என் மலர்
விளையாட்டு
- இந்தியா- பாகிஸ்தான் போட்டி இன்று கொழும்பில் நடக்கிறது
- இன்று மழை பெய்ய வாய்ப்ப இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
டி20 உலகக் கோப்பையில் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி கொழும்பில் இன்று இரவு நடக்கிறது.
இந்த போட்டியை முதலில் பாகிஸ்தான் புறக்கணிப்பதாக தெரிவித்தது. பின்னர் ஐசிசி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியாக பாகிஸ்தான் அரசு, அந்நாட்டு கிரிக்கெட் அணியை இந்தியாவுக்கு எதிராக விளையாட அனுமதித்தது.
இன்றைய போட்டியில் பாகிஸ்தான் வீரர் உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. உஸ்மான் தாரிக் பந்துவீசும் போது சில நொடிகள் நின்றுவிட்டு வீசுவது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில், உஸ்மான் தாரிக் குறித்து பேசிய பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா, "பாகிஸ்தான் அணியில் உள்ள 15 வீரர்களில் உஸ்மான் தாரிக்கும் ஒருவர். நாங்கள் அவரை அப்படித்தான் நடத்துகிறோம். தொடர்ந்து கடந்த சில மாதங்களாக அவர் சிறப்பாக பந்துவீசி வருகிறார்.
அவரது பந்துவீச்சு குறித்து பல்வேறு விவாதங்கள் நடந்து வருவதை நாங்கள் கவனத்தில் கொள்ளவில்லை. எங்கள் அணியின் முக்கிய துருப்புச் சீட்டு என அவரை கூறலாம்.
ஐசிசியின் விதிமுறைக்கு உட்பட்டே அவரது பந்து வீச்சு இருக்கிறது. இருப்பினும் அவரைப் பற்றி மக்கள் ஏன் இவ்வளவு அதிகம் பேசுகிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை" என்று தெரிவித்தார்.
- இந்தியா- பாகிஸ்தான் போட்டி இன்று கொழும்பில் நடக்கிறது
- மழை பெய்ய வாய்ப்ப இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
டி20 உலகக் கோப்பையில் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி கொழும்பில் இன்று இரவு நடக்கிறது.
இந்த போட்டியை முதலில் பாகிஸ்தான் புறக்கணிப்பதாக தெரிவித்தது. பின்னர் ஐசிசி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியாக பாகிஸ்தான் அரசு, அந்நாட்டு கிரிக்கெட் அணியை இந்தியாவுக்கு எதிராக விளையாட அனுமதித்தது.
கொழும்பில் இன்று மழை பெய்ய வாய்ப்ப இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆடுகளம் மூடப்பட்ட நிலையிலேயே இருக்கிறது.
இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் கொழும்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு சோதனைகள் தீவிரமாக நடைபெறும் என்பதால் ரசிகர்கள் 4 மணி நேரத்திற்கு முன்பே மைதானத்திற்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- இந்தியா- பாகிஸ்தான் போட்டி இன்று கொழும்பில் நடக்கிறது.
- மழை பெய்ய வாய்ப்ப இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
டி20 உலகக் கோப்பையில் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி கொழும்பில் இன்று இரவு நடக்கிறது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் கொழும்பில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த போட்டியை முதலில் பாகிஸ்தான் புறக்கணிப்பதாக தெரிவித்தது. பின்னர் ஐசிசி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியாக பாகிஸ்தான் அரசு, அந்நாட்டு கிரிக்கெட் அணியை இந்தியாவுக்கு எதிராக விளையாட அனுமதித்தது.
கொழும்பில் இன்று இரவு நடைபெறும் இந்த போட்டி குறித்து ரசிகர்களுக்கும் தற்போதில் இருந்தே பரபரப்பு தொற்றிக் கொண்டது. இந்த போட்டியை பற்றி பேசத் தொடங்கியுள்ளனர்.
கொழும்பில் ஜிம்பாப்வே- ஆஸ்திரேலியா போட்டி நடைபெற்ற அதே ஆடுகளத்தில்தான் இந்தியா- பாகிஸ்தான் போட்டி நடைபெறும் என செய்திகள் கசிந்துள்ளன. ஜிம்பாப்வே- ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 169 ரன்கள் குவித்தது. பின்னர் ஆஸ்திரேலியா 146 ரன்னில் சுருண்டு தோல்வியடைந்தது.
மேலும், அங்கு மழை பெய்ய வாய்ப்ப இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆடுகளம் மூடப்பட்ட நிலையிலேயே இருக்கிறது.
- ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது.
- இதில் கஜகஸ்தான் வீரரான அலெக்சாண்டர் பபள்க் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
ஆம்ஸ்டர்டாம்:
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் பெலிசம், கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய பெலிக்ஸ் ஆகர் 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் அலெக்ஸ் டி மினார், பெலிக்ஸ் ஆகரைச் சந்திக்க உள்ளார்.
- முதல் அரையிறுதிப் போட்டியில் உத்தரகாண்டும், கர்நாடகாவும் மோதுகின்றன.
- இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஜம்மு காஷ்மீரும், பெங்காலும் மோதுகின்றன.
புதுடெல்லி:
ரஞ்சி டிராபி தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் லீக் மற்றும் காலிறுதி போட்டிகள் சமீபத்தில் முடிந்தன.
இந்நிலையில், ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டிக்கான அரையிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன.
அரையிறுதிக்கு முன்னேறிய அணிகள்: உத்தரகாண்ட், கர்நாடகா, ஜம்மு காஷ்மீர், பெங்கால்
முதல் அரையிறுதிப் போட்டியில் உத்தரகாண்டும், கர்நாடகாவும் மோதுகின்றன.
இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஜம்மு காஷ்மீரும், பெங்காலும் மோதுகின்றன.
ரஞ்சி டிராபி தொடரின் இறுதிப்போட்டி பிப்ரவரி 24-ம் தேதி நடைபெறுகிறது.
- ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது.
- இதில் பிரான்ஸ் வீரரான யூகோ ஹம்பர்ட் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
ஆம்ஸ்டர்டாம்:
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், பிரான்ஸ் வீரர் யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அலெக்ஸ் டி மினார் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்தது.
- செக் நாட்டு வீராங்கனை கரோலினா முசோவா இறுதிச்சுற்றில் வென்றார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் செக் நாட்டின் கரோலினா முசோவா, கனடாவின் விக்டோரியா எம்போகோ உடன் மோதினார்.
சிறப்பாக ஆடிய முசோவா 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- மார்க்கிராம் ஆட்டமிழக்காமல் 44 பந்தில் 86 ரன்கள் குவித்தார்.
- தென்ஆப்பிரிக்கா 17.1 ஓவரில் இலக்கை எளிதாக எட்டியது.
டி20 உலகக் கோப்பையில் இன்றைய 3-வது போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி நியூசிலாந்து முதலில் களம் இறங்கி 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் பின் ஆலன் 17 பந்தில் 31 ரன்கள் விளாசினார். மார்க் சாப்மேன் 26 பந்தில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். யான்சன் 4 ஓவரில் 40 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.
பின்னர் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்காவின் மார்க்கிராம்- குயின்டன் டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மார்க்கிராம் தொடக்கம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டி காக் 14 பந்தில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 3 ஒவரில் தென்ஆப்பிரிக்கா 50 ரன்னைத் தொட்டது. மார்க்கிராம் 19 பந்தில் அரைசதம் அடித்தார். ரிக்கெல்டன், டெவால்டு பிரேவிஸ் தலா 21 ரன்கள் சேர்த்தனர்.
மார்க்கிராம் ஆட்டமிழக்காமல் 44 பந்தில் 86 ரன்களும், டேவிட் மில்லர் 17 பந்தில் 24 ரன்களும் அடிக்க தென்ஆப்பிரிக்கா 17.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- மார்க் சாப்மேன் 26 பந்தில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- பின் ஆலன் 17 பந்தில் 31 ரன்கள் விளாசினார்.
டி20 உலகக் கோப்பையில் இன்றைய 3-வது போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி நியூசிலாந்து டிம் செய்பெர்ட், பின் ஆலன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். டிம் செய்பெர்ட் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா 13 ரன்களில் வெளியேறினார்.
பின் ஆலன் 17 பந்தில் 31 ரன்கள் விளாசினார். கிளென் பிளிப்ஸ் 1 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தாலும் ரன்ரேட் 9-க்கு அதிகமாக இருந்தது.
5-வது விக்கெட்டுக்கு சாப்மேன் உடன் டேரில் மிட்செல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. குறிப்பாக மார்க் சாப்மேன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 26 பந்தில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது நியூசிலாந்து 14 ஓவரில் 138 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து டேரில் மிட்செல் 24 பந்தில் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அதன்பின் நியூசிலாந்தின் ரன்ரேட்டில் மந்தநிலை ஏற்பட்டது. சான்ட்னெர் 4 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார். இதனால் ஒரு கட்டத்தில் 200 ரன்கள் வரை செல்லும் என்ற நிலையில் இருந்த நியூசிலாந்து 170 ரன்களை தாண்டுமா? என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.
19-வது ஓவரில் யான்சன் 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இவர் 4 ஓவரில் 40 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்தார். போஸ் கடைசி ஓவரில் 10 ரன்கள் விட்டுக்கொடுக்க நியூசிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்துள்ளது. ஜேம்ஸ் நீஷம் 15 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடுவோம்.
- அதன்பின் கைக்குலுக்குவது குறித்து முடிவு செய்வோம்.
டி20 உலகக் கோப்பையில் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி கொழும்பில் நாளை இரவு நடக்கிறது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் கொழும்பில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த போட்டியை முதலில் பாகிஸ்தான் புறக்கணிப்பதாக தெரிவித்தது. பின்னர் ஐசிசி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியாக பாகிஸ்தான் அரசு, அந்நாட்டு கிரிக்கெட் அணியை இந்தியாவுக்கு எதிராக விளையாட அனுமதித்தது.
