என் மலர்
விருதுநகர்
- ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூர திருவிழாவில் 5 கருட சேவையை கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.
- வருகிற 22-ந்தேதி பெரிய தேரோட்டம் நடக்கிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 108 வைணவ திருத் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாக திகழ்கிறது. கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்றும் போற்றப்படுகிறது. ஸ்ரீரங்கம் ெரங்கநாதரின் மீது கொண்ட பக்தியால் ஆண் டாள் இயற்றிய திருப்பாவை இன்றைக்கும் வைணவ தலங்களில் பாடப்படுகிறது.
பூமாதேவியின் அம்ச–மான துளசி செடியில் அவ–தரித்த ஆண்டாள் இறைவ–னுக்காக தொடுத்த மாலையை தான் சூடி அழகு பார்த்து, பின்னர் இறைவ–னுக்கு கொடுத்த ஆண் டாளை சூடிக்கொடுத்த சுடர்கொடியாளாக பக்தர் கள் போற்றுகின்றனர். ஆண்டு–தோறும் ஆடி மாதத் தில் வரும் பூரம் நட்சத்திரம், ஆண்டாள் அவ–தார தின–மாக கொண்டா–டப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண் டாள் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடிப்பூரம் திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்றைய தினம் இரவு ஆண்டாள், ரெங்கமன்னார் 16 சக்கர சப்பரத்திலும், 4-ம் நாளான நேற்று முன்தினம் இரவு ரெங்கமன்னார் கோவர்த்தனகிரி மலையை தூக்கிய ஸ்ரீ கிருஷ்ணர் அலங்காரத்திலும், ஆண் டாள் சேஷ வாகனத்தி–லும் எழுந்தருளி பக்தர்க–ளுக்கு அருள் பாலித்தனர். தொடர்ந்து விழா நாட்களில் இரவு சுவாமிகள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்கள்.
விழாவையொட்டி நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு பெரியாழ் வார் மங்களாசாசன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நேற்று காலை 10 மணிக்கு பெரிய பெருமாள், ரெங்கமன்னார், செண்பகத் தோப்பு கள்ளழகர் கோவில் சுந்தர்ராஜபெருமாள், திரு–வண்ணாமலை சீனிவாச பெருமாள், திருத்தங்கல் திருநின்ற நாராயண பெரு–மாள் ஆகியோருக்கு பெரி–யாழ்வார் மங்களாசாசனம் செய்து வைத்தார்.
இதையடுத்து இரவு 10 மணிக்கு ஆண்டாள் கோவில் திருக்கொட்டகை–யில் பெருமாள்கள் எழுந்த–ருளிய 5 கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளி–மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் வழிபட்டனர். அதன்பின் நான்குரத வீதிகளிலும் பக்தர்கள் நாம சங்கீர்த்தன பஜனை பாடிய–படி முன் செல்ல பெரிய பெருமாள், ரெங்க–மன்னார், திருத்தங்கல் அப்பன், சுந்தர்ராஜபெருமாள், ஸ்ரீனி–வாச பெருமாள், ஆண்டாள், பெரியாழ்வார் ஆகியோர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
நாளை சயன சேவை
10 நாட்கள் நடைபெறும் விழாவின் 7-ம் நாளான நாளை (20-ந்தேதி, வியாழக் கிழமை) ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவிலில் சயன சேவை நிகழ்ச்சி மாலையில் தொடங்கி இரவு வரை நடைபெறுகிறது.
ஆண்டாள் மடியில் ரெங்க–மன்னார் தலை–வைத்து இருக்கும் இந்த சேவை நாட்டிலேயே ஸ்ரீவில்லி–புத்தூரில் மட்டுமே நடைபெ–றும் என்பதால் பல்லாயி–ரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து–கொள்வார்கள்.
22-ந்தேதி தேரோட்டம்
ஆடிப்பூர விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப் பூர தேரோட்டம் வருகிற 22-ந்தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு ஆண்டாள், ெரங்க மன்னாருக்கு சிறப்பு திரு–மஞ்சனம் நடைபெறுகிறது. அதன் பிறகு ஆண்டாள், ெரங்கமன்னர் கீழ ரத வீதியில் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் எழுந்தருளு–கின்றனர். பின்னர் காலை 8.05 மணிக்கு தேரோட்டம் தொடங்கி நடைபெறுகிறது.
