என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • மைக்கேல் ஜோன்ஸ் 20 பந்தில் 33 ரன்கள் சேர்த்தார்.
    • ரஷித் 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    டி20 உலகக் கோப்பையில் இன்றைய 2-வது போட்டி கொல்த்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் "சி" பிரிவில் இடம் பிடித்துள்ள இங்கிலாந்து- ஸ்காட்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஸ்காட்லாந்து முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் ஜார்ஜ் முன்சே 6 பந்தில் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மைக்கேல் ஜோன்ஸ் 20 பந்தில் 33 ரன்கள் சேர்த்தார்.

    கேப்டன் ரிச்சி பெரிங்டன் 32 பந்தில் 49 ரன்கள் விளாசினார். டாம் ப்ரூஸ் 24 ரன்களும், அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    ஆலிவர் டேவிட்சன் கடைசி வரை நின்று ஆட்டமிழக்காமல் 15 பந்தில் 20 ரன்கள் அடிக்க அயர்லாந்து 19.4 ஓவரில் 152 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி சார்பில் அதில் ரஷித் 3 விக்கெட் வீழ்த்தினார். ஆர்சச்ர் மற்றும் டாசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங் செய்து வருகிறது. 

    • அபிஷேக் சர்மா நமீபியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை.
    • பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டி20 உலகக் கோப்பையில் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி கொழும்பில் நாளை இரவு நடக்கிறது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் கொழும்பில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்திய அணியின் தொடக்க வீரரான அபிஷேக் சர்மா, உடல்நிலை சரியில்லாத காரணத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், டிஸ்சார்ஜ் ஆகி அணியில் இணைந்துள்ளார்.

    ஆனால், நாளைய போட்டியில் அவர் விளையாடலாம் எனத் தெரிகிறது. ஆனால், அணி நிர்வாகம் இதுவரை அதிகாரப்பூர்வமாக இது தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை. அபிஷேக் சர்மா இடம் பெறவில்லை என்றால் சஞ்சு சாம்சன் தொடர்ந்து அணியில் இடம் பிடிப்பார். இவர் நமீபியாவுக்கு எதிராக விளையாடினார்.

    இந்த நிலையில் அபிஷேக் சர்மா குறித்து பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா கூறுகையில் "அபிஷேக் சர்மா பெஸ்ட் (Best). மிகவும் எதிர்பார்க்கக் கூடிய இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் அவர் இடம் பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது. நாங்கள் சிறந்த வீரருக்கு எதிராக விளையாட விரும்புகிறோம்" என்றார்.

    • ராகுல் டிராவிட் இந்திய அணிக்காக 164 டெஸ்ட் மற்றும் 344 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
    • அனில் கும்ப்ளே 132 டெஸ்ட் மற்றும் 271 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானம். இந்த மைதானத்தில் உள்ள கேலரிக்கு அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் பெயர்களை சூட்டி கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் கவுரவித்துள்ளது.

    கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இருவரும் இந்தியா அணிக்காக தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ராகுல் டிராவிட் டெஸ்ட் அணியின் தடுப்புச் சுவர் என்று அழைக்கப்பட்டவர். அனில் கும்ப்ளே பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்தவர்.

    ராகுல் டிராவிட் இந்திய அணிக்காக 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 63 அரைசதம், 36 சதங்களுடன் 13288 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 52.31 ஆகும். 344 ஒருநாள் போட்டியில் 12 சதம், 83 அரைசதங்களுடன் 10889 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 39.16 ஆகும்.

    அனில் கும்ப்ளே 132 டெஸ்ட போட்டிகளில் விளையாடி 619 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 271 ஒருநாள் போட்டிகளில் 337 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    • அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்தது.
    • அதிகபட்சமாக கேப்டன் லோர்கன் டுச்செர் 94 ரன்கள் அடித்தார்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் அயர்லாந்து - ஓமன் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    முதற்படி முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் லோர்கன் டுச்செர் 94 ரன்கள் அடித்தார்.

    இதையடுத்து 236 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஓமன் அணி 18 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்து 96 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    இதன்மூலம் இந்த உலகக்கோப்பையில் அயர்லாந்து அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. 

    • பலாஷ் முச்சல் வேறொரு பெண்ணுடன் ஒரு அறையில் அந்தரங்கமாக இருந்தபோது பிடிபட்டார்.
    • ஆத்திரமடைந்த அங்கிருந்த இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் அவரை தாக்கினர்.

    இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், அவரது காதலர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான பலாஷ் முச்சலுக்கும் கடந்த நவ.23 திருமணம் நடைபெறவிருந்தது.

    ஆனால் ஸ்மிருதியின் தந்தைக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இந்த திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது. இறுதியில் திருமணம் கைவிடப்பட்டதாக மந்தனா அறிவித்தார்.

