என் மலர்
கிரிக்கெட் (Cricket)

பார்வையற்றோர் டி20 உலக கோப்பை: இந்திய பெண்கள் அணி சாம்பியன்
- முதலில் விளையாடிய நேபாளம் அணியால் 114 ரன்கள் மட்டுமே அடிகக் முடிந்தது.
- இந்தியா 12 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பார்வையற்றோர் பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் இலங்கையில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியா- நேபாளம் அணிகள் மோதின. இதில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
முதலில் விளையாடிய நேபாளம் அணியால் 5 வி்க்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது, நேபாளம் அணியால் ஒரேயொரு பவுண்டரி மட்டுமே அடிக்க முடிந்தது. பின்னர் இந்திய அணி 12 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில வெற்றி பெற்றது. புலா சரேன் இந்திய அணி சார்பில் 44 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தியா அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்தது. நேபாளம் பாகிஸ்தானை வீழ்த்தியிருந்தது.
இலங்கை அணி அமெரிக்காவை மட்டுமே வீழ்த்தியிருந்தது, பாகிஸ்தானின் மெரீன் அலி 6 போட்டிகளில் 600 ரன்கள் குவித்தார. இலங்கைக்கு எதிராக 78 பந்தில் 230 ரன்களும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 133 ரன்களும் விளாசியிருந்தார்.






