என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • கூச் பெஹர் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆண்டுதோறும் நடைபெறுகிறது
    • பிரகார் தனது ரன் குவிப்பில் 46 ஃபோர்களும், 3 சிக்ஸர்களும் அடித்தார்

    கர்நாடகா மாநில ஷிவமோகா நகரில், கேஎஸ்சிஏ நவுலே மைதானத்தில் (KSCA Navule Stadium) 19 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

    ஆண்டுதோறும் நடைபெறும் கூச் பெஹர் கோப்பை (Cooch Behar Trophy) எனும் இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் கர்நாடகா அணியும் மும்பை அணியும் மோதின.

    கர்நாடகாவின் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தில், இளம் பேட்டிங் வீரர், பிரகார் சதுர்வேதி (Prakhar Chaturvedi) சிறப்பாக விளையாடினார்.

    தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கிய பிரகார், 404 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் புதிய சாதனையை படைத்தார்.

    பிரகார் 638 பந்துகளில் தனது அதிரடி பேட்டிங்கால் 46 ஃபோர்கள், 3 சிக்ஸர்கள் அடித்தார்.

    இதன் மூலம், ஒரு போட்டி தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் 24 வருடங்களுக்கு முன் புரிந்திருந்த சாதனையான 358 ரன்களை கடந்து பிரகார் சதுர்வேதி புது சாதனையை புரிந்தார்.


    தனது சிறப்பான ஆட்டத்தினால் ரஞ்சி கோப்பையில் இடம் பெறும் வாய்ப்புக்கு பிரகார் தகுதி பெற்றவராகிறார்.

    பிரகார் சதுர்வேதியின் தந்தை பெங்களூரூவில் மென்பொருள் பொறியாளராக பணி புரிகிறார். பிரகாரின் தாய், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தில் (DRDO) விஞ்ஞானியாக பணி புரிகிறார்.

    இரண்டாவது நாள் ஆட்டத்தில் மும்பை அணி 380 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    தொடர்ந்து ஆடிய கர்நாடகா, 223 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து, 890 ரன்கள் குவித்து முதல் இன்னிங்க்ஸ் ரன்கள் (510) அடிப்படையில் வெற்றி பெற்றது.


    • அரசு அதிகாரிகளை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய வழக்கில் கைது.
    • 2010ம் ஆண்டு முதல் 2020 வரை கைலாஷ் பதவி வகித்துள்ளார்.

    மத்திய பிரதேச மாநில பாஜக அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியாவின் மகன் பாஜக எம்எல்ஏ ஆகாஷ் விய்வர்கியா.

    இவர், கடந்த 2019ம் ஆண்டு அரசு அதிகாரிகளை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில், பாஜக எம்எல்ஏ ஆகாஷ் விஜய் வர்கியா இந்தூர் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்தூர் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக 2010ம் ஆண்டு முதல் 2020 வரை கைலாஷ் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • ரோகித் தனது 150 டி20 0 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி குல்படின் நைப்-ன் அதிரடி அரை சதத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் - ஜெய்வால் களமிறங்கினர். ரோகித் தனது 150 டி20 0 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இவர் முதல் போட்டியிலும் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஜெய்ஸ்வால் - விராட் கோலி ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். விராட் கோலி 29 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து களமிறங்கிய துபே ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்து ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை நாலாபுறமும் விளாசி தள்ளினார். அதிரடியாக விளையாடி 2 பேரும் அரை சதம் அடித்தனர். ஜெய்ஸ்வால் 68 ரன்னிலும் ஜித்தேஷ் சர்மா 0 ரன்னிலும் வெளியேறினர்.

    இறுதியில் இந்திய அணி 15.4 ஓவரில் 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. துபே 63 ரன்னிலும் ரிங்கு சிங் 9 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

    • டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • முஜீப் ரகுமான் 9 பந்துகளில் 21 ரன்களை குவித்து அதிரடி காட்டினார்.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மொகாலியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. போட்டியில், கில், திலக் வர்மாவுக்கு பதில் விராட் கோலி மற்றும் ஜெய்ஸ்வால் அணியில் இடம் பிடித்தனர்.

    இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பேட்டிங்கை தேர்வு செய்தது. 

    அதனால், ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கியது.

    இதில், அதிகபட்சமாக குல்பாடின் நைப் அரை சதம் அடித்து 57 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, நஜ்புள்ளா சத்ரான் 23 ரன்களும், கரிம் ஜனாட் 20 ரன்களும், குர்பாஜ் மற்றும் முகமது நபி ஆகியோர் தலா 14 ரன்களும், எடுத்தனர்.

    இறுதியில் முஜீப் ரகுமான் 9 பந்துகளில் 21 ரன்களை குவித்து அதிரடி காட்டினார்.

    முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவருக்கு அனைத்து விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை எடுத்தது.

    இதன்மூலம், இந்திய அணி 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது.

