என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித்தொடரை வெஸ்ட் இண்டீஸ் 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
    • இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து 49.5 ஓவரில் 288 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டியில் விளையாடியது. முதல் 2 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்றது. நேற்று 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நடந்தது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 308 ரன் எடுத்தது. கைல் மேயர்ஸ் (120 ரன்), ஷமர்க் புருக்ஸ் (101ரன்) தங்களது முதல் சதத்தை அடித்தனர்.

    இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து 49.5 ஓவரில் 288 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் 20 ரன் வித்தியாசத்தில் வென்றது. நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக மேக்ஸ் ஓடவுட் 89 ரன்னும், விக்ரம் ஜித்சிங் 54 ரன்னும், மூசா அகமத் 42 ரன்னும் எடுத்தனர்.

    இந்த வெற்றி மூலம் ஒரு நாள் போட்டித்தொடரை வெஸ்ட் இண்டீஸ் 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

    • 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக ஹர்த்திக் பாண்ட்யா 20 ஓவர் போட்டிகளில் மட்டுமே விளையாட வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
    • ஹர்த்திக் பாண்ட்யாவை ஒரு நாள் போட்டிகளில் விளையாட வைக்கும் அபாயத்தை எடுக்கக்கூடாது.

    மும்பை:

    15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் 20 ஓவர் போட்டியில் ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வென்றது. தனது அறிமுக சீசனிலேயே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

    காயத்தில் இருந்து மீண்டு வந்த ஹர்த்திக் பாண்ட்யா பேட்டிங், பந்துவீச்சு, கேப்டன் என அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டதால் அவருக்கு பாராட்டு குவிந்தது. இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

    இந்தநிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக ஹர்த்திக் பாண்ட்யா 20 ஓவர் போட்டிகளில் மட்டுமே விளையாட வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஹர்த்திக் பாண்ட்யா ஒரு பேட்ஸ்மேனாகவோ அல்லது ஆல்-ரவுண்டராகவோ மீண்டும் அணிக்குள் வருவார். 2 ஓவர் வீச முடியாத அளவுக்கு அவர் மோசமாக காயம் அடைந்ததாக நான் நினைக்கவில்லை.

    அவருக்கு போதுமான ஓய்வு அளிக்க வேண்டும். உலக கோப்பை போட்டிக்கு தயாராகும் விதமாக அவர் 20 ஓவர் போட்டிகளில் மட்டுமே விளையாட வேண்டும். அவரை ஒரு நாள் போட்டிகளில் விளையாட வைக்கும் அபாயத்தை எடுக்கக்கூடாது.

    உலக கோப்பைக்கு முன்பாக சில மாதங்களுக்கு 20 ஓவர் கிரிக்கெட்டில் மட்டுமே ஹர்த்திக் பாண்ட்யா விளையாட வேண்டும். அவர் இரண்டு வீரர்களுக்கான பணியை செய்கிறார். ஒரு பேட்ஸ்மேனாக விளையாடினால் அவர் முதல் நான்கு அல்ல ஐந்து இடங்களுக்குள் களம் இறங்க வேண்டும். ஆல்-ரவுண்டராக ஐந்து, ஆறு அல்லது நான்காவது வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆஷிஷ் நெஹ்ரா ஐபிஎல்-லின் சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவர் என குஜராத் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் கூறியுள்ளார்.

    அகமதாபாத், நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் முறையாக களமிறங்கி சிறப்பாக விளையாடியது. புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்ததுடன், இறுதிப்போட்டிக்குள் நுழைந்து கோப்பையையும் தனதாக்கியது. இந்த சாதனைக்கு அந்த அணியின் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதை கூறினாலும், பயிற்சியாளர்களின் பங்களிப்பும் அளப்பரியது. அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஷிஷ் நெஹ்ரா உள்ளார்.

    அவரை அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளரும் ஆலோசகருமான கேரி கிர்ஸ்டன் புகழ்ந்துள்ளார். நெஹ்ரா குறித்து அவர் கூறும்போது, ஆஷிஷ் நெஹ்ரா ஐபிஎல்-லின் சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவராக விளங்குகிறார்.

    அவர் எனது நெருங்கிய நண்பர். நாங்கள் இருவரும் ஒன்றாக நீண்ட பயணம் செய்துள்ளோம்" என்று கிர்ஸ்டன் கூறினார். "அவர் தனது வீரர்களைப் பற்றி எப்போதும் சிந்தித்து அவர்களுக்கு எப்படி உதவ முடியும் எனது மனதுடன் பயிற்சியளிக்கிறார். மேலும் சிறப்பாக விளையாடுவது எப்படி என்பது பற்றி எப்போதும் தனது வீரர்களுடன் பேசிக் கொண்டிருப்பார்" என்று கிர்ஸ்டன் கூறினார்.

    • தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடருக்கு 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
    • இதில் கேப்டன் ரோகித்சர்மா, விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டித்தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி வருகிற 9-ந்தேதி டெலியில் நடக்கிறது.

    பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்கா அணி கடந்த 2-ந்தேதி டெல்லி வந்தடைந்தது. தென்ஆப்பிரிக்கா அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடருக்கு 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் கேப்டன் ரோகித்சர்மா, விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    கேப்டனாக லோகேஷ் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். ஹர்த்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ் ஆகியோர் அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளனர்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அசத்திய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர்கள் இன்று டெல்லிக்கு வருகிறார்கள். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும். அதன் முடிவில் வீரர்கள் பயிற்சியை தொடங்குவார்கள். இந்திய அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

    லோகேஷ் ராகுல் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன்) இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஹர்த்திக் பாண்ட்யா, தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர், தினேஷ் கார்த்திக், சாகல், புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், ஹர்சல் பட்டேல் ரவி பிஷ்னோய், அவெஷ்கான், அர்ஷ்தீப்சிங், உம்ரான் மாலிக்.

    14-வது முறையாக பிரெஞ்சு ஓபனை ரபெல் நடால் வெல்வாரா என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்ப்பில் உள்ளனர்.

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ரபெல் நடாலுடன் கேஸ்பர் ரூட் இன்று மோதுகிறார். பாரீஸ், 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கி விட்ட இந்த டென்னிஸ் திருவிழாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது அரைஇறுதியில் 13 முறை சாம்பியனும், 5-ம் நிலை வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), தரவரிசையில் 3-வது இடம் வகிப்பவருமான ஒலிம்பிக் சாம்பியன் (ஜெர்மனி) அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் மோதினார்.

    இதில் ரபெல் நடால் 7-6 (10-8), 6-6 என்ற கணக்கில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து 'களிமண் தரை போட்டியின் மன்னன்' என்று வர்ணிக்கப்படும் நடால் 14-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இந்த நிலையில், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் நாட்டின் ரபெல் நடாலுடன், நார்வேயின் கேஸ்பர் ரூட் இன்று மோதுகிறார்.

    இறுதிப்போட்டி என்பதால் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை யார்? வெல்வார்கள் என மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 14வது முறையாக பிரெஞ்சு ஓபனை ரபெல் நடால் வெல்வாரா என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்ப்பில் உள்ளனர்.

    • இது, இகா ஸ்வியாடெக் வெல்லும் இரண்டாவது பிரெஞ்சு ஓபன் பட்டம்.
    • தொடர்ந்து 35 போட்டிகளில் வெற்றிகளை குவித்த பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    பாரீஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ காப்பை எதிர்கொண்டார்.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்வியாடெக் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார் . இது அவர் வெல்லும் இரண்டாவது பிரெஞ்சு ஓபன் பட்டம் ஆகும்.

    பிரெஞ்ச் ஓபன் இறுதிப் போட்டியில் பெற்ற வெற்றி மூலம், தொடர்ந்து 35 போட்டிகளில் வெற்றிகளை குவித்த பெருமையை இகா ஸ்வியாடெக் பெற்றுள்ளார். இதன் மூலம் வீனஸ் வில்லியம்சின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.


    காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேதான் மைதானத்திற்குள் வந்ததாக தெரிவித்தார்.
    பாரிஸ்:

    பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் போட்டியின் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், குரோஷிய வீரர் மரின் சிலிச் மோதினர்.

    இந்த போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பெண் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்து தனது கழுத்தை, டென்னிஸ் வலையில் கட்டிக்கொண்டார். அவரது ஆடையில் ‘இன்னும் 1028 நாட்கள் மட்டுமே இருக்கிறது’ என ஐநா குறிப்பிட்ட காலநிலை குறித்த எச்சரிக்கை வாசகம் அதில் எழுதியிருந்தது.

    இதையடுத்து அவரை பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்து சென்றனர். இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேதான் மைதானத்திற்குள் வந்ததாக தெரிவித்தார். 
    36 வயதான நடால் ஒட்டுமொத்தமாக 21 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று (ஆஸ்திரேலிய ஓபன் 2, பிரெஞ்சு ஓபன் 13, விம்பிள்டன் 2, அமெரிக்க ஓபன் 4) முதல் இடத்தில் இருக்கிறார்.
    பாரீஸ்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த அரை இறுதி ஆட்டம் ஒன்றில் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 13 முறை வென்றவரும், 5-வது வரிசையில் உள்ளவருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) - மூன்றாம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வரேவ் (ஜெர்மனி) மோதினார்கள்.