இந்த போட்டியில் இருஅணி வீரர்களும் எவ்வாறு நடந்து கொள்வார்கள்?. வீரர்கள் கைக்குலுக்கிக் கொள்வார்களா? போன்ற சந்தேகம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
கொழும்பில் இந்தியா- பாகிஸ்தான் போட்டி குறித்து சூர்யகுமார் பேட்டி அளித்தார். அப்போது பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்குவீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சூர்யகுமார் யாதவ் அளித்த பதில் பின்வருமாறு:-
24 மணி நேரம் காத்திருங்கள். நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவோம். அதன்பின் இது குறித்து முடிவு செய்வோம். நீங்கள் நன்றாக தூங்குங்கள். நன்றாக சாப்பிடுங்கள். 24 மணி நேரம் காத்திருங்கள்.
இவ்வாறு சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.
மேலும், நாளைய போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவார் என்றார்.
- அயர்லாந்து 152 ரன்கள் சேர்த்திருந்தது.
- இங்கிலாந்து 18.2 ஓவரில் இலக்கை எட்டியது.
டி20 உலகக் கோப்பையில் இன்றைய 2-வது போட்டி கொல்த்தாவில் நடைபெற்றது. இதில் "சி" பிரிவில் இடம் பிடித்துள்ள இங்கிலாந்து- ஸ்காட்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ஸ்காட்லாந்து முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் ஜார்ஜ் முன்சே 6 பந்தில் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மைக்கேல் ஜோன்ஸ் 20 பந்தில் 33 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ரிச்சி பெரிங்டன் 32 பந்தில் 49 ரன்கள் விளாசினார். டாம் ப்ரூஸ் 24 ரன்களும், அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
ஆலிவர் டேவிட்சன் கடைசி வரை நின்று ஆட்டமிழக்காமல் 15 பந்தில் 20 ரன்கள் அடிக்க அயர்லாந்து 19.4 ஓவரில் 152 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி சார்பில் அதில் ரஷித் 3 விக்கெட் வீழ்த்தினார். ஆர்சச்ர் மற்றும் டாசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர்களான பில் சால்ட் (2), ஜாஸ் பட்லர் (3) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து ஜேக்கப் பெத்தேல் உடன் டாம் பான்டன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. பெத்தேல் 28 பந்தில் 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த கேப்டன் ஹாரி ப்ரூக் 4 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.
இதனால் இங்கிலாந்துக்கு சற்று நெருக்கடி ஏற்பட்டது. இருந்தாலும் அடுத்த வந்த சாம் கர்ரன் 20 பந்தில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் டாம் பான்டன் 33 பந்தில் அரைசதம் விளாசினார்.
ஜேம்ஸ் பான்டன், வில் ஜேக்ஸ் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். 19-வது ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கும், 2-வது பந்தை பவுண்டரிக்கும் வில் ஜேக்ஸ் விரட்ட இங்கிலாந்து 18.2 ஓவரில் 155 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
டாம் பான்டன் 41 பந்தில் 63 ரன்களுடனும், வில் ஜேக்ஸ் 10 பந்தில் 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து சி பிரிவில் 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.
- இந்தியா- பாகிஸ்தான் போட்டி நாளை கொழும்பில் நடக்கிறது.
- ஜிம்பாப்வே- ஆஸ்திரேலியா போட்டி நடைபெற்ற ஆடுகளத்தில் நடக்க இருக்கிறது.
டி20 உலகக் கோப்பையில் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி கொழும்பில் நாளை இரவு நடக்கிறது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் கொழும்பில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த போட்டியை முதலில் பாகிஸ்தான் புறக்கணிப்பதாக தெரிவித்தது. பின்னர் ஐசிசி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியாக பாகிஸ்தான் அரசு, அந்நாட்டு கிரிக்கெட் அணியை இந்தியாவுக்கு எதிராக விளையாட அனுமதித்தது.
கொழும்பில் நாளை நடைபெறும் இந்த போட்டி குறித்து ரசிகர்களுக்கும் தற்போதில் இருந்தே பரபரப்பு தொற்றிக் கொண்டது. இந்த போட்டியை பற்றி பேசத் தொடங்கியுள்ளனர்.
கொழும்பில் ஜிம்பாப்வே- ஆஸ்திரேலியா போட்டி நடைபெற்ற அதே ஆடுகளத்தில்தான் இந்தியா- பாகிஸ்தான் போட்டி நடைபெறும் என செய்திகள் கசிந்துள்ளன. மேலும், அங்கு மழை பெய்ய வாய்ப்ப இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆடுகளம் மூடப்பட்ட நிலையிலேயே இருக்கிறது.
இதற்கிடையே இந்த போட்டியை ஐசிசி தலைவர் ஜெய் ஷா, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் மோசின் நக்வி, வங்கதேசம் கிரிக்கெட் தலைவர் அமினுல் இஸ்லாம் ஆகியோர் நேரில் சென்று பார்க்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜிம்பாப்வே- ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 169 ரன்கள் குவித்தது. பின்னர் ஆஸ்திரேலியா 146 ரன்னில் சுருண்டது.






