என் மலர்
விளையாட்டு
- ஆசிய கோப்பை போட்டியின்போது மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் அடைந்தனர்
- இரண்டு பேர் காயம் குணமடைந்து பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்துள்ளனர்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர் 5-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டித் தொடரில் பெரும்பாலான நாடுகள் தங்களது அணிகளை அறிவித்து விட்டன.
உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது. கேப்டனாக பாபர் ஆசம் நீடிக்கிறார்.
சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா குணமடையாததால் இடம் பெறவில்லை. அவருக்கு பதில் ஹசன் அலி சேர்க்கப்பட்டுள்ளார். சுழற்பந்து வீச்சாளர் உஸ்மா மிர் இடம் பெற்றுள்ளார்.
பாபா ஆசம் (கேப்டன்), பகர் ஜமான், இமாம்-உல்-ஹக், அப்துல்லா ஷபீக், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, அகா சல்மான், முகமது நவாஸ், ஷதாப் கான், உஸ்மா மிர், ஷகீன்ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவூப், முகமது வாசிம், ஹசன் அலி.
- அஸ்வின் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்
- ஷ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு
உலக கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணி ஆஸ்திரேலியா உடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட முடிவு செய்தது. அதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மொகாலியின் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணி விவரம்:-
1. டேவிட் வார்னர், 2. மிட்செல் மார்ஷ், 3. ஸ்மித், 4. மார்னஸ் லபுசேன், 5. கேமரூன் கிரீன், 6. ஜோஷ் இங்க்லிஸ் (விக்கெட் கீப்பர்), 7. மார்கஸ் ஸ்டோய்னிஸ், 8. மேத்யூ ஷார்ட், 9. பாட் கம்மின்ஸ் (கேப்டன்), 10. சீன் அப்போட், 11. ஆடம் ஜம்பா
இந்திய அணி விவரம்:-
1. சுப்மான் கில், 2. ருதுராஜ் கெய்க்வாட், 3. ஷ்ரேயாஸ் அய்யர், 4. கே.எல். ராகுல் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), 5. இஷான் கிஷன், 6. சூர்யகுமார் யாதவ், 7. ஜடேஜா, 8. அஸ்வின், 9. ஷர்துல் தாக்குர், 10. பும்ரா, 11. முகமது ஷமி
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சில் நட்சத்திர ஜோடியாக அஸ்வின்- ஜடேஜா ஜோடி திகழ்கிறது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய அளவில் இருவரும் இணைந்து விளையாடியது கிடையாது. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கடந்த ஆறு வருடத்திற்கு முன் இருவரும் இணைந்து விளையாடினர். அதன்பின் தற்போது சேர்ந்து விளையாடுகிறார்கள்.
- பாகிஸ்தான் கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவில் இருந்து விலகுவதாக முகமது ஹபீஸ் திடீரென்று அறிவித்தார்.
- பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கான எனது நேர்மையான ஆலோசனைகள் தேவைப்படும் போதெல்லாம் நான் எப்போதும் அளிப்பேன்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தொழில்நுட்பக் குழுவில் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் இடம் பெற்று இருந்தார். 2 மாதங்களுக்கு முன்பு இப்பொறுப்பில் அவர் நியமிக்கப்பட்டார். முன்னாள் கேப்டன்கள் இன்சமாம்-உல்-ஹக், மிஸ்பா-உல்-ஹக் ஆகியோரையும் கொண்ட இக்குழு அணியின் முன்னேற்றத்திற்காக ஆலோசனைகளை வழங்கும்.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவில் இருந்து விலகுவதாக முகமது ஹபீஸ் திடீரென்று அறிவித்தார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறும்போது, பாகிஸ்தான் கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கான எனது நேர்மையான ஆலோசனைகள் தேவைப்படும் போதெல்லாம் நான் எப்போதும் அளிப்பேன். எப்போதும் போல் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் செயல் திறனை மதிப்பீடுவதற்காக நேற்று நடந்த கிரிக்கெட் வாரிய ஆலோசனை கூட்டத்தில் முகமது ஹபீசும் கலந்து கொண்டார். இதில் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், கேப்டன் பாபர் ஆசம், துணை கேப்டன் ஷதாப்கான் மற்றும் மிஸ்பா-உல்-ஹஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தான்- இந்தோனேசியா ஆட்டம் மழையால் டாஸ் சுண்டப்படாமல் கைவிடப்பட்டது
- தாய்லாந்தை இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
சீனாவில் நாளை ஆசிய விளையாட்டு தொடங்க உள்ள நிலையில் கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட சில போட்டிகள் முன்னதாக நடந்து வருகிறது. 20 ஓவர் போட்டியாக நடக்கும் கிரிக்கெட்டில் பெண்கள் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.
