என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா டாசில் தோல்வி அடைந்தது.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா டாஸ் தோல்வியை தொடங்கியது.

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரின் 5-வது லீக் போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    இந்நிலையில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ச்சியாக 12 முறை டாஸில் தோற்று புதிய சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் அதிக முறை டாசில் தோற்ற நெதர்லாந்து அணியின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.

    2023ல் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக கோப்பை இறுதிப்போட்டி முதல் இன்று வரை நடந்த அனைத்து ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி டாசில் தொற்றுள்ளது. இதில் ரோகித் 9 முறையும், கே.எல்.ராகுல் 3 முறையும் டாசில் தோற்றுள்ளனர்.

    • கடந்தாண்டு பும்ராவுக்கு சிறந்த வீரர் மற்றும் சிறந்த டெஸ்ட் வீரர் விருது அறிவிக்கப்பட்டது.
    • கடந்தாண்டின் சிறந்த டெஸ்ட் அணி மற்றும் டி20 அணியில் பும்ரா இடம் பிடித்திருந்தார்.

    கடந்தாண்டு மிக சிறப்பாக கிரிக்கெட் விளையாடியதற்காக பும்ராவுக்கு சிறந்த வீரர் மற்றும் சிறந்த டெஸ்ட் வீரர் விருது அறிவிக்கப்பட்டது.

    மேலும், ஐசிசி தேர்வு செய்த கடந்தாண்டின் சிறந்த டெஸ்ட் அணி மற்றும் டி20 அணியில் பும்ரா இடம் பிடித்திருந்தார்.

    இந்நிலையில், 2024ம் ஆண்டிற்கான ஐசிசி விருதுகளுடன் இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா இருக்கும் புகைப்படத்தை ஐசிசி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    அந்த புகைப்படத்தில், சிறந்த வீரர் மற்றும் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருது மற்றும் சிறந்த டெஸ்ட் அணி மற்றும் டி20 அணியின் தொப்பியின் முன்பு பும்ரா சிரித்தபடியாக உள்ளார். 

    • வங்காளதேசத்தை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறும் ஆர்வத்தில் அந்த அணி உள்ளது.
    • நியூசிலாந்து அணி தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் பாகிஸ்தானை 60 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

    ராவல்பிண்டி:

    ஐ.சிசி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 6-வது லீக் ஆட்டம் பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் நாளை (24-ந்தேதி) நடக்கிறது. இதில் ஏ பிரிவில் உள்ள நியூசிலாந்து-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

    சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து அணி தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் பாகிஸ்தானை 60 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதே உத்வேகத்துடன் வங்காளதேசத்தை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறும் ஆர்வத்தில் அந்த அணி உள்ளது.

    வில்யங், டாம் லாதம் ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்து முத்திரை பதித்தனர். பந்து வீச்சில் கேப்டன் மிச்சேல் சான்ட்னெர், வில் ஓ ரூர்கே, மேட் ஹென்றி ஆகியோர் சாதித்தனர். இது தவிர கான்வே, வில்லியம்சன், கிளென் பிலிப்ஸ் போன்ற சிறந்த வீரர்களும் நியூசிலாந்து அணியில் உள்ளனர்.

    நஜ்முல் உசேன் ஷான்டோ தலைமையிலான வங்காளதேசம் முதல் ஆட்டத்தில் இந்தியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இதனால் நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி பெற வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு இருக்கிறது. தோற்றால் போட்டியில் இருந்து இருந்து வெளியேற்றப்படும் நிலை ஏற்படும்.

    பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • இந்திய அணி முதல் போட்டியில் வங்காளதேசம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
    • பாகிஸ்தான் அணியை வீழ்த்து இந்தியா அரையிறுதி சுற்றுக்கு நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரின் 5-வது லீக் போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பந்துவீசுகிறது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த தொடரின் முதல் போட்டியில் வங்காளதேசம் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. அதே உத்வேகத்துடன் பாகிஸ்தான் அணியை வீழ்த்து அரையிறுதி சுற்றுக்கு நுழையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    • அயர்லாந்து அணி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது.
    • ஜிம்பாப்வே அணி ஒகு நாள் தொடரை கைப்பற்றியது.

    அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் ணற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி 63 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை ஜிம்பாப்வே அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி மழை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது.

    மேலும் போட்டி 9 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் ஆடிய ஜிம்பாப்வே 5 விக்கெட் இழப்புக்கு 77 ரன் எடுத்தது. அயர்லாந்து விளையாடும் போது மீண்டும் மழை கொட்டியது. இதனால் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு பாதியில் ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில், இரு அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 5 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்குகின்றன.

    • விவகாரம் தொடர்பாக ஐ.சி.சி. உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
    • இந்தியா தனது போட்டிகளை பாகிஸ்தானில் விளையாடவில்லை.

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. மினி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடராக பார்க்கப்படும் இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

    அந்த வகையில், நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியின் தொடக்கத்தில் இந்தியாவின் தேசிய கீதம் சில நொடிகளுக்கு இசைக்கப்பட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான போட்டியின் போது இந்தியாவின் தேசிய கீதம் ஒலிக்க செய்தது குறித்து ஐ.சி.சி. விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தி உள்ளது. மேலும், இந்தியாவின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டதற்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.