    • முதல் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. மொகாலியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மைதானத்தில் இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    இன்று நடைபெறும் போட்டியில் விளையாடுவதன் மூலம் கேப்டன் ரோகித் சர்மா புதிய உலக சாதனையை படைத்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் 150 ஆட்டங்களில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்று உள்ளார்.

    இதுவரை எந்த வீரரும் ரோகித் சர்மா அளவுக்கு அதிகமான போட்டிகளில் விளையாடியது கிடையாது. அவருக்கு அடுத்தபடியாக அயர்லாந்து அணியின் கேப்டன் பால் ஸ்டிர்லிங் 134 போட்டிகளில் பங்கேற்று 2-வது இடத்தில் உள்ளார்.

    இந்திய அணியை பொருத்தளவில் ரோகித்திற்கு அடுத்த இடத்தில் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி உள்ளார். அவர் 115 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 2-வது இடத்தில் உள்ளார். 

    • இவ்விரு அணிகளும் இதுவரை 20 ஓவர் சர்வதேச போட்டியில் 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • இதில் 5 ஆட்டங்களில் இந்தியா வெற்றி கண்டுள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

    இந்தூர்:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மொகாலியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. கில், திலக் வர்மாவுக்கு பதில் விராட் கோலி மற்றும் ஜெய்ஸ்வால் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 20 ஓவர் சர்வதேச போட்டியில் 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 5 ஆட்டங்களில் இந்தியா வெற்றி கண்டுள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. ஆப்கானிஸ்தான் ஒன்றில் கூட வெற்றி கண்டதில்லை.

    இந்தூர் மைதானத்தில் இந்திய அணி முன்று 20 ஓவர் போட்டியில் ஆடி 2-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் அடைந்து இருக்கிறது. கடைசியாக இங்கு 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் ஆட்டத்தில் 49 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி கண்டது. அந்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 227 ரன்கள் குவித்தது. எனவே இந்த ஆட்டத்திலும் ரன் மழைக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா:

    ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், விராட்கோலி, ஷிவம் துபே, ரிங்கு சிங், ஜிதேஷ் ஷர்மா, அக்ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ்குமார். 

    ஆப்கானிஸ்தான்:

    ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன் (கேப்டன்), அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், முகமது நபி, நஜ்புல்லா ஜட்ரன், கரிம் ஜனாத், குல்படின் நைப், முஜீப் ரகுமான், நவீன் உல்-ஹக், பசல்ஹக் பரூக்கி, நூர் அகமது.

    • முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது.
    • பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    ஹாமில்டன்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றிருந்தது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக பின் ஆலன் 74 ரன்கள் அடித்தார்.

    பின்னர் 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். இருப்பினும் பாபர் அசாம் - பகார் ஜமான் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் பாபர் ஆசம் 66 ரன்களிலும், பகார் ஜமான் 50 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    இருவரும் அவுட்டானதும் பாகிஸ்தான் அணியின் நிலைமை தலைகீழ் ஆனது. மற்ற வீரர்கள் அனைவரும் விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். முடிவில் பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஆடம் மில்னே 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

    இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

    • தமிழ் தலைவாஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 8 தோல்வியுடன் 19 புள்ளிகள் பெற்று 11-வது இடத்தில் இருக்கிறது.
    • தமிழ் தலைவாஸ் அணி அரியானாவை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறுமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜெய்ப்பூர்:

    10-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த மாதம் 2-ந் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து பெங்களூரு, புனே, சென்னை, நெய்டா, மும்பை ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெற்றது.

    7-வது கட்ட போட்டிகள் ராஜஸ்தான் தலைநகர் ஜெயப்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று நடந்த ஆட்டங்களில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 36-34 என்ற கணக்கில் புனேரி பல்தானையும், பெங்கால் வாரியர்ஸ் 42-37 என்ற கணக்கில் உ.பி. யோதாவையும் தோற்கடித்தன.

    சென்னை நகரை மையமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 8 தோல்வியுடன் 19 புள்ளிகள் பெற்று 11-வது இடத்தில் இருக்கிறது. தமிழ் தலைவாஸ் அணி தனது 12-வது ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்சை இன்று இரவு 8 மணிக்கு சந்திக்கிறது.

    தமிழ் தலைவாஸ் அணி அரியானாவை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறுமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஏற்பட்ட தோல்விக்கு இந்த அணி பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அந்த அணி டெல்லி (42-31), தெலுங்கு டைட்டன்ஸ் (38-36), உ.பி.யோதா (46-27) ஆகியவற்றை தோற் கடித்து இருந்தது.

    பெங்கால் வாரியர்ஸ், மும்பை, பாட்னா பைரேட்ஸ், ஜெய்ப்பூர், அரியானா, குஜராத் ஜெய்ன்ட்ஸ், பெங்களூர் புல்ஸ், புனே ஆகியவற்றிடம் தோற்று இருந்தது. அரியானா அணி தமிழ் தலைவாசை வீழ்த்தி 7-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    இன்று இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் டெல்லி-பாட்னா அணிகள் மோதுகின்றன. டெல்லி அணி 8-வது வெற்றிக்காகவும், பாட்னா 6-வது வெற்றிக் காகவும் காத்திருக்கின்றன. இதுவரை 70 ஆட்டங்கள் முடிந்துள்ளன. புனே அணி 10 வெற்றி, 2 தோல்வியுடன் 52 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

    ஜெய்ப்பூர் 48 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், டெல்லி 40 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், குஜராத் 39 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், மும்பை 35 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், அரியானா 34 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளன.

