என் மலர்
விளையாட்டு
புனே டெஸ்டில் ஸ்டன்னிங் கேட்ச்கள் பிடித்த சகாவிற்கு ‘ட்ரீட்’ வைக்க கடமை பட்டிருக்கிறேன் என்று வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் புனேயில் நடைபெற்றது. இதில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.
விராட் கோலியின் இரட்டை சதம், மயங்க் அகர்வாலின் சதம், இந்தியாவின் அபார வெற்றி ஆகியவற்றுடன் சகாவின் உலகத்தரம் வாய்ந்த விக்கெட் கீப்பிங் பணியும் சிறப்பாக பேசப்பட்டது.
இரண்டு இன்னிங்சிலும் மூன்று கேட்ச்களை அபாரமாக பிடித்தார். முதல் இன்னிங்சில் ப்ரூயின் அடித்த பந்து முதல் ஸ்லிப்பையும் தாண்டி சென்றது. அதை அபாரமாக பாய்ந்து பிடித்தார். 2-வது இன்னிங்சில் ப்ரூயின் லெக் சைடில் அடித்த பந்தை இடது கையால் அபாரமாக பாய்ந்து பிடித்தார். அதன்பின் பிலாண்டர் அடித்த பந்தையும் சிறப்பாக பிடித்தார்.
மூன்று முறையும் பந்து வீசியவர் உமேஷ் யாதவ். அபாரமான கேட்ச்களை பிடித்த அவருக்கு ‘ட்ரீட்’ வைக்க கடமை பட்டிருக்கிறேன் என்று உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உமேஷ் யாதவ் கூறுகையில் ‘‘லெக் சைடு சென்ற பந்துகளை அபாரமாக டைவ் அடித்து ஸ்டன்னிங் கேட்ச் பிடித்த சகாவிற்கு நான் கண்டிப்பாக ‘ட்ரீட்’ வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். கடைசி இரண்டு விக்கெட்டும் சகாவின் விக்கெட்டுக்கள்தான்.
பந்தை லெக் ஸ்டம்பிற்கு வெளியில் வீசும்போது, அது பவுண்டரியாகத்தான் இருக்கும் என்று நீங்கள் உறுதியாக நினைக்கலாம். ஆனால், அது கேட்ச்-யாக மாற சற்று வாய்ப்புள்ளது. வாய்ப்பு கிடைத்தால் சரியாக பயன்படுத்தி சகா கேட்ச் பிடித்து விடுவார் என்பது எங்களுக்குத் தெரியும்’’ என்றார்.
விராட் கோலியின் இரட்டை சதம், மயங்க் அகர்வாலின் சதம், இந்தியாவின் அபார வெற்றி ஆகியவற்றுடன் சகாவின் உலகத்தரம் வாய்ந்த விக்கெட் கீப்பிங் பணியும் சிறப்பாக பேசப்பட்டது.
இரண்டு இன்னிங்சிலும் மூன்று கேட்ச்களை அபாரமாக பிடித்தார். முதல் இன்னிங்சில் ப்ரூயின் அடித்த பந்து முதல் ஸ்லிப்பையும் தாண்டி சென்றது. அதை அபாரமாக பாய்ந்து பிடித்தார். 2-வது இன்னிங்சில் ப்ரூயின் லெக் சைடில் அடித்த பந்தை இடது கையால் அபாரமாக பாய்ந்து பிடித்தார். அதன்பின் பிலாண்டர் அடித்த பந்தையும் சிறப்பாக பிடித்தார்.
மூன்று முறையும் பந்து வீசியவர் உமேஷ் யாதவ். அபாரமான கேட்ச்களை பிடித்த அவருக்கு ‘ட்ரீட்’ வைக்க கடமை பட்டிருக்கிறேன் என்று உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உமேஷ் யாதவ் கூறுகையில் ‘‘லெக் சைடு சென்ற பந்துகளை அபாரமாக டைவ் அடித்து ஸ்டன்னிங் கேட்ச் பிடித்த சகாவிற்கு நான் கண்டிப்பாக ‘ட்ரீட்’ வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். கடைசி இரண்டு விக்கெட்டும் சகாவின் விக்கெட்டுக்கள்தான்.
பந்தை லெக் ஸ்டம்பிற்கு வெளியில் வீசும்போது, அது பவுண்டரியாகத்தான் இருக்கும் என்று நீங்கள் உறுதியாக நினைக்கலாம். ஆனால், அது கேட்ச்-யாக மாற சற்று வாய்ப்புள்ளது. வாய்ப்பு கிடைத்தால் சரியாக பயன்படுத்தி சகா கேட்ச் பிடித்து விடுவார் என்பது எங்களுக்குத் தெரியும்’’ என்றார்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் படுதோல்வியை சந்தித்த தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ், அனுபவம் இல்லாததால் தடுமாறுகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
புனே டெஸ்டில் படுதோல்வி அடைந்த பிறகு தென்ஆப்பிரிக்க கேப்டன் டு பிளிசிஸ் கூறுகையில், ‘‘இந்திய துணை கண்டத்தில் விளையாடும்போது, முதல் இன்னிங்சில் பெரிய ஸ்கோர் குவிக்க வேண்டியது முக்கியம் என்பதை அறிவோம். அப்போதுதான் வெற்றி வாய்ப்பை பெற முடியும்.