    பலாஷ் முச்சல்க்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பிருந்ததே திருமணம் கைவிடப்பட காரணம் என ஊகங்கள் எழுந்தன.

    இதற்கிடையே ஸ்மிருதியின் சிறுவயது நண்பரும் திரைப்பட தயாரிப்பாளருமான விக்ஞான் மானே தேசிய ஊடகம் ஒன்றுக்கு அண்மையில் பேட்டி அளித்தார்.

    அதில் பேசிய அவர், 2025 நவம்பரில் நடந்த திருமணச் சடங்குகளின் போது நான் அங்கு தான் இருந்தேன். பலாஷ் முச்சல் வேறொரு பெண்ணுடன் ஒரு அறையில் அந்தரங்கமாக இருந்தபோது பிடிபட்டார்.

    பலாஷின் இந்தச் செயலால் ஆத்திரமடைந்த அங்கிருந்த இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் அவரை தாக்கினர். அவரின் மொத்த குடும்பமும் ஏமாற்றுக்காரர்கள் தான்.

    படம் எடுக்க போவதாக பலாஷ் என்னிடம் ரூ.40 லட்சம் வாங்கினார். ஆனால் திருமண முறிவிற்குப் பிறகு பலாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்தப் பணத்தைத் தராமல் என்னை ஏமாற்றினர்" என்று தெரிவித்தார்.

    இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்று மறுத்த முச்சல், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு விக்ஞான் மானே மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த நீதிமன்றம், இரு தரப்பினருக்கும் இடையிலான தகராறு வணிக ரீதியானது என்றும், திருமணத்தை கலைத்தல் போன்ற தனிப்பட்ட விஷயங்களுடன் அதை இணைப்பது பொருத்தமற்றது என்றும் கூறியது.

    விக்யானின் கருத்துக்கள் அவதூறானவை என்று கூறி, முச்சல் குறித்து பொதுவெளியில் அவர் கருத்து வெளியிட தடை விதித்தது.

    மேலும், விக்யான் தனது குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க இரண்டு வாரங்கள் அவகாசம் அளித்த நீதிமன்றம், அடுத்த விசாரணையை மார்ச் 11க்கு ஒத்திவைத்தது.  

    • நாளைய ஆட்டத்தின்போது பாகிஸ்தான் வீரர்களிடம் இந்திய வீரர்கள் கைகுலுக்குவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
    • இந்தியாவுடன் விளையாட முதலில் மறுத்து பின்னர் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.

    கிரிக்கெட் போட்டியின்போது டாஸ் நிகழ்வில் இரு அணிகளின் கேப்டன்கள் கை குலுக்கி கொள்வது வழக்கமானது. இதே போல போட்டி முடிந்த பிறகும் வீரர்கள் கைகுலுக்கி கொள்வார்கள்.

    பகல்காம் தாக்குதல் சம்பவம் எதிரொலியாக பாகிஸ்தான் வீரர்களிடம் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய வீரர்கள் ஆசிய கோப்பை போட்டியின்போது கைகுலுக்க மறுத்துவிட்டனர்.

    மேலும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், அந்நாட்டு அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவருமான மோஷின் நக்வியிடம் இருந்து ஆசிய கோப்பையையும் வாங்க சூர்யகுமார் யாதவ் மறுத்துவிட்டார்.

    இந்த சர்ச்சை முடிந்த பிறகு இரு அணிகளும் 20 ஓவர் உலக கோப்பைக்காக நாளை மோதுகிறார்கள். இந்தியாவுடன் விளையாட முதலில் மறுத்து பின்னர் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.

    நாளைய ஆட்டத்தின்போது பாகிஸ்தான் வீரர்களிடம் இந்திய வீரர்கள் கைகுலுக்குவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பேச்சு வார்த்தையின்போது ஐ.சி.சி.யிடம் இந்த நிபந்தனையும் பாகிஸ்தான் முன்வைத்ததாக தகவல் வெளியானது. இதை ஐ.சி.சி. நிராகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    • வரும் 22 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன.
    • கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் 10,500 வீரர்களுக்காக சுமார் 3 லட்சம் காண்டம்கள் வழங்கப்பட்டன.

    2026 ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இத்தாலியின் கேம்ஸ் வில்லேஜில் கடந்த 6 ஆம் தேதி தொடங்கின. வரும் 22 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன.

    இந்த போட்டியில் கலந்துகொள்ளவும், பார்வையிடவும் உலகெங்கிலும் இருந்து பலர் வருகை தந்துள்ளனர்.

    கேம்ஸ் வில்லேஜில் 92 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,900 தடகள வீரர், வீராங்கனைகள் தங்கியுள்ளனர்.

