என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • செருப்பு இல்லாமல் இப்போது தான் யுவராஜ் முதல் முறையாக ட்வீட் செய்துள்ளார் என்று நினைக்கிறேன்.
    • ஒரு வழியாக அவர் என்னால் பெருமையாக உள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்தியா 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. கடைசி போட்டியில் அதிரடியாக விளையாடி சதம் அடித்த அபிஷேக் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் அதிரடியாக விளையாடி சதம் அடித்த அபிஷேக் சர்மாவுக்கு அவரது ஆலோசகரான யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவித்தார்.

    அதில், "நன்றாக விளையாடினீர்கள் அபிஷேக் ஷர்மா. உங்களிடம் இந்த ஆட்டத்தை தான் நான் பார்க்க விரும்பினேன். உங்களுடைய சதத்திற்காக பெருமையடைகிறேன்" என்று பாராட்டினார். யுவராஜ் வாழ்த்து குறித்து செய்தியாளர்கள் அபிஷேக் ஷர்மாவிடம் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அபிஷேக் சர்மா பதிலளித்தது பின்வருமாறு:-

    செருப்பு இல்லாமல் இப்போது தான் யுவராஜ் முதல் முறையாக ட்வீட் செய்துள்ளார் என்று நினைக்கிறேன். ஒரு வழியாக அவர் என்னால் பெருமையாக உள்ளார். அதற்காக நானும் மகிழ்ச்சியடைகிறேன். 3 வருடத்திற்கு முன்பாக அவருடன் பயிற்சிகளை துவங்கிய போது ஒரு வீரராக உங்கள் மீது எப்போதும் சந்தேகம் இருப்பது இயற்கை என்று கூறினார்.

    இருப்பினும் உங்களால் இந்தியாவுக்காக விளையாடி நன்றாக செயல்பட்டு போட்டிகளை வென்று கொடுக்க முடியும் என்று என்னிடம் சொன்னார். லாக் டவுன் சமயங்களில் குறுகிய காலத்தை பார்க்காதீர்கள் நீண்ட கால திட்டத்திற்காக உங்களை நான் தயார்படுத்துகிறேன் என்று யுவ்ராஜ் என்னிடம் சொன்னார். அன்று அவர் கொடுத்த பயிற்சிகள் இன்று ஒன்றாக சேர்ந்து எனக்கு வருவதில் மகிழ்ச்சி.

    என்று அபிஷேக் கூறினார்.

    • யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டன் அலிசா ஹீலி நடப்பு மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
    • அவருக்கான மாற்று வீராங்கனையாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் சினெல்லா ஹென்றி அந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்தும் விதமாக மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை பிசிசிஐ 2023-ம் ஆண்டு தொடங்கியது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இதுவரை இரண்டு சீசன்களை கடந்துள்ள இத்தொடரானது 3-வது சீசனை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது.

    இதில் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியும், 2-வது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.

    இதனையடுத்து மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3-வது சீசன் பிப்ரவரி 14-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

    இந்நிலையில் வரவிருக்கும் மகளிர் பிரீமியர் லீக் 2025-க்கு முன்னதாக யுபி வாரியர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    அதன்படி ஆஸ்திரேலியா மற்றும் யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டன் அலிசா ஹீலி நடப்பு மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கான மாற்று வீராங்கனையாக வெஸ்ட் இண்டீஸின் நட்சத்திர ஆல் ரவுண்டர் சினெல்லா ஹென்றி யுபி வாரியர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சினெல்லா ஹென்றி வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 62 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 473 ரன்கள் எடுத்து 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    அதேபோல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் சோஃபி டிவைன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் கேட் கிராஸ் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களைக் கூறி இத்தொடரில் இருந்து விலகினர். இதனையடுத்து அவர்களுக்கான மாற்று வீராங்கனைகளாக ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த ஹீதர் கிரஹாம் மற்றும் கிம் கார்த் ஆகியோரை ஆர்சிபி அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