    பெங்கால், பெங்களூரு, பாட்னா, உ.பி. யோதா, தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ் ஆகிய அணிகள் 7 முதல் 12-வது இடங்களில் உள்ளன.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கியது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது வரிசையில் உள்ள ஜானிக்ஸ் ஷின்னர் (இத்தாலி) தொடக்க சுற்றில் நெதர்லாந்தை சேர்ந்த போடிக் வான்டேவை எதிர் கொண்டார்.

    மெல்போர்ன்:

    இந்த ஆண்டின் முதல் கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கியது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது வரிசையில் உள்ள ஜானிக்ஸ் ஷின்னர் (இத்தாலி) தொடக்க சுற்றில் நெதர்லாந்தை சேர்ந்த போடிக் வான்டேவை எதிர் கொண்டார்.

    இதில் ஷின்னர் 6-4, 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்ற முதல் சுற்று ஆட்டங்களில் மேட்டோ அர்னால்டி (இத்தாலி), ஜெவுமி முனார் (ஸ்பெயின்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த ஆட்டங்களில் 9-வது வரிசையில் உள்ள பார்பரா (செக் குடியரசு), லெசியா (உக்ரைன்) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    • சமீபத்தில் டேவிட் வார்னர் ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
    • இதனால் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரராக ஸ்டீவ் சுமித் களம் இறங்குகிறார்.

    சிட்னி:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரராக ஸ்டீவ் சுமித் களம் இறங்குவார். உஸ்மான் கவாஜாவுடன் இணைந்து தொடக்க வீரராக அவர் ஆடுகிறார்.

    டேவிட் வார்னர் சமீபத்தில் ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக தொடக்க வீரராக யார் களம் இறங்குவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆஸ்திரேலிய தேர்வு குழு ஸ்டீவ் சுமித் தொடக்க வீரராக ஆடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    இந்நிலையில், டெஸ்ட் அணிக்கு தொடக்க வீரராக விளையாடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என ஸ்டீவ் சுமித் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது:

    லபுசேன் 3-வது வரிசையில் களம் இறங்குவதால் நான் பேட்டிங் செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. பேட்டிங் செய்வதற்காக நீண்ட நேரம் காத்திருப்பதை நான் விரும்பவில்லை. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது.

    புதிய பந்தினைச் சந்திப்பது எனக்கு பிடிக்கும். 2019-ம் ஆண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடரின்போது நான் சீக்கிரமாக களம் இறங்கி புதிய பந்தினைச் சந்தித்தேன்.

    3-வது வரிசையில் களம் இறங்கி பல ஆண்டுகளாக புதிய பந்துகளில் சிறப்பாக விளையாடி உள்ளேன். எனக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த தொடக்க ஆட்டக்காரர் பொறுப்பு ஒன்றும் புதிதாக இருக்கப் போவதில்லை.

    இந்தப் பொறுப்பை மகிழ்ச்சியுடனும், சவாலாகவும் ஏற்றுக்கொண்டு தொடக்க வரிசையில் விளையாடுவேன் என தெரிவித்தார்.

    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது.
    • இதில் தென் கொரிய ஜோடியை இந்திய ஜோடி வீழ்த்தியது.

    கோலாலம்பூர்:

    மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, உலக தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் தென் கொரியாவின் காங் மின் ஹியுக்-சியோ சியுங் ஜே ஜோடியுடன் மோதியது.

    இந்த ஆட்டத்தில் சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி 21-18, 22-20 என்ற செட் கணக்கில் தென் கொரிய ஜோடியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

    மலேசிய ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய ஜோடி சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆட்டத்தின் முதல் பாதி கோல் ஏதுமின்றி 0 - 0 என முடிந்தது.
    • 2-வது பாதியில் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தியது.

    கத்தார்:

    ஆசிய கோப்பை கால்பந்தாட்ட தொடர் கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற குரூப் சுற்று ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

    தொடக்கம் முதல் இரு அணிகளும் தீவிர தடுப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ஆட்டத்தின் முதல் பாதி கோல் ஏதுமின்றி 0 - 0 என முடிந்தது.

    இதனை தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதியில் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் ஜாக்சன் இர்வின் கோல் அடித்தார். இதனை தொடர்ந்து 73-வது நிமிடத்தில் ஜோர்டன் போஸ் கோல் அடித்தார்.

    இதனால் ஆஸ்திரேலிய அணி 2-0 என முன்னிலை பெற்றது. பதிலடி கொடுக்க கடுமையாக போராடியும் இந்திய அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்ட நேர முடிவில் 2-0 என ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    ×