search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர்கள் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    வாலிபர்கள் தூக்குப்போட்டு தற்கொலை

    • சிவகாசி அருகே வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர்கள் தூக்குப்போட்டு தற்கொலை தற்கொலை செய்து கொண்டனர்.
    • மது பழக்கத்தால் இந்த விபரீதம் நடந்துள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி சிங்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாரி முத்து (வயது 31). இவரது மனைவி குருவம்மாள். மாரிமுத்து பால் கறப்பது, கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு மது பழக்கம் இருந்தது. அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கண வன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது.

    இந்த நிலையில் மனைவி உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றிருந்தபோது வீட்டில் இருந்த பித்தளை பாத்திரங்களை விற்று மது குடித்துள்ளார். இதை அறிந்த மனைவி அவரை கண்டித்தார்.

    இதனால் மனம் உடைந்த மாரிமுத்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாரனேரி போலீஸ் நிலையத்தில் குருவம்மாள் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அருகே சாட்சி யாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமானுஜம் (24). இவரது மனைவி மாரிச்செல்வி (21). இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட வர்கள். ராமானுஜத்துக்கு மது பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச் சினை ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத் தன்று இரவு ராமானுஜம் குடி போதையில் வீட்டுக்கு வந்தார். அவரை மனைவி கண்டித்துள்ளார்.

    உடனே சினிமா பார்க்க செல்வதாக கூறிவிட்டு ராமானுஜம் வெளியே சென்றார். சிறிது நேரம் கழித்து வீட்டின் வெளியே இருந்த விளக்கை அணைப் பதற்காக மாரிச்செல்வி சென்றார். அப்போது அங்கு இருந்த இரும்பு தாழ்வாரத்தில் தூக்கில் தொங்கியபடி ராமானுஜம் பிணமாக கிடந்தார். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் மாரிச்செல்வி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×