இதில் மாவட்டத்தின் அனைத்து ஊர்கள், பட்டி–தொட்டிகளில் இருந்து பங்கேற்கும் பக்தர்கள் கோவிந்தா..., கோபாலா... என்ற பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுக்கி–றார்கள். 4 ரதவீதி–களிலும் வலம் வரும் தேர் பிற்பகலுக்குள் மீண்டும் நிலையை வந்தடையும். தேரோட்ட விழா தொடங் கிய நாள் முதல் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்க–ளால் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரம் விழாக்கோலம் பூண் டுள்ளது.
விழாவிற்கான ஏற்பாடு–களை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலு–வலர் முத்துராஜா மற்றும் பட்டர்கள், பணியா–ளர்கள், ஊழியர்கள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
- விருதுநகரில் தமிழ்நாடு தினம் கொண்டாட்டப்பட்டது.
- சிறப்பு அரசு சாதனை விளக்க கண்காட்சியை அமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார்.
விருதுநகர்
இன்று தமிழ்நாடு தினம் கொண்டாடப்படு வதையொட்டி விருதுநகரில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து தேச பந்து திடலில் அமைக்கப் பட்டிருந்த சிறப்பு அரசு சாதனை விளக்க கண்காட்சி யை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
1968-ம் ஆண்டு இதே தினத்தில் சட்டப் பேரவையில் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று அன்றைய முதல்-அமைச்சர் அண்ணா பெயர் சூட்டினார். கடந்த ஆண்டு முதல் இந்த தினம் (ஜூலை18) தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி விருதுநகரில் தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டது.
அதற்கு வித்திட்ட தியாகி சங்கரலிங்கனார் விருது நகரில் தான் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தார் என்பது மேலும் ஒரு சிறப்பாகும். அவரது தியாகத்தை போற்றும் வகையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பெருமைக்குரிய இந்த தினத்தை தமிழ்நாடு தினமாக கொண்டாடுமாறு உத்தரவிட்ட தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சிகளில் கலெக்டர் ஜெயசீலன், எம்.எல்.ஏ.சீனிவாசன், நகர சபை தலைவர் மாதவன், யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர்.
- மோசடியில் ஈடுபட்ட எமர்சன் என்ற எலிமேசன், சாந்தகுமாரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் துரைசாமிபுரம் செங்குட்வடுவன் தெருவைச் சேர்ந்தவர் பாலையா (வயது 64). தமிழக அரசின் வணிகவரித்துறை உதவி ஆணையாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற அவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இவரிடம் ராஜபாளையம் அருகேயுள்ள தெற்கு தேவதானத்தை சேர்ந்த கணவன், மனைவியான எமர்சன் என்ற எலிமேசன் (42), சாந்தகுமாரி (38) ஆகியோர் அறிமுகம் ஆனார்கள்.
அவர்கள் தாங்கள் ராஜபாளையத்தில் பி.எஸ். என்ற பெயரில் நகை அடகுக்கடை நடத்தி வருவதாகவும், குறைந்த வட்டியில் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர்.
இதனை நம்பிய பாலையா தன்னிடம் இருந்த 440.850 கிராம் (55 பவுன்) தங்க நகைகளை தம்பதியினர் நடத்தி வந்த கடையில் அடகு வைத்தார். இந்த நகைகளை பாலையா தனது பெயரிலும், தனது மகன் அமர்நாத் பெயரிலும் அடகு வைத்திருந்தார்.
குறிப்பிட்ட கால இடைவெளியில் முதல் தவணையாக வட்டித்தொகையை செலுத்திய பாலையா தனது நகைகளை திருப்பி கொள்வதாக தெரிவித்துள்ளார். ஆனால் நகைகளை திருப்பித்தர மறுத்த தம்பதியினர் பாலையாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதன்பின்னரே அவர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து பாலையா விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். மேலும் விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் முன்னாள் அரசு அதிகாரியிடம் 55 பவுன் நகை மோசடியில் ஈடுபட்ட எமர்சன் என்ற எலிமேசன், சாந்தகுமாரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சதுரகிரி மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
- இதனால் சதுரகிரி கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு நாளை தடை விதிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரியில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தற்போது பிரதோஷம், அமாவாசை முன்னிட்டு கடந்த 15-ம் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர்.
இதற்கிடையே, நேற்று மாலை 4 மணிக்கு பக்தர்கள் நடந்து செல்லும் மலைப்பாதையை ஒட்டிய தவசிப்பாறை 5-வது பீட்டில் இரட்டை லிங்கம் மற்றும் பச்சரிசிப்பாறை இடையே உள்ள நாவலூற்று பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றியது. இந்த சூழலில் சம்பவ பகுதிக்கு வனத்துறையினர் தற்போது விரைந்துள்ளனர்.
இந்நிலையில், சதுரகிரி மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீ காரணமாக நாளை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
அமாவாசை தரிசனத்திற்காகச் சென்ற பக்தர்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கீழே இறங்கி செல்ல தடை விதிக்கப்பட்டு மலையில் உள்ள கோயில் வளாகத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
- சிவகாசி அருகே வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர்கள் தூக்குப்போட்டு தற்கொலை தற்கொலை செய்து கொண்டனர்.
- மது பழக்கத்தால் இந்த விபரீதம் நடந்துள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சிங்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாரி முத்து (வயது 31). இவரது மனைவி குருவம்மாள். மாரிமுத்து பால் கறப்பது, கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு மது பழக்கம் இருந்தது. அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கண வன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது.
இந்த நிலையில் மனைவி உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றிருந்தபோது வீட்டில் இருந்த பித்தளை பாத்திரங்களை விற்று மது குடித்துள்ளார். இதை அறிந்த மனைவி அவரை கண்டித்தார்.
இதனால் மனம் உடைந்த மாரிமுத்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாரனேரி போலீஸ் நிலையத்தில் குருவம்மாள் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி அருகே சாட்சி யாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமானுஜம் (24). இவரது மனைவி மாரிச்செல்வி (21). இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட வர்கள். ராமானுஜத்துக்கு மது பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச் சினை ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத் தன்று இரவு ராமானுஜம் குடி போதையில் வீட்டுக்கு வந்தார். அவரை மனைவி கண்டித்துள்ளார்.
உடனே சினிமா பார்க்க செல்வதாக கூறிவிட்டு ராமானுஜம் வெளியே சென்றார். சிறிது நேரம் கழித்து வீட்டின் வெளியே இருந்த விளக்கை அணைப் பதற்காக மாரிச்செல்வி சென்றார். அப்போது அங்கு இருந்த இரும்பு தாழ்வாரத்தில் தூக்கில் தொங்கியபடி ராமானுஜம் பிணமாக கிடந்தார். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் மாரிச்செல்வி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் இளம்பெண்-தனியார் ஊழியர் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி காமராஜர்புரம் காலனியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் புஷ்பகலா (வயது 23). பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்தார்.
சம்பவத்தன்று வேல்முரு கன் வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது மகள் வீட்டில் இல்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடிய வில்லை.
இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத் தில் வேல்முருகன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாய மான புஷ்பகலாவை தேடி வருகின்றனர்.
விருதுநகர் அய்யனார் நகரை சேர்ந்தவர் முத்துசங்க ரன் (36). தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவருக்கு கடன் பிரச்சினை இருந்தது. இந்த நிலையில் மாமியார் வீட்டுக்கு சென்றார். அங்கு கடன் கொடுத்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதைத்தொடர்ந்து கணவரை கண்டுபிடித்து தருமாறு விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் அவரது மனைவி முத்துமாரி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணன்கோவில் உதயா நகரை சேர்ந்தவர் நஜூமுதீன். இவரது மகன் பசீல்ரகீம். இவர் வெளியூர் செல்வதாக கூறி சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் கிருஷ்ணன்கோவில் போலீஸ் நிலையத்தில் நஜூமுதீன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருச்சுழி அருகே சொத்து பிரச்சினையில் மகன், தாயை உருட்டு கட்டையால் தாக்கினார்.
- இந்த சம்பவம் குறித்து பரளச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள மேலப்பாறைக்குளம் பகுதியை சேர்ந்தவர் முத்தம்மாள் (வயது63). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். முத்தம் மாளின் கணவர் முத்துச் சாமி ஏற்கனவே இறந்து விட்டார்.
அதன் பின்னர் தனது தோட்டத்தில் அவர் தனியாக வசித்து வந்தார். மேலப்பாறைக் குளத்தில் வசிக்கும் மகள்கள் முரு கேஸ்வரி, முனியம்மாள் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவார்.
இந்த நிலையில் அவர் தோட்டத்தில் தனியாக இருந்தபோது மகன் முத்துக் குமார் வந்தார். அவர் சொத்துக்களை தனது பெயரில் எழுதி வைக்க வேண்டும் என கூறி தகராறு செய்தார். மேலும் மகள்கள் வீட்டிற்கு முத்தம் மாள் செல்லக்கூடாது எனவும் கூறி வாக்குவாதம் செய்தார்.
