என் மலர்
விளையாட்டு
- தேவஜித் சைகியா இடைக்கால செயலாளராக இருந்து வருகிறார்.
- செயலாளர் பதவிக்கு இவரை தவிர மற்ற யாரும் விண்ணப்பம் செய்யவில்லை.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருந்தவர் ஜெய் ஷா. இவர் ஐசிசி தலைவராக தேர்வானதால் செயலாளர் பதவியில் இருந்து விலகினார். இதனால் தேவஜித் சகியா இடைக்கால செயலாளராக நியமிக்கப்பட்டார்.
அதேபோல் பொருளாளராக இருந்த ஆஷிஷ் ஷெலார் மகாராஷ்டிரா மாநில மந்திரியாகிவிட்டார்.
இதனால் இந்த இரண்டு பதவிகளும் காலியாக இருந்தன. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம். இன்று மாலை 4 மணி வரை விண்ணப்பிக்க முடியும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தேவஜித் சைகியா செயலாளர் பதவிக்கும், பிரப்தேஜ் பாட்டியா பொருளாளர் பதவிக்கும் விண்ணப்பித்திருந்தனர். மற்ற யாரும் விண்ணப்பிக்கவில்லை. இதனால் தேவஜித் சைகியா பொருளாளராகவும், பிரப்தேஜ் பாடியா பொருளாளராகவும் பதவி ஏற்க வாய்ப்புள்ளது.
- பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்டில் தென் ஆப்பிரிக்க வீரர் ரியான் ரிக்கெல்டன் இரட்டை சதம் அடித்தார்.
- 2016-க்கு பிறகு முதல் இரட்டை சதம் அடித்த முதல் தெ.ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனையை ரிக்கெல்டன் படைத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கேப்டவுனில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. மார்க்ரம் (17), வியான் முல்டர் (5), ஸ்டப்ஸ் (0) ஆகியோர் சொதப்பிய நிலையில் கேப்டன் டெம்பா பவுமா மற்றும் ரியான் ரிக்கெல்டன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இருவரும் சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்தினர். சதம் விளாசிய பவுமா 106 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ரியான் ரிக்கெல்டன் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டை சதம் அடித்தார். 10-வது டெஸ்டில் ஆடும் அவருக்கு இது முதல் சர்வதேச இரட்டை சதம் ஆகும்.
இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இரட்டை சதம் பதிவு செய்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் என்ற பெருமையை ரிக்கல்டன் பெற்றார்.
2016-ல் தென் ஆப்பிரிக்காவிற்காக ஹசிம் அம்லா இரட்டை சதம் அடித்தார். அதன்பிறகு தற்போதுதான் தென் ஆப்பிரிக்கா வீரர் ஒருவர் இரட்டை சதத்தை எட்டியுள்ளார்.
2016-க்கு பிறகு முன்னாள் கேப்டன்களான டீன் எல்கர் மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸ் இரட்டை சதத்தை பதிவு செய்வதற்கு மிக அருகில் வந்தனர். ஆனால் இருவரும் 199 ரன்களில் அவுட் ஆனார்கள். கடந்த ஆண்டு அக்டோபரில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரர் டோனி டி ஜோர்ஜி 177 ரன்கள் எடுத்தார்.
மேலும் 266 பந்துகளில் அதிவேக சதம் விளாசிய தென் ஆப்பிரிக்க வீரர்கள் பட்டியலில் இவர் 4-வது இடத்தைப் பிடித்தார்.
தென் ஆப்பிரிக்காவின் அதிவேக டெஸ்ட் இரட்டை சதம் விளாசிய வீரர்கள்:-
211 பந்துகள் - ஹெர்ஷல் கிப்ஸ் vs பாகிஸ்தான், கேப் டவுன், 2003
238 பந்துகள் - கிரேம் ஸ்மித் vs வங்கதேசம், சிட்டகாங், 2008
251 பந்துகள் - கேரி கிர்ஸ்டன் vs ஜிம்பாப்வே, ஹராரே, 2001
266 பந்துகள் - ரியான் ரிக்கல்டன் vs பாகிஸ்தான், கேப் டவுன், 2025
267 பந்துகள் - ஜாக் காலிஸ் vs இந்தியா, செஞ்சுரியன், 2010
- 2023-ம் ஆண்டிலேயே சாஹலின் பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனஸ்ரீ நீக்கினார்.
- இருப்பினும் விவாகரத்து செய்திகளை இருவரும் மறுத்து வந்தனர்.
