என் மலர்
விளையாட்டு
- முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவரில் 182 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய குஜராத் அணி 150 ரன்களில் ஆல் அவுட்டானது.
நவி மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 9-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு- குஜராத் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தது.
ராதா யாதவ் 66 ரன்னும், ரிச்சா கோஷ் 44 ரன்னும் எடுத்தனர்.
குஜராத் அணியின் சோபி டிவைன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.
இறுதியில், குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 18.5 ஓவரில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 32 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தது.
பெங்களுரு அணியின் ஷ்ரேயங்கா பாட்டீல் 5 விக்கெட்டும், லாரன் பெல் 3 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர்.
- இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.
- காலிறுதி சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
புதுடெல்லி:
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. வரும் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பிவி சிந்து உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், தைவானின் லின் சூ யீ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் முதல் செட்டை 21-17 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட தைவான் வீரர் அடுத்த இரு செட்களை 21-13, 21-18 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் லக்ஷயா சென் தொடரில் இருந்து வெளியேறினார்.
- சவுராஷ்டிரா தொடக்க ஜோடி 23 ஓவரில் 172 ரன்கள் குவித்தது.
- சவுராஷ்டிரா வீரர் விஷ்வராஜ் ஜடேஜா ஆட்டமிழக்காமல் 127 பந்தில் 165 ரன்கள் விளாசினார்.
விஜய் ஹசாரே தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் பஞ்சாப்- சவுராஷ்டிரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சவுராஷ்டிரா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி பஞ்சாப் அணி முதலில் களம் இறங்கியது. தொடக்க வீரரும் கேப்டனுமான பிரப்சிம்ரன் சிங் 87 ரன்களும் அடுத்து வந்த அன்மோல்பிரீத் சிங் சரியாக 100 ரன்களும் அடிக்க பஞ்சாப் அணி 50 ஓவரில் 291 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
பின்னர் 292 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சவுராஷ்டிரா அணி களம் இறங்கியது. கேப்டன் ஹார்விக் தேசாய்- விஷ்வராஜ் ஜடேஜா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹார்விக் கேசாய் 63 பந்தில் 64 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 22 ஓவரில் 172 ரன்கள் குவித்தது.
அடுத்து விஷ்வராஜ் ஜடேஜா உடன் பிரேராக் மங்கட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அபாரமாக விளையாடியது. விஷ்வராஜ் ஜடேஜா தொடர்ந்து சதம் விளாசி, தொடர்ந்து விளையாடினார். அவர் 127 பந்தில் 165 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க சவுராஷ்டிரா 39.3 ஓவரிலேயே 293 ரன்களை எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பிரேராக் மங்கட் 49 பந்தில் 52 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் சவுராஷ்டிரா நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் விதர்பாவை எதிர்கொள்கிறது.
- விராட் கோலி 9 சதங்கள் அடித்தார்.
- டேவிட் வார்னர் 10 சதங்களுடன் அவரை முந்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் சிட்னி தண்டர்- சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சிட்னி தண்டர் 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் சேர்த்தது.
தொடக்க வீரராக களம் இறங்கிய அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் அபாரமாக விளையாடி 65 பந்தில் 110 ரன்கள் விளாசினார். இது டி20 கிரிக்கெட்டில் அவரின் 10-வது சதமாகும். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளினார். விராட் கோலி 9 சதங்கள் அடித்துள்ளார்.
கிறிஸ் கெய்ல் 22 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். பாபர் அசாம் 11 சதங்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.
பின்னர் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சிட்னி சிக்சர்ஸ் ஸ்டீவ் ஸ்மித்தின் அதிரடி சதத்தால் (42 பந்தில் 100) 17.2 ஓவரில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- சின்னசாமி மைதானம் ஆர்சிபி-யின் சொந்த மைதானமாக திகழ்கிறது.
- கடந்த ஆண்டு வெற்றி கொண்டாட்ட நிகழ்வின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB). இந்த அணி பெங்களூரு சின்னசாமி மைதானத்தை சொந்த மைதானமாக கொண்டு விளையாடி வருகிறது.
கடந்த வருடம் முதன்முறையாக ஆர்.சி.பி. அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது சின்னசாமி மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து இந்த வருடம் ஆர்சிபி அணிக்கு சின்னசாமி மைதானம் வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் ரசிகர்கள் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக மைதானத்தில் 300 முதல் 350 ஏஐ கேமராக்கள் பொருத்த கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு ஆர்சிபி அணி முறையாக பரிந்துரை செய்துள்ளது. இதற்கான செலவு 4.5 கோடி ரூபாயை தாங்களே ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.
ஆனால் போக்குவரத்து நெரிசல், ரசிகர்கள் பாதுகாப்பு ஆகிவற்றின் காரணமாக இந்த முறை போட்டியை நடத்த கர்நாடக அரசு அனுமதி வழங்குமா? என்பது சந்தேகம்தான்...
ஏஐ கேமராக்கள் மூலம் ரசிகர்கள் ஒரு இடத்தில் அதிகமாக கூட இருப்பதை அறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு கூட்ட நெரிசலை தடுக்க முடியும் என்பதால் ஆர்சிபி இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
- இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.
- 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி தோல்வி அடைந்தது.
