என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • சிவகாசியில் மாற்று கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பேசினார்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மாற்று கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி 300-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.

    அப்போது கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

    ஆளும் தி.மு.க. எல்லா வழிகளிலும் மக்களை துன்புறுத்தி வருகிறது. தி.மு.க. ஆட்சியில் தக்காளி விலை, உணவு பொருட்களின் விலை உயர்வடைந்து உள்ளது. மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள்தான் நாட்டை ஆள வேண்டும்.

    அ.தி.மு.க. ஆட்சி காலங்க ளில் மக்களை பாதிக்காத வகையில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. மக்கள் கஷ்டப்படும் நிலைமையை மாற்ற நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆளும் இயக்கமாக இருக்க வேண்டிய நாம் சூழ்நிலை சந்தர்ப்பத்தால் ஆட்சியை இழந்தோம். மீண்டும் ஆட்சிக்கு வருவோம். மக்களுக்கு நலத்திட்டங்களை நிறைவேற்றி தரு வோம். மாற்று கட்சியினரின் நடவடிக்கை பிடிக்கவில்லை என்பதால் மாற்று இயக்கத்தை சேர்ந்தவர்கள் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். அனைவரையும் வர வேற்போம். மதிப்பளிப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், சிவகாசி மாநகராட்சி பகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, கருப்பசாமிபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கியம், லட்சுமி நாராயணன், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் விஜய் ஆனந்த், தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாவட்ட செயலாளர் பாண்டியராஜன், தலைவர் செல்வம் பொதுக்குழு உறுப்பினர் சித்துராஜபுரம் பாலாஜி, ஒன்றிய கவுன்சிலர் ஜெகத்சிங்பிரபு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையத்தில் குடிநீர் சீராக வழங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்.
    • நீர்நிலைகளில் நகர்மன்ற தலைவி ஆய்வு செய்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகராட்சிக்கு சொந்தமான மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளான அய்யனார் கோவில் குடிநீர் தேக்க தொட்டிகளில் நீர்வரத்து குறைந்து கொண்டே வருவதால் நீர்நிலை அளவும் குறைந்து கொண்டு வருகிறது.

    இதனையடுத்து ராஜபாளையம் நகருக்கு குடிநீர் சீராக வழங்க முன்எச்சரிக்கை நடவ டிக்கைகளை நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் மேற்கொண்டார்.

    நீர் நிலைகளை மேம் படுத்த கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் மோட்டார் மூலமாக தண்ணீர் எடுத்து விநியோ கம் செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சேதமடைந்திருந்த மின் இணைப்புகள் மற்றும் மோட்டார்களை துரிதமாக சரிசெய்யப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

    நீர்த்தேக்க தொட்டி மற்றும் கிணறுகளின் நீர்நிலைகளை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பணிகளை துரிதப்படுத்தினார்.

    நகர்மன்ற உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணராஜா, குமார், ஞானவேல், சங்கர் கணேஷ், சுரேஷ், சிங்கராஜ், சுப்புலட்சுமி, வார்டு செயலாளர் கண்ணன், நகராட்சி பிட்டர் ராஜ்குமார், விஜி, மற்றும் பால் பாண்டி இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.

    • செட்டியார்பட்டி, சேத்தூர் பேரூராட்சிகளில் 13 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. உறுதியளித்துள்ளார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி மற்றும் சேத்தூர் பேரூராட்சிகளில் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்கு வது தொடர்பாகவும், பேரூராட்சியின் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆலோசனை கூட்டம் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் செட்டியார்பட்டி பேரூராட்சியில் 7 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுவதாக புகார் வந்த வண்ணம் உள்ளது. இதனை 3 நாட்ளுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாஸ்தா கோவில் நீர் ஏற்றும் பகுதியில் இரவு பகல் என இருவேளை களிலும் பணியாட்களை முறையாக நியமித்து பொது மக்களுக்கு குடிநீர் வழங்கும் பணியை செயல்படுத்த வேண்டும் என செயல் அலு வலரிடம் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

    அதற்கு பதிலளித்த செயல் அலுவலர் எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டதற்கிணங்க 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்தார். அதனை சேர்மன் கண் காணிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது,

    பொதுமக்களின் அடிப்படை தேவையான குடிநீர் வசதி, சுகாதரப்பணி மற்றும் தெரு விளக்கு வசதி பொதுமக்களுக்கு கிடைக்கிறதா? என்பதை சேர்மன், துணை சேர்மன், உறுப்பினர்கள் களப்பணி செய்து பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற வேண்டும் என தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. அறிவுரை வழங்கினார்.

