என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டிஎன்பிஎல் 2025: மதுரையை வீழ்த்தி 3வது வெற்றியை பதிவுசெய்தது திருப்பூர்
    X

    டிஎன்பிஎல் 2025: மதுரையை வீழ்த்தி 3வது வெற்றியை பதிவுசெய்தது திருப்பூர்

    • திருப்பூர் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    திருநெல்வேலி:

    டிஎன்பிஎல் 2025 சீசனின் 20-வது போட்டி திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் திருப்பூர் தமிழன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. திருப்பூர் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சரத்குமார் 31 ரன்னும், ராஜலிங்கம் 22 ரன்னும் எடுத்தனர்.

    திருப்பூர் அணி சார்பில் சிலம்பரசன், சாய் கிஷோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் துஷார் ரஹேஜா 40 ரன்னில் அவுட்டானார்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அமித் சாத்விக் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார்.

    இறுதியில், திருப்பூர் தமிழன்ஸ் அணி 10.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 121 ரன்கள் எடுத்து வென்றது. இது திருப்பூர் அணி பெற்ற 3வது வெற்றி ஆகும். அமித் சாத்விக் 68 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    Next Story
    ×