இந்த டெஸ்டில் நாங்கள் நன்றாக ஆடவில்லை. அடுத்த டெஸ்டில் முன்னேற்றம் காண முயற்சிப்போம். விராட் கோலியின் பேட்டிங் நம்ப முடியாத அளவுக்கு இருந்தது. இந்த தொடரை வெல்வதற்கு இந்தியா தகுதியான அணி.
உலகின் சிறந்த அணி என்றால், நிறைய அனுபவம் இருக்க வேண்டும். இப்போது நாங்கள் கிட்டத்தட்ட எல்லா அனுபவத்தையும் இழந்து விட்டோம். அனுபவம் வாய்ந்த ஸ்டெயின், மோர்னே மோர்கல், அம்லா, டி வில்லியர்ஸ் ஆகியோர் ஓய்வு பெற்று விட்டனர்.
அவர்களது இடத்தை ஒரே நாள் இரவில் நிரப்பி விட முடியாது. இப்போது அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் குறைந்த எண்ணிக்கையிலான டெஸ்ட் போட்டிகளில்தான் விளையாடி உள்ளனர். அவர்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள காலம் பிடிக்கும். அணியில் உள்ள சிறந்த வீரர்கள் வெளியேறும்போது, எந்த அணியும் இது போன்ற சவாலை (தடுமாற்றத்தை) சந்தித்துதான் ஆக வேண்டும்’’ என்றார்.
இந்த டெஸ்டில் நாங்கள் நன்றாக ஆடவில்லை. அடுத்த டெஸ்டில் முன்னேற்றம் காண முயற்சிப்போம். விராட் கோலியின் பேட்டிங் நம்ப முடியாத அளவுக்கு இருந்தது. இந்த தொடரை வெல்வதற்கு இந்தியா தகுதியான அணி.
உலகின் சிறந்த அணி என்றால், நிறைய அனுபவம் இருக்க வேண்டும். இப்போது நாங்கள் கிட்டத்தட்ட எல்லா அனுபவத்தையும் இழந்து விட்டோம். அனுபவம் வாய்ந்த ஸ்டெயின், மோர்னே மோர்கல், அம்லா, டி வில்லியர்ஸ் ஆகியோர் ஓய்வு பெற்று விட்டனர்.
அவர்களது இடத்தை ஒரே நாள் இரவில் நிரப்பி விட முடியாது. இப்போது அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் குறைந்த எண்ணிக்கையிலான டெஸ்ட் போட்டிகளில்தான் விளையாடி உள்ளனர். அவர்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள காலம் பிடிக்கும். அணியில் உள்ள சிறந்த வீரர்கள் வெளியேறும்போது, எந்த அணியும் இது போன்ற சவாலை (தடுமாற்றத்தை) சந்தித்துதான் ஆக வேண்டும்’’ என்றார்.
பிசிசிஐ மீது கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைக்க எனக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும் என தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்த கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி, பிசிசியின் புதிய தலைவராக ஒருமனதாக தேர்வாகும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. பிசிசிஐயின் தலைவர் மற்றும் பிற பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், கங்குலிக்கு பெரும்பாலான நிர்வாகிகள் மத்தியில் ஆதரவு காணப்படுகிறது. இதனால், கங்குலி அப்பதவிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.
இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றாலும், வேறு யாரும் போட்டியிடாததால் தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. 47 வயதாகும் கங்குலி தற்போது பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவராக பதவி வகிக்கிறார்.
மனுதாக்கல் செய்த பின்னர் கங்குலி கூறுகையில் ‘‘போட்டி இருந்தாலும் இல்லாவிட்டாலும், பிசிசிஐ உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய அமைப்பாக இருப்பதால் பொறுப்பு இருக்க வேண்டும். நிதி ரீதியாக, இந்தியா ஒரு கிரிக்கெட் அதிகார மையமாக இருக்கிறது. எனவே இது ஒரு சவாலாக இருக்கும்.
நாட்டின் கிரிக்கெட் வாரியத்திற்கு தலைமை தாங்குவது ஒரு சிறந்த வாய்ப்பு. இந்த அமைப்பிற்கு ஏற்பட்ட கெட்டபெயரை துடைக்க இந்த நேரத்தில் ஏதாவது செய்ய எனக்கு கிடைத்து இருக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும். கடந்த மூன்று ஆண்டுகளாக பி.சி.சி.ஐ. நல்ல நிலையில் இல்லாத நேரத்தில் நான் பொறுப்பேற்கிறேன்.
