என் மலர்
நீங்கள் தேடியது "Yuzvendra Chahal wife"
- 2023-ம் ஆண்டிலேயே சாஹலின் பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனஸ்ரீ நீக்கினார்.
- இருப்பினும் விவாகரத்து செய்திகளை இருவரும் மறுத்து வந்தனர்.
மும்பை:
அண்மையில் நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய அணிக்காக ஆடிய சாஹல் ரூ.18 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார். ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் சாஹல் முதலிடத்தில் இருக்கிறார்.
இந்த நிலையில் சாஹல் வாழ்க்கையில் மிகப்பெரிய சிக்கல் எழுந்துள்ளது. 2020-ம் ஆண்டு இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் சாஹல் மருத்துவரான தனஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
மாடலிங்கிலும் ஈடுபட்டு வந்த தனஸ்ரீ, அடுத்தடுத்து கான்சர்ட்-களில் பாடகியாக அறிமுகமாகினார். இதன் உச்சமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு தனஸ்ரீ-க்கு கிடைத்தது. பின்னர் அவர் மீதான மீடியா வெளிச்சம் அதிகரிக்க, தெலுங்கு சினிமாவில் சில படங்களில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இதனிடையே சாஹல் - தனஸ்ரீ இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக தகவல் வெளியாகி கொண்டே இருந்தது. தனஸ்ரீயின் நடவடிக்கைகளில் சாஹலுக்கு விருப்பம் இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு தருணங்களிலும் தனஸ்ரீ-க்கு ஆதரவாக சாஹல் பேசிய வீடியோக்கள் வெளியாகின.

ஆனால் 2023-ம் ஆண்டிலேயே சாஹலின் பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனஸ்ரீ நீக்கினார். இருப்பினும் விவாகரத்து செய்திகளை இருவரும் மறுத்து வந்தனர். இந்த நிலையில் சாஹல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "புதிய வாழ்க்கை லோடிங்" என்று சில மாதங்களுக்கு முன் பதிவிட்டார். தற்போது இன்ஸ்டாகிராமில் இருவரும் பின் தொடர்வதை நிறுத்தியதோடு, தாங்கள் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களையும் அழித்து வருகின்றனர்.
இதனால் சாஹல் - தனஸ்ரீ தம்பதியினர் விவாகரத்து செய்ய உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதுகுறித்து ஆங்கில பத்திரிகை ஒன்றில், சாஹல் - தனஸ்ரீ விவாகரத்து தவிர்க்க முடியாத நிலையில் உள்ளது. இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று இருவருக்கும் நெருக்கமானவர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இவர்களின் விவாகரத்துக்கான காரணம் குறித்து எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.
- 2023-ம் ஆண்டிலேயே சாஹலின் பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனஸ்ரீ நீக்கினார்.
- இருவரும் கடந்த 18 மாதங்களாக தனித்தனியாக வாழ்ந்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
மும்பை:
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ விவகாரத்து செய்யப் போவதாக தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருவரும் சமீப காலங்களில் தனித்தனியே வசிப்பதாகவும், இருவரின் விவாகரத்து தொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், கடந்த 2020-ம் ஆண்டு தனஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். மாடலிங்கில் ஈடுபட்டு வந்த தனஸ்ரீ, அடுத்தடுத்து கான்சர்ட்-களில் பாடகியாக அறிமுகமாகினார். இதன் உச்சமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு தனஸ்ரீ-க்கு கிடைத்தது.
தனஸ்ரீயின் நடவடிக்கைகள் சாஹலுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு தருணங்களிலும் தனஸ்ரீ-க்கு ஆதரவாக சாஹல் பேசிய வீடியோக்கள் வெளியாகின.

ஆனால் 2023-ம் ஆண்டிலேயே சாஹலின் பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனஸ்ரீ நீக்கினார். இருப்பினும் விவாகரத்து குறித்து எந்த வித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளிவராமல் இருந்தது.
இந்நிலையில் நேற்று இருவரும் மும்பையில் உள்ள பாந்த்ரா குடும்ப நீதிமன்றத்தில் ஆஜராகி பரஸ்பர விவகாரத்து பெற்றதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இருவரும் கடந்த 18 மாதங்களாக தனித்தனியாக வாழ்ந்து வந்ததும் தெரிய வந்துள்ளது. நேற்று மாலை நீதிபதி, அவர்களுக்கு அதிகாரபூர்வமாக விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
தனஸ்ரீ வர்மாவுக்கு யுஸ்வேந்திர சாஹல் குறிப்பிட்ட தொகையை ஜீவனாம்சமாக வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி ரூ. 60 கோடி வரை ஜீவனாம்சம் செலுத்த வேண்டியிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
2025-ம் ஆண்டு நிலவரப்படி தனஸ்ரீ வர்மாவின் நிகர மதிப்பு 24 கோடி. அவர் தனது பிராண்ட் ஒப்பந்தங்கள் மூலம் நல்ல சம்பளம் பெறுகிறார். 6.2 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். சாஹலின் நிகர சொத்து மதிப்பு ரூ.45 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
- யுஸ்வேந்திர சாஹல், கடந்த 2020-ம் ஆண்டு தனஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
- சாஹல் அவரது மனைவி தனுஸ்ரீ வரமாவை விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் பரவியது
சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் அடித்தது. இதனையடுத்து 252 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.
இந்நிலையில், துபாய் மைதானத்தில் சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப் போட்டியை ஆர்ஜே மஹ்வாஷ் உடன் இந்திய கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹல் கண்டு ரசித்து வரும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், கடந்த 2020-ம் ஆண்டு தனஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், சாஹலுக்கும் அவரது மனைவி தனுஸ்ரீ வரமாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாகவும் தகவல் பரவியது
இந்நிலையில், ஆர்ஜே மஹ்வாஷ் உடன் சாஹல் இருக்கும் புகைப்படம் இனியாயத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.