மும்பை:
அண்மையில் நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய அணிக்காக ஆடிய சாஹல் ரூ.18 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார். ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் சாஹல் முதலிடத்தில் இருக்கிறார்.
இந்த நிலையில் சாஹல் வாழ்க்கையில் மிகப்பெரிய சிக்கல் எழுந்துள்ளது. 2020-ம் ஆண்டு இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் சாஹல் மருத்துவரான தனஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
மாடலிங்கிலும் ஈடுபட்டு வந்த தனஸ்ரீ, அடுத்தடுத்து கான்சர்ட்-களில் பாடகியாக அறிமுகமாகினார். இதன் உச்சமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு தனஸ்ரீ-க்கு கிடைத்தது. பின்னர் அவர் மீதான மீடியா வெளிச்சம் அதிகரிக்க, தெலுங்கு சினிமாவில் சில படங்களில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இதனிடையே சாஹல் - தனஸ்ரீ இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக தகவல் வெளியாகி கொண்டே இருந்தது. தனஸ்ரீயின் நடவடிக்கைகளில் சாஹலுக்கு விருப்பம் இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு தருணங்களிலும் தனஸ்ரீ-க்கு ஆதரவாக சாஹல் பேசிய வீடியோக்கள் வெளியாகின.

ஆனால் 2023-ம் ஆண்டிலேயே சாஹலின் பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனஸ்ரீ நீக்கினார். இருப்பினும் விவாகரத்து செய்திகளை இருவரும் மறுத்து வந்தனர். இந்த நிலையில் சாஹல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "புதிய வாழ்க்கை லோடிங்" என்று சில மாதங்களுக்கு முன் பதிவிட்டார். தற்போது இன்ஸ்டாகிராமில் இருவரும் பின் தொடர்வதை நிறுத்தியதோடு, தாங்கள் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களையும் அழித்து வருகின்றனர்.
இதனால் சாஹல் - தனஸ்ரீ தம்பதியினர் விவாகரத்து செய்ய உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதுகுறித்து ஆங்கில பத்திரிகை ஒன்றில், சாஹல் - தனஸ்ரீ விவாகரத்து தவிர்க்க முடியாத நிலையில் உள்ளது. இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று இருவருக்கும் நெருக்கமானவர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இவர்களின் விவாகரத்துக்கான காரணம் குறித்து எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.
- ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 181 ரன்னில் சுருண்டது.
- ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் விளையாடி கொண்டிருந்த போது பும்ரா பாதியிலேயே வெளியேறினார்.
5-வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 185 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 181 ரன்னில் சுருண்டது.
ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் விளையாடி கொண்டிருந்த போது இந்திய அணியின் கேப்டன் பும்ரா பாதியிலேயே வெளியேறினார். 2-வது நாளின் முதல் செஷனின் கடைசி 5 ஓவர்களில், பும்ரா 3 ஓவர்களை வீசினார். இதனைத் தொடர்ந்து, உணவு இடைவேளைக்கு பிறகு வந்த பும்ராவால், 120 மற்றும் 130 வேகத்தில்தான் பந்துவீச முடிந்தது. அப்போது, பும்ரா சோர்வுடனும் காணப்பட்டார். இதனால், உடனே களத்தை விட்டு வெளியேறிய பும்ரா, மருத்துவ ஊழியருடன் இணைந்து, மருத்துவனைக்கு சென்றார்.
இந்நிலையில் அவரது காயம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 3-ம் நாளில் பும்ரா நிச்சயமாக பேட்டிங் செய்வார். ஆனால் காலையில் அவர் எப்படி உணருகிறார் என்பதைச் சரிபார்த்த பிறகு அவரது பந்துவீச்சு குறித்து முடிவு எடுக்கப்படும் என மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.
- முதல் செட்டை டிமித்ரோவ் 4-6 என இழந்தார்.
- 2-வது செட்டில் 4-4 என சமநிலை பெற்றபோது காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார்.
ஆஸ்திரேலியா கிராண்ட்ஸ்லாம் தொடருக்கு முன்னோட்டாக கருதப்படும் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் நடைபெற்று வருகிறது. இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான அரையிறுதி ஒன்றில் 2-ம் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான டிமித்ரோவ், செக்குடியரசின் தரநிலை பெறாத ஜிரி லெகேக்காவை எதிர்கொண்டார்.
