெரிக்க அணி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது.

    இந்நிலையில், அமெரிக்க கிரிக்கெட் வாரியத்தை ஐ.சி.சி. அதிரடியாக இடைநீக்கம் செய்துள்ளது.

    அமெரிக்க கிரிக்கெட் சங்கம், ஐசிசி விதிமுறைகளைத் தொடர்ச்சியாக மீறியதும், முறையான நிர்வாக அமைப்பைச் செயல்படுத்தத் தவறியதுமே இந்த நடவடிக்கைக்கு முக்கியக் காரணம் என ஐசிசி தெரிவித்துள்ளது.

    2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் ஐசிசியின் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    இருப்பினும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, இலங்கையில் நடக்கும் டி20 உலகக் கோப்பை போட்டியில் அமெரிக்க பங்கேற்பதில் சிக்கல் இருக்காது.

    • வங்காளதேச அணி லீக் சுற்றில் ஹாங்காங், ஆப்கானிஸ்தான் அணிகளை வென்றது.
    • இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் போட்டியில் இதுவரை 17 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் 'சூப்பர்4' சுற்றுக்கு வந்துள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் 'டாப்-2' இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.

    இந்த நிலையில் துபாயில் இன்று நடக்கும் 'சூப்பர்4' சுற்றின் 4-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.

    நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியாக வலம் வரும் இந்தியா, லீக் சுற்றில் ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான், ஓமனை அடுத்தடுத்து பந்தாடியது. தொடர்ந்து சூப்பர்4 சுற்றில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை மீண்டும் தோற்கடித்தது.

    இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவாக இருக்கிறது. கடந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் வர்மா (74 ரன்), சுப்மன் கில் (47 ரன்) அதிரடியால் பாகிஸ்தான் நிர்ணயித்த 172 ரன் இலக்கை 7 பந்துகள் மீதம் வைத்து இந்தியா எளிதாக எட்டியது. மேலும் பேட்டிங்கில் கேப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சனும், பந்து வீச்சில் குல்தீப் யாதவ், பும்ரா, வருண் சக்ரவர்த்தியும், ஆல்-ரவுண்டராக ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேலும் வலுசேர்க்கின்றனர். ஆனால் பீல்டிங் தான் சற்று கவலைக்குரியதாக உள்ளது. கடந்த ஆட்டத்தில் 4 கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்ட இந்திய வீரர்கள் பீல்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

    2024-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து 35 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருக்கும் இந்தியா 32-ல் வெற்றி பெற்றுள்ளது. 3-ல் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. 20 ஓவர் போட்டியில் இந்திய அணி தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டி, இறுதிப்போட்டியை உறுதி செய்யும் வேட்கையுடன் காத்திருக்கிறது.

    வங்காளதேச அணி லீக் சுற்றில் ஹாங்காங், ஆப்கானிஸ்தான் அணிகளை வென்றது. இலங்கையிடம் தோல்வி கண்டது. சூப்பர் 4 சுற்றில் தனது முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி பழிதீர்த்தது. அந்த நம்பிக்கையுடன் இந்த ஆட்டத்தில் களம் காணும். அந்த அணியில் பேட்டிங்கில் தவ்ஹித் ஹிரிடாய், கேப்டன் லிட்டான் தாஸ், சைப் ஹசன், தன்சித் ஹசனும், பந்து வீச்சில் முஸ்தாபிஜூர் ரகுமான், தஸ்கின் அகமது, மெஹிதி ஹசனும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

    இந்திய அணியோடு ஒப்பிடுகையில் வங்காளதேச அணியின் வலிமை குறைவானது என்றாலும், சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமான மைதானத்தில் அந்த அணி எதிரணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வல்லமை கொண்டதாகும். இந்தியாவுக்கு எதிராக ஆடும் போது வங்காளதேச அணியினர் ஆக்ரோஷத்துடனும், போர்க்குணத்துடனும் போராடுவார்கள். இருப்பினும் கடந்த கால வரலாற்றையும், தற்போதைய இந்திய அணியின் வளமான செயல்பாட்டையும் பார்க்கையில் வங்காளதேசம் சரிசமமான சவால் அளிப்பது கடினம் தான்.

    இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் போட்டியில் இதுவரை 17 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 16-ல் இந்தியாவும், ஒன்றில் வங்காளதேசமும் வெற்றி பெற்றுள்ளன.

    மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் சுழலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    போட்டி குறித்து வங்காளதேச அணியின் தலைமை பயிற்சியாளர் பில் சிமோன்ஸ் நேற்று கூறுகையில், 'இந்தியா ஒன்றும் தோற்கடிக்க முடியாத அணி கிடையாது. ஒவ்வொரு அணிக்கும் இந்தியாவை வீழ்த்தும் திறன் உள்ளது. ஆட்டத்தின் முடிவு அன்றைய நாளில் 3½ மணி நேரத்தில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்தே அமையும். இதற்கு முன்பு இந்திய அணி என்ன செய்தது என்பது விஷயமல்ல. எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம். இந்திய அணி தவறிழைக்கும் வகையில் நெருக்கடி கொடுத்து, அதன் மூலம் வெற்றி பெற முடியும் என்று நம்புகிறோம்.

    20 ஓவர் கிரிக்கெட்டில் 'நம்பர் ஒன்' அணியாக விளங்கும் இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு எப்போதும் நிறைய எதிர்பார்ப்பு இருக்கும். அதற்குள் நாங்களும் பயணித்து, அந்த தருணத்தை அனுபவித்து எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்துவோம்' என்றார்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி.

    வங்காளதேசம்: சைப் ஹசன், தன்சித் ஹசன், லிட்டான் தாஸ் (கேப்டன்), தவ்ஹித் ஹிரிடாய், ஷமிம் ஹூசைன், ஜாக்கர் அலி, மெஹிதி ஹசன், நசும் அகமது, தஸ்கின் அகமது, தன்சிம் ஹசன், முஸ்தாபிஜூர் ரகுமான்.

    இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் 1, 4, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.
    • டாசன் ஷனகா முதல் பந்தில் டக் அவுட்டானார்.

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

    சூப்பர் 4 சுற்றின் 3வது ஆட்டம் அபுதாபியில்  நேற்று நடந்தது. இதில் இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. ஆட்டத்தின் 2வது பந்தில் குசால் மெண்டிஸ் டக் அவுட்டானார்.

    பதும் நிசங்கா 8 ரன்னிலும், குசால் பெரேரா 15 ரன்னிலும், சரித் அசலங்கா 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். டாசன் ஷனகா முதல் பந்தில் டக் அவுட்டானார்.

    ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் கமிந்து மெண்டிஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து அவுட்டானார்.

    இறுதியில், இலங்கை 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது.

    இதையடுத்து, 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 18 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

     

    • இலங்கைக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை 133 ரன்கள் எடுத்தது.

    அபுதாபி:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

    சூப்பர் 4 சுற்றின் 3வது ஆட்டம் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. ஆட்டத்தின் 2வது பந்தில் குசால் மெண்டிஸ் டக் அவுட்டானார்.

    பதும் நிசங்கா 8 ரன்னிலும், குசால் பெரேரா 15 ரன்னிலும், சரித் அசலங்கா 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். டாசன் ஷனகா முதல் பந்தில் டக் அவுட்டானார்.

    ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் கமிந்து மெண்டிஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து அவுட்டானார்.

    இறுதியில், இலங்கை 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து, 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்குகிறது.

    • 66 டெஸ்ட் போட்டி, 69 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு அம்பயராக பணியாற்றி உள்ளார்.
    • டிக்கி பேர்டின் துல்லியமான முடிவுகள் மற்றும் ஸ்டைலால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார்.

    லண்டன்:

    இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல அம்பயர் ஹரோல்ட் டிக்கி பேர்ட், வயது முதிர்வால் இன்று காலமானார் (92).

    இங்கிலாந்தின் யார்க்ஷைரின் பர்ன்ஸ்லே பகுதியைச் சேர்ந்தவர் ஹரோல்ட் டிக்கி பேர்ட். இவர் 1956 முதல் 1965 வரை யார்க்ஷையர் மற்றும் லெய்செஸ்டர்ஷையர் அணிக்காக 93 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 2 சதமடித்துள்ளார்.

    1970-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தின் கிரிக்கெட் போட்டிகளுக்கு அம்பயராக பணியாற்ற துவங்கினார். அதன்பின், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு அம்பயராக அறிமுகமானார். அது முதல் 66 டெஸ்ட் போட்டி, 69 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு அம்பயராக பணியாற்றி உள்ளார். அதில் 3 உலக கோப்பை கிரிக்கெட் தொடர்களும் அடங்கும். டிக்கி பேர்டின் துல்லியமான முடிவுகள் மற்றும் அவரது ஸ்டைலால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார்.

    கிரிக்கெட்டில் அவர் ஆற்றிய பணிக்காக பல விருதுகளை பெற்றுள்ளார். டிக்கி பேர்ட் மரணத்துக்கு கிரிக்கெட் ரசிகர்கள் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    ×