என் மலர்
விளையாட்டு
- இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது
- இங்கிலாந்து அணியில் ஒல்லி போப் சதம் அடித்தார்.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து விளையாடி வரும் இங்கிலாந்து அணி தற்போது வரை 7 விக்கெட் இழப்பிற்கு 420 ரன்கள் அடித்து ஆடி வருகிறது.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹாரி ப்ரூக் 99 ரன்னில் அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை நூலிழையில் இழந்தார்.
பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஹாரி ப்ரூக் ஆட்டமிழந்தார். ஏற்கனவே 0 மற்றும் 46 ரன்னில் இருக்கும் போது ப்ரூக் கொடுத்த கேட்ச் வாய்ப்பை இந்திய வீரர்கள் தவறவிட்டனர். 2 முறை ப்ரூக்கிற்கு இருந்த அதிர்ஷ்டம் 99 ரன்னில் இல்லாமல் போனதால் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
- இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
- இங்கிலாந்து அணியில் ஒல்லி பாப் சதம் அடித்தார்.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து விளையாடி வரும் இங்கிலாந்து அணி தற்போது வரை 7 விக்கெட் இழப்பிற்கு 398 ரன்கள் அடித்து ஆடி வருகிறது.
இப்போட்டியில் ஜேமி ஸ்மித் அடித்த பந்தை பவுண்டரி லைனில் நின்று ஜடேஜா பிடித்தார். அப்போது நிலை தடுமாறிய ஜடேஜா உடனடியாக பந்தை சாய் சுதர்சனிடம் வீசினார். அந்த பந்தை சாய் சுதர்சன் எளிதாக பிடித்தார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.
- இங்கிலாந்து அணி 3-ம் நாள் உணவு இடைவேளை வரை 5 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் எடுத்துள்ளது.
- 60 ஓவர்களுக்கு பிறகு பந்து முட்டை வடிவமாக மாறியது.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து விளையாடி வரும் இங்கிலாந்து அணி மதிய உணவு இடைவேளை வரை 5 விக்கெட்டுகளை இழந்து 327 ரன்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில் 60 ஓவர்களுக்கு பிறகு பந்து முட்டை வடிவமாக மாறியது. அதனால் இந்திய வீரர்கள் பும்ரா, கில், ரிஷப் பண்ட், சிராஜ் ஆகியோர் பந்து மாற்றுமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதனை சோதித்து பார்த்த நடுவர்கள் பந்து சரியாக உள்ளதாக தெரிவித்து வேறு பந்தை அனுமதிக்கவில்லை.
மற்ற வீரர்களை விட ரிஷப் பண்ட் கேட்டபோது நடுவர் முடியாது என்றதால், கடுப்பான பண்ட் நடுவரின் கண்முன்னே பந்தை கோபமாக தூக்கி எறிந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- இந்த போட்டியில் ரிஷப் பண்ட் 2 கேட்ச்களை பிடித்துள்ளார்.
- போப் மற்றும் பென் ஸ்டோக்ஸ் கேட்ச்சை ரிஷப் பண்ட் பிடித்தார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து விளையாடி வரும் இங்கிலாந்து அணி மதிய உணவு இடைவேளை வரை 5 விக்கெட்டுகளை இழந்து 327 ரன்கள் எடுத்துள்ளது.
முன்னதாக இந்த போட்டியில் ரிஷப் பண்ட் 2 கேட்ச்களை பிடித்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் 150 கேட்ச்களை பிடித்து ரிஷப் பண்ட் சாதனை படைத்துள்ளார்.
ஜடேஜா பந்து வீச்சில் ஹாரி ப்ரூக்குக்கு ரிஷப் பண்ட் கேட்ச் மிஸ் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தவறான செய்தியை வெளியில் இருந்து அனுப்பினால் இப்படித்தான் நடக்கும்.
