search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "low interest"

    • நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர்.
    • மோசடியில் ஈடுபட்ட எமர்சன் என்ற எலிமேசன், சாந்தகுமாரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் துரைசாமிபுரம் செங்குட்வடுவன் தெருவைச் சேர்ந்தவர் பாலையா (வயது 64). தமிழக அரசின் வணிகவரித்துறை உதவி ஆணையாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற அவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் இவரிடம் ராஜபாளையம் அருகேயுள்ள தெற்கு தேவதானத்தை சேர்ந்த கணவன், மனைவியான எமர்சன் என்ற எலிமேசன் (42), சாந்தகுமாரி (38) ஆகியோர் அறிமுகம் ஆனார்கள்.

    அவர்கள் தாங்கள் ராஜபாளையத்தில் பி.எஸ். என்ற பெயரில் நகை அடகுக்கடை நடத்தி வருவதாகவும், குறைந்த வட்டியில் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர்.

    இதனை நம்பிய பாலையா தன்னிடம் இருந்த 440.850 கிராம் (55 பவுன்) தங்க நகைகளை தம்பதியினர் நடத்தி வந்த கடையில் அடகு வைத்தார். இந்த நகைகளை பாலையா தனது பெயரிலும், தனது மகன் அமர்நாத் பெயரிலும் அடகு வைத்திருந்தார்.

    குறிப்பிட்ட கால இடைவெளியில் முதல் தவணையாக வட்டித்தொகையை செலுத்திய பாலையா தனது நகைகளை திருப்பி கொள்வதாக தெரிவித்துள்ளார். ஆனால் நகைகளை திருப்பித்தர மறுத்த தம்பதியினர் பாலையாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதன்பின்னரே அவர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து பாலையா விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். மேலும் விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் முன்னாள் அரசு அதிகாரியிடம் 55 பவுன் நகை மோசடியில் ஈடுபட்ட எமர்சன் என்ற எலிமேசன், சாந்தகுமாரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவையில் வீடு கட்ட குறைந்த வட்டியில் கடன் வாங்கும் திட்டத்தை முதல்- அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு சார்பில் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு ரூ.4 லட்சமும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு ரூ.2 லட்சமும் வீடு கட்டுவதற்கு மானியமாக வழங்கப்படுகிறது.

    பிற்படுத்தப்பட்டோர் தங்களுக்கு ரூ.2 லட்சம் போதாது, கூடுதலாக பணம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து பொதுத்துறை வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் ரூ.2 லட்சம் கடன் வழங்கும் திட்டத்தை அரசு கொண்டு வந்தது.

    இந்த திட்டத்தின் தொடக்க விழா இன்று கரியமாணிக்கத்தில் நடந்தது. விஜயவேணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் நாராயண சாமி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    புதுவையில் 2½ ஆண்டுகள் ஆட்சியை கடந்து வந்துள்ளோம். பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் அரசை நடத்தி வருகிறோம். பல்வேறு வகையிலும் ஏராளமான முட்டுக் கட்டைகள் போடப்படுகின்றன. அவற்றை யெல்லாம் முறியடித்து திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.

    என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் வாங்கிய கடன்களை அடைத்துக் கொண்டிருக்கிறோம். மத்திய அரசின் மானியம் வெகுவாக குறைக்கப்பட்டு விட்டது. ஒரு காலத்தில் 70 சதவீதம் வரை மானியம் வழங்கிய நிலையில் இப்போது 26 சதவீதமாக குறைத்து விட்டார்கள்.

    ஆனாலும் நிதி நிலைமையை சமாளித்து ஆட்சி நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் நல்ல சூழ்நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

    விழாவில் குடிசை மாற்று வாரிய செயலாளர் ஜவகர், தலைமை செயல் அதிகாரி லாரன்ஸ் குணசீலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மடுகரையில் உள்ள வெங்கடசுப்பா ரெட்டி யார் சிலைக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்தார்.

    ×