    வாக்களித்த பொது மக்கள் தான் நமக்கு எஜ மானர்கள். அவர்களுக்கு பணியாற்றுவதே மக்கள் பிரதிநிதிகளின் தலையாய கடமையாகும். இதனை உணர்ந்து சேர்மன், துணை சேர்மன், கவுன்சிலர்கள் பணியாற்றுமாறு எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டார்.

    இக்கூட்டத்தில் செயல் அலுவலர் சந்திரகலா, பேரூர் சேர்மன்கள் ஜெயமுருகன், பாலசுப்ரமணியன், துணை சேர்மன் விநாயக மூர்த்தி, பேரூர் செயலாளர் இளங்கோவன், ஒன்றிய துணை செயலாளர் குமார் மற்றும் உறுப்பினர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டியில் எஸ்.பி.கே. பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • 6-ம் வகுப்பு மாணவர் தேஜஸ் ஒற்றையர் போட்டியில் 2-ம் இடம் பெற்று சான்றிதழ்கள் பெற்றனர்.

    அருப்புக்கோட்டை

    சிவகாசி ரோட்டரி கிளப் சார்பில் விருதுநகர் மாவட்ட அளவிலான மாணவ- மாணவிகளுக்கான டேபிள் டென்னிஸ் போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் நடை பெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. மேல்நிலைப் பள்ளி 12-ம் வகுப்பு மாணவர் சந்தோஷ், ஒற்றையர் போட்டியில் முதலிடம் பெற்றும் இரட்டையர் போட்டியில் 12-ம் வகுப்பு மாணவர்கள் சந்தோஷ், பிரகதீஸ்வரன், ஆகிய இருவரும் முதலிடம் பெற்று கேடயங்கள் சான்றிதழ்கள் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றனர்.

    ஒவ்வொரு பிரிவிலும் 58 மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் யூ 17 பிரிவில் 11-ம் வகுப்பு மாணவர் விமல் இரட்டையர் போட்டியில் 3-ம் இடம் பெற்றும், யூ-13 பிரிவில் 6-ம் வகுப்பு மாணவர் தேஜஸ் ஒற்றையர் போட்டியில் 2-ம் இடம் பெற்று சான்றிதழ்கள் பெற்றனர்.

    மேலும் இந்த பள்ளி மாணவர்கள் அதிக புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றனர். சாம்பியன் பட்டம் வென்ற எஸ்.பி.கே. மேல்நிலைப்பள்ளி டேபிள் டென்னிஸ் வீரர்களையும் ஊக்குவித்த உடற் கல்வி இயக்குனர் சவுந்தர பாண்டியன் மற்றும் உடற் கல்வி ஆசிரியர்களையும் நாடார்கள் உறவின்முறை தலைவர் காமராஜன், எஸ்.பி.கே. கல்வி குழும தலைவர் ஜெயக்குமார், பள்ளி செயலாளர் கவுன்சிலர் மணி முருகன், பள்ளி தலைவர் சிவராம கிருஷ்ணன், உதவி தலைவர் கனகவேல், உதவி செயலா ளர் தங்கராஜ், தலைமை ஆசிரியர் ஆனந்தராஜன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • ராஜபாளையத்தில் புதுப்பெண் கணவர் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
    • மோட்டார் சைக்கிள் கேட்டு துன்புறுத்தியதால் இந்த விபரீத முடிவு எடுத்ததாக தெரிகிறது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள வத்திராயிருப்பு சத்திரம் தெருவை சேர்ந்த வர் பொன்னன். இவரது மகள் லட்சுமி (வயது 24).

    இவருக்கும் ராஜபாளை யம் தெற்கு தேவதானம் கீழ மாரியம்மன் கோவிலைச் சேர்ந்தவர் சிவநேசன் என்பவருக்கும் கடந்த 20 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண் வீட்டார் சார்பில் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சனை யாக கொடுக்கப்பட்டது.