- இந்த ஆட்டத்தில் ரிஷப் பண்ட் 134 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
லீட்ஸ்:
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவர்களில் 471 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்தது. ஆலி போப் 100 ரன்களுடனும் (131 பந்து, 13 பவுண்டரி), ஹாரி புரூக் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர். இந்திய தரப்பில் பும்ரா மட்டுமே 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார்.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ரிஷப் பண்ட் ஆட்டமிழக்க வெளியில் இருந்த வந்த மெசேஜ்தான் காரணம் என்று கவுதம் கம்பீரை மறைமுகமாக முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ரிஷப் பண்டிற்கு வெளியிலிருந்து ஒரு செய்தி அனுப்பப்பட்டபோது, அது அவரது ஆட்டத்தைக் கட்டுப்படுத்தியது. ஒரு பயிற்சியாளராக, நீங்கள் பேட்டருக்கு ஒரு செய்தியை தெரிவிக்க விரும்புவது முற்றிலும் புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால் காலப்போக்கில், சில வீரர்களுக்கு, நீங்கள் அந்த செய்தியை எவ்வாறு அனுப்புகிறீர்கள் என்பது மிக முக்கியமானதாக மாறும். சில வீரர்களுக்கு தவறான செய்தியை வெளியில் இருந்து அனுப்பினால் இப்படித்தான் நடக்கும்" என்று கூறினார்.
சும்பன் கில் மற்றும் கருண் நாயர் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் நிதானமாக விளையாடுமாறு கம்பீர் ஓய்வறையில் இருந்து பண்டிற்கு மெசேஜ் ஒன்றினை மாற்றுவீரர் மூலம் அனுப்பியதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக அடுத்த சில ஓவர்கள் ரிஷப் பண்ட் பந்தினை தடுத்து ஆட முயன்றார். இருப்பினும் அது அவருக்கு சரியாக வராததால் விக்கெட்டை பறிகொடுத்தார்.
- ஜோ ரூட் 28 ரன்னில் பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
- ஜோ ரூட்டை அதிகமுறை அவுட் செய்த வீரர்கள் பட்டியலில், ஹசில்வுட் சாதனையை (2வது இடம்) பும்ரா சமன் செய்தார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்தது.
முன்னதாக ஜோ ரூட் 28 ரன்னில் பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் ஜோ ரூட்டை அதிகமுறை அவுட் செய்த வீரர்கள் பட்டியலில், ஹசில்வுட் சாதனையை (2வது இடம்) சமன் செய்த பும்ரா சமன் செய்தார். ரூட்டை அதிகமுறை விக்கெட் எடுத்த வீரர் பட்டியலில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேட் கம்மின்ஸ் (11 முறை) வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.
- நடுகள வீரரான அவர் அந்த கிளப் அணிக்காக 197 ஆட்டங்களில் ஆடி 57 கோல்கள் அடித்துள்ளார்.
- இங்கிலாந்து கால்பந்து வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை புளோரியன் பெற்றார்.
லிவர்பூல்:
ஜெர்மனி கால்பந்து அணியின் இளம் நட்சத்திர வீரரான புளோரியன் விர்ட்ஸ் கிளப் போட்டிகளில் அங்குள்ள பேயர் லெவர்குசென் அணிக்காக விளையாடி வந்தார். நடுகள வீரரான அவர் அந்த கிளப் அணிக்காக 197 ஆட்டங்களில் ஆடி 57 கோல்கள் அடித்துள்ளார். அவரை இங்கிலாந்து பிரிமீயர் லீக் போட்டியில் அங்கம் வகிக்கும் முன்னணி கிளப்பான லிவர்பூல் தன்வசப்படுத்த முயற்சித்து வந்தது.
இரு கிளப் நிர்வாகத்துக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இதன்படி பேயர் லெவர்குசென் கிளப்பிடம் இருந்து 22 வயதான புளோரியனை ரூ.1,351 கோடிக்கு லிவர்பூல் கிளப் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன் மூலம் இங்கிலாந்து கால்பந்து வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை புளோரியன் பெற்றார். அத்துடன் ஒட்டுமொத்தத்தில் அதிக தொகைக்கு வசப்படுத்தப்பட்ட 4-வது வீரர் ஆவார். அவர் 5 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
- ‘சி’ பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் இன்டர்மிலன் இத்தாலி-உர்வா ரெட் டயமண்ட் (ஜப்பான்) அணிகள் மோதின.
- இதில் இன்டர்மிலன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
கிளப் அணிக்களுக்கான 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகளும் 8 பிரிவாக பரிக்கப்பட்டுள்ளன. 'லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'நாக் அவுட்' சுற்றுக்கு தகுதி பெறும்.
