என் மலர்
விளையாட்டு
- ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அணியில் இடம் பிடித்துள்ளார்.
- ஜெய்ஸ்வாலுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்த உடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடக்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின்போது, ஒருநாள் அணி கேப்டனான சுப்மன் கில்லுக்கு கழுத்தில் வலி ஏற்பட்டது. இதனால் முதல் போட்டியில் அதன்பின் பேட்டிங் செய்யவில்லை. இரண்டாவது போட்டியிலிருந்து விலகினார்.
ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்தும் விலகினார். இதனால் ஒருநாள் அணிக்கு வேறு கேப்டனை நியமிக்க வேண்டிய நிர்பந்தம் BCCI-க்கு ஏற்பட்டது. ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் உள்ளிட்டோர் கேப்டன் வரிசையில் இருந்தனர்.
இந்த நிலையில் கே.எல். ராகுல் கேப்டனாக செயல்படுவார் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. மேலும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது. அதில் ரோகித் சர்மா, விராட் கோலி இடம் பிடித்துள்ளனர். ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளார்.
இடது கை அதிரடி பேட்ஸ்மேனான ஜெய்ஸ்வாலுக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது.
தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி விவரம்:-
ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, கே.எல். ராகுல் (கேப்டன்) (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா, குல்தீப் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, ருதுராஜ் கெய்க்வாட், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ஜுரல்.
முதல் போட்டி 30-ந்தேதி ராஞ்சியிலும், 2ஆவது போட்டி டிசம்பர் 3-ந்தேதி ராய்ப்பூரிலும், 6-ந்தேதி விசாகப்பட்டினத்திலும் நடக்கிறது.
- ஸ்மிருதி மந்தனா- பலாஷ் முச்சல் திருமணம் இன்று நடைபெற இருந்தது.
- ஸ்மிருதி மந்தனாவின் தந்தை தொடர் சிகிச்சை பெற்று வருவதால் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீரர் ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஸ்மிருதி மந்தனா- பலாஷ் முச்சல் திருமணம் இன்று நடைபெற இருந்தது.
இந்நிலையில், ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அங்கு அவர் தொடர் சிகிச்சை பெற்று வருவதால் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீநிவாஸ் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முத்துசாமி 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- யான்சன் 93 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.
தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்தது. 124 ரன் என்ற எளிய இலக்கை எட்ட முடியாமல் 93 ரன்னில் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 49 ரன்களும் பவுமா 41 ரன்களும் அடித்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முத்துசாமி 25 ரன்களுடனும், வெரெய்ன் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2 ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. பொறுப்புடன் விளையாடிய முத்துசாமி- வெரெய்ன் ஜோடி நிதானமாக ரன்களை சேர்த்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 300 ரன்களை கடந்து சிறப்பாக விளையாடியது.
நிதானமாக விளையாடிய முத்துசாமி அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுறையில் நிதானமாக விளையாடிய வெரெய்ன் 45 ரன்னில் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அடுத்து முத்துசாமி உடன் யான்சன் ஜோடி சேர்ந்தார்.
இதையடுத்து முத்துசாமி- யான்சன் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. சிறப்பாக விளையாடிய முத்துசாமி சதம் விளாசினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய யான்சன் அரைசதம் அடித்தார்.
முத்துசாமி 109 ரன்கள் அடித்த நிலையில் முகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹார்மர் 5 ரன்னில் வெளியேறினார்.
யான்சன் தொடர்ந்து அதிரடி காட்டி வந்தார். தென்ஆப்பிரிக்கா 9ஆவது விக்கெட்டை இழக்கும்போது, 462 ரன்கள் எடுத்திருந்தது, கடைசி விக்கெட்டுக்கு யான்சன் உடன் மகாராஜ் ஜோடி சேர்ந்தார்.
யான்சன் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், பந்தை பவுண்டரி லைனுக்கு வெளியில் அனுப்பினார். இவரும் சதத்தை நோக்கி முன்னேறினார். 93 ரன் எடுத்திருக்கும்போது குல்தீப் யாதவ் பந்தில் போல்டானார். இதனால் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்தது. மகாராஜ் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும் பும்ரா, முகமது சிராஜ், ஜடேஜா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- முதலில் விளையாடிய நேபாளம் அணியால் 114 ரன்கள் மட்டுமே அடிகக் முடிந்தது.