    கடந்த சில மாதங்களாக சிவநேசன் தனக்கு மோட்டார் சைக்கிள் பெற்றோர் வீட்டில் இருந்து வாங்கி வரும்படி லட்சுமியை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பெற்றோரின் குடும்ப சூழ்நிலையால் ேமாட்டார் சைக்கிள் வாங்கி தரமுடியாது என லட்சுமி மறுத்து விட்டார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது குறித்து சம்பவத்தன்று லட்சுமி தனது தந்தை பொன்னையா விடம் செல்போனில் கூறி யுள்ளார். அப்போது அவர் ஆறுதல் கூறியுள்ளார்.

    இந்த நிலையில் லட்சுமி நேற்று மதியம் வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மகளின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    இந்த நிலையில் சேத்தூர் போலீசில் பொன்னன் புகார் அளித்துள்ளார். அதில் எனது மகள் லட்சமி சாவில் மர்மம் இருக்கிறது. எனவே இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

    இதுகுறித்த புகாரின் அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் வழக்கு பதிவு செய்து லட்சமி வரதட்சணை பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்

    • விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவிகள்-இளம் பெண் உள்பட 5 பேர் மாயமானார்கள்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ராமலிங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவரது தம்பி மகள் நகரிகா (21). இவரை ஜெயலட்சுமி தனது வீட்டில் பராமரித்து வந்தார். சிவகாசி ரோட்டில் உள்ள கல்லூரியில் நகரிகா எம்.பி.ஏ. படித்து வருகிறார். தினமும் ஜெயலட்சுமியின் கணவர் நகரிகாவை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று கல்லூரி பேருந்தில் அனுப்பி வைத்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற நகரிகா மீண்டும் வீடு திரும்பவில்லை. கல்லூரியை தொடர்பு கொண்டு கேட்ட போது தற்போது கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டு ள்ளதாக தெரிவிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து அம்மாபட்டி போலீஸ் நிலையத்தில் ஜெயலட்சுமி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் ஆனைக்கு ட்டம் பகுதியை சேர்ந்தவர் முத்துசெல்வி. இவரது மகள் அபிராமி (19). தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ஆமத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை அருகே உள்ள பூலாங்கால் பகுதியை சேர்ந்தவர் சிவமணி. இவரது மகள் இந்திரா (19). பிளஸ்-2 முடித்து விட்டு வெளியூரில் நர்சிங் பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில் திருவிழாவிற்காக ஊருக்கு வந்தவர் செல்போனில் பேசிக் கொண்டே இருந்தார். சிவமணி அதனை கண்டித்து சிம்கார்டை எடுத்து வைத்து கொண்டார். இந்த நிலையில் திடீரென அபிராமி மாயமானார். பின்னர் அவரது தாயாரின் செல்போனில் என்னை தேட வேண்டாம் என செய்தி அனுப்பியிருந்தார். அந்த எண்ணை தொடர்பு கொண்டு கேட்ட போது அதில் பேசிய நபர் தஞ்சாவூர் செல்ல வேண்டும் என கூறி ஒரு பெண் தன்னிடம் செல்போனை வாங்கி செய்தி அனுப்பியதாக தெரிவித்தார். பின்னர் அந்த பஸ் கண்டக்டரை தொடர்பு கொண்ட போது அந்த பெண் தஞ்சாவூரில் இறங்கி சென்று விட்டதாக கூறியுள்ளார். பரலச்சி போலீசில் சிவமணி புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சாத்தூர் அருகே உள்ள படந்தால் பகுதியை சேர்ந்தவர் அனுசுயா. இவரது மகன் முத்துப் பாண்டி. ராணுவத்தில் பணிபுரிகிறார். மருமகள் துர்கா (27), பேத்தி ஹரிப்பிரியா(4) அனுசுயாவுடன் வசித்து வந்தனர். இந்தநிலையில் பெங்களூருவில் உள்ள கணவரின் சகோதரி சகுந்தலா வீட்டிற்கு செல்வதாக கூறி மகளுடன் துர்கா சென்றார். ஆனால் அவர் பெங்களூருக்கு செல்லவில்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை. இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகாசி சித்துராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் கற்பகம். இவரது மகள் காளீஸ்வரி (19). கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். வெளியே புறப்பட்ட பெற்றோரிடம் படிப்புக்காக செல்போன் வேண்டும் என வாங்கி வைத்துள்ளார். மீண்டும் அவர் திரும்பி வந்து பார்த்த போது மகள் வீட்டில் இல்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை. இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசில் கற்பகம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • திருச்சுழியில் சாலையில் தேங்கும் குப்பைகள், கழிவு நீரால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
    • சுகாதார சீர்கேட்டால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி நகரில் பொதுமக்கள் வந்து போகும் முக்கிய இடங்களாக சார்பதி வாளர் அலுவலகம், கூட்டுறவு வங்கி மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் அமைந்துள்ளது.