'சி' பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் இன்டர்மிலன் இத்தாலி-உர்வா ரெட் டயமண்ட் (ஜப்பான்) அணிகள் மோதின. இதில் இன்டர்மிலன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி பெற்ற முதல் வெற்றியாகும். முதல் ஆட்டத்தில் மான்டெரி அணியை 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது. இதே பிரிவில் ரிவர் பிளேட்-மான்டெரி அணிகள் மோதிய ஆட்டம் கோல் எதுவுமின்றி டிரா ஆனது.
'இ' பிரிவில் உர்வா அணி 2 தோல்வியுடன் வெளியேறியது. ரிவர் பிளேட் (அர்ஜடென்னா) இன்டர்மிலன் அணிகள் தலா 4 புள்ளிகளுடனும், மான்டெரி 2 புள்ளிகளுடனும் உள்ள கடைசி லீக் ஆட்டத்தில் இன்டர்மிலன்-ரிவர் பிளேட், மான்டெரி (மெக்சிகோ)-உர்வா அணிகள் மோதுகின்றன.
எப் பிரிவில் பிரேசிலின் புளுமென்சி அணி 4-2 என்ற கோல் கணக்கில் உல்சான் அணியை (கொரியா) வீழ்த்தியது.
இேத பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் டார்ட்மெண்ட் (ஜெர்மனி) 4-3 என்ற கோல் கணக்கில் மாமெலோடி தென் ஆப்பிரிக்கா அணியை தோற்கடித்தது.
புளுமென்சி, டார்ட்மென்ட் தலா 4 புள்ளிகளும், மாமெலோடி 3 புள்ளியுடன் உள்ள உல்சான் அணி வெளியேற்றப்பட்டது.
- 27 வயதான ரிஷப்பண்ட் நேற்று 7-வது சதத்தை (44-வது டெஸ்டில்) பதிவு செய்தார்.
- இங்கிலாந்து மண்ணில் ரிஷப்பண்ட் 3-வது சதத்தை அடித்தார்.
லீட்ஸ்:
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நடைபெற்று வருகிறது.
இந்தியா முதல் இன்னிங்சில் 471 ரன் குவித்தது. கேப்டன் சுப்மன் கில் (147 ரன்), ரிஷப்பண்ட் (134), ஜெய்ஸ்வால் (101) ஆகிய 3 வீரர்கள் சதம் அடித்தனர். ஜோஷ் டங், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலா 4 விக்கெட் கைப்பற்றினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 209 ரன் எடுத்து இருந்தது. ஆலி போப் சதம் அடித்து ஆட்டம் இழக்காமல் உள்ளார். பென் டக்கெட் 62 ரன் எடுத்தார். பும்ரா 3 விக்கெட்டையும் வீழ்த்தினார். இங்கிலாந்து 262 ரன்கள் பின்தங்கி, கைவசம் 7 விக்கெட்டுடன் இருக்கிறது.
27 வயதான ரிஷப்பண்ட் நேற்று 7-வது சதத்தை (44-வது டெஸ்டில்) பதிவு செய்தார். இங்கிலாந்து மண்ணில் ரிஷப்பண்ட் 3-வது சதத்தை அடித்தார். வேறு எந்த வெளிநாட்டு விக்கெட் கீப்பர் இங்கிலாந்தில் 3 சதம் அடித்தது கிடையாது.
லீட்ஸ் மைதானத்தில் அதிக ரன் எடுத்த 2-வது விக்கெட் கீப்பர் என்ற பெருமையை ரிஷப்பண்ட் பெற்றார். 2016-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக இங் கிலாந்து வீரர் பேர்ஸ்டோவ் 140 ரன் எடுத்தார். ரிஷப் பண்ட் 7 ரன்னில் சாதனையை தவற விட்டார்.
ரிஷப்பண்ட் 52-வது ரன்னை தொட்டபோது 3 ஆயிரம் ரன்னை எடுத்தார். அவர் 3082 ரன் எடுத்துள்ளார்.
ரிஷப்பண்ட் ஸ்கோரில் (134 ரன்) 6 சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் வெளிநாட்டில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர்கள் அடித்து 2-வது இடத்தில் இருக்கும் ஷேவாக், டோனியை சமன் செய்தார். ஹர்திக் பாண்ட் யா 7 சிக்சருடன் முதல் இடத்தில் உள்ளார். 2017-ம் ஆண்டு இலங்கைக்கு எதி ராக காலே மைதானத்தில் அவர் இதை எடுத்தார்.