நடப்பு சாம்பியனுக்கு எதிராக லெகாக்கா அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டிமிட்ரோவால் லெகாக்கா ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் முதல் செட்டை 4-6 என அதிர்ச்சிகரமாக இழந்தார்.
2-வது செட்டில் நம்பிக்கையுடன் விளையாடினார். 2-வது செட்டில் 4-4 என சமநிலையில் இருக்கும்போது காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் செக்குடியரசு வீரர் ஜிரி லெகேக்கா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றார்.
மற்றொரு அரையிறுதி இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. இதில் அமெரிக்காவின் ரெய்லி ஓபெல்கா- பிரான்ஸின் பெரிகார்ட் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் வீரருடன் ஜிரி லெகேக்கா சாம்பியன் பட்டத்திற்காக மோதுவார்.
முதல்நிலை வீரரான ஜோகோவிச் நேற்று நடைபெற்ற காலிறுதியில் அமெரிக்காவின் ஓபெல்காவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் குடெர்மெட்டோவா கலினினாவை 6-4, 6-3 என வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் முதல்நிலை வீராங்கனையாக சபலென்கா 8-ம் நிலை வீராங்கனையான அனட்ரீவாவுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறார்.
- முதல் இன்னிங்சில் இந்திய அணி 185 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
- 2-வது இன்னிங்சில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
சிட்னி:
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 185 ரன்களும், ஆஸ்திரேலியா 181 ரன்களிலும் ஆல் அவுட் ஆனார்கள்.
பின்னர் 4 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் அடித்துள்ளது. ஜடேஜா 8 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இதுவரை 145 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில் நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
முன்னதாக 2-வது இன்னிங்சில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால், ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே 4 பவுண்டரிகள் அடித்து அசத்தினார்.
இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்சின் முதல் ஓவரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற மாபெரும் வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார். ஒருநாள் (16) மற்றும் டி20 (18) போட்டியில் தொடக்க ஓவரில் அதிக ரன்கள் குவித்த வீரராக சேவாக் உள்ளார்.
டெஸ்ட்டில் ஒட்டுமொத்தமாக 4-வது இடத்தை ஜெய்ஸ்வால் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் முதல் 3 இடங்கள் முறையே மைக்கேல் ஸ்லேட்டர் (ஆஸ்திரேலியா), கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) ஓஷத பெர்னாண்டோ (இலங்கை) ஆகியோர் தொடக்க ஓவரில் 16 ரன்களை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்த தொடரில் 8 முறை அவுட் சைடு ஆப் ஸ்டம்ப் பந்தை சீண்டி அவுட் ஆகி உள்ளார்.
- மற்ற 2 இன்னிங்களில் ஒன்றில் நாட் அவுட். மற்றொன்றில் பேட்டிங் செய்யவில்லை.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் 4 போட்டிகள் முடிவில் 2-1 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.
இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 185 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 181 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் 4 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.
மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ராகுல் 13, ஜெய்ஸ்வால் 22, சுப்மன் கில் 13, விராட் கோலி 6, ரிஷப் பண்ட் 61, நிதிஷ் ரெட்டி 4 என விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
முன்னதாக இந்த இன்னிங்சில் விராட் கோலி 6 ரன்னில் போல்ண்ட் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதுவும் அவுட் சைடு ஆப் ஸ்டம்புக்கு சென்ற பந்தை தொட்டு ஆட்டமிழந்தார். இதன் மூலம் அவுட் சைடு அப் ஸ்டம்ப் பந்தை சீண்டி இந்த தொடரில் மட்டும் 8-வது முறையாக அவுட் ஆகி உள்ளார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் 10 இன்னிங்சுகளில் 8 முறை இந்த மாதிரி அவுட் ஆகியுள்ளார்.
மற்ற 2 இன்னிங்களில் ஒன்றில் நாட் அவுட். மற்றொன்றில் பேட்டிங் செய்யவில்லை. முதல் டெஸ்ட்டில் 2-வது இன்னிங்சில் 100 நாட் அவுட்டில் இருந்தார். அவர் சதம் அடித்தவுடன் இந்தியா டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. 3-வது டெஸ்ட் மழையால் டிரா ஆனது. அதனால் விராட் கோலி 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலிக்கு பல முன்னாள் வீரர்கள் அறிவுரை கூறினார். ஆனால் அதையெல்லாம் அவர் யோசிப்பாரா இல்லையா என்பது தெரியவில்லை என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சச்சின் வீடியோவை மீண்டும் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
- விராட் கோலி எப்பவும் போல அவுட் சைடு ஆப் ஸ்டம்ப் திசையில் அவுட் ஆனார்.
