என் மலர்
விளையாட்டு
- 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.
- இங்கிலாந்து அணி 97 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி டி20 போட்டி மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்தது.

248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில் இங்கிலாந்து அணி 10.3 ஓவரில் 97 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரை 4-1 என கைப்பற்றியது.
- மகளிர் U19 டி20 உலகக் கோப்பையை இரண்டாவது முறையாகக் கைப்பற்றி இந்திய அணி அசத்தியது
- வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
2-வது ஜூனியர் பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மலேசியாவில் நடைபெற்றது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 11.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 84 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், மகளிர் U19 உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு பிசிசிஐ ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது.
- இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான பல்வேறு விதிகளை பிசிசிஐ கடந்த மாதம் வெளியிட்டது.
- அதன்படி, இந்திய அணி வீரர்கள் புதிய விதிமுறைகளின்படி நடந்து வருகின்றனர்.
புதுடெல்லி:
இந்திய வீரர்கள் யாரும் முறையான அனுமதியின்றி பெரிய தொடர்களை தவிர்த்து மற்ற எவ்வித தொடர்களுக்கும் தங்களது மனைவியையோ, குழந்தைகளையோ, உறவினர்களையோ அழைத்துச் செல்லக் கூடாது என்ற விதிமுறை உள்பட பல்வேறு விதிகளை பி.சி.சி.ஐ. கடந்த மாதம் வெளியிட்டது.
தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடினர்.
அதன்படி, இந்திய அணி வீரர்கள் புதிய விதிமுறைகளின்படி நடந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் உதவியாளரான கவுதம் அரோராவுக்கு இந்திய அணியுடன் பயணம் செய்வதற்கு பி.சி.சி.ஐ. தடை விதித்தது.
வீரர்கள், அதிகாரிகள் மற்றும் தேர்வாளர்கள் மட்டும் செல்லக்கூடிய இடங்களுக்கு அவரும் சென்று வருகிறார் என இந்திய அணி உறுப்பினர்கள் அளித்த புகாரை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
- முதலில் ஆடிய இந்தியா 247 ரன்களைக் குவித்துள்ளது.
- அபிஷேக் சர்மா 37 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
மும்பை:
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி டி20 போட்டி மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் பந்தில் இருந்து அதிரடியை ஆரம்பித்தது. முதல் விக்கெட்டுக்கு 21 ரன்கள் சேர்த்த நிலையில் சஞ்சு சாம்சன் 16 பந்தில் அவுட்டானார்.
அடுத்து அபிஷேக் சர்மாவுடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நாலா புறமும் சிக்சர், பவுண்டரிகளாக விளாசியது. அபிஷேக் சர்மா 17 பந்துகளில் அரை சதம் கடந்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 37 பந்துகளில் 10 சிக்சர், 5 பவுண்டரிகள் உள்பட சதமடித்து அசத்தினார். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்த திலக் வர்மா 24 ரன்னில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 44 பந்தில் 113 ரன்கள் சேர்த்தது.
சூர்யகுமார் யாதவ் 2 ரன்னும், ஷிவம் துபே 30 ரன்னும், பாண்ட்யா, ரிங்கு சிங் தலா 9 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அபிஷேக் சர்மா தனி ஆளாக இங்கிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். 54 பந்தில் 13 சிக்சர், 7பவுண்டரி உள்பட 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 247 ரன்கள் குவித்துள்ளது.
இதையடுத்து, 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.
- அபிஷேக் சர்மா 37 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
மும்பை:
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி டி20 போட்டி மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் பந்தில் இருந்து அதிரடியை ஆரம்பித்தது. முதல் விக்கெட்டுக்கு 21 ரன்கள் சேர்த்த நிலையில் சஞ்சு சாம்சன் 16 பந்தில் அவுட்டானார்.
அடுத்து அபிஷேக் சர்மாவுடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நாலா புறமும் சிக்சர், பவுண்டரிகளாக விளாசியது. அபிஷேக் சர்மா 17 பந்துகளில் அரை சதம் கடந்தார்.
தொடர்ந்து அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 37 பந்துகளில் 10 சிக்சர், 5 பவுண்டரிகள் உள்பட சதமடித்து அசத்தினார். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்த திலக் வர்மா 24 ரன்னில் ஆட்டமிழந்தார்.
