என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • பிரசித் கிருஷ்ணா 20 ஓவர்களில் 128 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • 6 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.

    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 471 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.

    பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 465 ரன்களை குவித்து ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 6 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.

    இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா மோசமான சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளர். அதன்படி இப்போட்டியில் 20 ஓவர்கள் வீசிய அவர், 6.40 என்ற எகானமியில் 128 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் 6-க்கும் மேற்பட்ட எகானமி விகிதத்தில் பந்துவீசிய இந்திய வீரர் எனும் சாதனையை அவர் படைத்துள்ளார்.

    இதற்கு முன்னதாக 2004-ம் ஆண்டு சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்சில், சுழற்பந்து வீச்சாளர் முரளி கார்த்திக் 6 க்கும் மேற்பட்ட எகானமியில் 122 ரன்கள் விட்டுக்கொடுத்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்சமயம் பிரஷித் கிருஷ்ணா 128 ரன்களைக் கொடுத்து மோசமான சாதனையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒரு டெஸ்ட் இன்னிங்சில் அதிக ரன்களை கொடுத்த இந்திய வீரர்கள் (6+ எகானமி)

    128 - பிரசித் கிருஷ்ணா vs இங்கிலாந்து- லீட்ஸில் (2025)*

    122 - முரளி கார்த்திக் vs ஆஸ்திரேலியா- சிட்னியில் (2004)

    108 - அதுல் வாசன் vs நியூசிலாந்து- ஆக்லாந்தில் (1990)

    98 - முகமது சிராஜ் vs இங்கிலாந்து- பர்மிங்காமில் (2022)

    96 - ஸ்ரீசாந்த் vs வெஸ்ட் இண்டீஸ்- செயிண்ட் ஜான்ஸ் (2006)

    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 வெற்றிகளுடன் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.
    • திருச்சி அணி 4 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் 2 புள்ளி மட்டுமே பெற்றிருக்கிறது.

    டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்றிரவு (திங்கட்கிழமை) 7.15 மணிக்கு நடக்கும் 21-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திருச்சி கிராண்ட் சோழாசுடன் மோதுகிறது. நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 வெற்றிகளுடன் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று டாப்-2 இடத்தை உறுதி செய்யும் வேட்கையுடன் காத்திருக்கிறது.

    சுரேஷ்குமார் தலைமையிலான திருச்சி அணி 4 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் 2 புள்ளி மட்டுமே பெற்றிருக்கிறது. பிளே-ஆப் வாய்ப்பில் நீடிக்க இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். தோற்றால் வெளியேற வேண்டியது தான்.

    • விஜய் நேற்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
    • அவருக்கு ரசிகர்களும் , அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் நேற்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்களும் , அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அரசியல் தலைவர்கள், திரைப்படம் மற்றும் ஊடகத் துறை நண்பர்கள் அனைவருக்கும் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பிறந்தநாள் வாழ்த்து கூறிய அரசியல் தலைவர்கள், திரைப்படம் மற்றும் ஊடகத் துறை நண்பர்கள், நலம் விரும்பிகள், என் நெஞ்சில் குடி இருக்கும் உலகம் முழுவதிலும் உள்ள தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

    உங்கள் ஆதரவு மக்களுக்கு சேவை செய்வதற்கான எனது பயணத்தை ஊக்குவிக்கிறது. பிரகாசமான எதிர்காலத்திற்காக ஒன்றாக அணிவகுப்போம்.

    என விஜய் கூறினார்.

    • 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது.
    • இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கிறது.

    ஆன்டாரியோ:

    20 அணிகள் பங்கேற்கும் 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. இதில் 4 அணிகள் இடையிலான அமெரிக்க மண்டலத்துக்கான தகுதி சுற்று கனடாவின் ஆன்டாரியோ நகரில் நடக்கிறது.

    இதில் நடந்த ஒரு ஆட்டத்தில் கனடா அணி, பஹாமாசை 57 ரன்னில் சுருட்டியதுடன், அந்த இலக்கை 5.3 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தொடர்ந்து 5-வது வெற்றியை ருசித்த கனடா அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்ததுடன், டி20 உலகக் கோப்பை போட்டிக்கு 13-வது அணியாக தகுதி பெற்றது.

    • இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
    • முதல் இன்னிங்சில் சாய் சுதர்சன் டக் அவுட்டாகி வெளியேறினார்.

    இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. கேப்டன் சுப்மன் கில் 147 ரன்னும், ரிஷப் பண்ட் 134 ரன்னும், ஜெய்ஸ்வால் 101 ரன்னும் அடித்தனர்.

    இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டங் ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 465 ரன்கள் எடுத்தது. ஒல்லி போப் சதம் அடித்தார். ஹாரி ப்ரூக் 99 ரன்னில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ய்ப்பி நூலையில் இழந்தார்.

    இந்திய அணி சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், பிரசித் கிருஷணா3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 4 ரன்னில் அவுட்டாகினர். சாய் சுதர்சன் 30 ரன்னில் வெளியேறினார்.

    மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 47 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.

    இந்நிலையில், நேற்றைய டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்வதற்கு முன்பு தமிழக வீரர் சாய் சுதர்சன் பந்தை உற்றுப்பார்த்து Focus செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

    • இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 465 ரன்கள் எடுத்தது.

    இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. கேப்டன் சுப்மன் கில் 147 ரன்னும், ரிஷப் பண்ட் 134 ரன்னும், ஜெய்ஸ்வால் 101 ரன்னும் அடித்தனர்.

    இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டங் ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 465 ரன்கள் எடுத்தது. ஒல்லி போப் சதம் அடித்தார். ஹாரி ப்ரூக் 99 ரன்னில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ய்ப்பி நூலையில் இழந்தார்.

    இந்திய அணி சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், பிரசித் கிருஷணா3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 4 ரன்னில் அவுட்டாகினர். சாய் சுதர்சன் 30 ரன்னில் வெளியேறினார்.

    மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 47 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.

    இந்நிலையில், நேற்றைய டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கின்போது சாய் சுதர்சனிடம் கே.எல்.ராகுல் தமிழில் பேசினார். நல்ல BOUNCE இருக்கு மச்சி என்று கே.எல்.ராகுல் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

    • இந்திய அணி முதல் இன்னிங்சில் 471 ரன்கள் குவித்தது.
    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 465 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    லண்டன்:

    இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 471 ரன்கள் குவித்தது. கேப்டன் சுப்மன் கில் 147 ரன்னும், ரிஷப் பண்ட் 134 ரன்னும், ஜெய்ஸ்வால் 101 ரன்னும் அடித்தனர்.

    அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 465 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்திய அணி சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், டெஸ்ட் அரங்கில் 14-வது முறையாக 5 விக்கெட் (46 போட்டி) வீழ்த்தினார் ஜஸ்பிரீத் பும்ரா.

    அந்நிய மண்ணில் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர்களில் முதலிடத்தை பகிர்ந்து கொண்டார்.

    ஏற்கனவே கபில் தேவ் 66 போட்டிகளில் 12 முறை 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார். பும்ரா 34 போட்டிகளில் 12 முறை 5 விக்கெட் வீழ்த்தினார்.

    • ஜெர்மனியில் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பெர்லின்:

    பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்தது. அரையிறுதிச் சுற்று போட்டிகள் நடந்தன.

    நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் சீன வீராங்கனை வாங் ஜின் யு , செக் நாட்டின் மார்கெட்டா வாண்ட்ரசோவா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய மார்கெட்டா 7-6 (12-10) என முதல் செட்டை வென்றார். 2வது செட்டை வாங் ஜின் யு 6-4 என வென்றார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 6-3 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.

    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 465 ரன்கள் எடுத்தது.
    • இந்தியாவின் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார்.

    லீட்ஸ்:

    இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. கேப்டன் சுப்மன் கில் 147 ரன்னும், ரிஷப் பண்ட் 134 ரன்னும், ஜெய்ஸ்வால் 101 ரன்னும் அடித்தனர்.

    இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டங் ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. ஜாக் கிராலே 4 ரன்னில் வெளியேறினார். அடுத்து, பென் டக்கெட்டுடன் ஒல்லி போப் ஜோடி சேர்ந்தார். இருவரும் அரை சதம் கடந்தனர். பென் டக்கெட் 62 ரன்னில் வெளியேறினார்.

    ஜோ ரூட் 28 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய ஒல்லி போப் சதத்தை பதிவுசெய்து அசத்தினார். இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்திருந்தது. ஒல்லி போப் 100 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 465 ரன்கள் எடுத்தனர்.

    இந்திய அணி சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், பிரசித் கிருஷணா3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 4 ரன்னில் அவுட்டாகினர். சாய் சுதர்சன் 30 ரன்னில் வெளியேறினார்.

    மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 47 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.

    • திருப்பூர் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    திருநெல்வேலி:

    டிஎன்பிஎல் 2025 சீசனின் 20-வது போட்டி திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் திருப்பூர் தமிழன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. திருப்பூர் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சரத்குமார் 31 ரன்னும், ராஜலிங்கம் 22 ரன்னும் எடுத்தனர்.

    திருப்பூர் அணி சார்பில் சிலம்பரசன், சாய் கிஷோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் துஷார் ரஹேஜா 40 ரன்னில் அவுட்டானார்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அமித் சாத்விக் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார்.

    இறுதியில், திருப்பூர் தமிழன்ஸ் அணி 10.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 121 ரன்கள் எடுத்து வென்றது. இது திருப்பூர் அணி பெற்ற 3வது வெற்றி ஆகும். அமித் சாத்விக் 68 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • ஜெர்மனியில் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது.
    • இறுதிச்சுற்றில் ரஷியாவின் மெத்வதேவ் தோல்வி அடைந்தார்.

    பெர்லின்:

    ஆண்கள் மட்டும் பங்கேற்ற ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்தது.

    இதில் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ரஷியாவின் மெத்வதேவ், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய பப்ளிக் 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தினார்.

    • இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது
    • இந்திய அணி தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 465 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.

    இந்திய அணி தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளும் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளும் சிராஜ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.

    இப்போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியன் மூலம் SENA நாடுகள் எனப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் 150 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் ஆசிய வேகப்பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை பும்ரா படைத்தார்

    இதற்கு முன்பு 146 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடத்தில் இருந்த பாகிஸ்தானின் வாசிம் அக்ரமை பும்ரா பின்னுக்கு தள்ளி அசத்தியுள்ளார். 

    ×