என் மலர்
நீங்கள் தேடியது "கரீபியன் பிரீமியர் லீக்"
- அகீல் ஹொசைன் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
- பொல்லார்டு தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.
கயானா:
6 அணிகள் பங்கேற்றிருந்த 13-வது கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் நிக்கோலஸ் பூரன் தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி, இம்ரான் தாஹிர் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கயானா அமேசான் வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக இப்திகார் அகமது 30 ரன்கள் அடித்தார். டிரின்பாகோ தரப்பில் நேத்ராவல்கர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 131 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன காலின் முன்ரோ (23 ரன்கள்), அலேக்ஸ் ஹேல்ஸ் (26 ரன்கள்) நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். ஆனால் அடுத்து வந்த வீரர்கள் சொதப்பினர். பூரன் ஒரு ரன்னிலும், பிராவோ 11 ரன்களிலும், ரசல் கோல்டன் டக் ஆகியும் ஏமாற்றினர்.
இதனால் தடுமாற்றத்திற்குள்ளான அந்த அணியை சுனில் நரைன் (22 ரன்கள்), பொல்லார்டு (21 ரன்கள்) மற்றும் அகீல் ஹொசைன் (16 ரன்கள்) கரை சேர்த்தனர். 18 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் அடித்த டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கயானா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அகீல் ஹொசைன் ஆட்ட நாயகன் விருதையும், பொல்லார்டு தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.
சாம்பியன் பட்டம் வென்ற டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு 8.83 கோடி பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டது. 2-ம் இடம் பிடித்த கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்கு ரூ. 5.82 கோடியும் 3-வது மற்றும் 4-வது இடம் பிடித்த அணிகளுக்கு ரூ. 2.21 கோடி, 0.88 கோடியும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
- இறுதிப்போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் -ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின
- நைட் ரைடர்ஸ் அணி 18 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
கரீபியன் பிரீமியர் லீக் வெஸ்ட் இண்டீஸில் கடந்த ஆகஸ்டு 14-ந் தேதி தொடங்கியது.
இந்த தொடரின் இறுதிப்போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியை ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொண்டது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் அடித்தது.
இதனையடுத்து 131 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 18 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
இதன்மூலம் 5 ஆவது முறையாக கரீபியன் ப்ரீமியர் லீக் கோப்பையை வென்று நிக்கோலஸ் பூரன் தலைமையிலான ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி சாதித்துள்ளது.
கரீபியன் பிரீமியர் லீக்க்கின் தொடர் நாயகன் விருதை ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி வீரர் பொல்லார்டு வென்றார்.
- பொல்லார்ட் முதல் 13 பந்தில் 12 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
- கடைசி 8 பந்தில் 7 சிக்சர்கள் அடித்து அசத்தினார்.
கரீபியன் பிரீமியர் லீக் வெஸ்ட் இண்டீஸில் கடந்த ஆகஸ்டு 14-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 19-வது லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த பூரன் தலைமையிலான டிரின்பாகோ அணி 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பொல்லார்ட் 29 பந்தில் 65 ரன்கள் எடுத்தார். இதில் 8 சிக்சர்கள் அடங்கும். முதலில் மந்தமாக விளையாடிய பொல்லார்ட் முதல் 13 பந்தில் 12 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
இதனையடுத்து ருத்ரதாண்டவம் ஆடிய அவர், கடைசி 16 பந்தில் 53 ரன்கள் விளாசினார். குறிப்பாக கடைசி 8 பந்தில் 7 சிக்சர்கள் அடித்து அசத்தியுள்ளார். 38 வயதில் இந்த அடி அடிப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவரை மும்பை இந்தியன்ஸ் அணியில் கூட பேட்டராக தேர்வு செய்யலாம் எனவும் பல ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இதனையடுத்து களமிறங்கிய நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 20 ஓவர்களில் 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் டிரின்பாகோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- முதலில் பேட்டிங் செய்த பூரன் தலைமையிலான டிரின்பாகோ அணி 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது.
- இந்த அணி 7 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே தோல்வி கண்டுள்ளது.
கரீபியன் பிரீமியர் லீக் வெஸ்ட் இண்டீஸில் கடந்த ஆகஸ்டு 14-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒரு அணி மற்ற அணியுடன் இருமுறை மோத வேண்டும். இறுதியில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற 19-வது லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த பூரன் தலைமையிலான டிரின்பாகோ அணி 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பொல்லார்ட் 29 பந்தில் 65 ரன்கள் எடுத்தார். இதில் 8 சிக்சர்கள் அடங்கும்.
இதனையடுத்து களமிறங்கிய ஹோல்டர் தலைமையிலான அணி 20 ஓவர்களில் 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஆண்ட்ரே பிளெட்சர் 67 ரன்கள் குவித்தார். இதன்மூலம் டிரின்பாகோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் இந்த தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய முதல் அணியாக டிரின்பாகோ முன்னேறி உள்ளது. இந்த அணி 7 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே தோல்வி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- முதலில் பேட்டிங் செய்த கயானா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் குவித்தது.
- இதனையடுத்து களமிறங்கிய பார்புடா பால்கன்ஸ் 15.2 ஓவர்களில் 128 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
ஆன்டிகுவா:
கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற (இந்திய நேரப்படி) 9-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணி, ஆன்டிகுவா மற்றும் பார்புடா பால்கன்சை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கயானா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 82 ரன்களும், ஹெட்மேயர் 65 ரன்களும் அடித்தனர்.
பின்னர் 212 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆன்டிகுவா அணி இம்ரான் தாஹிரின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.