- ஆஸ்திரேலிய தரப்பில் போலண்ட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் 4 போட்டிகள் முடிவில் 2-1 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.
இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 185 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 181 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் 4 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.
இந்த இன்னிங்சிலும் இந்திய அணியின் பேட்டிங் சொதப்பலாக இருந்தது. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல் களமிறங்கினர். பொறுமையாக விளையாடிய கேஎல் ராகுல் திடீரென அதிரடியாக விளையாட முயற்சித்தார். இதனால் அவர் 13 ரன்னில் அவுட் ஆனார்.
போலண்ட் பந்து வீச்சில் திணறி வந்த ஜெய்ஸ்வால் அவர் ஓவரிலேயே போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த சுப்கில் அதிரடியாக விளையாட முயற்சித்தார். வெளியில் சென்ற பந்தை அடிக்க முயற்சித்தார். இப்படி அடிக்கடி அதிரடியாக விளையாட முயன்றார். ஆஸ்திரேலியாவின் அறிமுக வீரர் பந்தை இறங்கி வந்த அடிக்க முயற்சித்த போது கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்த சிறிது நேரத்தில் விராட் கோலி எப்பவும் போல அவுட் சைடு ஆப் ஸ்டம்ப் திசையில் சென்ற பந்தை அடிக்க முயற்சித்து 6 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் தான் சந்தித்த முதல் பந்தையே சிக்சராக மாற்றினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி பண்ட் சிக்சர் அடித்து (29 பந்தில்) அரை சதம் கடந்தார். அவர் 61 ரன்கள் எடுத்த நிலையில் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த நிதிஷ் ரெட்டி 4 ரன்னில் வெளியேறினார். இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய தரப்பில் போலண்ட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- 2-இன்னிங்சில் களமிறங்கிய ரிஷப் பண்ட், தான் சந்தித்த முதல் பந்தையே சிக்சராக மாற்றினார்.
- ரிஷப் பண்ட் சிக்சர் அடித்து அரை சதம் கடந்தார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் 4 போட்டிகள் முடிவில் 2-1 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.
இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 185 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 181 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் 4 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.
இந்த இன்னிங்சிலும் இந்திய அணியின் பேட்டிங் சொதப்பலாக இருந்தது. தொடக்க வீரர்களான ராகுல் 13, ஜெய்ஸ்வால் 22, விராட் கோலி 6, சுப்மன் கில் 13 என விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் தான் சந்தித்த முதல் பந்தையே சிக்சராக மாற்றினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி பண்ட் சிக்சர் அடித்து (29 பந்தில்) அரை சதம் கடந்தார். அவர் 61 ரன்கள் எடுத்த நிலையில் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
160 ஸ்ட்ரைக் ரேட்டில் அதிக முறை 50+ ரன்களை குவித்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ரிச்சர்ட்ஸ் (2 முறை) சாதனையை ரிஷப் பண்ட் சமன் செய்துள்ளார்.
மேலும் குறைந்த பந்தில் அரை சதம் கடந்த 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். அந்த பட்டியலில் முதல் இடத்திலும் ரிஷ்ப் பண்ட் தான் உள்ளார். 2022-ம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக 28 பந்தில் அரை சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறைந்த பந்தில் அரை சதம் விளாசிய இந்திய வீரர்கள்:-
ரிஷ்ப பண்ட் 28 பந்தில் (இலங்கை 2022)
ரிஷப் பண்ட் 29 பந்தில் (ஆஸ்திரேலியா)
கபில் தேவ் 30 பந்தில் (பாகிஸ்தான் 1982)
ஷர்துல் தாகூர் 31 பந்தில் (இங்கிலாந்து 2021)
ஜெய்ஸ்வால் 31 பந்தில் (வங்கதேசம் 2024)
- சிறப்பாக செயல்படாததால் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து ரோகித் விலகினார்.
- ரோகித் சர்மா நேர்மை மற்றும் தன்னலமற்ற தன்மை மூலம் தலைமைத்துவத்தை எடுத்துக்காட்டுகிறார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் 4 போட்டிகளின் முடிவில் 2-1 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.
இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. மோசமான பார்ம் காரணமாக ரோகித் இந்த போட்டியில் இருந்து விலகிய நிலையில் பும்ரா கேப்டனாக செயல்படுகிறார்.