    இதில் ஹீதர் கிரஹாம் ஆஸ்திரேலியாவுக்காக 5 டி20 சர்வதேச போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கிம், ஆஸ்திரேலியாவுக்காக 59 டி20, 56 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் மேலும் டெஸ்டில் 8 விக்கெட்டுகளையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 55 விக்கெட்டுகளையும், டி20 கிரிக்கெட்டில் 49 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடர் வருகிற 22-ந் தேதி தொடங்கி மார்ச் 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • இத்தொடரில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

    முன்னாள் நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடர் வருகிற 22-ந் தேதி தொடங்கி மார்ச் 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இத்தொடரில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடர் நவி மும்பையின் டி.ஒய். பாட்டில் மைதானம், ராஜ்கோட்டின் நிரஞ்சன் ஷா மைதானம் மற்றும் ராய்ப்பூரின் ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன.

    இந்நிலையில் இந்த தொடரில் முன்னாள் நட்சத்திரங்களான கிறிஸ் கெய்ல், மகாயா நிடினி மற்றும் மான்டி பனேசர் ஆகியோர் இந்த தொடரில் அவரவர் நாட்டுக்காக விளையாட உள்ளனர். இதனால் ரசிகர்கள் ஆவலுடன் இந்த தொடரை எதிர் நோக்கி உள்ளனர்.

    • ஒருநாள் தொடர் வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது.
    • முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் நடைபெறுகிறது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியும் 3-வது போட்டியில் இங்கிலாந்து அணியும் 4, 5-வது போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது.

    இதனையடுத்து ஒருநாள் தொடர் வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. இந்த தொடருக்கான முதல் போட்டி நாக்பூரில் நடைபெறுகிறது. இதற்காக இந்தியா, இங்கிலாந்து அணி வீரர்கள் நாக்பூர் வந்தடைந்தனர்.

    இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால், சுப்மன் ஆகியோர் நாக்பூர் விமான நிலையம் வந்தடைந்தனர். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • 5 போட்டிகளில் துருவ் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.
    • 5-வது போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக துருவ் ஜூரல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார்.

    மும்பை:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 4 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

    முன்னதாக ஒவ்வொரு தொடரிலும் பீல்டிங் துறையில் சிறந்து விளங்கும் இந்திய வீரருக்கு பி.சி.சி.ஐ. சார்பில் 'இம்பேக்ட் பீல்டர்' விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

    அந்த வகையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் சிறந்த பீல்டருக்கான விருதை துருவ் ஜுரெல் தட்டிச்சென்றார். அவருக்கு இந்த விருதை இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் வழங்கி கவுரவித்தார்.

    5 போட்டிகளில் துருவ் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். 5-வது போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக துருவ் ஜூரல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாங்கள் பேட்டிங் செய்யும்போது 250 முதல் 260 ரன்கள் எடுக்க வேண்டும் என்று நினைத்தோம்.
    • நாங்கள் பயமின்றி கிரிக்கெட் விளையாடப் போகின்றோம்.

    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி அதிரடியாக விளையாடி 247 ரன்கள் குவித்தது. இதனையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 97 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 4-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில் இனி இந்தியா இவ்வாறு தான் டி20 கிரிக்கெட்டில் விளையாட போவதாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இங்கிலாந்து அணி திறமை வாய்ந்த வீரர்களைக் கொண்ட ஒரு அணியாகும். அவர்களுக்கு எதிராக ஒரு போட்டியில் தோற்பது எல்லாம் நாங்கள் பயப்படவில்லை. நாங்கள் பேட்டிங் செய்யும்போது 250 முதல் 260 ரன்கள் எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். இப்படி நினைத்து அதிரடியாக விளையாடும்போது சில போட்டிகளில் 120 ரன்கள் ஆட்டம் இழக்க கூடும். அதைப்பற்றி கவலை கொள்ளக்கூடாது. நாங்கள் சரியான திசையில் சென்று கொண்டிருக்கின்றோம். இதே ஸ்டைலில் தான் எதிர்காலத்திலும் விளையாட போகிறோம்.