நான் எந்த ஒரு முடிவை எடுக்கும்போதும் முதலில் எல்லோரிடமும் கலந்து பேசுவேன். ஆனால் முதல் தர கிரிக்கெட் வீரர்களைக் கவனிப்பதே எனது மிகப்பெரிய முன்னுரிமை ஆகும்’’ என கூறினார்.
இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றாலும், வேறு யாரும் போட்டியிடாததால் தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. 47 வயதாகும் கங்குலி தற்போது பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவராக பதவி வகிக்கிறார்.
மனுதாக்கல் செய்த பின்னர் கங்குலி கூறுகையில் ‘‘போட்டி இருந்தாலும் இல்லாவிட்டாலும், பிசிசிஐ உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய அமைப்பாக இருப்பதால் பொறுப்பு இருக்க வேண்டும். நிதி ரீதியாக, இந்தியா ஒரு கிரிக்கெட் அதிகார மையமாக இருக்கிறது. எனவே இது ஒரு சவாலாக இருக்கும்.
நாட்டின் கிரிக்கெட் வாரியத்திற்கு தலைமை தாங்குவது ஒரு சிறந்த வாய்ப்பு. இந்த அமைப்பிற்கு ஏற்பட்ட கெட்டபெயரை துடைக்க இந்த நேரத்தில் ஏதாவது செய்ய எனக்கு கிடைத்து இருக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும். கடந்த மூன்று ஆண்டுகளாக பி.சி.சி.ஐ. நல்ல நிலையில் இல்லாத நேரத்தில் நான் பொறுப்பேற்கிறேன்.
நான் எந்த ஒரு முடிவை எடுக்கும்போதும் முதலில் எல்லோரிடமும் கலந்து பேசுவேன். ஆனால் முதல் தர கிரிக்கெட் வீரர்களைக் கவனிப்பதே எனது மிகப்பெரிய முன்னுரிமை ஆகும்’’ என கூறினார்.
கங்குலி, எம்எஸ் டோனி ஆகியோர் போட்டி டிராவில் முடிந்தாலும் பரவாயில்லை என்ற மனநிலை கொண்டவர்கள். ஆனால் விராட் கோலி இதில் மாறுபட்டவர் என காம்பிர் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த சில ஆண்டுகளாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தற்போது நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை 2-0 எனக் கைப்பற்றியதன் மூலம் தொடர்ச்சியாக 11 டெஸ்ட் தொடர்களை வென்று சாதனைப் படைத்துள்ளது.
விராட் கோலி கடந்த 2014-ம் ஆண்டு எம்எஸ் டோனியிடம் இருந்து கேப்டன் பதவியை பெற்றுக் கொண்டார். கேப்டனாக பொறுப்பேற்றதும் வெற்றி என்பது மட்டுமே எனது குறிக்கோள். முடியாத கட்டத்தில் மட்டுமே டிரா குறித்து யோசிப்பேன் என்று தெரிவித்தார்.
அதனடிப்படையில் அணியைத் தேர்வு செய்து அபாரமாக செயல்பட்டு வருகிறார். வெளிநாட்டு மண்ணில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி அதிகமான வெற்றிகளை ருசித்துள்ளது.
இந்தியாவின் வெற்றிக்கு கங்குலி, எம்எஸ் டோனி, ராகுல் டிராவிட் ஆகியோரின் அணுகுமுறையை காட்டிலும் விராட் கோலியில் மாறுபட்ட அணுகுமுறைதான் காரணம் என காம்பிர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காம்பிர் கூறுகையில் ‘‘விராட் கோலியின் கேப்டன்ஷிப் திறன் கங்குலி, எம்எஸ் டோனி, ராகுல் டிராவிட் ஆகியோரிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டது. அவரின் பயமில்லாத அணுகுமுறை மற்றும் மனநிலை டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிகளை குவிக்க காரணமாக உள்ளது. வெளிநாட்டில் கூட அவர் தனிப்பட்டவராக திகழ்கிறார்.
தோல்வியடைந்து விடுவோம் என்று பயந்தால், நீங்கள் வெற்றி பெறவே முடியாது. தோல்வி குறித்து விராட் கோலி பயந்ததே கிடையாது. இது அவருக்கு மிகப்பெரிய சாதகமாக உள்ளது. நாம் கங்குலி, எம்எஸ் டோனி, ராகுல் டிராவிட் குறித்து பேசுகிறோம். ஆனால், விராட் கோலி தலைமையில் இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் அதிக அளவில் வெற்றி வாகை சூடியுள்ளது.
மற்ற கேப்டன்களை விட கோலி அதிகமாக ரிஸ்க் எடுத்து வருகிறார். மற்றவர்கள் போட்டியில் தோல்வியடைந்து விடக்கூடாது என்பதற்காக கூடுதல் பேட்ஸ்மேனோடு விளையாடுவார்கள். விராட் கோலி மட்டும்தான் வெளிநாட்டு தொடரில் ஐந்து பந்து வீச்சாளர்களுடன் (ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை சேர்த்து) விளையாடுகிறார்.
தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற கடைசி டெஸ்டில் நான்கு வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஹர்திக் பாண்டியாவுடன் களம் இறங்கினார். இதை சவாலாக ஏற்று வெற்றி பெற்றுள்ளார்’’ என்றார்.
விராட் கோலி கடந்த 2014-ம் ஆண்டு எம்எஸ் டோனியிடம் இருந்து கேப்டன் பதவியை பெற்றுக் கொண்டார். கேப்டனாக பொறுப்பேற்றதும் வெற்றி என்பது மட்டுமே எனது குறிக்கோள். முடியாத கட்டத்தில் மட்டுமே டிரா குறித்து யோசிப்பேன் என்று தெரிவித்தார்.
அதனடிப்படையில் அணியைத் தேர்வு செய்து அபாரமாக செயல்பட்டு வருகிறார். வெளிநாட்டு மண்ணில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி அதிகமான வெற்றிகளை ருசித்துள்ளது.
இந்தியாவின் வெற்றிக்கு கங்குலி, எம்எஸ் டோனி, ராகுல் டிராவிட் ஆகியோரின் அணுகுமுறையை காட்டிலும் விராட் கோலியில் மாறுபட்ட அணுகுமுறைதான் காரணம் என காம்பிர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காம்பிர் கூறுகையில் ‘‘விராட் கோலியின் கேப்டன்ஷிப் திறன் கங்குலி, எம்எஸ் டோனி, ராகுல் டிராவிட் ஆகியோரிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டது. அவரின் பயமில்லாத அணுகுமுறை மற்றும் மனநிலை டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிகளை குவிக்க காரணமாக உள்ளது. வெளிநாட்டில் கூட அவர் தனிப்பட்டவராக திகழ்கிறார்.
தோல்வியடைந்து விடுவோம் என்று பயந்தால், நீங்கள் வெற்றி பெறவே முடியாது. தோல்வி குறித்து விராட் கோலி பயந்ததே கிடையாது. இது அவருக்கு மிகப்பெரிய சாதகமாக உள்ளது. நாம் கங்குலி, எம்எஸ் டோனி, ராகுல் டிராவிட் குறித்து பேசுகிறோம். ஆனால், விராட் கோலி தலைமையில் இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் அதிக அளவில் வெற்றி வாகை சூடியுள்ளது.
மற்ற கேப்டன்களை விட கோலி அதிகமாக ரிஸ்க் எடுத்து வருகிறார். மற்றவர்கள் போட்டியில் தோல்வியடைந்து விடக்கூடாது என்பதற்காக கூடுதல் பேட்ஸ்மேனோடு விளையாடுவார்கள். விராட் கோலி மட்டும்தான் வெளிநாட்டு தொடரில் ஐந்து பந்து வீச்சாளர்களுடன் (ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை சேர்த்து) விளையாடுகிறார்.
தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற கடைசி டெஸ்டில் நான்கு வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஹர்திக் பாண்டியாவுடன் களம் இறங்கினார். இதை சவாலாக ஏற்று வெற்றி பெற்றுள்ளார்’’ என்றார்.
இலங்கை கிரிக்கெட் அணி புகழ்பெற்ற ஜான்டி ரோட்ஸ், பிரெட் லீ ஆகியோரை பயிற்சியாளர்களாக்க பரிசீலனை செய்து வருகிறது.
கிரிக்கெட்டில் தலைசிறந்த பீல்டராக கருதப்படுபவர் தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ். அதேபோல் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் என பாராட்டப்படுபவர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பிரெட் லீ. இருவரையும் முறையே பீல்டிங் மற்றும் பவுலிங் கோச்சராக நியமிக்க இலங்கை கிரிக்கெட் போர்டு பரிசீலனை செய்து வருகிறது.
ஜான்டி ரோட்ஸ் தென்ஆப்பிரிக்கா அணிக்காக 52 டெஸ்ட், 245 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். பிரெட் லீ ஆஸ்திரேலிய அணிக்காக 76 டெஸ்ட், 221 ஒருநாள் மற்றும் 25 டி20 போட்டிகளில் 700 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.
உலகக்கோப்பையில் மோசமான தோல்வியை சந்தித்ததால் பயிற்சியாளர்களை அதிரடியாக நீக்கியது இலங்கை கிரிக்கெட் போர்டு.
சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 3-0 எனக் கைப்பற்றியது இலங்கை அணி.
ஜான்டி ரோட்ஸ் தென்ஆப்பிரிக்கா அணிக்காக 52 டெஸ்ட், 245 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். பிரெட் லீ ஆஸ்திரேலிய அணிக்காக 76 டெஸ்ட், 221 ஒருநாள் மற்றும் 25 டி20 போட்டிகளில் 700 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.
உலகக்கோப்பையில் மோசமான தோல்வியை சந்தித்ததால் பயிற்சியாளர்களை அதிரடியாக நீக்கியது இலங்கை கிரிக்கெட் போர்டு.
சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 3-0 எனக் கைப்பற்றியது இலங்கை அணி.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தொடரை கைப்பற்றியதன் மூலம் இந்திய அணி 200 புள்ளிகளுடன் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் இடத்தில் உள்ளது.
