என் மலர்
விளையாட்டு
- உலக கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 10-வது வெற்றியை பெற்றது.
- ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே ஆகியோர் அமைத்த பார்ட்னர்ஷிப் மிகவும் முக்கியமானது.
20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி நமீபியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன் குவித்தது.
இஷான் கிஷன் 24 பந்தில் 61 ரன்னும் (6 பவுண்டரி, 5 சிக்சர் ), ஹர்திக் பாண்ட்யா 28 பந்தில் 52 ரன்னும் (4 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். எராஸ்மஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய நமீபியா 18.2 ஓவரில் 116 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 93 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உலக கோப்பையில் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாகும். மேலும் உலக கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 10-வது வெற்றியை பெற்றது.
நம்பியா தரப்பில் லோரன் ஸ்டீன்காம்ப் அதிகபட்சமாக 20 பந்தில் 29 ரன் ( 3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டும், அக் ஷர் படேல், ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட் டும், அர்ஷ்தீப் சிங், ஷிவம் துபே, பும்ரா தலா 1 விக் கெட்டும் வீழ்த்தினார்கள்.
வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் சூர்ய குமார் யாதவ் கூறியதாவது:-
இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது எளிதல்ல. ஆனால் சாம்சன், இஷான் கிஷன் தொடங்கிய விதம் இது ஒரு சுலபமான ஆடுகளம் என்பதை போல் உங்களுக்கு காட்டி இருக்கலாம்.
ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே ஆகியோர் அமைத்த பார்ட்னர்ஷிப் மிகவும் முக்கியமானது.
தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்த பிறகு அவர்கள் ஆடிய விதத்தை பாராட்ட வேண்டும்.
நமீபியா பந்துவீச்சாளர்களை பாராட்டாமல் இருக்க முடியாது. அவர்கள் உண்மையிலேயே நன்றாக பந்து வீசினார்கள். 6 முதல் 7 ஓவர்களுக்கு பிறகு நாங்கள் 240 ரன்களுக்கு மேல் குவிப்போம் என்று நினைத்தோம்.
பும்ரா 4 ஓவர்கள் முழுமையாக வீசியது இந்திய அணிக்கு நல்ல விஷயம். அடுத்த போட்டியிலும் அவர் கண்டிப்பாக விளையாடுவார். வருண் சக்கரவர்த்தி, அக் ஷர் பட்டேல் இணைந்து நன்றாக பந்து வீசினார்கள். இந்த இணையை பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்வது நெருக்கடியாகதான் இருக்கும்.
ஹர்திக் பாண்ட்யா ஆல்ரவுண்டர் பணியில் சிறப்பாக செயல்பட்டார். அவர் எந்த நிலையிலும் பந்து வீசக் கூடியவர். வீரர்களின் கூட்டு முயற்சியை பாராட்டுகிறேன்.
இந்த தொடரில் ஒவ்வொரு போட்டியுமே முக்கியமானது. சிறு தடுமாற்றத்துடன் தான் இந்த தொடரை தொடங்கினோம். அதன் பிறகு நாங்கள் எங்களுடைய பாதையில் சரியாக செல்கிறோம் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இந்திய அணி 3-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை வருகிற 15-ந்தேதி கொழும்பில் எதிர்கொள்கிறது.
- ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது.
- இதில் பிரான்ஸ் வீரரான யூகோ ஹம்பர்ட் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
ஆம்ஸ்டர்டாம்:
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அலெக்ஸ் டி மினார் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் பிரான்ஸ் வீரர் யூகோ ஹம்பர்ட் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் கெய் டென் ஓடனை வீழ்த்தி
காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
- கஜகஜஸ்தான் வீராங்கனை ரிபாகினா காலிறுதியில் தோல்வி அடைந்தார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, கனடாவின் விக்டோரியா எம்போகோ உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை7-5 என எம்போகோ வென்றார். பதிலடியாக 2வது செட்டை ரிபாகினா 6-4 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை எம்போகோ 6-4 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதன்மூலம் உலகின் நம்பர் 2 வீராங்கனையான எலினா ரிபாகினா தொடரில் இருந்து வெளியேறினார்.
- ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் பிரதாப் சிங் தோமர் தங்கப் பதக்கம் வென்றார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் நடந்து வருகின்றன.
ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் போட்டியில் இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் சிறப்பாக செயல்பட்டு தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் நீரஜ் குமார் வெள்ளியும், அகில் ஷியரோன் வெண்கலப் பதக்கங்களும் பெற்றனர்.
இந்த 3 இந்திய வீரர்களும் குழு போட்டியில் 1769 புள்ளிகளுடன் தங்கம் வென்றனர்.
- இஷான் கிஷன் அதிரடியாக ஆடி 20 பந்தில் அரை சதம் கடந்து அசத்தினார்.
- அவர் பவர் பிளே கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார்.
புதுடெல்லி:
டி20 உலகக் கோப்பைத் தொடரின் 18வது லீக் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அதில் இந்தியா, நமீபியா அணிகள் மோதின. டாஸ் வென்ற நமீபியா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக ஆடியது. சஞ்சு சாம்சன் 8 பந்தில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 22 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து இஷான் கிஷனுடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். அதிரடியில் மிரட்டிய இஷான் கிஷன் பவர் பிளேவின் கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி அசத்தினார். அவர் 20 பந்தில் அரைசதம் விளாசி அசத்தினார். அதனால் இந்திய அணி 6.5 ஓவரில் 100 ரன்களைக் கடந்து சாதனை படைத்தது.