    நாங்கள் பயமின்றி கிரிக்கெட் விளையாடப் போகின்றோம். அபிஷேக் ஷர்மா போன்ற இளம் வீரர்களுக்கு நாங்கள் அதிகம் ஆதரவு அளிக்கப் போகின்றோம். சில சமயம் இப்படி அதிரடி காட்டும் வீரர்களிடம் நாம் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். ஏனென்றால் பயமின்றி கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற சித்தாந்தத்தில் இந்த இளம் வீரர்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.

    மணிக்கு 140 முதல் 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு இப்படி ஒரு சதத்தை எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் அடித்து நான் பார்த்ததில்லை. ஐபிஎல் தொடரில் இந்த வீரர்களை நமது இளம் வீரர்கள் அதிக முறை எதிர்கொண்டு இருக்கிறார்கள். இதுதான் இனி இந்திய கிரிக்கெட். முடிவுகள் நமக்கு சாதகமாக இருக்கும் போது அனைத்தும் நல்ல விஷயமாக இருக்கும்.

    140 கோடி இந்திய மக்களுக்காக நாங்கள் விளையாடுகிறோம் என்பதை எங்களுடைய வீரர்கள் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். வருண் சக்கரவர்த்தியும், ரவி பிஷ்னோயும் எங்கள் பந்துவீச்சின் மிகவும் முக்கியமானவர்கள். இருவரும் கூட்டணி அமைத்துக் கொண்டு பந்து வீசுவது எங்களுக்கு மிகவும் முக்கியமாகும். பேட்டிங்கில் நாங்கள் முடிந்த அளவுக்கு அதிரடியாக விளையாட போகிறோம்.

    இன்றைய ஆட்டத்தில் துபே நான்கு ஓவர்களை வீசினார். எங்கள் அணியின் பேட்டிங் வரிசையில் தொடக்க வீரர்களை தவிர எஞ்சிய அனைத்து வீரர்களின் பேட்டிங் வரிசையும் மாறிக்கொண்டே இருக்கும். இனி டி20 கிரிக்கெட் இப்படி தான் விளையாடப்படும். ஒருநாள் கிரிக்கெட்டிலும் இதேபோன்று ஆக்ரோஷமான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்த முயற்சி செய்வோம். ரசிகர்களுக்கு பொழுதுபோக்கை நாங்கள் நிச்சயம் கொடுப்போம்.

    என்று கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

    • நன்றாக விளையாடினாய் அபிஷேக் சர்மா.
    • உன்னை நான் இப்படியொரு இடத்தில்தான் பார்க்க நினைத்தேன்.

    மும்பை:

    இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 97 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

    இந்த போட்டியில் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி சதம் அடித்து அசத்தினார். அவர் 54 பந்தில் 13 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சதம் விளாசிய அபிஷேக் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

    இந்நிலையில் உன்னை நான் இப்படியொரு இடத்தில்தான் பார்க்க நினைத்தேன் என அபிஷேக் சர்மாவின் இந்திய முன்னாள் வீரரும், அவரின் ஆலோசகருமான யுவராஜ் சிங் புகழாராம் சூட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நன்றாக விளையாடினாய் அபிஷேக் சர்மா. உன்னை நான் இப்படியொரு இடத்தில்தான் பார்க்க நினைத்தேன். பெருமையாக உள்ளது.

    இவ்வாறு யுவராஜ் கூறினார்.

    • 2025-ன் சாம்பியனாக உருவெடுத்த பிரக்ஞானந்தா வெற்றியானது அர்ப்பணிப்பு, கடின உழைப்புக்கு சான்றாக உள்ளது.
    • பிரக்ஞானந்தா உடனான போட்டியில் சிறப்பாக விளையாடிய குகேஷுக்கும் வாழ்த்துகள்.

    நெதர்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் 2025 பட்டத்தை தமிழக வீரர் பிரக்ஞானந்தா வென்றுள்ளார். இறுதிப் போட்டியில் மற்றொரு தமிழக வீரர் குகேஷ்-ஐ எதிர்த்து விளையாடிய பிரக்ஞானந்தா டை பிரேக்கிற்கு பிறகு வெற்றி பெற்றார்.

    தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தா கடைசியில் விளையாடிய மூன்று போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று அசத்தினார். இதன் மூலம் அவர் புள்ளிகள் பட்டியலில் முன்னேறி பட்டத்தை கைப்பற்றி உள்ளார்.

    டாடா ஸ்டீல்ஸ் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    2025-ன் சாம்பியனாக உருவெடுத்த பிரக்ஞானந்தா வெற்றியானது அர்ப்பணிப்பு, கடின உழைப்புக்கு சான்றாக உள்ளது. இத்தகைய மதிப்புமிக்க நிகழ்வில் பெற்ற வெற்றி அவருடைய திறமை மற்றும் உறுதிப்பாட்டின் உண்மையான பிரதிபலிப்பாகும்.

    பிரக்ஞானந்தா உடனான போட்டியில் சிறப்பாக விளையாடிய குகேஷுக்கும் வாழ்த்துகள்.

    இருவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் எலைட் திட்ட வீரர்களாக இருப்பதில் தமிழ்நாடு பெருமை கொள்கிறது. அவர்களின் வெற்றியால் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். மேலும் அவர்களின் வாழ்க்கையில் பல வெற்றிகளை எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

    • ஐந்தாவது டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
    • கடைசி டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்தது.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில், ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அசத்தியது.

    மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன் குவித்தது. அபிஷேக் சர்மா அதிரடியாக சதம் அடித்தார். அவர் 54 பந்தில் 135 ரன்கள் (7 பவுண்டரி, 13 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார்.

    சிவம் துபே 13 பந்தில் 30 ரன்களை (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். இங்கிலாந்து சார்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகள், மார்க் வுட் 2 விக்கெட்டுகள், ஜோப்ரா ஆர்ச்சர், ஜேமி ஓவர்டன், ஆதில் ரஷீத் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

    பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி இந்திய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் நிலை குலைந்தது. அந்த அணி 10.3 ஓவரில் 99 ரன்னில் சுருண்டது. இதனால் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இங்கிலாந்து தரப்பில் சால்ட் அதிகபட்சமாக 23 பந்தில் 55 ரன்னும் (7 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி, சிவம் துபே, அபிஷேக் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் 1 விக்கெட்டு வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் இந்தியா 20 ஓவர் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    நேற்று நடந்த போட்டியில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டன. சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி 100 ரன் வித்தியாசத்துக்கு மேல் வெற்றி பெறுவது 8-வது முறையாகும். இதன் மூலம் ஜப்பானுடன் இணைந்து முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்தது.

    டி20 போட்டியில் 104 நாடுகள் விளையாடுகின்றன. இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அங்கீகரித்துள்ளது. இதுவரை கனடா அணி 7 முறை, உகாண்டா, மலேசியா, ஜிம்பாப்வே அணிகள் தலா 6 முறையும் 100 ரன்கள் வித்தியாசத்துக்கு மேல் வெற்றி பெற்றுள்ளன.

    சர்வதேச டி20 கிரிக்கெட்டி இந்தியா அணியின் இரண்டாவது மிகப்பெரிய வெற்றியாக இது அமைந்துள்ளது. முன்னதாக 2023-ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக 168 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே முதல் நிலையாக இருக்கிறது.

    இதுதவிர இந்திய அணி அயர்லாந்துக்கு எதிராக 143 ரன்கள், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 135 ரன்கள், 106 ரன்கள், வங்கதேசம் அணிக்கு எதிராக 133 ரன்கள், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 101 ரன்கள், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 100 ரன்கள் என ஆறு முறை 100 ரன் வித்தியாசத்துக்கு மேல் வெற்றிபெற்று இருக்கிறது.

