என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஆசிய கோப்பையில் 2-வது மிகப்பெரிய வெற்றியை பெற்ற அணி என்ற பெருமையை பெற்றது.
    • 150 ரன்கள் எடுத்த முதல் கேப்டன் என்ற சாதனையை பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் படைத்தார்.

    முல்தான்:

    6 நாடுகள் பங்கேற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் உள்ள முலதான் நகரில் நேற்று தொடங்கியது.

    முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 238 ரன் வித்தியாசத்தில் நேபா ளத்தை வீழ்த்தியது. முதலில் ஆடிய பாகிஸ்தான் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 342 ரன் குவித்தது. கேப்டன் பாபர் ஆசம் 131 பந்தில் 151 ரன்னும் (14 பவுண்டரி, 4 சிக்சர்), இப்திகார் அகமது 71 பந்தில் 109 ரன்னும் (11 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர்.

    பின்னர் ஆடிய நேபாளம் 23.4 ஓவர்களில் 104 ரன்னில் சுருண்டது. இதனால் பாகிஸ்தான் 238 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சோம்பால் காமி அதிகபட்சமாக 28 ரன் எடுத்தார். ஷதாப்கான் 4 விக்கெட்டும், ஷகின்ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவூப் தலா 2 விக்கெட்டும், நசிம் ஷா, முகமது நவாஸ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தி னார்கள்.

    238 ரன் வித்தியாசத்தில் வெற்றி வெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணி புதிய சாதனை படைத்தது. ஆசிய கோப்பையில் 2-வது மிகப்பெரிய வெற்றியை பெற்ற அணி என்ற பெருமையை பெற்றது.

    2008-ம் ஆண்டு ஆங்காங்குக்கு எதிராக இந்தியா 256 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே சாதனையாகும்.

    ஒருநாள் போட்டி வரலாற்றில் பாகிஸ்தானின் 3-வது பெரிய வெற்றி இதுவாகும். 2016-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக 255 ரன்னிலும், 2018-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக 244 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது.

    நேபாளம் அணிக்கு எதிராக அதிக ரன் எடுத்த அணி என்ற சாதனையையும் பாகிஸ்தான் படைத்தது. இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் அணி உலக கோப்பை தகுதி சுற்றில் நேபாளத்துக்கு எதிராக 7 விக்கெட் இழப்புக்கு 339 ரன் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

    ஆசிய கோப்பை போட்டியில் 150 ரன்கள் எடுத்த முதல் கேப்டன் என்ற சாதனையை பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் படைத்தார். இதற்கு முன்பு வீராட் கோலி கேப்டன் பதவியில் 136 ரன் எடுத்து இருந்தார். 2014-ல் வங்காள தேசத்துக்கு எதிராக இதை எடுத்து இருந்தார். இதை தற்போது பாபர் ஆசம் முறியடித்தார்.

    பாபர் ஆசம் 102 இன்னிங்சில் 19-வது சதத்தை எடுத்தார். இதன் மூலம் ஹசிம் அம்லா (தென் ஆப்பிரிக்கா), சாதனையை அவர் முறியடித்தார்.

    இப்தார்கான் அகமது 67 பந்தில் சதம் அடித்தார். ஆசிய கோப்பையில் அதிக வேகத்தில் சதம் அடித்த 4-வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    ஆசிய கோப்பை போட்டியில் கண்டியில் உள்ள பல்லேகலே மைதானத்தல் இன்று நடைபெறும் 2-வது போட்டியில் இலங்கை-வங்காள தேசம் அணிகள் மோதுகின்றன.

    • நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
    • தென்ஆப்பிரிக்காவை 111 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா

    இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் கிளென் பிலிப்ஸ் அதிகபட்சமாக 41 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து அணி சார்பில் பிரைடன் கார்ஸ், லூக் வுட் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து 14 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    தாவித் மலான் 54 ரன்களும், ஹாரி ப்ரூக் 43 ரன்களும் விளாசினர். 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி நாளை நடைபெற இருக்கிறது.

    அதேபோல், தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் முதல் டி20 போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது. மிட்செல் மார்ஷ் அதிகபட்சமாக 49 பந்தில் 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டிம் டேவிட் 28 பந்தில் 64 ரன்கள் சேர்த்தார்.

    பின்னர் 227 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா 15.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 115 ரன்னில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலியா 111 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென்ஆப்பிரிக்கா அணியில் ரீசா ஹென்ரிக்ஸ் அதிகபட்சமாக 56 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலியா அணி சார்பில் தன்வீர் சங்கா 4 விக்கெட்டும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி நாளை டர்பனில் நடக்கிறது.

    • 19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
    • டைமண்ட் லீக் தடகள போட்டி சுவிட்சர்லாந்ில் உள்ள சூரில் நகரில் இன்று நடைபெறவுள்ளது.

    ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் 19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் கடைசி நாளில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டிக்கான இறுதிசுற்று நடந்தது.

    இதில், எதிர்பார்த்தபடியே ஒலிம்பிக் சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

    இந்நிலையில், நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற கையோடு டைமண்ட் லீக் தடகள போட்டியில் பங்கேற்கிறார்.

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டைமண்ட் லீக் தடகள போட்டி சுவிட்சர்லாந்ில் உள்ள சூரில் நகரில் இன்று நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தான் அணி சார்பில் கேப்டன் பாபர் அசாம் 149 ரன்களை விளாசினார்.
    • நேபாளம் அணியின் சோம்பால் கமி இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்.

    ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் பஹார் ஜமான் 14 ரன்களிலும், இமாம் உல் ஹக் 5 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் 129 பந்துகளில் 14 பவுன்டரிகள், 4 சிக்சர்களை விளாசி 151 ரன்களை குவித்தார். இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய முகமது ரிஸ்வான் 45 ரன்களை எடுத்தார். அடுத்த வந்த சல்மான் ஆகா 5 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இவருடன் ஆடிய இப்திகார் அகமது 71 பந்துகளில் 109 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

     

    அந்த வகையில் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 342 ரன்களை குவித்து அசத்தியது. கடின இலக்கை துரத்திய நேபாளம் அணிக்கு துவக்க வீரர்களான குஷால் புர்டெல் மற்றும் ஆசிப் ஷேக் ஜோடி முறையே 8 மற்றும் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றியது. அதன்பிறகு வந்த ரோஹித் பவுடல் டக் அவுட் ஆனார்.

    துவக்கத்திலேயே தடுமாறிய நேபாள அணிக்கு சோம்பால் கமி மற்றும் ஆரிப் ஷேக் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி, விக்கெட்கள் விழுவதை ஓரளவுக்கு தடுத்து நிறுத்தியது. இந்த ஜோடி முறையே 28 மற்றும் 26 ரன்களை குவித்து தங்களது விக்கெட்டை இழந்தது.

     

    இவர்களை தொடர்ந்து வந்த வீரர்கள் அதிக ரன்களை அடிக்காமல் அவுட் ஆக, நேபாளம் அணி 104 ரன்களை குவித்த நிலையில், 23.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    • வைரஸ் காய்ச்சலில் இருந்து முழுமையாக குணமடையவில்லை
    • அனாமுல் ஹக் பிஜோய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்

    இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய ஆறு அணிகள் மோதும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. வங்காளதேசம் முதல் போட்டியில் நாளை இலங்கை அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

    இந்த நிலையில் வங்காளதேச அணியின் முன்னணி வீரரான லிட்டன் தாஸ் ஆசிய கோப்பைக்கான தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார்.

    வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள லிட்டன் தாஸ், இன்னும் அதில் இருந்து முழுமையாக குணமடையவில்லை. மேலும், இலங்கைக்கு எதிராக நாளை மோத இருக்கும் போட்டிக்காக இலங்கை செல்லவில்லை. அவருக்குப் பதிலாக அனாமுல் ஹக் பிஜோய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என வங்காளதேச கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

    அனாமுல் ஹக் 44 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1254 ரன்கள் அடித்துள்ளார். இதில் மூன்று சதங்கள் அடங்கும். கடந்த 2022-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக விளையாடியது அவரது கடைசி ஒருநாள் போட்டியாகும்.

    • உலகக்கோப்பை செஸ் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை
    • அரசு சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது

    பிடே உலகக்கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்றது. இதில் இந்திய 'இளம் புயல்' தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும், 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனும் (நார்வே) இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தினர். டை-பிரேக்கரில் கார்ல்சென் வெற்றி பெற்றார்.

    இளம் வயதிலேயே சிறப்பாக விளையாடி 2-வது இடம் பிடித்த 18 வயதாகும் பிரக்ஞானந்தாவுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தமிழக முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்ததுடன், வீடியோ கால் மூலம் பேசி பாராட்டினார். அத்துடன் தமிழக விளையாட்டுத்துறை சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரக்ஞானந்தாவுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அவரை வரவேற்பதற்காக விளையாட்டுத்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா உள்ளிட்ட அதிகாரிகள் வந்திருந்தனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வீரர்கள், தனியார் பள்ளி மாணவர்களும் வரவேற்க திருண்டு இருந்தனர்.

    மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற கிராமிய கலைகள் மூலம் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகம் வந்தடைந்த பிரக்ஞானந்தா, இன்று முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்திக்க இருக்கிறார்.

    • அமெரிக்க ஓபனில் இதுவரை 100 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளார்
    • இதுபோன்று மோசமான தோல்வியை எதிர்கொண்டது கிடையாது

    அமெரிக்கா கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் வீனஸ் வில்லியம்ஸ், இத்தொடருக்கான தரவரிசை பெறாத பெல்ஜியத்தை சேர்ந்த கிரீட் மின்னென்-ஐ எதிர் கொண்டார்.