    திருச்சுழி ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரிலுள்ள போலீஸ் நிலையம் அருகே உள்ள பகுதிகளில் குப்பைகள் மலைபோல் தேங்கு வதால் அதிலிருந்து துர்நாற் றம் வீசி நோய்த்தொற்று ஏற்படும் அபாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் வீசும் காற்று காரணமாக கொட்டப்படும் குப்பைகளா னது அங்கும் இங்குமாக சிதறி காணப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

    இந்த நிலையில் திருச்சுழி போலீஸ் நிலையம் அருகே உள்ள பகுதிகளில் குப்பை கள் மற்றும் கழிவுநீர் வாறு காலில் தேங்கி வருவதுடன் அங்கிருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீரால் மேற்படி அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் அதனை கண்டு முகம் சுளிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருவதோடு கடும் நோய்த்தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

    எனவே சம்மந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் இது போன்ற குப்பைத்தொட்டி இல்லாத திருச்சுழி நகரின் முக்கிய பகுதிகளில் குப்பை தொட்டிகளை அமைத்து குப்பைகள் தேங்காத வண்ணம் ஊராட்சி ஊழி யர்கள் மூலமாக நாள்தோறும் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திருச்சுழி ஊராட்சி நிர்வாகத்திற்கு கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூர திருவிழாவில் 5 கருட சேவையை கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.
    • வருகிற 22-ந்தேதி பெரிய தேரோட்டம் நடக்கிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 108 வைணவ திருத் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாக திகழ்கிறது. கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்றும் போற்றப்படுகிறது. ஸ்ரீரங்கம் ெரங்கநாதரின் மீது கொண்ட பக்தியால் ஆண் டாள் இயற்றிய திருப்பாவை இன்றைக்கும் வைணவ தலங்களில் பாடப்படுகிறது.

    பூமாதேவியின் அம்ச–மான துளசி செடியில் அவ–தரித்த ஆண்டாள் இறைவ–னுக்காக தொடுத்த மாலையை தான் சூடி அழகு பார்த்து, பின்னர் இறைவ–னுக்கு கொடுத்த ஆண் டாளை சூடிக்கொடுத்த சுடர்கொடியாளாக பக்தர் கள் போற்றுகின்றனர். ஆண்டு–தோறும் ஆடி மாதத் தில் வரும் பூரம் நட்சத்திரம், ஆண்டாள் அவ–தார தின–மாக கொண்டா–டப்படுகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண் டாள் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடிப்பூரம் திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அன்றைய தினம் இரவு ஆண்டாள், ரெங்கமன்னார் 16 சக்கர சப்பரத்திலும், 4-ம் நாளான நேற்று முன்தினம் இரவு ரெங்கமன்னார் கோவர்த்தனகிரி மலையை தூக்கிய ஸ்ரீ கிருஷ்ணர் அலங்காரத்திலும், ஆண் டாள் சேஷ வாகனத்தி–லும் எழுந்தருளி பக்தர்க–ளுக்கு அருள் பாலித்தனர். தொடர்ந்து விழா நாட்களில் இரவு சுவாமிகள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்கள்.

    விழாவையொட்டி நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு பெரியாழ் வார் மங்களாசாசன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நேற்று காலை 10 மணிக்கு பெரிய பெருமாள், ரெங்கமன்னார், செண்பகத் தோப்பு கள்ளழகர் கோவில் சுந்தர்ராஜபெருமாள், திரு–வண்ணாமலை சீனிவாச பெருமாள், திருத்தங்கல் திருநின்ற நாராயண பெரு–மாள் ஆகியோருக்கு பெரி–யாழ்வார் மங்களாசாசனம் செய்து வைத்தார்.