    நேற்றைய போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா 37 பந்தில் சதம் அடித்தார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இவர் தவிர இந்திய வீரர்களான ரோகித் சர்மா (35 பந்தில் சதம்), சஞ்சு சாம்சன் (40 பந்தில் சதம்) அடித்துள்ளனர்.

    டி20 கிரிக்கெட்டில் அபிஷேக் சர்மா 135 ரன் குவித்ததன் மூலம் ஒரே போட்டியில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை புரிந்தார். இதற்கு முன் சுப்மன் கில் 126 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது. மேலும் டி20 போட்டியின் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர் அடித்த இந்தியர் என்ற சாதனையையும் அபிஷேக் சர்மா (13 சிக்சர்கள்) படைத்தார்.

    • புள்ளிகள் பட்டியலில் முன்னேறி பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
    • டை பிரேக்கரில் விளையாடும் சூழல் உருவானது.

    நெதர்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் 2025 பட்டத்தை தமிழக வீரர் பிரக்ஞானந்தா வென்றுள்ளார். இறுதிப் போட்டியில் மற்றொரு தமிழக வீரர் குகேஷ்-ஐ எதிர்த்து விளையாடிய பிரக்ஞானந்தா டை பிரேக்கிற்கு பிறகு வெற்றி பெற்றார்.

    தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தா கடைசியில் விளையாடிய மூன்று போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று அசத்தினார். இதன் மூலம் அவர் புள்ளிகள் பட்டியலில் முன்னேறி பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

    உலகத்தரமிக்க வீரர்களை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடிய பிரக்ஞானந்தா கணிசமான வெற்றி மற்றும் சமனில் போட்டிகளை நிறைவு செய்து வந்தார். கிளாசிக்கல் பிரிவில் பிரக்ஞானந்தா மற்றொரு இந்திய வீரர் குகேஷ் உடன் முதலிடத்தில் நிறைவு செய்தார். இதன் காரணமாக டை பிரேக்கரில் விளையாடும் சூழல் உருவானது.

    பரபரப்பான டை பிரேக்கர் சுற்றில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தா அசத்தலாக வெற்றி பெற்றார். இந்த வெற்றி உலக செஸ் அரங்கில் பிரக்ஞானந்தாவின் ஆற்றல் மற்றொரு மைல்கல்லாக அமைந்துள்ளது. 

    • தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.
    • இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    சென்னை:

    2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடைபெற்றது. இதில் கோலாலம்பூரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடின. இதில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.

    இதையடுத்து இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்திய ஜூனியர் மகளிர் அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது 'எக்ஸ்' வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

    "மலேசியாவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியில் வாகை சூடியுள்ள நம் இந்திய இளம் வீராங்கனைகளுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். தொடர்ந்து 2-வது முறையாக உலகக் கோப்பையை வென்றுள்ள நம் இளம் வீராங்கனைப் படை, இன்னும் பல வெற்றிகளைக் குவித்திட வாழ்த்துகிறேன்."

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


    • இங்கிலாந்து 97 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
    • அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலிலும் அபிஷேக் சர்மா இடம்பிடித்துள்ளார்.

    மும்பை:

    இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி டி20 போட்டி மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்தது.

    அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 97 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

    இந்நிலையில் இந்த போட்டியில் அபிஷேக் சர்மா செய்த சாதனைகள்:-


    அவர் 54 பந்தில் 13 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிவேகமாக சதம் அடித்த 2வது இந்திய வீரரானார். முன்னதாக ரோகித் சர்மா 35 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.


    இதன்மூலம், டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரரானார் அபிஷேக் சர்மா. இதற்கு முன்பு சுப்மன் கில் 126 ரன்கள் (நாட் அவுட்) எடுத்ததே சாதனையாக இருந்தது.

    அதேபோல் சர்வதேச டி20யில் ஒரே போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலிலும் அபிஷேக் சர்மா இடம்பிடித்துள்ளார். அவர் இன்றைய போட்டியில் 13 சிக்சர்கள் எடுத்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா ஆகியோர் தலா 10 சிக்சர்களுடன் உள்ளனர்.

    ×