இன்று காலை நடந்த 3-வது கால் இறுதி ஆட்டத்தில் இலங்கை- தாய்லாந்து அணிகள் மோதின. மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதும் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு தொடங்கியது.
டாஸ் ஜெயித்த தாய்லாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. தாய்லாந்து அணி 15 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 78 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுத்திருவாங் 31 ரன் எடுத்தார்.
இலங்கை தரப்பில் இனோஷி பிரியதர்ஷினி 4 விக்கெட்டும் அட்டப்பட்டு, தில்ஹாரி, சுகந்திகா குமாரி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் 79 ரன்கள் இலக்குடன் இலங்கை அணி விளையாடியது. தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கிய கேப்டன் அட்டப்பட்டு 27 ரன்னிலும், அனஷ்கா சஞ்சீவனி 32 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
இலங்கை அணி 10.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது.
4-வது மற்றும் கடைசி கால் இறுதியில் வங்காள தேசம்-ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நாளைமறுதினம் நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியாவுடன் மோதும். அன்றைய தினம் நடைபெறும் 2-வது அரையிறுதியில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
- கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி இன்று ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
- இந்த தொடரின் முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துகிறார்.
மொகாலி:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி இன்று மொகாலியிலும், 2-வது போட்டி 24-ம் தேதி இந்தூரிலும், 3-வது மற்றும் கடைசி போட்டி 27-ம் தேதி ராஜ்கோட்டிலும் நடக்கிறது. இப்போட்டிகள் அனைத்தும் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் ஆட்டம் மொகாலியில் இன்று நடைபெற உள்ளது.
முதல் 2 ஆட்டங்களில் கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அஸ்வின் அணிக்கு திரும்பியுள்ளார்.
பேட்டிங்கில் சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் உள்ளனர்.
பந்து வீச்சில் பும்ரா, முகமது சிராஜ், முகமது சமி, பிரசித் கிருஷ்ணா உள்ளனர். ஆல்-ரவுண்டர்கள் ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர் உள்ளனர்.
இன்றைய போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ள சில வீரர்களுக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இத்தொடர் பயன் உள்ளதாக இருக்கும். இதனால் அவர்கள் சிறப்பாக விளையாட முயற்சிப்பார்கள்.
ஆஸ்திரேலிய அணி, சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி விட்டு இந்தியா வந்துள்ளது. டேவிட் வார்னர், லபுசேன், மேத்யூ ஷார்ட், மிட்செல் மார்ஷ், ஸ்டோனிஸ், கேமரூன் கிரீன், ஹேசில்வுட், ஆடம் ஜம்பா, நாதன் எல்லிஸ் ஆகிய வீரர்கள் உள்ளனர்.
உலக கோப்பை போட்டிக்கு தயாராகுவதற்கு இந்த தொடர் உதவியாக இருக்கும் என்பதால் இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் முனைப்பில் உள்ளனர்.
இதற்கிடையே, இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் விலகி உள்ளனர்.
ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் இதுவரை 146 ஆட்டங்களில் மோதி உள்ளன. இதில் இந்தியா 54 முறையும், ஆஸ்திரேலியா 82 முறையும் வெற்றி பெற்றன. 10 ஆட்டம் முடிவு இல்லை.
இரு அணி வீரர்களின் விபரம் வருமாறு:
இந்தியா:
லோகேஷ் ராகுல் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன், ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், அஸ்வின், பும்ரா, முகமது சமி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
ஆஸ்திரேலியா:
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித், மிட்செல் மார்ஷ், லபுசேன், ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி, மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ ஷார்ட், கேமரூன் கிரீன், சீன் அபோட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஹேசில்வுட், நாதன் எல்லீஸ், ஸ்பென்சர் ஜான்சன், தன்வீர் சங்கா.
- இந்திய வீராங்கனை அன்திம் 16-6 என்ற புள்ளி கணக்கில் ஸ்வீடன் வீராங்கனையை வீழ்த்தினார்.