ஆனால் அதற்கு சம்மதிக் காமல் முத்தம்மாள் பதில் வாக்குவாதம் செய்து உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த முத்துக்குமார் அங்கு கிடந்த உருட்டுக் கட்டையால் தாயை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து சென்றார்.
இதில் காய மடைந்த முத்தம்மாள் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து பரளச்சி போலீஸ் நிலையத்தில் முத்தம்மாள் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ரோடு தாமரை நகரை சேர்ந்தவர் பாலாஜி (வயது24). பெற்றோருடன் வசித்து வருகிறார். ராமகிருஷ்ணா புரம் பகுதியில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு பாலாஜி பொருட்களை எடுத்து வைத்து கடையை பூட்டி கொண்டிருந்தார்.
அப்போது அவரது தாயார் செல்போனில் அழைத்தார். பதற்றமாக பேசிய அவர் பாலாஜியை உடனடியாக வீட்டிற்கு வரும்படி கூறிவிட்டு அழைத்து துண்டித்து விட்டார்.
இதனால் வேகமாக கடையை பூட்டிவிட்டு பாலாஜி தனது வீட்டிற்கு சென்றார். வீட்டு வாசலுக்கு வந்த போது வீட்டிற்குள் இருந்து குரங்கு குல்லா அணிந்த மர்ம நபர்கள் வேகமாக வெளியே வந்தனர்.
கண் இமைக்கும் நேரத்தில் பாலாஜியை தாக்கி கீழே தள்ளிவிட்டு தப்பி சென்றனர். இதில் பாலாஜிக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் பாலாஜி வீட்டிற்குள் சென்று பெற்றோரிடம் விசாரித்தார். அப்போது திடீரென வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி நகையை கேட்டதாகவும், வேறு வழியின்றி 6 ½ பவுன் தாலி செயினை கொடுத்து விட்டதாகவும் அவரது தாயார் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் நிலையத்தில் பாலாஜி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- படிக்கட்டுகளில் அமர்ந்து பயணம் செய்வதை விரும்பும் இளைஞர்கள் சில சமயங்களில் விபரீத செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
- ரெயில் படிக்கட்டில் அமரும் தகராறில் வாலிபர்கள் 2 பேர் தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர்:
கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலை தென் மாவட்ட மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக முன் பதிவு செய்யப்படாத பெட்டியில் ஏறும் பயணிகள் இருக்கைகளுக்காக அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதும், மோதலில் ஈடுபடுவதும் வழக்கமான ஒன்றாகி விட்டது.
அதிலும் படிக்கட்டுகளில் அமர்ந்து பயணம் செய்வதை விரும்பும் இளைஞர்கள் சில சமயங்களில் விபரீத செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இன்று காலை கோவையில் இருந்து புறப்பட்ட அந்த ரெயில் மதுரையை கடந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று இந்த ரெயிலில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. முன்பதிவு அல்லாத இரண்டு பெட்டிகளிலும் குற்றாலம் செல்லும் சுற்றுலா பயணிகள் உள்பட ஏராளமானோர் நின்றவாறும் பயணம் செய்தனர். இதற்கிடையே படிக்கட்டுகளிலும் இளைஞர்கள் சிலர் தொங்கியவாறும் சென்றனர்.
அப்போது படியில் அமர்வதில் பயணம் செய்வதில் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (வயது 32), தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த மாரியப்பன் (36) ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. உடனே ரெயிலில் பயணம் செய்த சக பயணிகள் அவர்களை கண்டித்ததோடு, உள்ளே வருமாறும் அறிவுரை கூறினர். ஆனால் அதனை ஏற்காமல் அந்த வாலிபர்கள் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டவாறு வந்தனர்.
ஒருகட்டத்தில் மோதல் முற்றியதில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். விருதுநகரை தாண்டி ஆர்.ஆர். நகர் பகுதியில் ரெயில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது தாக்குதலில் ஈடுபட்ட வாலிபர்கள் இரண்டு பேரும் அடுத்தடுத்து படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தனர்.
இதில் ஒருவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் உயிருக்கு போராடிய வாலிபரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார்.