    இதையடுத்து இரவு 10 மணிக்கு ஆண்டாள் கோவில் திருக்கொட்டகை–யில் பெருமாள்கள் எழுந்த–ருளிய 5 கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளி–மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் வழிபட்டனர். அதன்பின் நான்குரத வீதிகளிலும் பக்தர்கள் நாம சங்கீர்த்தன பஜனை பாடிய–படி முன் செல்ல பெரிய பெருமாள், ரெங்க–மன்னார், திருத்தங்கல் அப்பன், சுந்தர்ராஜபெருமாள், ஸ்ரீனி–வாச பெருமாள், ஆண்டாள், பெரியாழ்வார் ஆகியோர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    நாளை சயன சேவை

    10 நாட்கள் நடைபெறும் விழாவின் 7-ம் நாளான நாளை (20-ந்தேதி, வியாழக் கிழமை) ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவிலில் சயன சேவை நிகழ்ச்சி மாலையில் தொடங்கி இரவு வரை நடைபெறுகிறது.

    ஆண்டாள் மடியில் ரெங்க–மன்னார் தலை–வைத்து இருக்கும் இந்த சேவை நாட்டிலேயே ஸ்ரீவில்லி–புத்தூரில் மட்டுமே நடைபெ–றும் என்பதால் பல்லாயி–ரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து–கொள்வார்கள்.

    22-ந்தேதி தேரோட்டம்

    ஆடிப்பூர விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப் பூர தேரோட்டம் வருகிற 22-ந்தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு ஆண்டாள், ெரங்க மன்னாருக்கு சிறப்பு திரு–மஞ்சனம் நடைபெறுகிறது. அதன் பிறகு ஆண்டாள், ெரங்கமன்னர் கீழ ரத வீதியில் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் எழுந்தருளு–கின்றனர். பின்னர் காலை 8.05 மணிக்கு தேரோட்டம் தொடங்கி நடைபெறுகிறது.

    இதில் மாவட்டத்தின் அனைத்து ஊர்கள், பட்டி–தொட்டிகளில் இருந்து பங்கேற்கும் பக்தர்கள் கோவிந்தா..., கோபாலா... என்ற பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுக்கி–றார்கள். 4 ரதவீதி–களிலும் வலம் வரும் தேர் பிற்பகலுக்குள் மீண்டும் நிலையை வந்தடையும். தேரோட்ட விழா தொடங் கிய நாள் முதல் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்க–ளால் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரம் விழாக்கோலம் பூண் டுள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடு–களை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலு–வலர் முத்துராஜா மற்றும் பட்டர்கள், பணியா–ளர்கள், ஊழியர்கள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

    • விருதுநகரில் தமிழ்நாடு தினம் கொண்டாட்டப்பட்டது.
    • சிறப்பு அரசு சாதனை விளக்க கண்காட்சியை அமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார்.

    விருதுநகர்

    இன்று தமிழ்நாடு தினம் கொண்டாடப்படு வதையொட்டி விருதுநகரில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து தேச பந்து திடலில் அமைக்கப் பட்டிருந்த சிறப்பு அரசு சாதனை விளக்க கண்காட்சி யை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    1968-ம் ஆண்டு இதே தினத்தில் சட்டப் பேரவையில் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று அன்றைய முதல்-அமைச்சர் அண்ணா பெயர் சூட்டினார். கடந்த ஆண்டு முதல் இந்த தினம் (ஜூலை18) தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி விருதுநகரில் தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டது.

    அதற்கு வித்திட்ட தியாகி சங்கரலிங்கனார் விருது நகரில் தான் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தார் என்பது மேலும் ஒரு சிறப்பாகும். அவரது தியாகத்தை போற்றும் வகையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பெருமைக்குரிய இந்த தினத்தை தமிழ்நாடு தினமாக கொண்டாடுமாறு உத்தரவிட்ட தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சிகளில் கலெக்டர் ஜெயசீலன், எம்.எல்.ஏ.சீனிவாசன், நகர சபை தலைவர் மாதவன், யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர்.
    • மோசடியில் ஈடுபட்ட எமர்சன் என்ற எலிமேசன், சாந்தகுமாரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் துரைசாமிபுரம் செங்குட்வடுவன் தெருவைச் சேர்ந்தவர் பாலையா (வயது 64). தமிழக அரசின் வணிகவரித்துறை உதவி ஆணையாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற அவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் இவரிடம் ராஜபாளையம் அருகேயுள்ள தெற்கு தேவதானத்தை சேர்ந்த கணவன், மனைவியான எமர்சன் என்ற எலிமேசன் (42), சாந்தகுமாரி (38) ஆகியோர் அறிமுகம் ஆனார்கள்.