- பாரிசில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கும் அன்திம் தகுதி பெற்றார்.
பெல்கிரேடு:
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி செர்பியா தலைநகர் பெல்கிரேடில் நடந்து வருகிறது. பெண்களுக்கான பிரீஸ்டைல் 53 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி இன்று நடைபெற்றது.
இதில் 19 வயது இந்திய வீராங்கனை அன்திம் பன்ஹால், 2 முறை ஐரோப்பிய சாம்பியன் ஜோனா மால்கிரேன் (ஸ்வீடன்) எதிர்கொண்டார்.
20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக சாம்பியன்ஷிப்பில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான அரியானாவை சேர்ந்த அன்திம் தொடக்கம் முதல் சிறப்பாக ஆடினார்.
இறுதியில், 16-6 என்ற புள்ளி கணக்கில் வென்று வெண்கலப் பதக்கம் பெற்றார். மேலும், பாரிசில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.
- 2018-ம் ஆண்டு முதல் உணவு விநியோகிப்பாளராக வேலை பார்த்து வந்த அவர் கிரிக்கெட் வீரர் ஆவார்.
- 10 ஆயிரம் பந்துவீச்சாளர்களை மதிப்பீடு செய்த நெதர்லாந்து அணி நிர்வாகம் லோகேஷ் குமார் உள்பட 4 பேரை தேர்வு செய்தது.
சென்னை:
இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் நெதர்லாந்து அணிக்கு வலை பயிற்சி பந்து வீச்சாளராக தமிழக வீரர் ஒருவர் தேர்வாகி உள்ளார். சென்னையை சேர்ந்தவர் லோகேஷ் குமார் (வயது 29). 2018-ம் ஆண்டு முதல் உணவு விநியோகிப்பாளராக வேலை பார்த்து வந்த அவர் கிரிக்கெட் வீரர் ஆவார்.
இதற்கிடையே நெதர்லாந்து அணிக்கு வலைபயிற்சி பந்துவீச்சாளர் தேவை என்ற விளம்பரத்தை பார்த்து விண்ணப்பித்தார். இடது கை வேகப்பந்து மற்றும் சைனாமேன் பந்து வீச்சாளராக அவர் தனது பந்து வீசும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் அனுப்பி வைத்தார். இந்தியாவில் இந்து சுமார் 10 ஆயிரம் பந்துவீச்சாளர்களை மதிப்பீடு செய்த நெதர்லாந்து அணி நிர்வாகம் லோகேஷ் குமார் உள்பட 4 பேரை தேர்வு செய்தது.
இதுகுறித்து லோகேஷ் குமார் கூறும்போது, இது எனது வாழ்க்கையின் விலை மதிப்பற்ற தருணங்களில் ஒன்றாகும். நான் இன்னும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் மூன்றாம் பிரிவு லீக்கில் கூட விளையாடவில்லை. நான்கு ஆண்டுகளாக 5-வது பிரிவில் விளையாடினேன். நடப்பு சீசனில் 4-வது பிரிவில் பதிவு செய்துள்ளேன்.
நெதர்லாந்து அணியால் ஒரு வலைப்பந்துவீச்சாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது எனது திறமைக்கு அங்கீகாரம் கிடைத்ததாக உணர்கிறேன். நெதர்லாந்து அணி வீரர்கள் என்னை உற்சாகமுடன் வரவேற்றனர். இது உங்கள் அணி தாராளமாக உணருங்கள் என்று என்னிடம் தெரிவித்தனர். நெதர்லாந்து அணியின் விளம்பரத்தை பார்த்து அதற்கு முயற்சி செய்ய முடிவு எடுத்தேன். அதிக சைனாமேன் பந்துவீச்சாளர்கள் இல்லாததால் நான் தேர்வு செய்யப்படுவேன் என்ற நம்பிக்கை இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடகாவின் ஆலூரில் நடந்து வரும் நெதர்லாந்து அணியின் பயிற்சி முகாமில் லோகேஷ் குமார் இணைந்து உள்ளார்.
- நாளைய போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- உலகக்கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ள சில வீரர்களுக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இத்தொடர் பயன் உள்ளதாக இருக்கும்.