புதுடெல்லி:
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. வரும் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பிவி சிந்து உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, ஜப்பானின் யமஷிதா-மிடோரிகவா ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய சாத்விக் ஜோடி முதல் செட்டை 27-25 என கைப்பற்றியது. இதில் சுதாரித்துக் கொண்ட ஜப்பான் ஜோடிஅடுத்த இரு செட்களை 23-21, 21-19 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதன்மூலம் இந்தியாவின் சாத்விக்- சிராக் ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.
- அடிலெய்டு இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- இதில் நேற்று நடந்த காலிறுதியில் ரஷிய வீராங்கனை வெற்றி பெற்றார்.
- இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.
- 2வது சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென் வெற்றி பெற்றார்.
புதுடெல்லி:
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. வரும் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பிவி சிந்து உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், ஜப்பானின் நிஷிமோட்டோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-19, 21-10 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 161 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய உ.பி. வாரியர்ஸ் அணி 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
நவி மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 8-வது லீக் ஆட்டத்தில் மும்பை-உ.பி. அணிகள் மோதின. டாஸ் வென்ற உ.பி. அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது.
நாட் ஸ்கீவர் பிரண்ட் 65 ரன்னில் அவுட்டானார். அமன் ஜோத் கவுர் 38 ரன்னும், நிகோலா கேரி 32 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி. அணி களமிறங்கியது. மெக் லானிங் 25 ரன்னும், கிரன் நவ்கிரே 10 ரன்னும், லிட்ச் பீல்டு 25 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
ஹர்லின் தியோல் ஆடி அரை சதம் கடந்து 64 ரன்னும், சோலே டிரியான் 27 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இறுதியில், உ.பி. வாரியர்ஸ் அணி 18.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் உ.பி. வாரியர்ஸ் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
- முதலில் ஆடிய கர்நாடக அணி 49.4 ஓவரில் 280 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய விதர்பா அணி 284 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
பெங்களூரு:
விஜய் ஹசாரே டிராபி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
லீக் சுற்றுகள் முடிவில் ஏ பிரிவில் முதல் இரு இடங்களைப் பிடித்த கர்நாடகம், மத்திய பிரதேசம், பி பிரிவில் உத்தர பிரதேசம், விதர்பாவும், சி பிரிவில் பஞ்சாப், மும்பையும், டி பிரிவில் டெல்லி, சவுராஷ்டிரா ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.
காலிறுதி முடிவில் கர்நாடகா, சவுராஷ்டிரா, பஞ்சாப், விதர்பா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.
இந்நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற முதல் அரையிறுதியில் கர்நாடகா, விதர்பா அணிகள் மோதின. டாஸ் வென்ற கர்நாடக அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய கர்நாடக அணி 49.4 ஓவரில் 280 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கருண் நாயர் 76 ரன்னும், கிருஷ்ணன் ஸ்ரீஜித் 54 ரன்னும் எடுத்தனர்.
விதர்பா அணி சார்பில் தர்ஷன் நல்கண்டே 5 விக்கெட்டும், யாஷ் தாக்குர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விதர்பா அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அமான் மோகடே பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 138 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ரவிகுமார் சமர்த் 76 ரன்னும், துர்வ் ஷோரே 47 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில், விதர்பா அணி 46.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 284 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. இதன்மூலம் நடப்பு சாம்பியன் கர்நாடக அணி தொடரில் இருந்து வெளியேறியது.
நாளை நடைபெற உள்ள 2வது அரையிறுதி போட்டியில் சவுராஷ்டிரா, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
- முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா 107 ரன்னில் சுருண்டது.
- டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவுக்கு 96 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் இன்று தொடங்கியது. இந்தியா "பி" பிரிவில் இடம் பிடித்துள்ளது. இந்தியா இன்று தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய அமெரிக்கா ஹெனில் படேல் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 107 ரன்னில் சுருண்டது. அமெரிக்கா அணியால் 35.2 ஓவர்களை மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது.
பின்னர் 108 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 2 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். இந்தியா 4 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் எடுத்திருக்கும்போது வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் மழை பெய்தது. இதனால் நீண்ட நேரம் ஆட்டம் தடைபட்டது.
மழை நின்றபின் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. அப்போது டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவுக்கு 37 ஓவரில் 96 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
வேதாந்த் திரிவேதி (2), ஆயுஷ் மாத்ரே (19), விஹான் மல்ஹோத்ரா (18) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அபிஜியான் கந்து ஆட்டமிழக்காமல் 41 பந்தில் 42 ரன்கள் சேர்க்க இந்தியா 17.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- மான்செஸ்டர் அணி தங்களது வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை அறிவித்துள்ளது.
- அத்துடன் லேகோவுக்கான வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்தில் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் இடம் பிடித்துள்ளது.
100 பந்துகள் கொண்ட தொடர் ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனி தொடராக நடத்தப்படுகிறது. இந்த நிலையில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயன்ட்ஸ் தங்களது இரு அணிகளிலும் ஜோஸ் பட்லர், கிளாசன், நூர் அகமது, லியாம் டாசன், மெக் லேனிங், ஸ்மிரிதி மந்தனா, ஷோபி எக்லெஸ்டோன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர் என அறிவித்துள்ளது.
மேலும், லோகோவையும் வெளியிட்டுள்ளது.