- இந்தியா 12 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பார்வையற்றோர் பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் இலங்கையில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியா- நேபாளம் அணிகள் மோதின. இதில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
முதலில் விளையாடிய நேபாளம் அணியால் 5 வி்க்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது, நேபாளம் அணியால் ஒரேயொரு பவுண்டரி மட்டுமே அடிக்க முடிந்தது. பின்னர் இந்திய அணி 12 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில வெற்றி பெற்றது. புலா சரேன் இந்திய அணி சார்பில் 44 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தியா அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்தது. நேபாளம் பாகிஸ்தானை வீழ்த்தியிருந்தது.
இலங்கை அணி அமெரிக்காவை மட்டுமே வீழ்த்தியிருந்தது, பாகிஸ்தானின் மெரீன் அலி 6 போட்டிகளில் 600 ரன்கள் குவித்தார. இலங்கைக்கு எதிராக 78 பந்தில் 230 ரன்களும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 133 ரன்களும் விளாசியிருந்தார்.
- ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடர் சென்னையில் வருகிற 28-ந்தேதி முதல் டிசம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது.
- 24 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கின்றன.
சென்னையில் வருகிற 28-ந்தேதி முதல் டிசம்பர் 10-ந்தேதி வரை ஆண்களுக்கான ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடர் நடைபெறுகிறது. இதில் 24 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கின்றன. ஜூனியர் உலக கோப்பையில் அதிக அணிகளும், அதிக போட்டிகளும் நடைபெறும் தொடராக இது அமைந்துள்ளது.
இந்த நிலையில் மாணவர்கள், இளம் விளையாடடு வீரர்கள், குடும்பத்தினர் மற்றும் ஹாக்கியை விரும்புவர்கள் போட்டியை நேரில் கண்டுகளிக்கும் வகையில் இலவச டிக்கெட் அறிவிக்கப்படுகிறது என ஹாக்கி இந்தியா தலைவர் திலிப் திர்கே தெரிவித்துள்ளார்.
ticketgenie இணைய தளம் அல்லது ஹாக்கி இந்திய ஆப் மூலம் டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம். பேரார்வம் கொண்ட ரசிகர்களால் சூழ்நிலையை உருவாக்குவது எப்போதுமே மிகப்பெரிய பலம். எல்லோராலும் சர்வதேச ஹாக்கியை அணுக முடியம் என்பதை உருவாக்க உறுதிப்பூண்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
- அரையிறுதியில் தவான் வீரரை 17-21, 24-22, 21-15 என வீழ்த்தியிருந்தார்.
- இறுதிப் போட்டியில் 21-15, 21-11 என ஜப்பான் வீரரை வீழ்த்தினார்.
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடைபெற்றது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இன்று மதியம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜப்பானின் யூஷி டனகாவை எதிர்கொண்டார்.
இதில் லக்ஷயா சென் 21-15, 21-11 என எளிதாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
லக்ஷயா சென் அரையிறுதியில் தைவானின் சூ டின்-சென்னை 17-21, 24-22, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தியிருந்தார்.
- ஆஷஸ் டெஸ்ட் முதல் போட்டியில் டிராவிஸ் ஹெட் 69 பந்தில் சதம் விளாசி அசத்தினார்.
- 104 ஆண்டுகளுக்குப் பிறகு AUS vs ENG ஆஷஸ் டெஸ்ட் போட்டி 2 நாட்களுக்குள் முடிவுக்கு வந்துள்ளது.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து விளையாடும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 39 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 40 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதனை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 205 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த நிலையில் விளையாடிய ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 205 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டிராவிஸ் 69 பந்தில் சதம் விளாசி அசத்தினார்.