    முதல் செட்டை நடால் 7-6 (10-8) என்ற கணக்கில் போராடி வென்றார். 2-வது செட் 6-6 என்ற சமநிலை இருந்த போது ஸ்வரேவ் காயத்தால் விலகினார். இதனால் நடால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    அவர் 30-வது முறையாக கிராண்ட்சிலாம் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

    2-வது அரை இறுதியில் 8-வது வரிசையில் உள்ள கேஸ்பர் ரூட் (நார்வே)-2014-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் சாம்பியனான சிலிச் (குரோஷியா) மோதினார்கள்.

    இதில் கேஸ்பர்ரூட் 3-6, 6-4, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் 20-வது வரிசையில் உள்ள சிலிச்சை தோற்கடித்து முதல் முறையாக கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

    23 வயதான கேஸ்பர் ரூட் இதற்கு முன்பு கடந்த ஆஸ்திரேலிய ஓபனில் 4-வது சுற்று வரை நுழைந்ததே சிறந்ததாக இருந்தது.

    நார்வேயை சேர்ந்த ஒருவர் கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவது இதுவே முதல் முறையாகும். அந்த பெருமையை கேஸ்பர் ரூட் பெற்றார்.

    இந்திய நேரப்படி நாளை மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் ரபெல் நடால்-கேஸ்பர் ரூட் மோதுகிறார்கள்.

    களிமண் தரையான பிரெஞ்சு ஓபன் போட்டியில் விளையாடுவதில் நடால் வல்லவர். அவர் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 13 முறை வென்று சாதனை படைத்துள்ளார். அவர் 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் பட்டம் வென்று இருந்தார். அவர் பிரெஞ்சு ஓபன் போட்டியில் 2009-ல் 4-வது சுற்றிலும், 2015-ல் கால் இறுதியிலும், 2016-ல் 3-வது ரவுண்டிலும், 2021-ல் அரை இறுதியிலும் தோற்று இருந்தார்.

    36 வயதான நடால் ஒட்டுமொத்தமாக 21 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று (ஆஸ்திரேலிய ஓபன் 2, பிரெஞ்சு ஓபன் 13, விம்பிள்டன் 2, அமெரிக்க ஓபன் 4) முதல் இடத்தில் இருக்கிறார்.

    அவருக்கு அடுத்தபடியாக பெடரர் (சுவிட்சர்லாந்து), ஜோகோவிச் (செர்பியா) தலா 20 கிராண்ட்சிலாம் பட்டங்களுடன் 2-வது இடத்தில் உள்ளனர். நடால் ஒட்டுமொத்தமாக 22-வது பட்டத்தையும், பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 14-வது முறையாகவும் நாளை வெல்வாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    நார்வே வீரர் கேஸ்பர் ரூட் முதல் தடவையாக கிராண்ட்சிலாம் பட்டம் வென்று சாதிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

    இந்திய நேரப்படி இன்று 6.30 மணிக்கு நடைபெறும் பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து)-பதினெட்டாம் வரிசையில் இருக்கும் கோகோ கவூப் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.

    நடப்பு சாம்பியன் ஸ்வியா டெக் 2-வது கிராண்ட்சிலாம் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார். 18 வயதான கோகோ முதல் கிராண்ட்சிலாம் பட்டத்துக்காக காத்திருக்கிறார். 
    அர்ஜூன் தெண்டுல்கருக்கு குடும்ப பெயரால் நெருக்கடி இருப்பதாகவும், அவரை தெண்டுல்கருடன் ஒப்பிடக் கூடாது என்றும் முன்னாள் வீரர் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

    மும்பை:

    கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர். பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். அவரது மகன் அர்ஜூன் தெண்டுல்கர்.

    தந்தையை போலவே அவரது மகன் அர்ஜூன் தெண்டுல்கருக்கும் கிரிக்கெட் விளையாட்டு மீது ஆர்வம் ஏற்பட்டது. இடது கை பந்து வீச்சாளரான அவர் உள்ளூர் போட்டியில் மும்பை அணிக்காக ஆடி வருகிறார்.

    22 வயதான அவர் ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரூ.30 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டார். ஆனால் ஒரு ஆட்டத்தில் கூட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த ஆண்டும் இந்த நிலைதான்.

    இதுகுறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இது குறித்து மும்பை பந்துவீச்சு பயிற்சியாளர் ஷேன் பாண்ட் கூறும்போது, ‘மும்பை போன்ற அணியில் இடம் பெறுவதும், ஆடும் லெவலில் இடம்பிடிப்பதும் வெவ்வேறானது. அணிக்காக இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். அர்ஜூன் தெண்டுல்கர் தனது ஆட்டத்திறனை மேம்படுத்திக் கொண்டால் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

    இந்த நிலையில் அர்ஜூன் தெண்டுல்கருக்கு குடும்ப பெயரால் நெருக்கடி இருப்பதாகவும், அவரை தெண்டுல்கருடன் ஒப்பிடக் கூடாது என்றும் முன்னாள் வீரர் கபில்தேவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    தெண்டுல்கரின் பேட்டிங் தரத்தை எந்த ஒரு நவீன கால மேட்ஸ்மேனுடனும் இணைக்க இயலாது. அவருடைய மகனாக இருந்தாலும் ஒப்பிடக்கூடாது. அவரது வயதை கருத்தில் கொண்டு விளையாட விடுங்கள். குடும்ப பெயரால் அவருக்கு நெருக்கடி இருக்கிறது.

    அவருக்கு நாம் அழுத்தம் கொடுக்க கூடாது. அவரிடம் எதுவும் சொல்ல நாம் யார்? அவரிடம் நான் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்.

    எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களால் உங்கள் தந்தையை போல் 50 சவீதம் கூட ஆக முடிந்தால் நன்றாக இருக்கும். சச்சின் தெண்டுல்கர் மிகவும் சிறந்தவர் என்பதால் எங்கள் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.

    இவ்வாறு கபில்தேவ் கூறினார்.
    இங்கிலாந்துக்கு எதிரான முதக் டெஸ்டின் 2வது இன்னிங்சில் நியூசிலாந்தின் மிட்செல், பிளெண்டல் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 180 ரன்கள் சேர்த்துள்ளது.
    லண்டன்:

    இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 132 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் காலின் டி கிராண்ட்ஹோம் ஓரளவு தாக்குப்பிடித்து 42 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன், பாட்ஸ் தலா 4 விக்கெட்டும், பிராட், ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 141 ரன்னில் ஆல் அவுட்டானது. ஜாக் கிராவ்லி 43 ரன்களும், அலெக்ஸ் லீஸ் 25 ரன்களும் எடுத்தனர்.

    நியூசிலாந்து சார்பில் டிம் சவுதி 4 விக்கெட், டிரண்ட் போல்ட் 3 விக்கெட், கைல் ஜாமிசன் 2 விக்கெட், காலின் டி கிரான்ட்ஹோம் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    9 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. 56 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட் இழந்து தத்தளித்தது.

    அடுத்து இறங்கிய டேரில் மிட்செல், டாம் பிளெண்டல் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இருவரும் அரை சதம் கடந்தனர். 

    இரண்டாம் நாள் முடிவில் நியூசிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்தது. மிட்செல் 97 ரன்னுடனும், பிளெண்டல் 90 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்தை விட 229 ரன்கள் முன்னிலை பெற்றது நியூசிலாந்து.
    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு 14-வது முறையாக ரபேல் நடால் முன்னேறி உள்ளார்.
    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரபேல் நடால், ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரெவ் ஆகியோர் மோதினர்.

    முதல் சுற்றை 7-6 என்ற செட் கணக்கில் நடால் கைப்பற்றினார். விறுவிறுப்பாக நடந்த 2-வது சுற்றில் ஸ்வெரேவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. காயத்தால் பாதிக்கப்பட்ட அவரால் இந்தப் போட்டியை தொடர முடியவில்லை. இதனால் போட்டியிலிருந்து ஸ்வெரெவ் விலகினார். இதையடுத்து, இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதிப் போட்டியில் நார்வேயின் காஸ்பர் ரூட், குரோசியாவின் மெரின் சிலிச்சுடன் மோதினார். முதல் செட்டை 6-3 என சிலிச் கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரூட் 2,3 மற்றும் 4-வது செட்டை 6-4, 6-2, 6-2 என கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ரபேல் நடாலும், காஸ்பர் ரூட்டும் மோத உள்ளனர்.
    3வது வெற்றியை பதிவு செய்த ஆனந்த், புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.
    நார்வே:

    நார்வேயில் நடைபெற்று வரும் பிலிட்ஸ் சென்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்றுள்ளார். 

    இத்தொடரில் 10 வீரர்கள் மோதும் கிளாசிக்கல் சுற்றில் விளையாடி வரும் விஸ்வநாதன் ஆனந்த், முதல் இரண்டு சுற்றுக்களில் பிரான்ஸ் வீரர் மாக்சிம் வச்சியர்-லாக்ரேவ் மற்றும் வெசெலின் டோபலோவ் (பல்கேரியா) ஆகியோரை தோற்கடித்தார். இந்நிலையில்   இன்று நடைபெற்ற கிளாசிக்கல் பிரிவில் மூன்றாவது சுற்றில் சீனாவின் வாங் ஹாவை ஆனந்த் வீழ்த்தினார்.

    இதன்மூலம் 3வது வெற்றியை பதிவு செய்த ஆனந்த், புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.
    ×