இதன்மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக 100 ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.
கடந்த 2014-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி 7 ஓவரில் 100 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
- போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் காலிறுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி உடன் மோதினார்.
சிறப்பாக ஆடிய ஸ்வியாடெக் முதல் செட்டை 6-2 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட மரியா சக்காரி அடுத்த இரு செட்களை 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 209 ரன்கள் குவித்தது.
புதுடெல்லி:
டி20 உலகக் கோப்பை தொடரின் 18-வது லீக் போட்டியில் இந்தியா, நமீபியா அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 209 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் அதிரடியாக ஆடி 24 பந்தில் 61 ரன்கள் குவித்தார். பாண்ட்யா 28 பந்தில் 52 ரன்கள் குவித்தார்.
நமீபியாவின் ஜெர்ஹார்டு எராமஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.
210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நமீபியா களமிறங்கியது. ஸ்டீன் கேம்ப் 29 ரன்னும், ஜேன் பிரிலிங்க் 22 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், நமீபியா 18.2 ஓவரில் 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டும், பாண்ட்யா, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது.
- இதில் முன்னணி வீரரான கிரீஸ் நாட்டைச் சேர்ந்த சிட்சிபாஸ் தோல்வி அடைந்தார்.
ஆம்ஸ்டர்டாம்:
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், நெதர்லாந்தின் வான் டி ஜன்செல்ப் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஜன்செல்ப் 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் முன்னணி வீரரான சிட்சிபாஸ் 2வது சுற்றுடன் வெளியேறினார்.
- 122 மீட்டர் உயரத்தில் இருந்து போடப்பட்ட பந்தை ஜாஸ் பட்லர் பிடித்துள்ளார்.
- இந்த சாதனை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருக்கும் ஜாஸ் பட்லர் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
ட்ரோன் மூலம் 122 மீட்டர் உயரத்தில் இருந்து போடப்பட்ட பந்தை பிடித்து ஜாஸ் பட்லர் கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்த்துள்ளார்.
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் Highest Cricket Catch பிரிவில் இந்த சாதனை பதிவாகியுள்ளது. இந்த சாதனை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 24 பந்துகளில் 61 ரன்கள் அடித்து இஷான் கிஷன் ஆட்டமிழந்தார்.
- அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா அரைசதம் அடித்து 52 ரன்னில் ஆட்டமிழந்தார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் அமெரிக்காவை 29 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இந்நிலையில், இன்று இந்திய அணி 2-வது ஆட்டத்தில் நமீபியாவுடன் மோதுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
உடல் தகுதி இல்லாமல் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆடிய அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா டக் அவுட் ஆனார். இன்றைய போட்டியில் அவர் விளையாடவில்லை. அதனால் இஷான் கிஷனுடன் சஞ்சு சாம்சன் தொடக்க வரிசையில் விளையாடினார்.
இப்போட்டியில் 3 சிக்ஸர்கள் 1 பவுண்டரி அடித்து 22 ரன்னில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். இதையடுத்து அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 20 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். 24 பந்துகளில் 61 ரன்கள் அடித்து இஷான் கிஷன் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய திலக் வர்மா 25 ரன்னிலும் சூர்யகுமார் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து ஹர்திக் பாண்ட்யா - துபே ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து. அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா அரைசதம் அடித்து 52 ரன்னில் ஆட்டமிழந்தார்.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் அடித்தது.
- 3 சிக்ஸர்கள் 1 பவுண்டரி அடித்து 22 ரன்னில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார்.
- அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 20 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் அமெரிக்காவை 29 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இந்நிலையில், இன்று இந்திய அணி 2-வது ஆட்டத்தில் நமீபியாவுடன் மோதுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
உடல் தகுதி இல்லாமல் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆடிய அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா டக் அவுட் ஆனார். இன்றைய போட்டியில் அவர் விளையாடவில்லை. அதனால் இஷான் கிஷனுடன் சஞ்சு சாம்சன் தொடக்க வரிசையில் விளையாடினார்.
இப்போட்டியில் 3 சிக்ஸர்கள் 1 பவுண்டரி அடித்து 22 ரன்னில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். இதையடுத்து அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 20 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். 24 பந்துகளில் 61 ரன்கள் அடித்து இஷான் கிஷன் ஆட்டமிழந்தார். தற்போது வரை 7.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 104 ரன்கள் அடித்துள்ளது.
- அபிஷேக் சர்மா இன்றைய போட்டியில் அவர் விளையாடவில்லை
- 3 சிக்ஸர்கள் 1 பவுண்டரி அடித்து 22 ரன்னில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் அமெரிக்காவை 29 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இந்நிலையில், இன்று இந்திய அணி 2-வது ஆட்டத்தில் நமீபியாவுடன் மோதுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
உடல் தகுதி இல்லாமல் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆடிய அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா டக் அவுட் ஆனார். இன்றைய போட்டியில் அவர் விளையாடவில்லை. அதனால் இஷான் கிஷனுடன் சஞ்சு சாம்சன் தொடக்க வரிசையில் விளையாடினார்.
இப்போட்டியில் 3 சிக்ஸர்கள் 1 பவுண்டரி அடித்து 22 ரன்னில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். அதிரடியாக தொடங்கிய சஞ்சு சாம்சன் உடனே அவுட்டானது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சரியாக விளையாடாத சஞ்சு சாம்சன் அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. தற்போது மீண்டும் தனக்கு கிடைத்த சஞ்சு சாம்சன் பயன்படுத்திக்கொள்ளவில்லை .