    அவர்கள் தாங்கள் ராஜபாளையத்தில் பி.எஸ். என்ற பெயரில் நகை அடகுக்கடை நடத்தி வருவதாகவும், குறைந்த வட்டியில் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர்.

    இதனை நம்பிய பாலையா தன்னிடம் இருந்த 440.850 கிராம் (55 பவுன்) தங்க நகைகளை தம்பதியினர் நடத்தி வந்த கடையில் அடகு வைத்தார். இந்த நகைகளை பாலையா தனது பெயரிலும், தனது மகன் அமர்நாத் பெயரிலும் அடகு வைத்திருந்தார்.

    குறிப்பிட்ட கால இடைவெளியில் முதல் தவணையாக வட்டித்தொகையை செலுத்திய பாலையா தனது நகைகளை திருப்பி கொள்வதாக தெரிவித்துள்ளார். ஆனால் நகைகளை திருப்பித்தர மறுத்த தம்பதியினர் பாலையாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதன்பின்னரே அவர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து பாலையா விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். மேலும் விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் முன்னாள் அரசு அதிகாரியிடம் 55 பவுன் நகை மோசடியில் ஈடுபட்ட எமர்சன் என்ற எலிமேசன், சாந்தகுமாரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சதுரகிரி மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
    • இதனால் சதுரகிரி கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு நாளை தடை விதிக்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரியில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தற்போது பிரதோஷம், அமாவாசை முன்னிட்டு கடந்த 15-ம் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கிடையே, நேற்று மாலை 4 மணிக்கு பக்தர்கள் நடந்து செல்லும் மலைப்பாதையை ஒட்டிய தவசிப்பாறை 5-வது பீட்டில் இரட்டை லிங்கம் மற்றும் பச்சரிசிப்பாறை இடையே உள்ள நாவலூற்று பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றியது. இந்த சூழலில் சம்பவ பகுதிக்கு வனத்துறையினர் தற்போது விரைந்துள்ளனர்.

    இந்நிலையில், சதுரகிரி மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீ காரணமாக நாளை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

    அமாவாசை தரிசனத்திற்காகச் சென்ற பக்தர்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கீழே இறங்கி செல்ல தடை விதிக்கப்பட்டு மலையில் உள்ள கோயில் வளாகத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

    • சிவகாசி அருகே வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர்கள் தூக்குப்போட்டு தற்கொலை தற்கொலை செய்து கொண்டனர்.
    • மது பழக்கத்தால் இந்த விபரீதம் நடந்துள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி சிங்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாரி முத்து (வயது 31). இவரது மனைவி குருவம்மாள். மாரிமுத்து பால் கறப்பது, கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு மது பழக்கம் இருந்தது. அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கண வன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது.

    இந்த நிலையில் மனைவி உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றிருந்தபோது வீட்டில் இருந்த பித்தளை பாத்திரங்களை விற்று மது குடித்துள்ளார். இதை அறிந்த மனைவி அவரை கண்டித்தார்.

    இதனால் மனம் உடைந்த மாரிமுத்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாரனேரி போலீஸ் நிலையத்தில் குருவம்மாள் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அருகே சாட்சி யாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமானுஜம் (24). இவரது மனைவி மாரிச்செல்வி (21). இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட வர்கள். ராமானுஜத்துக்கு மது பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச் சினை ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத் தன்று இரவு ராமானுஜம் குடி போதையில் வீட்டுக்கு வந்தார். அவரை மனைவி கண்டித்துள்ளார்.

    உடனே சினிமா பார்க்க செல்வதாக கூறிவிட்டு ராமானுஜம் வெளியே சென்றார். சிறிது நேரம் கழித்து வீட்டின் வெளியே இருந்த விளக்கை அணைப் பதற்காக மாரிச்செல்வி சென்றார். அப்போது அங்கு இருந்த இரும்பு தாழ்வாரத்தில் தூக்கில் தொங்கியபடி ராமானுஜம் பிணமாக கிடந்தார். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் மாரிச்செல்வி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×