2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 44 பந்தில் 113 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
- 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 3-1 என முன்னிலை வகிக்கிறது.
- இரு அணிகள் மோதும் 5வது டி20 போட்டி மும்பையில் இன்று நடைபெறுகிறது.
மும்பை:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 3-1 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி டி20 போட்டி மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று நடைபெறுகிறது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்கிறது.
இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங்குக்கு பதில் ஷமி இடம்பிடித்துள்ளார்.
இந்திய அணி விவரம் வருமாறு:
சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஹர்திக் பாண்ட்யா, சிவம் துபே, அக்சர் படேல், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி
இங்கிலாந்து அணி விவரம் வருமாறு:
பில் சால்ட், பென் டக்கெட், ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தேல், ஓவர்டன், ஜோப்ரா ஆர்ச்சர், அதில் ரஷீத், மார்க் வுட், பிரைடன் கார்ஸ்.
- ரஞ்சி போட்டியில் ஹிமான்ஷூ சங்வான் வீசிய பந்தில் விராட் கோலி போல்டு ஆனார்.
- விராட் கோலியை போல்ட் செய்தபோது ஹிமான்ஷூ சங்வான் ஆக்ரோஷமாக கொண்டாடினார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. இந்திய அணி வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் கட்டாயமாக விளையாட வேண்டும் என்று அறிவித்தது. அந்த வகையில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா, முன்னணி வீரர் விராட் கோலி ஆகியோர் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடி வருகின்றனர்.
இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி டெல்லி அணிக்காக விளையாடினார். ரெயில்வே அணிக்கு எதிரான போட்டியில் 15 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 6 ரன்கள் எடுத்த நிலையில், ஹிமான்ஷூ சங்வான் வீசிய பந்தில் போல்டு ஆனார்.
இதனையடுத்து, விராட் கோலியை போல்ட் செய்த வீரர் யார் என்பது குறித்து விவரங்களை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தேடினர்.
இந்நிலையில், ரஞ்சி கோப்பை போட்டியில் விராட் கோலியின் விக்கெட்டை எடுத்த பதில் அவரிடமே ரயில்வேஸ் அணி வீரர் ஹிமான்ஷு சங்க்வான் ஆட்டோகிராஃப் வாங்கியுள்ளார். இது தொடர்பாக வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
- ரஞ்சிக் கோப்பையின் வரலாறு அவருக்கு தெரியுமா?
- கிரிக்கெட்டுக்கு வீரர்கள் முக்கியமில்லை, வீரர்களுக்கு கிரிக்கெட்தான் முக்கியம்
இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி. சமீப காலங்களில் ஃபார்ம்-அவுட் ஆகி தவிக்கும் விராட் கோலி கடைசியாக விளையாடிய டெஸ்ட் தொடர்களில் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
இதன் காரணமாக பிசிசிஐ-ன் வலியுறுத்தலின்படி ரஞ்சி போட்டியில் டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாடினார்.
டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாடும் போட்டியை காண எண்ணற்ற ரசிகர்கள் திரண்டனர். இந்தப் போட்டியை ஜியோ சினிமா ஒளிபரப்புகிறது. விராட் கோலிக்கு கூடும் ரசிகர்களின் எண்ணிக்கையால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரஞ்சி போட்டியில் கோலி விளையாடியதை குறிப்பிடும் விதமாக 'Ranji Trophy is blessed' என்று ரசிகர் ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டதை குறிப்பிட்டு முன்னாள் இந்திய வீரர் அஷ்வின் தனது யூடியூப் பக்கத்தில் காட்டமாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "விராட் கோலியைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய விஷயம். டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே அவரது எண்ணம். ஒவ்வொரு ரஞ்சிக் கோப்பை போட்டிக்கும் இதுபோன்ற கூட்டம் இருக்க வேண்டும். ஹிமான்ஷூ சங்வான் அபாரமான பந்தை வீசி கோலியின் விக்கெட்டை வீழ்த்தினார்.
