search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஆசிய கோப்பை தொடரில் இருந்து வங்காளதேச வீரர் லிட்டன் தாஸ் விலகல்
    X

    ஆசிய கோப்பை தொடரில் இருந்து வங்காளதேச வீரர் லிட்டன் தாஸ் விலகல்

    • வைரஸ் காய்ச்சலில் இருந்து முழுமையாக குணமடையவில்லை
    • அனாமுல் ஹக் பிஜோய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்

    இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய ஆறு அணிகள் மோதும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. வங்காளதேசம் முதல் போட்டியில் நாளை இலங்கை அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

    இந்த நிலையில் வங்காளதேச அணியின் முன்னணி வீரரான லிட்டன் தாஸ் ஆசிய கோப்பைக்கான தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார்.

    வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள லிட்டன் தாஸ், இன்னும் அதில் இருந்து முழுமையாக குணமடையவில்லை. மேலும், இலங்கைக்கு எதிராக நாளை மோத இருக்கும் போட்டிக்காக இலங்கை செல்லவில்லை. அவருக்குப் பதிலாக அனாமுல் ஹக் பிஜோய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என வங்காளதேச கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

    அனாமுல் ஹக் 44 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1254 ரன்கள் அடித்துள்ளார். இதில் மூன்று சதங்கள் அடங்கும். கடந்த 2022-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக விளையாடியது அவரது கடைசி ஒருநாள் போட்டியாகும்.

    Next Story
    ×