மொகாலி:
கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
முதல் போட்டி நாளை மொகாலியில் நடக்கிறது. 2-வது போட்டி 24-ந்தேதி இந்தூரிலும், 3-வது மற்றும் கடைசி போட்டி 27-ந்தேதி ராஜ்கோட்டிலும் நடக்கிறது. இப்போட்டிகள் அனைத்தும் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
முதல் 2 ஆட்டங்களில் கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, ஹர்த்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் ராகுல் கேப்டனாக நியமிக்கபட்டுள்ளார்.
அஸ்வின் அணிக்கு திரும்பியுள்ளார். பேட்டிங்கில் சுப்மன்கில், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக்வர்மா, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் உள்ளனர்.
பந்து வீச்சில் பும்ரா, முகமது சிராஜ், முகமது சமி, பிரசித் கிருஷ்ணா உள்ளனர். ஆல்-ரவுண்டர்கள் ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர் உள்ளனர். நாளைய போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகக்கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ள சில வீரர்களுக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இத்தொடர் பயன் உள்ளதாக இருக்கும். இதனால் அவர்கள் சிறப்பாக விளையாட முயற்சிப்பார்கள்.
ஆஸ்திரேலிய அணி, சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி விட்டு இந்தியா வந்து உள்ளது. டேவிட் வார்னர், லபுஸ்சேன், மேத்யூ ஷார்ட், மிட்செல் மார்ஷ், ஸ்டோனிஸ், கேமரூன் கிரீன், ஹேசல்வுட், ஆடம் ஜம்பா, நாதன் எல்லிஸ் ஆகிய வீரர்கள் உள்ளனர்.
உலகக்கோப்பை போட்டிக்கு தயாராகுவதற்கு இந்த தொடர் உதவியாக இருக்கும் என்பதால் இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் முனைப்பில் உள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் விலகி உள்ளனர்.
இரு அணி வீரர்கள் விபரம் வருமாறு:-
இந்தியா:- லோகேஷ் ராகுல் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன்கில், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான்கிஷன் ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், அஸ்வின், பும்ரா, முகமது சமி, முகமது சிராஜ், பிரசித்கிருஷ்ணா.
ஆஸ்திரேலியா:- கம்மின்ஸ் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித், மிட்செல் மார்ஷ், லபுஸ்சேன், ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ ஷார்ட், கேமரூன் கிரீன், சீன் அபோட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஹேசல்வுட், நாதன் எல்லீஸ், ஸ்பென்சர் ஜான்சன், தன்வீர் சங்கா.
- முன்னதாக சீனாவுடன் நடைபெற்ற போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது
- வங்காள தேசத்துடனான ஆட்டத்தில் முதற்பகுதி கோல் ஏதும் இல்லாமல் தொடர்ந்தது
ஆசியாவிலுள்ள நாடுகளுக்கிடையே நடைபெறும் பல்வேறு போட்டிகளை உள்ளடக்கிய ஆசிய விளையாட்டு போட்டிகள் (Asian Games) நாளை மறுநாள் தொடங்கி அக்டோபர் 8 வரை சீனாவில் நடைபெறுகிறது.
இந்நிலையில், சீனாவின் ஹேங்ஜவ் நகரில் ஜியாவோஷான் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற குரூப் ஏ (Group A) விளையாட்டுகளில் இந்தியா, வங்காள தேசத்தை இன்று 1-0 எனும் கோல்கணக்கில் தோற்கடித்தது.
கடந்த செவ்வாயன்று நடைபெற்ற ஆட்டத்தில் சீனாவிடம் இந்தியா 5-1 எனும் கோல்கணக்கில் மோசமான தோல்வியை சந்தித்தது. தற்போதைய வங்காள தேச போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம், இந்தியா இப்போட்டி தொடரில் தனது இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.
ஆட்டத்தின் முதற்பகுதியில் இந்தியா கோல் போடுவதற்கு கிடைத்த பல நல்ல சந்தர்ப்பங்களை கோட்டை விட்டது. ஆட்டத்தின் இரண்டாவது பகுதியிலும் கிட்டத்தட்ட இதே நிலை நீடித்தது.
ஆனால் ஆட்ட நேரத்தின் 85-வது நிமிடத்தில் வங்காள தேசத்தின் கேப்டன் ரஹ்மத் மியா ஃபவுல் ஆட்டம் ஆடியதை தொடர்ந்து இந்தியாவிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அப்போது இந்திய கேப்டன் சுனில் சேத்ரி முன்வந்து சிறப்பாக கோல் போட்டார்.
