search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இறுதியில் அதிரடி காட்டிய முஜீப் உர் ரகுமான்- இந்தியாவுக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்
    X

    இறுதியில் அதிரடி காட்டிய முஜீப் உர் ரகுமான்- இந்தியாவுக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்

    • டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • முஜீப் ரகுமான் 9 பந்துகளில் 21 ரன்களை குவித்து அதிரடி காட்டினார்.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மொகாலியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. போட்டியில், கில், திலக் வர்மாவுக்கு பதில் விராட் கோலி மற்றும் ஜெய்ஸ்வால் அணியில் இடம் பிடித்தனர்.

    இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதனால், ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கியது.

    இதில், அதிகபட்சமாக குல்பாடின் நைப் அரை சதம் அடித்து 57 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, நஜ்புள்ளா சத்ரான் 23 ரன்களும், கரிம் ஜனாட் 20 ரன்களும், குர்பாஜ் மற்றும் முகமது நபி ஆகியோர் தலா 14 ரன்களும், எடுத்தனர்.

    இறுதியில் முஜீப் ரகுமான் 9 பந்துகளில் 21 ரன்களை குவித்து அதிரடி காட்டினார்.

    முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவருக்கு அனைத்து விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை எடுத்தது.

    இதன்மூலம், இந்திய அணி 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது.

    Next Story
    ×