இதன் மூலம் 104 ஆண்டுகளுக்குப் பிறகு AUS vs ENG ஆஷஸ் டெஸ்ட் போட்டி 2 நாட்களுக்குள் முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், பெர்த்தில் நடந்த ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி 2 நாட்களில் முடிவு பெற்றதால், டிக்கெட் விற்பனையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு சுமார் ரூ.17 கோடி நஷ்டம் ஏற்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
- பொறுப்புடன் விளையாடிய முத்துசாமி - யான்சன் ஜோடி அதிரடியாக ரன்களை சேர்த்தது
- தென் ஆப்பிரிக்க அணி 400 ரன்களை கடந்து சிறப்பாக விளையாடி வருகிறது.
தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்தது. 124 ரன் என்ற எளிய இலக்கை எட்ட முடியாமல் 93 ரன்னில் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 49 ரன்களும் பவுமா 41 ரன்களும் அடித்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இன்று 2 ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது முதல் பொறுப்புடன் விளையாடிய முத்துசாமி - வெரெய்ன் ஜோடி நிதானமாக ரன்களை சேர்த்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 300 ரன்களை கடந்து சிறப்பாக விளையாடி வருகிறது.
நிதானமாக விளையாடிய முத்துசாமி அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுறையில் நிதானமாக விளையாடி வரும் வெரெய்ன் 45 ரன்னில் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
இதையடுத்து முத்துசாமி - யான்சன் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. சிறப்பாக விளையாடிய முத்துசாமி சதம் விளாசினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய யான்சன் அரைசதம் அடித்தார்.
தென் ஆப்பிரிக்கா அணி 136 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 424 ரன்களை எடுத்துள்ளது. முத்துசாமி 106 ரன்களுடனும் யான்சன் 50 ரங்களுடனும் களத்தில் உள்ளனர்.
- ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிறகு ஸ்ரேயாஸ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
- ஸ்ரேயாஸ் அய்யர் மார்ச் வரை எந்த போட்டியிலும் விளையாட முடியாது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ் மேன்களில் ஒருவர் ஸ்ரேயாஸ் அய்யர். ஒருநாள் அணியின் துணை கேப்டனான அவருக்கு கடந்த மாதம் ஆஸ்திரேலிய ஒரு நாள் தொடரில் கேட்ச் பிடித்தபோது இடது விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. மண்ணீரலில் ரத்த கசிவு உருவானது. ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ஸ்ரேயாஸ் அய்யர் மார்ச் வரை எந்த போட்டியிலும் விளையாட முடியாது என்று கிரிக்கெட் வாரியம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அவர் விளையாட மாட்டார் என்று கிரிக்கெட் வாரியம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.பி.எல். தொடருக்கு முன்பு வரை அவரால் எந்த போட்டியிலும் ஆட முடியாது. ஆஸ்திரேலிய தொடரில் ஸ்ரேயாஸ் அய்யர் 2 ஆட்டத்தில் 72 ரன் எடுத்தார். இந்த ஆண்டில் 10 இன்னிங்சில் 496 ரன்கள் எடுத்தார். சராசரி 49.60 ஆகும். 5 அரைசதம் அடித்துள்ளார். அதிகபட்ச மாக 79 ரன் எடுத்தார்.
இந்தியா-தென்ஆப்பி ரிக்கா இடையேயான 3 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடர் வருகிற 30-ந் தேதி முதல் டிசம்பர் 6-ந் தேதி வரையும் நியூசிலாந்து ஒருநாள் தொடர் ஜனவரி 11-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடக்கிறது.
- தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் 3 நாட்களில் முடிந்தது.
- கொல்கத்தா ஈடன் கார்டன் ஆடுகளம் குறித்து விமர்சிக்கப்பட்டது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 124 ரன் இலக்கை எடுக்க முடியாமல் 93 ரன்னில் சுருண்டு கொண்டனர். 30 ரன் வித்தியாசத்தில் தோற்றது. 3 நாட்களில் இந்த டெஸ்ட் முடிந்தது. இதனால் கொல்கத்தா ஈடன் கார்டன் ஆடுகளம் குறித்து விமர்சிக்கப்பட்டது. பயிற்சியாளர் காம்பீர் விருப்பப்படி பிட்ச் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் கொல்கத்தாவை விட கவுகாத்தி ஆடுகளம் சிறப்பாக உள்ளதாக இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் ரியான் டென்டோஷேட் தெரிவித்துள்ளார்.