பலியான இரண்டு பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டன. ஓடும் ரெயில் படிக்கட்டில் அமரும் தகராறில் வாலிபர்கள் 2 பேர் தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காளீஸ்வரி கல்லூரியில் தேசிய மாணவர் படைக்கு ஆள் தேர்வு நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் 87 மாணவர்களும், 35 மாணவிகளும் பங்கு பெற்றனர்.
சிவகாசி
சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி, தேசிய மாணவர் படைக்கான மாணவர் சேர்க்கை கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. கணினி பயன்பாட்டியல் துறை உதவிப்பேராசிரியரும், தேசிய மாணவர் படையின் ஒருங்கிணைப்பாளருமான கணேஷ்பாபு மற்றும் விருதுநகர் பயிற்சியகத்தை சேர்ந்த பெருமாள், பிரபு ஆகியோர் இணைந்து சேர்க்கை முகாமை நடத்தினர். மேலும் உடல்நிலை குறித்த புரிதல் வேண்டும் என்றும், இன்றைய பெருந்தொற்று காலத்தில் உடல்நிலை பேணிக்காத்தலின் அவசியம் பற்றியும் எடுத்துரைத்தார்.
இந்த சேர்க்கை முகாமில் மாணவர்களுக்கு 1200 மீ ஓட்டமும், மாணவிகளுக்கு 800 மீ ஓட்டமும் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்குத் தண்டால் மற்றும் உடல் தகுதி சோதனைகளும் நடைபெற்றது. இந்நிகழ்வில் 87 மாணவர்களும், 35 மாணவிகளும் பங்கு பெற்றனர். இறுதியில் 30 மாணவர்களும், 12 மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. முடிவில் ஏஞ்சல் ராணி நன்றி கூறினார்.
- சிவகாசி அருகே காய்கறி வியாபாரி வீட்டில் 16 பவுன் நகை கொள்ளை போனது.
- இதுகுறித்த புகாரின் பேரில் மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சாமிநத்தம் ஜெம்நகரை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 36). இவர் அண்ணாநகர் காய்கறி மார்க்கெட்டில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் கடைக்கு சென்று விட்டார். 2 மகள்கள் பள்ளிக்கு சென்று விட, மனைவியும் வீட்டை கூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார்.
இதை நோட்டமிட்ட மறுமணம் அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர் பின்னர் பீரோவில் இருந்த 16 பவுன் நகை திருடிக்கொண்டு தப்பினர்.
வியாபாரம் முடித்து மாலையில் வீடு திரும்பிய கோவிந்தன் கதவு உடைக்கப்பட்டு நகை திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- திருச்சுழி தொகுதியில் ரூ. 10 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
- காரியாபட்டி ஒன்றியத்திலும் பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியம் குச்சம் பட்டி புதூரில் நெடுஞ் சாலைத்துறை மூலமாக நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 18 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பீட்டில் திருச்சுழி - காரியாபட்டி சாலையில் இருந்து குச்சம்பட்டி புதூர் குண்டாற்றில் 10 தூண்களுடன் கூடிய சுமார் 9 கண்கள் கொண்ட புதிய உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
அதே போன்று திருச்சுழி ஒன்றியம் வடக்கு நத்தம் சாலையில் ரூ.2 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான பணியையும் அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.மேலும் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட இலுப்பையூர் கிராமத்தில் சுமார் ரூ.1 கோடியே 20 லட்சம் ரூபாய் திட்ட மதிப் பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டுவதற்கான அரும்பணி யையும் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் அடிக் கல் நாட்டி தொடங்கி வைத் தார். மேலும் இந்நிகழ்ச்சியில் 4 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை யும், மக்களை தேடி மருத்து வம் திட்டத்தின் கீழ் பயன் பெறும் 5 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகத்தையும் அமைச்சர் தங்கம் தென்ன ரசு வழங்கினார்.
காரியாபட்டி ஒன்றியத் தில் சுமார் 3 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்ட பணி களையும் தொடங்கி வைத் தார். இந்த அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சிக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெய சீலன் தலைமை தாங்கினார். நெடுஞ்சா லைத்துறை கோட்டப்பொ றியாளர் முரளிதர், அருப்புக் கோட்டை வருவாய் கோட் டாட்சியர் கணேசன், நெடுஞ்சா லைத்துறை ஊரக சாலை உதவி பொறியாளர் வெங்கடேஷ், திருச்சுழி ஒன்றிய சேர்மன் பொன்னுத் தம்பி, நரிக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர்போஸ்த் தேவர், தங்க தமிழ்வாணன், நரிக்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