இதன் மூலம் 1-0 எனும் கோல் கணக்கில் இந்தியா வென்று, ஆட்டத்தொடரிலிருந்து வெளியேறாமல் தனது நிலையை தக்க வைத்து கொண்டுள்ளது.
- பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் ஷாருக்கான்.
- இவர் நடிப்பில் சமீபத்தில் 'ஜவான்' திரைப்படம் வெளியானது.
பாலிவுட்டின் பிரபல நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் திரைத்துறையில் அறிமுகமான இவர் படிப்படியாக தனது திறமைகளை வளர்த்து கொண்டு பாலிவுட்டில் கால்பதித்தார். 1992-ஆம் ஆண்டு 'தீவானா' என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த ஷாருக்கான் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகர்கள் பட்டியலில் தனது பெயரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

இவர் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார். ஷாருக்கான் நடிப்பில் மட்டுமல்லாமல் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து தயாரித்திருந்த 'ஜவான்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று ரூ.1000 கோடி வசூலை நெருங்கவுள்ளது. இந்த வெற்றியை படக்குழு கொண்டாடி வருகிறது.

இந்நிலையில், நடிகர் ஷாருக்கானை முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள கம்பீர், "ஷாருக்கான் பாலிவுட்டிற்கு மட்டும் ராஜா அல்ல, அனைவர் மனதிலும் அவர் ராஜாதான். நாம் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் நான் அளவற்ற அன்புடனும் மரியாதையுடனும் திரும்பிச் செல்கிறேன். உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
- இந்திய வீராங்கனைகள் 15 ஓவரில் 173 ரன்கள் குவித்தனர்
- மலேசியா 2 பந்துகள் மட்டுமே எதிர்கொண்ட நிலையில், மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது
ஆசிய விளையாட்டு போட்டி 2023 இன்னும் அதிகாரப்பூர்வமாக தொடங்கவில்லை என்றாலும் கைப்பந்து, கிரிக்கெட் போன்ற போட்டிகளின் தொடக்க சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கிரிக்கெட் போட்டி டி20-யாக நடத்தப்படுகிறது.
இன்று பெண்கள் கிரிக்கெட்டிற்கான முதல் காலிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா- மலேசியா அணிகள் மோதின. முதலில் இந்தியா பேட்டிங் செய்தது. 5.4 ஓவரில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்திருக்கும்போது, மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
மழை நின்றதும் ஆட்டம் 15 ஓவராக குறைக்கப்பட்டது. இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா 39 பந்தில் 4 பவுண்டரி, 5 சிக்சருடன் 67 ரன்கள் குவித்தார். ரோட்ரிக்ஸ் ஆட்டமிழக்காமல் 29 பந்தில் 47 ரன்கள் சேர்த்தார். இதனால் இந்திய பெண்கள் அணி 15 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்தது.
பின்னர் 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் மலேசியா அணி களம் இறங்கியது. இரண்டு பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், மழை மீண்டும் குறுக்கிட்டது. அதன்பின் போட்டியை நடத்த சாத்தியமில்லை என கருதிய போட்டி நிர்வாகிகள், ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தனர். போட்டியில் முடிவு கிடைக்காத போதிலும், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
- சாத்விக் வால்டன் அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 57 பந்தில் 80 ரன்கள் குவித்தார்
- 18.1 ஓவரிலேயே இலக்கை எட்டியது டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்
கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் குவாலிபையர்-1, இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த கயானா அமேசான் வாரியர்ஸ் 20 ஒவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் தொடக்க வீரர் சாய்ம் ஆயுப் 39 பந்தில் 49 ரன்களும், விக்கெட் கீப்பர் அசாம் கான் 27 பந்தில் 36 ரன்களும் சேர்த்தனர்.
பின்னர் 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது. இந்த அணியின் தொடக்க வீரர் சாத்விக் வால்டன் அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 57 பந்தில் 80 ரன்கள் விளாச, டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 18.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
நாளை மறுநாள் (22-ந்தேதி) இந்திய நேரப்படி 23-ந்தேி அதிகாலை 4.30 மணிக்கு ஜமைக்கா தல்லாவாஸ்- கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான குவாலிபையர்-2 போட்டி நடைபெற இருக்கிறது. எலிமினேட்டரில் ஜமைக்கா தல்லாவாஸ் அணியை செயின்ட் லூசியாக கிங்ஸ் வீழ்த்தியிருந்தது.