    இந்நிலையில் வீரர்களுக்காக இலவசமாக வைக்கப்பட்டிருந்த காண்டம்கள் படு வேகமாக காலியாகி உள்ளது போட்டி ஏற்பாட்டாளர்களை மலைப்பில் ஆழ்த்தியுள்ளது.

    முதற்கட்டமாக வீரர்களுக்காக வில்லேஜில் சுமார் 10,000 காண்டம்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த இருப்பு 3 நாட்களில் காலியாகியுள்ளன.

    கடந்த 2024 பாரிஸ் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் 10,500 வீரர்களுக்காக சுமார் 3 லட்சம் காண்டம்கள் வழங்கப்பட்டன.

    குளிர்கால ஒலிம்பிக்கில் வீரர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் இந்த முறை குறைவாக வைக்கப்பட்டிருந்தது. ஆனால், வீரர்களின் அதீத தேவை காரணமாக காண்டம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    காண்டம் இருப்பு முழுமையாகத் தீர்ந்துவிட்டதாகவும், புதிய இருப்பு எப்போது வரும் என்று தெரியவில்லை என்றும் வீரர் ஒருவர் இத்தாலிய ஊடகதிற்கு பேட்டியளிக்கும்போது தெரிவித்துள்ளார்.

    புதிய இருப்பு விரைவில் கொண்டுவரப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்துள்ளனர்.

    ஒலிம்பிக் போட்டிகளில் பாதுகாப்பான உடலுறவை ஊக்குவிக்கவும், எச்.ஐ.வி போன்ற நோய்த்தொற்றுகளை தடுக்கவும் 1988 சியோல் ஒலிம்பிக்ஸ் முதல், வீரர்களுக்கு இலவசமாக காண்டம்கள் வழங்கும் வழக்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
    • செக் நாட்டு வீராங்கனை கரோலினா முசோவா அரையிறுதியில் வென்றார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் செக் நாட்டின் கரோலினா முசோவா, கிரீஸ் நாட்டின் மரியா சக்காரி உடன் மோதினார்.

    சிறப்பாக ஆடிய முசோவா 3-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

    இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் முசோவா, கனடாவின் எம்போகாவை சந்திக்கிறார்.

    • முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 20 ஓவரில் 169 ரன்கள் சேர்த்தது.
    • அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    கொழும்பு:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 19வது லீக் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. இதில் ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 169 ரன்கள் சேர்த்தது.பிரியன் பென்னட் அரை சதம் கடந்தார்.

    அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஜிம்பாப்வே அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிளெஸ்ஸிங் முசராபானி 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். டி20 உலகக் கோப்பையின் இரு போட்டிகளிலும் முசராபானி ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார்.

    இந்நிலையில், முசராபானி ஜிம்பாப்வே அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
    • கனடா வீராங்கனை விக்டோரியா எம்போகோ அரையிறுதியில் வென்றார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் கனடாவின் விக்டோரியா எம்போகோ, லாத்வியாவின் ஜெலெனா ஆஸ்டபென்கோ உடன் மோதினார்.

    சிறப்பாக ஆடிய விக்டோரியா எம்போகோ 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

    • ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது.
    • இதில் பிரான்ஸ் வீரரான யூகோ ஹம்பர்ட் காலிறுதியில் வெற்றி பெற்றார்.

    ஆம்ஸ்டர்டாம்:

    ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், நெதர்லாந்தின் பொடிக் வான் டெ உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய அலெக்ஸ் டி மினார் 3-6, 7-6 (7-4), 7-5 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் பிரான்ஸ் வீரர் யூகோ ஹம்பர்ட் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் கிறிஸ்டோபர் ஓ கன்னெலை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா 196 ரன்கள் குவித்தது.
    • நெதர்லாந்து 103 ரன்னில் சுருண்டது.

    டி20 உலகக் கோப்பையில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள அமெரிக்கா- நெதர்லாந்து அணிகள் மோதிய போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் களம் இறங்கிய அமெரிக்கா 6 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சைதேஜா முக்காமல்லா 51 பந்தில் 79 ரன்கள் விளாசினார். சுபம் ரஞ்சனே அதிரடியாக விளையாடி 24 பந்தில் 48 ரன்கள் குவித்தார். நெதர்லாந்து அணி சார்பில் பாஸ் டி லீட் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நெதர்லாந்து களம் இறங்கியது. அமெரிக்காவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நெதர்லாந்து 103 ரன்னில் சுருண்டது. இதனால் அமெரிக்கா 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நெதர்லாந்து அணியில் பாஸ் டி லீட் அதிகபட்சமாக 23 ரன்கள் சேர்தார். கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 20 ரன்கள் அடித்தார். அமெரிக்க அணி சார்பில் சர்மீத் சிங் 4 விக்கெட்டும், வான் ஸ்கால்வைக் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ×