என் மலர்tooltip icon

    விளையாட்டு

    தங்கம் வென்ற கையோடு அடுத்த போட்டிக்கு தயாரான நீரஜ் சோப்ரா
    X

    தங்கம் வென்ற கையோடு அடுத்த போட்டிக்கு தயாரான நீரஜ் சோப்ரா

    • 19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
    • டைமண்ட் லீக் தடகள போட்டி சுவிட்சர்லாந்ில் உள்ள சூரில் நகரில் இன்று நடைபெறவுள்ளது.

    ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் 19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் கடைசி நாளில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டிக்கான இறுதிசுற்று நடந்தது.

    இதில், எதிர்பார்த்தபடியே ஒலிம்பிக் சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

    இந்நிலையில், நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற கையோடு டைமண்ட் லீக் தடகள போட்டியில் பங்கேற்கிறார்.

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டைமண்ட் லீக் தடகள போட்டி சுவிட்சர்லாந்ில் உள்ள சூரில் நகரில் இன்று நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×