புனே:
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
ஏற்கனவே விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்டில் 203 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.
இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை உள்ளடக்கியதாகும். இந்த வெற்றி மூலம் பெற்ற 40 புள்ளிகளுடன் சேர்த்து இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
4 டெஸ்டில் விளையாடி நான்கிலும் வெற்றி பெற்று 200 புள்ளிகள் பெற்று உள்ளது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2 டெஸ்டில் பெற்ற வெற்றியால் 120 புள்ளி கிடைத்தது.

நியூசிலாந்து, இலங்கையை விட இந்திய அணி 140 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.
நியூசிலாந்து, இலங்கை அணிகள் தலா 60 புள்ளிகளுடன் அதற்கு அடுத்த நிலையில் உள்ளன. இரு அணிகளும் ஒரு வெற்றி, ஒரு தோல்வி பெற்றுள்ளன.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் தலா 56 புள்ளிகளுடன் உள்ளன. வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா அணிகள் இதுவரை புள்ளிகள் எதுவும் பெறவில்லை. அவைகள் 2 டெஸ்டில் விளையாடி இரண்டிலும் தோற்றன.
வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் இன்னும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடவில்லை.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் இந்தியா புதிய சாதனை படைத்தது. சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 11 டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. 2013 ஆண்டு பிப்ரவரி முதல் 2019 அக்டோபர் வரை இந்திய மண்ணில் நடந்த அனைத்து டெஸ்ட் தொடரையும் இந்தியா கைப்பற்றியது.
இதற்கு முன்பு ஆஸ்திரேலிய அணி உள்நாட்டில் தொடர்ச்சியாக 10 டெஸ்ட் தொடரை வென்றதே சாதனையாக இருந்தது. இதை இந்தியா முறியடித்து புதிய உலக சாதனை படைத்தது.
ஆஸ்திரேலியா அணி 2 முறை (1994- 2001, 2004-2008) சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10 முறை டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருந்தது.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
ஏற்கனவே விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்டில் 203 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.
இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை உள்ளடக்கியதாகும். இந்த வெற்றி மூலம் பெற்ற 40 புள்ளிகளுடன் சேர்த்து இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
4 டெஸ்டில் விளையாடி நான்கிலும் வெற்றி பெற்று 200 புள்ளிகள் பெற்று உள்ளது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2 டெஸ்டில் பெற்ற வெற்றியால் 120 புள்ளி கிடைத்தது.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பெற்ற வெற்றியால் 40 புள்ளி பெற்றது. தற்போது 40 புள்ளிகள் கிடைத்துள்ளதால் இந்திய அணி புதிய உச்சத்தில் உள்ளது.

நியூசிலாந்து, இலங்கையை விட இந்திய அணி 140 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.
நியூசிலாந்து, இலங்கை அணிகள் தலா 60 புள்ளிகளுடன் அதற்கு அடுத்த நிலையில் உள்ளன. இரு அணிகளும் ஒரு வெற்றி, ஒரு தோல்வி பெற்றுள்ளன.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் தலா 56 புள்ளிகளுடன் உள்ளன. வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா அணிகள் இதுவரை புள்ளிகள் எதுவும் பெறவில்லை. அவைகள் 2 டெஸ்டில் விளையாடி இரண்டிலும் தோற்றன.
வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் இன்னும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடவில்லை.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் இந்தியா புதிய சாதனை படைத்தது. சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 11 டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. 2013 ஆண்டு பிப்ரவரி முதல் 2019 அக்டோபர் வரை இந்திய மண்ணில் நடந்த அனைத்து டெஸ்ட் தொடரையும் இந்தியா கைப்பற்றியது.
இதற்கு முன்பு ஆஸ்திரேலிய அணி உள்நாட்டில் தொடர்ச்சியாக 10 டெஸ்ட் தொடரை வென்றதே சாதனையாக இருந்தது. இதை இந்தியா முறியடித்து புதிய உலக சாதனை படைத்தது.
ஆஸ்திரேலியா அணி 2 முறை (1994- 2001, 2004-2008) சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10 முறை டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருந்தது.
உலக ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை சிமோன் பைல்ஸ் மொத்தம் 15.133 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
ஸ்டட்கர்ட்:
உலக ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று பெண்களுக்கான புளோர் பிரிவில் தனது சாகசத்தை காட்டி சிலிர்க்க வைத்த அமெரிக்க வீராங்கனை சிமோன் பைல்ஸ் மொத்தம் 15.133 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இதே போல் பேலன்ஸ் பீம் பிரிவிலும் சிமோன் பைல்ஸ் மகுடம் சூடினார். இந்த தொடரில் இது அவரது 5-வது தங்கமாகும். இதன் மூலம் உலக ஜிம்னாஸ்டிக் போட்டியில் அவரது ஒட்டுமொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது.