இதனால் 15.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஆன்டிகுவா மற்றும் பார்புடா பால்கன்ஸ் 128 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் கயானா அமேசான் வாரியர்ஸ் 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கயானா தரப்பில் இம்ரான் தாஹிர் 4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 21 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக வயதில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய கேப்டன் என்ற உலக சாதனையை இம்ரான் தாஹிர் (46 வயது 148 நாட்கள்) படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் மலாவி கேப்டன் மொவாசம் அலி பெய்க் தனது 39 வயதில் கேமரூனுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.
- சாத்விக் வால்டன் அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 57 பந்தில் 80 ரன்கள் குவித்தார்
- 18.1 ஓவரிலேயே இலக்கை எட்டியது டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்
கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் குவாலிபையர்-1, இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த கயானா அமேசான் வாரியர்ஸ் 20 ஒவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் தொடக்க வீரர் சாய்ம் ஆயுப் 39 பந்தில் 49 ரன்களும், விக்கெட் கீப்பர் அசாம் கான் 27 பந்தில் 36 ரன்களும் சேர்த்தனர்.
பின்னர் 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது. இந்த அணியின் தொடக்க வீரர் சாத்விக் வால்டன் அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 57 பந்தில் 80 ரன்கள் விளாச, டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 18.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
நாளை மறுநாள் (22-ந்தேதி) இந்திய நேரப்படி 23-ந்தேி அதிகாலை 4.30 மணிக்கு ஜமைக்கா தல்லாவாஸ்- கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான குவாலிபையர்-2 போட்டி நடைபெற இருக்கிறது. எலிமினேட்டரில் ஜமைக்கா தல்லாவாஸ் அணியை செயின்ட் லூசியாக கிங்ஸ் வீழ்த்தியிருந்தது.
- அந்த்ரே ரசல் அணி 19.1 ஓவர்கள் விளையாடிய நிலையில் லைட் பழுதால் ஆட்டம் தடைபட்டது.
- கட்ஆஃப் நேரம் முடிவதற்கு 5 நிமிடத்திற்கு முன் சரி செய்யப்பட்டதால் ஆட்டம் 5 ஓவராக குறைக்கப்பட்டது.
வெஸ்ட் இண்டீசில் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. உள்ளூர் நேரப்படி கடந்த 1-ந்தேதி எலிமினேட்டர் போட்டி நடைபெற்றது. இதில் டிரிபான்கோ நைட் ரைடர்ஸ்- பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் மோதின.
அந்த்ரே ரஸல் இடம் பிடித்துள்ள டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 19.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்திருந்தபோது லைட்டில் (floodlights) பழுது ஏற்பட்டது. 6 கோபுர லைட்களில் 3-ல் பழுது ஏற்பட்டது. இதனால் போட்டி நிறுத்தப்பட்டது.
இத்தனை மணி நேரத்திற்குள் தொடங்கவில்லை என்றால் போட்டி கைவிடப்படும் என ஒரு நேரம் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த நேரம் முடிவடைய 10 நிமிடம் இருக்கும்போது லைட் பழுது சரிபார்க்கப்பட்டது.
இதனால் பார்படோஸ் அணி 5 ஓவரில் 60 ரன்கள் அடித்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. டேவிட் மில்லர் 17 பந்தில் 50 ரன்கள் அடிக்க பார்படோஸ் ராயல்ஸ் 4.2 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதனால் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர். குறிப்பாக அந்த்ரே ரஸல் கடும் ஏமாற்றம் அடைந்தார். இந்த நிலையில் இந்த முடிவை கொள்ளையடிக்கப்பட்டதாக உணர்கிறேன் என ரஸல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அந்த்ரே ரசல் வெளியிட்டுள்ள இஸ்டாகிராம் ஸ்டோரியில் "இணையத்தில் வந்து கருத்து தெரிவிக்கும் நபர் நான் அல்ல. என்னுடைய கருத்தின்படி இந்த வருட கரீபியன் பிரீமியர் லீக் கொள்ளை அடிக்கப்பட்டதாக உணர்கிறேன்.
லைட் சூழ்நிலை ****ry. கட்ஆஃப் நேரம் முடிவடைவதற்கு சற்று முன் லைட் வந்தது மேலும் ****ry. அதனை விட 30 பந்தில் 60 ரன்கள் என்பது மிகப்பெரிய ****ry. இது உண்மையான ****ry என நான் கருதுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
- முதலில் விளையாடி கயானா 138 ரன்களே சேர்த்தது.
- செயின்ட் லூசியா 18.1 ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் நடத்தும் கரீபியன் பிரீமியர் லீக்கின் இறுதிப் போட்டி உள்ளூர் நேரப்படி நேற்றிரவு (இந்திய நேரப்படி இன்று அதிகாலை) நடைபெற்றது. இதில் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான செயின்ட் லூசியா கிங்ஸ்- இம்ரான் தாஹிர் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் விளையாடிய கயானா அணியால் 20 ஓவரில் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. அநத அணியின் விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப் 22 ரன்களும், பிரிட்டோரியஸ் 25 ரன்களும் சேரத்தனர். செயின்ட் லூசியா அணி சார்பில் நூர் அகமது 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.
பின்னர் 138 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் செயின்ட் லூசியா அணி களம் இறங்கியது. ராஸ்டன் சேஸ் ஆட்டமிழக்காமல் 39 ரன்களும், ஆரோன் ஜோன்ஸ் ஆட்டமிழக்காமல் 48 ரன்களும் விளாச செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 18.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. டு பிளிஸ்சிஸ் 21 பந்தில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த வெற்றியின் மூலம் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.