    இது குறித்து ஐ.சி.சி.க்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறும் போது, இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.-க்கு கடிதம் எழுதி இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஐ.சி.சி. உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    "சாம்பியன்ஸ் டிராபியில் தேசிய கீதம் ஒலிக்க செய்வதற்கு அவர்கள் தான் பொறுப்பேற்றுள்ளனர் என்ற அடிப்படையில், ஐ.சி.சி. இந்த விவகாரம் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதிபட தெரிவித்துள்ளது. இந்தியா தனது போட்டிகளை பாகிஸ்தானில் விளையாடவில்லை என்பதால், அவர்களது தேசிய கீதம் எப்படி தவறாக இசைக்கப்பட்டு இருக்கும் என்பதை புரிந்து கொள்ள அவர்கள் கடினமாக உணர்கின்றனர்," என ஐ.சி.சி. வட்டாரங்கள் கூறியுள்ளன.

    பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாட மறுத்துவிட்டது. இதன் காரணமாக இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறுகிறது. அந்த வகையில், இந்தியா மற்றம் பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது.

    • இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி துபாயில் நடைபெறுகிறது.
    • முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் எட்டு அணிகள் விளையாடுகின்றன. இந்த அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும் பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து , ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன.

    இந்த தொடரின் 5-வது லீக் போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த தொடரின் முதல் போட்டியில் வங்காளதேசம் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. அதே உத்வேகத்துடன் பாகிஸ்தான் அணியை வீழ்த்து அரையிறுதி சுற்றுக்கு நுழையும் முனைப்பில் உள்ளது.

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஐ.சி.சி. நடத்தும் தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன. அந்த வகையில், கடைசியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 2023 உலகக் கோப்பை தொடரில் மோதின. அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியது.

    இதுதவிர கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி அந்தப் போட்டியிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு எப்போதுமே அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.

    அந்த வரிசையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
    • இதில் ரஷிய வீரரான ரூப்லெவ் இறுதிச்சுற்றில் வெற்றி பெற்றார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், பிரிட்டனின் ஜாக் டிராபர் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 7-5 என ரூப்லெவ் கைப்பற்றினார். இரண்டாவது செட்டை பிரிட்டன் வீரர் 7-5 என வென்றார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை ரூப்லெவ் 6-1 என வென்று சாம்பியன் பட்ட்டம் கைப்பற்றி அசத்தினார்.

    • ஆஸ்திரேலியா அணி 47.3 ஓவரில் 356 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
    • அதிரடியாக ஆடிய ஜோஷ் இங்கிலிஸ் சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    லாகூர்:

    சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய இங்கிலாந்து 50 ஓவரில் 351 ரன்கள் குவித்தது. பொறுப்புடன் ஆடிய பென் டக்கெட் சதமடித்து 165 ரன்னில் அவுட் ஆனார்.

    அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 47.3 ஓவரில் 356 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜோஷ் இங்கிலிஸ் 120 ரன்னும், மேக்ஸ்வெல் 32 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். மேத்யூ ஷார்ட், அலெக்ஸ் கேரி ஆகியோர் அரை சதம் கடந்தனர்.

    இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்களை விரட்டிப் பிடித்து ஆஸ்திரேலிய அணி சாதனை படைத்துள்ளது.

    ஏற்கனவே, கடந்த 2017-ம் ஆண்டில் இந்திய அணி நிர்ணயித்த (321/6) இலக்கை இலங்கை அணி (322/3) ரன் எடுத்து வெற்றிபெற்று இருந்தது.

    ஐ.சி.சி., ஒருநாள் தொடரில் (உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி) இது சிறந்த சேஸ் ஆனது.

    இதேபோல், இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியின் சிறந்த சேஸ் ஆகவும் இது அமைந்தது. சிட்னியில் 2011-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா 334/8 ரன் எடுத்து வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • இறுதிச்சுற்றில் டென்மார்க் வீராங்கனை கிளாரா தோல்வி அடைந்தார்.

    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரிவா, டென்மார்க் வீராங்கனை கிளாரா டாசன் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஆண்ட்ரிவா 7-6 (7-1), 6-1 என எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • முதலில் ஆடிய உ.பி.வாரியர்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 144 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

    பெங்களூரு:

    மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சினேலி ஹென்றி அதிரடியாக ஆடி 23 பந்தில் 8 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 62 ரன்கள் குவித்து அவுட்டானார்.

    டெல்லி சார்பில் ஜெஸ் ஜோனாசென் 4 விக்கெட்டும், மரிஜான் காப், அருந்ததி ரெட்டி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி கேப்பிடல்ஸ் களமிறங்கியது. அந்த அணியின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் போராடி அரை சதம் கடந்தார்.

    கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்து வீசிய கிரேஸ் ஹாரிஸ் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், டெல்லி அணி 19.3 ஓவரில் 144 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் நடப்பு தொடரில் உபி வாரியர்ஸ் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

    உ.பி.வாரியர்ஸ் அணி சார்பில் கிரேஸ் ஹாரிஸ், கிராந்தி கவுட் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்தது.
    • ஆண்கள் இரட்டையரில் பிரிட்டன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்றது.

    இதில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் பிரிட்டனின் லாயிட் கிளாஸ்பூல்-ஜூலியன் கேஷ் ஜோடி, சக நாட்டின் ஜோ சாலிஸ்பெரி-நீல் கப்ஸ்கி ஜோடியுடன் மோதியது.

    இதில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய லாயிட்-ஜூலியன் ஜோடி 6-3, 6-2 என எளிதில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியது.

    ×