உலக ஜிம்னாஸ்டிக்ஸ் வரலாற்றில் பெலாரஸ் வீரர் விடாலி ஸ்செர்போ 23 பதக்கம் வென்றதே இதுவரை அதிகபட்சமாக இருந்தது. அவரை 22 வயதான சிமோன் பைல்ஸ் பின்னுக்கு தள்ளி புதிய சரித்திரம் படைத்திருக்கிறார். இவர் ரியோ ஒலிம்பிக்கில் 4 தங்கம் வென்றது நினைவு கூரத்தக்கது.
உலக ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று பெண்களுக்கான புளோர் பிரிவில் தனது சாகசத்தை காட்டி சிலிர்க்க வைத்த அமெரிக்க வீராங்கனை சிமோன் பைல்ஸ் மொத்தம் 15.133 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இதே போல் பேலன்ஸ் பீம் பிரிவிலும் சிமோன் பைல்ஸ் மகுடம் சூடினார். இந்த தொடரில் இது அவரது 5-வது தங்கமாகும். இதன் மூலம் உலக ஜிம்னாஸ்டிக் போட்டியில் அவரது ஒட்டுமொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது.
உலக ஜிம்னாஸ்டிக்ஸ் வரலாற்றில் பெலாரஸ் வீரர் விடாலி ஸ்செர்போ 23 பதக்கம் வென்றதே இதுவரை அதிகபட்சமாக இருந்தது. அவரை 22 வயதான சிமோன் பைல்ஸ் பின்னுக்கு தள்ளி புதிய சரித்திரம் படைத்திருக்கிறார். இவர் ரியோ ஒலிம்பிக்கில் 4 தங்கம் வென்றது நினைவு கூரத்தக்கது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக முன்னாள் கேப்டன் கங்குலி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பை:
இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ) நிர்வாகிகள் தேர்வு வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி, பிசிசியின் புதிய தலைவராக ஒருமனதாக தேர்வாகும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. பிசிசிஐயின் தலைவர் மற்றும் பிற பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், கங்குலிக்கு பெரும்பாலான நிர்வாகிகள் மத்தியில் ஆதரவு காணப்படுகிறது. இதனால், கங்குலி அப்பதவிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.
கங்குலி பிசிசிஐ தலைவராக வரும் பட்சத்தில் எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியே என நிர்வாகிகள் பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் கர்நாடகாவைச் சேர்ந்த பிரிஜேஷ் பட்டேல், ஐபிஎல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ) நிர்வாகிகள் தேர்வு வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி, பிசிசியின் புதிய தலைவராக ஒருமனதாக தேர்வாகும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. பிசிசிஐயின் தலைவர் மற்றும் பிற பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், கங்குலிக்கு பெரும்பாலான நிர்வாகிகள் மத்தியில் ஆதரவு காணப்படுகிறது. இதனால், கங்குலி அப்பதவிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.
கங்குலி பிசிசிஐ தலைவராக வரும் பட்சத்தில் எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியே என நிர்வாகிகள் பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர்.

பிசிசிஐ செயலாளர் பதவிக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். புதிய பொருளாளர் பதவிக்கு பிசிசிஐயின் முன்னாள் தலைவர் அனுராக் தாக்கூரின் இளைய சகோதரர் துமால் போட்டியிட மனுதாக்கல் செய்ய உள்ளார்.
இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றாலும், வேறு யாரும் போட்டியிடாததால் தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. 47 வயதாகும் கங்குலி தற்போது பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவராக பதவி வகிக்கிறார்.
இதேபோல் கர்நாடகாவைச் சேர்ந்த பிரிஜேஷ் பட்டேல், ஐபிஎல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிக தொடர்களை வென்ற அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்றுடன் முடிவடைந்த புனே டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-0 எனத் தொடரை கைப்பற்றியது.
இந்தத் தொடரை வென்றதன் மூலம் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிக தொடர்களை வென்ற அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. 2013 பிப்ரவரி முதல் 2019 அக்டோபர் வரை இந்தியா தொடர்ச்சியாக 11 தொடர்களை வென்று சாதனைப் படைத்துள்ளது.
இதற்கு முன் ஆஸ்திரேலியா 1994 நவம்பர் முதல் 2000 நவம்பர் வரை தொடர்ச்சியாக 10 தொடர்களையும், 2004 ஜூலை முதல் 2008 நவம்பர் வரை 10 தொடர்களையும் வென்றிருந்தது. தற்போது ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது.
இந்தத் தொடரை வென்றதன் மூலம் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிக தொடர்களை வென்ற அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. 2013 பிப்ரவரி முதல் 2019 அக்டோபர் வரை இந்தியா தொடர்ச்சியாக 11 தொடர்களை வென்று சாதனைப் படைத்துள்ளது.
இதற்கு முன் ஆஸ்திரேலியா 1994 நவம்பர் முதல் 2000 நவம்பர் வரை தொடர்ச்சியாக 10 தொடர்களையும், 2004 ஜூலை முதல் 2008 நவம்பர் வரை 10 தொடர்களையும் வென்றிருந்தது. தற்போது ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது.
