என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூட்"

    • சென்னை மற்றும் பிற முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
    • அக்டோபர் மாதம் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

    நடிகர் கவுதம் ராம் கார்த்திக் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'ரூட் - ரன்னிங் அவுட் ஆஃப் டைம்'. ரஜினிகாந்தின் 'கோச்சடையான்' படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய அறிமுக இயக்குநர் சூரியபிரதாப் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் நடிகை அபர்சக்தி குரானா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். நடிகை பவ்யா திரிகா, கவுதம் ராம் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    இப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன், பாவ்னி ரெட்டி, லிங்கா, ஆர்.ஜே.ஆனந்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அறிவியல் கற்பனையும், உணர்ச்சியைப் பிணைந்து கலந்த ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லராக இப்படம் உருவாகி உள்ளது. சென்னை மற்றும் பிற முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, அக்டோபர் மாதம் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில், 'ரூட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டார். இதுதொடர்பான புகைப்படங்களை வெளியிட்ட நடிகர் கவுதம் ராம் கார்த்திக், 'ரூட்டின்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிடுவது உண்மையிலேயே நம்பமுடியாத அனுபவம். 2026 ஐத் தொடங்க என்ன ஒரு யதார்த்தமான வழி!

    அவரது ஆசீர்வாதங்களுடன், ரூட் ஒரு காலமற்ற பயணத்தில் அடியெடுத்து வைக்கிறது என்று கூறியுள்ளார். 



    • சென்னை மற்றும் பிற முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
    • கடந்த மாதம் படிப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

    நடிகர் கவுதம் ராம் கார்த்திக் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'ரூட் - ரன்னிங் அவுட் ஆஃப் டைம்'. ரஜினிகாந்தின் 'கோச்சடையான்' படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய அறிமுக இயக்குநர் சூரியபிரதாப் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் நடிகை அபர்சக்தி குரானா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். நடிகை பவ்யா திரிகா, கவுதம் ராம் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    இப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன், பாவ்னி ரெட்டி, லிங்கா, ஆர்.ஜே.ஆனந்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அறிவியல் கற்பனையும், உணர்ச்சியைப் பிணைந்து கலந்த ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லராக இப்படம் உருவாகி உள்ளது. சென்னை மற்றும் பிற முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, கடந்த மாதம் படிப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகர் கவுதம் ராம் கார்த்திக் 'ரூட்' படத்தின் டப்பிங் பணியை நிறைவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து இன்னும் சில நாட்கள் படம் வெளியீடு குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • பாலிவுட் நட்சத்திரம் அபார்ஷக்தி குரானா, ROOT படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம்.
    • ‘ROOT – Running Out of Time’ இணையும் கௌதம் ராம் கார்த்திக் மற்றும் அபார்ஷக்தி குரானா.

    'நாளைய இயக்குநர் – சீசன் 1' மூலம் கவனத்தை ஈர்த்த சூரியபிரதாப் 'ROOT – Running Out of Time' படத்தை இயக்குகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கோச்சடையான்' படத்தில் அசோசியேட் டைரக்டராக பணியாற்றியவர்.

    வெரஸ் ப்ரொடக்ஷன்ஸ் தனது முக்கிய படமான 'ROOT – Running Out Of Time' எனும் புதிய Sci-Fi கிரைம் த்ரில்லரை அறிவித்துள்ளது.

    படத்தின் முதன்மை கதாநாயகனாக கௌதம் கார்த்திக் நடிக்கிறார். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவரின் இந்த புதிய முயற்சி எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் உள்ளது. நடிகை பவ்யா த்ரிகா, கௌதம் ராம் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார்.

    அவருடன் இணைந்து, இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில், பாலிவுட் பிரபல நடிகர் அபார்ஷக்தி குரானா நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

    இந்தி சினிமாவில் 'Stree', 'Helmet', 'Luka Chuppi' போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்த இவர், இப்போது தென்னிந்திய சினிமாவில் கால்பதிக்கிறார்.

    இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.

    இந்தப் படம், அறிவியல் கற்பனையும், உணர்ச்சியைப் பிணைந்து கலந்த ஒரு வித்தியாசமான கிரைம் த்ரில்லராக உருவாகிறது.