    இதில் 43 வயதான வீனஸ் வில்லியம்ஸ் 1-6, 1-6 எனத் தோல்வியடைந்தார். 2000 மற்றும் 2001-ல் அமெரிக்கா கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற வீனஸ் வில்லியம்ஸ், 100 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளார். அதில் இதுதான் மிகவும் மோசமான தோல்வியாக பார்க்கப்படுகிறது.

    வீனஸ் வில்லியம்ஸ் ஆட்டத்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். ரசிகர்களின் ஆதரவு குறித்து வீனஸ் வில்லியம்ஸ் கூறுகையில் ''ரசிகர்களின் ஆதரவை பார்ப்பது மிகவும் சிறப்பாக உள்ளது. எப்போதும் ரசிகர்கள் எனக்காக இங்கே வருவார்கள் என்பது எனக்குத் தெரியும். முன்னெப்போதையும் விட இன்னும் அந்த ஆதரவைக் கொண்டிருப்பது அருமையானது'' என்றார்.

    • இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோதுகின்றன.
    • இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர் கொள்கிறது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடக்கிறது. இந்த போட்டியில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம்  உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி பாகிஸ்தானில் நடக்கிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 3 மணி அளவில் ஆட்டம் தொடங்குகிறது.

    மேலும், இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர் கொள்கிறது. இந்த போட்டி 2-ந் தேதி இலங்கையில் நடக்கிறது.

    இந்த போட்டியில் பங்கேற்கும் ரோகித் சர்மா ஷர்மா தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய அணி சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • நியூயார்க் நகரில் கடந்த திங்கட்கிழமை தொடங்கி வருகிற 10-ந்தேதி வரை நடக்கிறது.
    • 84ம் நிலை வீரரான அலெக்சாண்டர் முல்லெரை (பிரான்ஸ்) வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 வகையான 'கிராண்ட்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான 143-வது அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் கடந்த திங்கட்கிழமை தொடங்கி வருகிற 10-ந்தேதி வரை நடக்கிறது.

    இந்நிலையில், முதல் நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-0,6-2, 6-3 என்ற நேர்செட்டில் 84ம் நிலை வீரரான அலெக்சாண்டர் முல்லெரை (பிரான்ஸ்) வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    இந்த வெற்றியின் மூலம் 36 வயதான ஜோகோவிச், கார்லஸ் அல்காரஸ்சை (ஸ்பெயின்) பின்னுக்கு தள்ளி உலக ஒற்றையர் தரவரிசையில் மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார்.

    இந்த போட்டி தொடரில் ஜோகோவிச் அடுத்த சுற்றில் தோற்றாலும் கூட முதல் இடத்திற்கு பிரச்சினை இல்லை.

    • போட்டி செஸ்டர் லீ ஸ்டிரிட்டில் இன்று நடைபெறுகிறது.
    • இந்திய நேரப்படி, இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது.

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் சவுதி தலைமையிலான நியூசிலாந்து அணி அந்நாட்டின் அணிக்கு எதிராக நான்கு 20 ஓவர் மற்றும் 4 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.

    இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செஸ்டர் லீ ஸ்டிரிட்டில் இன்று நடைபெறுகிறது.

    இந்த போட்டி இந்திய நேரப்படி, இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது.

    ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோ, டேவிட் மலான், லிவிங்ஸ்டன், மொயீன் அலி, சாம் கர்ரன், ஹாரி புரூக் மற்றும் நியூசிலாந்து அணியில் கேப்டன் டிம் சவுதி, டிவான் கான்வே, டேரில் மிட்செல், மார்க் சாப்மேன் உள்பட தரமான வீரர்களும் விளையாடுகின்றனர்.

    • உலகக் கோப்பை 2023 தொடர் இந்தியாவில் நடைபெற இருக்கிறது.
    • 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் துவங்குகிறது.

    50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் முதல் போட்டிக்கான டிக்கெட்கள் விற்று தீர்ந்தன. கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியை அக்டோபர் 8-ம் தேதி விளையாடுகிறது. சென்னையில் நடக்கும் இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    இந்த நிலையில், இந்திய அணியின் முதல் போட்டிக்கான டிக்கெட்கள் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்திய அணியின் முதல் போட்டி மட்டுமின்றி சென்னையில் நடைபெறும் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான போட்டிக்கான டிக்கெட்களும் விற்று தீர்ந்தன.

    2023 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 4-ம் தேதி துவங்கி, நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. முன்னணி வீரர்களும் தங்களின் பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.  

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
    • இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 14-வது இடம் பிடித்துள்ளார்.

    புதுடெல்லி:

    உலக பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 6-வது இடத்தைப் பிடித்துள்ளார். இது அவருடைய சிறந்த தரநிலையாகும். உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றதன் மூலம் அவர் தரவரிசையில் முன்னேறியுள்ளார்.

    மற்ற இந்திய வீரர்கள் லக்ஷயா சென் 12-வது இடத்திலும், ஸ்ரீகாந்த் 20-வது இடத்திலும் உள்ளனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 14-வது இடம் பிடித்துள்ளார்.

    ×