புனே டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவை இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா தொடரை 2-0 எனக் கைப்பற்றியுள்ளது.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் புனேயில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்சில் 275 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.
இந்தியாவை விட 326 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்ததால் பாலோ-ஆன் ஆனது. தென்ஆப்பிரிக்கா ஆல்அவுட் ஆனதோடு நேற்றைய 3-வதுநாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததால், இந்தியா பாலோ-ஆன் எடுக்குமா? அல்லது தொடர்ந்து பேட்டிங் செய்யுமா? என்பது குறித்து தெளிவாக தெரியாமல் இருந்தது.

முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய மகாராஜ் - பிலாண்டர் ஜோடி 2-வது இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடியது. இந்த ஜோடியை உமேஷ் யாதவ் பிரிக்க தென்ஆப்பிரிக்கா 189 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ், ஜடேஜா தலா 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-0 எனக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.
இந்தியாவை விட 326 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்ததால் பாலோ-ஆன் ஆனது. தென்ஆப்பிரிக்கா ஆல்அவுட் ஆனதோடு நேற்றைய 3-வதுநாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததால், இந்தியா பாலோ-ஆன் எடுக்குமா? அல்லது தொடர்ந்து பேட்டிங் செய்யுமா? என்பது குறித்து தெளிவாக தெரியாமல் இருந்தது.
இன்றைய 4-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் இந்தியா பாலோ-ஆன் எடுத்தது. இதனால் தென்ஆப்பிரிக்கா தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணி மளமளவென விக்கெட்டுக்களை இழந்தது.

முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய மகாராஜ் - பிலாண்டர் ஜோடி 2-வது இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடியது. இந்த ஜோடியை உமேஷ் யாதவ் பிரிக்க தென்ஆப்பிரிக்கா 189 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ், ஜடேஜா தலா 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-0 எனக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.
புனேயில் நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டின்போது ரோகித் சர்மா ரசிகர் ஒருவர் அத்துமீறி மைதானத்திற்குள் நுழைந்ததற்கு கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது ரசிகர் ஒருவர் அத்துமீறி நுழைந்தார்.
8-வது வரிசை வீரர் முத்துசாமி ஆட்டம் இழந்து மைதானத்தை விட்டு வெளியேறும்போது பிலாண்டர் களத்துக்கு வந்தார். அப்போதுதான் ரசிகர் ஒருவர் ஆடுகளத்துக்குள் புகுந்தார். அவர் ரோகித் சர்மாவின் காலில் விழுந்து ஆசி வாங்கினார். அப்போது ரோகித் சர்மா நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதற்கு அந்த ரசிகர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அந்த ரசிகரை பாதுகாவலர்கள் அழைத்து சென்றனர்.
மைதானத்திற்குள் ரசிகர் நுழைந்தது தொடர்பாக பாதுகாவலர்கள் மீது முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கடுமையாக பாய்ந்துள்ளார். டெலிவிஷனில் வர்ணனை செய்துக் கொண்டு இருந்த அவர் இது தொடர்பாக கூறியதாவது:-
இது மாதிரியான சம்பவங்கள் நடைபெறுவதற்கு காரணம் ரசிகர்கள் பக்கம் கவனம் செலுத்தாமல் பாதுகாவலர்கள் ஆட்டத்தை பார்ப்பதுதான். இந்தியாவில் எப்போதும் இந்த பிரச்சினை உள்ளது.
கிரிக்கெட் ஆட்டத்தை பாதுகாவலர்கள் இலவசமாக பார்க்கக்கூடாது. ஆட்டத்தை பார்ப்பதற்காக அவர்கள் அங்கு வரவழைக்கப்பட வில்லை. இது போன்று அத்துமீறி நுழைபவர்களை தடுப்பதற்காகத்தான் அவர்கள் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.பாதுகாவலர்களின் பக்கம் கேமிராவை திருப்பி அவர்கள் ஆட்டத்தை பார்க்கிறார்களா? அல்லது ரசிகர்களை கவனிக்கிறார்களா? என கண்காணிக்க வேண்டும்.
இதுபோன்று அத்துமீறி நுழையும் ரசிகர்களால் வீரர்களுக்கு ஆபத்து நேரிடலாம். இதுபோல முன்பு நடைபெற்றுள்ளது. அப்படி இருக்கும்போது அலட்சியமாக இருப்பது ஏன்?
மைதானத்துக்குள் நுழைவது எளிதானது அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏராளமான தடுப்புகள் இருக்கின்றன. அப்படி இருந்தும் இது போன்ற சம்பவங்கள் இன்னும் தொடர்ந்து நடக்கிறது.
இவவாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.
