search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    உலக கோப்பைக்கு முன்பாக ஹர்த்திக் பாண்ட்யா 20 ஓவர் போட்டியில் மட்டுமே விளையாட வேண்டும்- ரவி சாஸ்திரி
    X

    ரவி சாஸ்திரி, ஹர்த்திக் பாண்ட்யா

    உலக கோப்பைக்கு முன்பாக ஹர்த்திக் பாண்ட்யா 20 ஓவர் போட்டியில் மட்டுமே விளையாட வேண்டும்- ரவி சாஸ்திரி

    • 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக ஹர்த்திக் பாண்ட்யா 20 ஓவர் போட்டிகளில் மட்டுமே விளையாட வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
    • ஹர்த்திக் பாண்ட்யாவை ஒரு நாள் போட்டிகளில் விளையாட வைக்கும் அபாயத்தை எடுக்கக்கூடாது.

    மும்பை:

    15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் 20 ஓவர் போட்டியில் ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வென்றது. தனது அறிமுக சீசனிலேயே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

    காயத்தில் இருந்து மீண்டு வந்த ஹர்த்திக் பாண்ட்யா பேட்டிங், பந்துவீச்சு, கேப்டன் என அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டதால் அவருக்கு பாராட்டு குவிந்தது. இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

    இந்தநிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக ஹர்த்திக் பாண்ட்யா 20 ஓவர் போட்டிகளில் மட்டுமே விளையாட வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஹர்த்திக் பாண்ட்யா ஒரு பேட்ஸ்மேனாகவோ அல்லது ஆல்-ரவுண்டராகவோ மீண்டும் அணிக்குள் வருவார். 2 ஓவர் வீச முடியாத அளவுக்கு அவர் மோசமாக காயம் அடைந்ததாக நான் நினைக்கவில்லை.

    அவருக்கு போதுமான ஓய்வு அளிக்க வேண்டும். உலக கோப்பை போட்டிக்கு தயாராகும் விதமாக அவர் 20 ஓவர் போட்டிகளில் மட்டுமே விளையாட வேண்டும். அவரை ஒரு நாள் போட்டிகளில் விளையாட வைக்கும் அபாயத்தை எடுக்கக்கூடாது.

    உலக கோப்பைக்கு முன்பாக சில மாதங்களுக்கு 20 ஓவர் கிரிக்கெட்டில் மட்டுமே ஹர்த்திக் பாண்ட்யா விளையாட வேண்டும். அவர் இரண்டு வீரர்களுக்கான பணியை செய்கிறார். ஒரு பேட்ஸ்மேனாக விளையாடினால் அவர் முதல் நான்கு அல்ல ஐந்து இடங்களுக்குள் களம் இறங்க வேண்டும். ஆல்-ரவுண்டராக ஐந்து, ஆறு அல்லது நான்காவது வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×