    இயக்குநர் சூரியபிரதாப் கூறுகையில்," "'ROOT' எனும் இந்தக் கதை ஆரம்பத்திலிருந்தே எனக்கு ஒரு முக்கியமான கனவுப் பிராஜெக்ட். ஒரு கடிகாரம் ஓடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் அமைந்த கிரைம் த்ரில்லரை, அறிவியல் பின்னணியுடன், உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்களோடு சேர்த்து உருவாக்கும் முயற்சி தான் இந்த படம்.

    கௌதம் ராம் கார்த்திக், கதாபாத்திரத்தின் ஆழத்தை உணர்ந்து காவல் அதிகாரியாக முழு ஈடுபாட்டையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

    அபார்ஷக்தி குரானா, தமிழில் தனது முதல் படத்திற்கே மிக உயர்ந்த செயல்திறன் கொண்ட நடிகராக உருவெடுக்கிறார்" என்றார்.

    • மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடந்துவருகிறது.
    • இதில் செர்பிய வீரர் ஜோகோவிச் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மான்டி கார்லோ:

    களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்துவருகிறது.

    இதில் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலிய வீரர் டி மினாருடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 7-5, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் அரையிறுதியில் ஜோகோவிச், நார்வே வீரர் காஸ்பர் ரூடுடன் மோதுகிறார். மற்றொரு அரையிறுதியில் சிட்சிபாஸ், சின்னருடன் மோதுகிறார்.

    • மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடந்துவருகிறது.
    • இதில் செர்பிய வீரர் ஜோகோவிச் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார்.

    மான்டி கார்லோ:

    களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்துவருகிறது.

    இதில் ஒற்றையர் பிரிவின் 2வது அரையிறுதியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், நார்வே வீரர் காஸ்பர் ரூடுடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 4-6, 6-1, 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் காஸ்பர் ரூட், சிட்சிபாசுடன் மோத உள்ளார்.

    • சிட்சிபாஸ் அரையிறுதியில் 2-ம் நிலை வீரரான சின்னரை 2-1 என வீழ்த்தியிருந்தார்.
    • காஸ்பர் ரூட் 1-ம் நிலை வீரரான ஜோகோவிச்சை 2-1 என வீழ்த்தியிருந்தார்.

    மான்டி கார்லோ டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இதில் 8-ம் நிலை தரநிலை வீரரான நார்வேயினி் காஸ்பர் ரூட்- 12-ம் தரநிலை வீரரான கிரீஸ் நாட்டின் சிட்சிபாஸ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

    தரநிலையில் 1-ம் இடம் பிடித்திருந்த ஜோகோவிச்சை வீழ்த்தி ரூட், 2-ம் நிலை வீரர் சின்னரை வீழ்த்தியிருந்த சிட்சிபாஸ்க்கு கடும் நெருக்கடி கொடுப்பார். இதனால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் எனக் கருதப்பட்டது.

    ஆனால் சிட்சிபாஸ் முதல் செட்டை 6-1 எனவும், 2-வது செட்டை 6-4 எனவும் எளிதாக கைப்பற்றி ரூட்டை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

    ரூட் அரையிறுதியில் ஜோகோவிச்சை 6-4, 1-6, 6-4 என வீழ்த்தியிருந்தார். சிட்சிபாஸ் சின்னரை 6-4, 3-6, 6-4 என வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு 14-வது முறையாக ரபேல் நடால் முன்னேறி உள்ளார்.
    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரபேல் நடால், ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரெவ் ஆகியோர் மோதினர்.

    முதல் சுற்றை 7-6 என்ற செட் கணக்கில் நடால் கைப்பற்றினார். விறுவிறுப்பாக நடந்த 2-வது சுற்றில் ஸ்வெரேவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. காயத்தால் பாதிக்கப்பட்ட அவரால் இந்தப் போட்டியை தொடர முடியவில்லை. இதனால் போட்டியிலிருந்து ஸ்வெரெவ் விலகினார். இதையடுத்து, இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதிப் போட்டியில் நார்வேயின் காஸ்பர் ரூட், குரோசியாவின் மெரின் சிலிச்சுடன் மோதினார். முதல் செட்டை 6-3 என சிலிச் கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரூட் 2,3 மற்றும் 4-வது செட்டை 6-4, 6-2, 6-2 என கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ரபேல் நடாலும், காஸ்பர் ரூட்டும் மோத உள்ளனர்.
    ×