இந்தியா- தென் ஆப்பி ரிக்கா தொடரில் ரசிகர்கள் அத்து மீறி மைதானத்துக்குள் நுழைவது 3-வது சம்பவமாகும். விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியிலும், மொகாலியில நடந்த 20 ஓவர் போட்டியிலும் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
8-வது வரிசை வீரர் முத்துசாமி ஆட்டம் இழந்து மைதானத்தை விட்டு வெளியேறும்போது பிலாண்டர் களத்துக்கு வந்தார். அப்போதுதான் ரசிகர் ஒருவர் ஆடுகளத்துக்குள் புகுந்தார். அவர் ரோகித் சர்மாவின் காலில் விழுந்து ஆசி வாங்கினார். அப்போது ரோகித் சர்மா நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதற்கு அந்த ரசிகர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அந்த ரசிகரை பாதுகாவலர்கள் அழைத்து சென்றனர்.
மைதானத்திற்குள் ரசிகர் நுழைந்தது தொடர்பாக பாதுகாவலர்கள் மீது முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கடுமையாக பாய்ந்துள்ளார். டெலிவிஷனில் வர்ணனை செய்துக் கொண்டு இருந்த அவர் இது தொடர்பாக கூறியதாவது:-
இது மாதிரியான சம்பவங்கள் நடைபெறுவதற்கு காரணம் ரசிகர்கள் பக்கம் கவனம் செலுத்தாமல் பாதுகாவலர்கள் ஆட்டத்தை பார்ப்பதுதான். இந்தியாவில் எப்போதும் இந்த பிரச்சினை உள்ளது.
கிரிக்கெட் ஆட்டத்தை பாதுகாவலர்கள் இலவசமாக பார்க்கக்கூடாது. ஆட்டத்தை பார்ப்பதற்காக அவர்கள் அங்கு வரவழைக்கப்பட வில்லை. இது போன்று அத்துமீறி நுழைபவர்களை தடுப்பதற்காகத்தான் அவர்கள் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.பாதுகாவலர்களின் பக்கம் கேமிராவை திருப்பி அவர்கள் ஆட்டத்தை பார்க்கிறார்களா? அல்லது ரசிகர்களை கவனிக்கிறார்களா? என கண்காணிக்க வேண்டும்.
இதுபோன்று அத்துமீறி நுழையும் ரசிகர்களால் வீரர்களுக்கு ஆபத்து நேரிடலாம். இதுபோல முன்பு நடைபெற்றுள்ளது. அப்படி இருக்கும்போது அலட்சியமாக இருப்பது ஏன்?
மைதானத்துக்குள் நுழைவது எளிதானது அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏராளமான தடுப்புகள் இருக்கின்றன. அப்படி இருந்தும் இது போன்ற சம்பவங்கள் இன்னும் தொடர்ந்து நடக்கிறது.
இவவாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.
இந்தியா- தென் ஆப்பி ரிக்கா தொடரில் ரசிகர்கள் அத்து மீறி மைதானத்துக்குள் நுழைவது 3-வது சம்பவமாகும். விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியிலும், மொகாலியில நடந்த 20 ஓவர் போட்டியிலும் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிவேகமாக 50 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஐந்தாவது வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார்.
புனே டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் முதல் இன்னிங்சில் 69 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 50 விக்கெட்டுகளை எடுத்தார்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 50 விக்கெட் வீழ்த்திய 4-வது இந்திய வீரர் அஸ்வின் ஆவார். கும்ப்ளே (84 விக்கெட்), ஸ்ரீநாத் (64), ஹர்பஜன்சிங் (60) ஆகியோர் முதல் இடங்களில் உள்ளனர்.
அஸ்வின் 9 டெஸ்டில் இந்த விக்கெட்டை எடுத்தார். இதன்மூலம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிவேகத்தில் 50 விக்கெட் வீழ்த்திய 5-வது வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார். பர்னஸ் (ஆஸ்திரேலியா) 5 டெஸ்டிலும், முரளீதரன் (இலங்கை) 7 டெஸ்டிலும், ஒயிட்டி மற்றும் கிரீம்மெட் (ஆஸ்திரேலியா) தலா 8 டெஸ்டிலும் அந்நாட்டுக்கு எதிராக அதிவேகத்தில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 50 விக்கெட் வீழ்த்திய 4-வது இந்திய வீரர் அஸ்வின் ஆவார். கும்ப்ளே (84 விக்கெட்), ஸ்ரீநாத் (64), ஹர்பஜன்சிங் (60) ஆகியோர் முதல் இடங்களில் உள்ளனர்.
அஸ்வின் 9 டெஸ்டில் இந்த விக்கெட்டை எடுத்தார். இதன்மூலம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிவேகத்தில் 50 விக்கெட் வீழ்த்திய 5-வது வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார். பர்னஸ் (ஆஸ்திரேலியா) 5 டெஸ்டிலும், முரளீதரன் (இலங்கை) 7 டெஸ்டிலும், ஒயிட்டி மற்றும் கிரீம்மெட் (ஆஸ்திரேலியா) தலா 8 டெஸ்டிலும் அந்நாட்டுக்கு எதிராக அதிவேகத்தில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.