'ரஞ்சி டிராபி ஆசீர்வதிக்கப்பட்டது' என்று ஒரு ட்வீட்டைப் பார்த்தேன். ரஞ்சிக் கோப்பையின் வரலாறு அவருக்கு தெரியுமா? இத்தனை வருடங்களாக இது நடந்து கொண்டிருக்கிறது. இது இந்தியாவின் முக்கியமான தொடராக இருந்துள்ளது.
பிரபல கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், எப்போதும் ரஞ்சி போட்டிகளில் விளையாடி வந்தார். கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதால் வீரர்கள் பயனடைவார்கள். கிரிக்கெட்டுக்கு வீரர்கள் முக்கியமில்லை, வீரர்களுக்கு கிரிக்கெட்தான் முக்கியம்" என்று தெரிவித்தார்.
- டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் புதுடெல்லியில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியா, டோகோ அணிகள் மோதி வருகின்றன.
புதுடெல்லி:
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் புதுடெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் இந்தியா, டோகோ அணிகள் மோதி வருகின்றன.
நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த் மற்றும் ராம்குமார் ராமநாதன் ஆகியோர் வெற்றி பெற்று, 2-0 என முன்னிலை பெற்றனர்.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி-ரித்விக் சவுத்ரி போலிப்பல்லி ஜோடி, டோகோ ஜோடியை 6-2, 6-1 என எளிதில் வீழ்த்தியது. இந்தப் போட்டி 57 நிமிடங்களில் முடிவடைந்தது. இதன்மூலம் இந்திய அணி 3-0 என முன்னிலை பெற்றுள்ளது.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 82 ரன்களில் ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய இந்தியா 84 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கோலாலம்பூர்:
2-வது ஜூனியர் பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மலேசியாவில் நடைபெற்றது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக வேன் வூர்ஸ்ட் 23 ரன்னும், ஃபே கௌலிங் 15 ரன்னும் எடுத்தனர்.
இந்தியா சார்பில் கொங்கடி திரிஷா 3 விக்கெட்டும், வைஷ்ணவி ஷர்மா, ஆயுஷி ஷுக்லா, பருனிகா சிசோடியா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை கமலினி 8 ரன்னில் அவுட்டானார்.
2வது விக்கெட்டுக்கு கொங்கடி திரிஷாவுடன் இணைந்த சானிகா சால்கே ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
இறுதியில், இந்திய அணி 11.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 84 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் டி20 உலகக் கோப்பையை இரண்டாவது முறையாகக் கைப்பற்றி அசத்தியது. திரிஷா கொங்கடி 44 ரன்னும், சால்கே ஜோடி 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
- இந்திய அணி இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
- தென் ஆப்பிரிக்கா அணியின் 4 பேர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகினர்.
2-வது ஜூனியர் பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்தத் தொடரில் இறுதிப் போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
கோப்பை வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்கியுள்ளன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா மகளிர் ஜூனியர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. துவக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்கா அணிக்கு சிமோன் லௌரென்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.
இவருடன் களமிறங்கிய துவக்க வீராங்கனை ஜெம்மா 16 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்தவர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்கா சார்பில் கார்போ மெசோ (10), வேன் வூர்ஸ்ட் (23) மற்றும் ஃபே கௌலிங் (15) மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களிலும், நான்கு பேர் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகினர்.
இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 82 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய கொங்கடி திரிஷா 3 விக்கெட்டுகளையும், வைஷ்ணவி ஷர்மா, ஆயுஷி ஷுக்லா மற்றும் பருனிகா சிசோடியா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஷப்னம் ஷாகில் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
- இந்திய அணி இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
- தென் ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.
2-வது ஜூனியர் பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்தத் தொடரில் இறுதிப் போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
கோப்பை வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்கியுள்ளன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா மகளிர் ஜூனியர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
நிக்கி பிரசாத் தலைமையிலான இந்திய அணி இந்த போட்டி தொடரில் தோல்வியை சந்திக்காமல் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. லீக் சுற்றில் வெஸ்ட்இண்டீஸ், மலேசியா, இலங்கை அணிகளையும், சூப்பர் 6 சுற்றில் வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகளை இந்திய அணி பந்தாடியது.
தொடர்ந்து நடைபெற்ற அரை இறுதியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.