முதல் இன்னிங்சில் இந்தியா 185 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஸ்மித் மற்றும் வெப்ஸ்டர் அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினர். இறுதியில் ஆஸ்திரேலியா 181 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இந்த போட்டியின் டிரிங்ஸ் இடைவெளியின் போது ரோகித் சர்மா மைதானத்திற்குள் வந்து பும்ராவிடம் சில அறிவுரைகளை வழங்கினார். இந்திய அணி வெற்றி பெறுவதற்காக கேப்டன் மற்றும் அணியில் இல்லையென்றாலும் இந்திய அணியின் வெற்றிக்காக எதாவது செய்து கொண்டிருக்கிறார். அவர் சிறப்பாக விளையாடாததது அணியின் வெற்றிக்கு பாதிப்பாக இருப்பதால் அணியில் இருந்து வெளியேறி சுயநலமற்ற வீரர் என்று ஒவ்வொரு முறையும் நிரூபித்து வருகிறார்.
இந்நிலையில் ரோகித் சர்மா விளையாட்டின் உண்மையான ஜாம்பவான் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ரோகித் சர்மா நேர்மை மற்றும் தன்னலமற்ற தன்மை மூலம் தலைமைத்துவத்தை எடுத்துக்காட்டுகிறார். தனிப்பட்ட சவால்கள் இருந்தபோதிலும், அவர் அணியின் வெற்றிக்கு முன்னுரிமை அளிக்கிறார், தேவைப்படும்போது ஒதுங்குகிறார். தற்போதைய டெஸ்ட் தொடரில் அவரது தலைமை இந்தியாவின் வெற்றிக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. விளையாட்டின் உண்மையான ஜாம்பவான்.
என ரெய்னா கூறினார்.
- ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 181 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
- இந்திய தரப்பில் சிராஜ், பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டும் பும்ரா, நிதிஷ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஆஸ்திரேலியா இந்தியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 185 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 181 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் சிராஜ், பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டும் பும்ரா, நிதிஷ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த போட்டியில் பும்ரா 2 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் 47 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார். அதன்படி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் பிஷன் சிங் பேடியின் சாதனையை பும்ரா (32) முறியடித்துள்ளார்.

1977/1978 -ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிஷன் சிங் பேடி 31 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடதக்கது.
ஆஸ்திரேலியாவில் நடந்த தொடரில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகள்
32* 2024/25-ல் ஜஸ்பிரித் பும்ரா
1977/78-ல் 31 பிஷன் பேடி
1977/78-ல் 28 பிஎஸ் சந்திரசேகர்
1967/68-ல் 25 இஏஎஸ் பிரசன்னா
1991/92-ல் 25 கபில் தேவ்
- இந்திய அணி முதல் இன்னிங்சில் 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 181 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
சிட்னி:
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆஸ்திரேலிய வேகப்பந்தை தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 72.2 ஓவர்களில் 185 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக பண்ட் 40 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலன்ட் 4 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும் சாய்த்தனர்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 9 ரன் எடுத்திருந்தது. கான்ஸ்டாஸ் 9 ரன்களுடன் களத்தில் இருந்தார். கவாஜா (2 ரன்) பும்ரா பந்து வீச்சில் ஸ்லிப்பில் ராகுலிடம் அவுட் ஆனார்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். மார்னஸ் லபுஸ்சேன் 2 ரன்களில் வந்த வேகத்திலேயே பும்ரா பந்துவீச்சில் வீழ்ந்தார்.
அவரை தொடர்ந்து கான்ஸ்டாஸ் 23 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் 4 ரன்களிலும் சிராஜின் ஓவரில் வீழ்ந்தனர். இந்த இக்கட்டான சூழலில் ஸ்டீவ் சுமித்துடன் கை கோர்த்த அறிமுக வீரர் வெப்ஸ்டர் அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதில் சுமித் தனது பங்குக்கு 33 ரன்கள் அடித்த நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் வீழ்ந்தார்.
இவரை தொடர்ந்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 21 ரன்களிலும், கம்மின்ஸ் 10 ரன்களிலும், ஸ்டார்க் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் வெப்ஸ்டர் பொறுப்புடன் விளையாடி அணியை முன்னெடுத்து சென்றார். அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்த அவர் 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.
முடிவில் 51 ஓவர்கள் தாக்குப்பித்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 181 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டுகளும், பும்ரா, நிதிஷ் ரெட்டி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்தியா முதல் இன்னிங்சில் 4 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.