லீட்ஸ் டெஸ்டில் 3 இந்தயர்கள் சதம் அடித்தனர். வெளிநாட்டில் இந்தியாவுக்கு இது 5-வது நிகழ்வாகும். இதற்கு முன்பு ஆஸ்திரேலியா (1985-86), இலங்கை (1997), இங்கிலாந்து (2002), வங்கதேசம் (2007), ஆகிய நாடுகளில் 3 இந்திய வீரர்கள் சதம் அடித்து இருந்தனர்.
- வங்கதேச அணி 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 285 ரன்கள் எடுத்தது.
- இலங்கை அணியின் தரிந்து ரத்னநாயக 3 விக்கெட் வீழ்த்தினார்.
காலே:
வங்கதேச அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 வடிவிலான தொடர்களிலும் விளையாட உள்ளது. முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகள் விளையாடுகின்றன.
முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடந்தது. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, வங்கதேச அணி முதலில் களமிறங்கியது. கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 148 ரன்னும், முஷ்பிகுர் ரஹீம் 163 ரன்னும், லிட்டன் தாஸ் 90 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 495 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இலங்கை அணி சார்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், மிலன் பிரியநாத் ரத்நாயக்க, தரிந்து ரத்நாயக்க தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 485 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா பொறுப்புடன் ஆடி சதம் கடந்து 187 ரன்னில் அவுட்டானார். தினேஷ் சண்டிமால் அரை சதம் கடந்து 54 ரன்னில் வெளியேறினார்.
கமிந்து மெண்டிஸ் 87 ரன்னில் ஆட்டமிழந்தார்,
வங்கதேசம் அணி சார்பில் நயீம் ஹாசன் 5 விக்கெட்டும், ஹசன் மஹ்முது 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய வங்கதேசம் இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 285 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஹொசைன் சான்டோ மீண்டும் சதமடித்தார். ஷட்மான் இஸ்லாம் அரை சதமடித்து 76 ரன்கள் எடுத்தார். முஷ்பிகுர் ரஹ்மான் 49 ரன்னில் அவுட்டானார்.
296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. 4 விக்கெட்டுக்கு 72 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை இரண்டாவது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதையடுத்து, காலே டெஸ்ட் டிராவில் முடிந்தது.
ஆட்ட நாயகனாக வங்கதேசத்தின் ஹொசைன் ஷாண்டோ அறிவிக்கப்பட்டார். இலங்கையில் ஏஞ்சலோ மேத்யூஸ் இந்த டெஸ்ட் போட்டியுடன் ஓய்வுபெற்றார்.
- ஜெர்மனியில் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- ரஷியாவின் கரன் கச்சனாவ் அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.
பெர்லின்:
ஆண்கள் மட்டும் பங்கேற்கும் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது அரையிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.
ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் ரஷியாவின் கரன் கச்சனாவ், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-4 என கச்சனாவ் வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட பப்ளிக் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 7-6 (7-5), 6-4 என கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பப்ளிக், மெத்வதேவை சந்திக்கிறார்.
- இந்தியா முதல் இன்னிங்சில் 471 ரன்கள் குவித்தது.
- இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட்டுக்கு 209 ரன் எடுத்தது.
லீட்ஸ்:
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. கேப்டன் சுப்மன் கில் 147 ரன்னும், ரிஷப் பண்ட் 134 ரன்னும், ஜெய்ஸ்வால் 101 ரன்னும் அடித்தனர்.
இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டங் ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. ஜாக் கிராலே 4 ரன்னில் வெளியேறினார். அடுத்து, பென் டக்கெட்டுடன் ஒல்லி போப் ஜோடி சேர்ந்தார். இருவரும் அரை சதம் கடந்தனர். பென் டக்கெட் 62 ரன்னில் வெளியேறினார்.
ஜோ ரூட் 28 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய ஒல்லி போப் சதத்தை பதிவுசெய்து அசத்தினார்.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்தது. ஒல்லி போப் 100 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். தற்போது இங்கிலாந்து அணி, இந்திய அணியை விட 262 ரன்கள் பின் தங்கி உள்ளது.
இந்திய அணி சார்பில் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினார்.