முதல் நாள் போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முதல் நாளில் இரு அணிகளும் ஆட்டத்தை நன்றாக கணக்கிட்டதாக நான் நினைக்கிறேன். இந்திய அணி வீரர்கள் அற்புதமாக நிலைநிறுத்தி கொண்டனர். ஆட்டம் அவர்கள் பக்கம் சென்றபோது எங்களால் ஓரிரு முறை மீண்டும் கால் பதிக்க முடிந்தது. தொடக்கத்தில் பும்ரா விக்கெட் கைப்பற்றினார். பின்னர் குல்தீப் யாதவ் சிறப்பாக செயல் பட்டார். முதல் இன்னிங்ஸ் ரன் முக்கியமானதாகும். கொல்கத்தா ஈடன் கார்டன் ஆடுகளத்தை விட கவுகாத்தி பிட்ச் சிறந்ததாக இருந்தது" என்று கூறினார்.
- 29 வயதான ஸ்மிருதி மந்தனா தனது வாழ்க்கையில் 2-வது இன்னிங்சை விரைவில் தொடங்குகிறார்.
- ஸ்மிருதி மந்தனாவின் திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள் நேற்றே தொடங்கின.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இதில் 9 ஆட்டத்தில் ஆடிய மந்தனா ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 434 ரன்கள் குவித்தார்.
மகாராஷ்டிரத்தை சேர்ந்த 29 வயதான ஸ்மிருதி மந்தனா தனது வாழ்க்கையில் 2-வது இன்னிங்சை விரைவில் தொடங்குகிறார். அவரும் பிரபல இந்தி சினிமா இசையமைப்பாளரான பலாஷ் முச்சாலும் நீண்ட காலமாக காதலித்து வருகிறார்கள். அவருடன் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் நடந்திருப்பதை உறுதிப்படுத்திய மந்தனா நாளை (23-ந்தேதி) அவரை கரம் பிடிக்கிறார். இவர்களது திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி இரு வீட்டாருக்கும் வாழ்த்து கடிதம் அனுப்பினார்.
இன்று திருமணம் நடக்க உள்ள நிலையில் ஸ்மிருதி மந்தனாவின் திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள் நேற்றே தொடங்கின.
இந்நிலையில், திருமணத்திற்கு முந்தைய சங்கீத் நிகழ்ச்சியில் ஸ்மிருதி மந்தனா - பலாஷ் முச்சால் ஆகியோர் நடனமாடினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
- பொறுப்புடன் விளையாடிய முத்துசாமி - வெரெய்ன் ஜோடி நிதானமாக ரன்களை சேர்த்தது.
- தென் ஆப்பிரிக்க அணி 300 ரன்களை கடந்து சிறப்பாக விளையாடி வருகிறது.
தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்தது. 124 ரன் என்ற எளிய இலக்கை எட்ட முடியாமல் 93 ரன்னில் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 49 ரன்களும் பவுமா 41 ரன்களும் அடித்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இன்று 2 ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது முதல் பொறுப்புடன் விளையாடிய முத்துசாமி - வெரெய்ன் ஜோடி நிதானமாக ரன்களை சேர்த்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 300 ரன்களை கடந்து சிறப்பாக விளையாடி வருகிறது.
நிதானமாக விளையாடிய முத்துசாமி அரைசதம் அடித்து அசத்தினார். இந்த டெஸ்ட் தொடரில் பவுமாவிற்கு அடுத்தபடியாக முத்துசாமி அரைசதம் அடித்துள்ளார். மறுமுறையில் நிதானமாக விளையாடி வரும் வெரெய்ன் அரைசதத்தை நோக்கி விளையாடி வருகிறார்.
தென் ஆப்பிரிக்கா அணி 111 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்களை எடுத்துள்ளது. முத்துசாமி 56 ரன்களுடனும் வெரெய்ன் 38 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.






