என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • ராஜபாளையம் நகரில் சாலைகளை சீரமைக்க கோரி கம்யூனிஸ்டு சார்பில் உச்சக்கட்ட போராட்டம் நடந்தது.
    • பேட்ஜ் வொர்க் நடை–பெற்று ஓரிரு மாதங்களி–லேயே சாலை மீண்டும் மிக மோசமாக பழுதாகி விட்டது.

    ராஜபாளையம்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜபாளையம் நகர குழு கூட்டம் சுப்பிரம–ணியன் தலைமையில் நடந்தது. மாவட்டச் செயலா–ளர் அர்ஜூனன், நகரச் செயலா–ளர் மாரியப்பன் உள்ளிட்ட நகர குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் ராஜபாளையத்தில் பிரதான சாலையான பஞ்சு மார்க்கெட் முதல் சொக்கர்கோவில் வரை உள்ள தென்காசி சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

    நகரில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப் பணி, தாமரபரணி திட்டத் திற்காக தோண்டப்பட்ட சாலை மேற்படி பணிகள் நிறைவு பெற்றது என தடை–யில்லா சான்று வழங்கி ஓராண்டுக்குப் பின்பும் கூட இன்னும் சாலை சீரமைக்கப் படவில்லை.

    கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தச் சாலையை சீரமைக்க வலியுறுத்தி ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் கடையடைப்பு போராட் டத்தை நடத்தியது. அன்றைய தினம் அரசியல் கட்சிகளும் தன்னார்வ அமைப்புகளும் இணைந்து ஆர்ப்பாட்டத்தை–யும் நடத்தியது.

    அதன் பின்பு அந்தச் சாலையில் தற்காலிகமாக பேட்ஜ் வொர்க் பார்ப்பது எனவும், வெகு விரைவில் தேசிய நெடுஞ்சாலைத்து–றையில் அனுமதி பெற்று நிதி பெற்று முழுமையாக சாலை அமைப்பது எனவும் அப்போது அரசு நிர்வாக தரப்பில் கூறப்பட்டு பேட்ச் ஒர்க் நடைபெற்றது.

    பேட்ஜ் வொர்க் நடை–பெற்று ஓரிரு மாதங்களி–லேயே சாலை மீண்டும் மிக மோசமாக பழுதாகி விட்டது. தற்போது கிடைத் துள்ள தகவல்படி கிருஷ் ணன் கோவில் முதல் அமிழ் ஓட்டல் வரை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் வசம் இந்தச் சாலை ஒப்படைக்கப்பட்டி ருப்பதாகவும், நான்கு வழிச் சாலை பணிகள் முடிந்த பின்பு தான் சாலை அமைக்க முடியும் என கூறி வருகின்ற–னர்.

    கடந்த ஓராண்டு காலமாக ராஜபாளையம் மக்களும், இந்த வழியாகச் செல்லும் பயணிகளும் மிகப்பெரும் துன்ப துயரங்களை சந்திப்ப–தோடு விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்பும் நடை–பெற்று உள்ளது. எனவே தேசிய நெடுஞ்சா–லைத்துறை காலம் கடத்தா–மல் ராஜபாளையம் நகரின் பிரதான சாலையான தென் காசி சாலையை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகஸ்ட் முதல் வாரம் கவன ஈர்ப்பு உச்சகட்ட போராட்டத்தை நடத்த தீர்மானம் நிறை–வேற்றி உள்ளது.

    மேலும் காந்தி கலை மன்றம் முதல் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலை ஆங்காங்கே பழுதடைந்து விபத்துக்கள் ஏற்பட்டு வரு–கிறது. குறிப்பாக சங்க–ரன்கோவில் முக்கில் இருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் குழாய்கள் உடைந்து சாலை–கள் தோண்டப்பட்டு இருப்ப–தால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேற்படி சாலைகளையும் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை உட–னடியாக சரி செய்ய வேண்டுகிறோம்.

    நகராட்சிக்கு உட்பட்ட ெரயில்வே பீடர் சாலையில் மூன்று பிரதான பள்ளிகள் உள்ளது. தினசரி ஆயிரக்க–ணக்கான மாணவ, மாணவி–களும் பொதுமக்களும் பயணிக்க கூடிய இந்த சாலை மிக மோசமாக உள்ளது. அடிக்கடி விபத்து ஏற்படும் வகையில் பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக உள் ளது. நகராட்சி நிர்வாகம் அதை சரிசெய்ய வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூ–னிஸ்ட் கட்சி ராஜபாளையம் நகர் குழு தீர்மானம் நிறை–வேற்றியுள்ளது.

    • கலப்படம் செய்த, தரம் குறைவான பால் விற்பனை செய்பவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • விருதுநகர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளி–யிட்டுள்ள செய்திக்கு–றிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் மாநில உணவுப் பாதுகாப்புதுறை ஆணையர் மற்றும் மாவட்ட கலெக்டரின் ஆணைக்கிணங்க உணவுப் பாதுகாப்பு துறையின் மூலம் மாவட்டம் முழுவதும் பால் விற்பனையில் கலப்ப–டம் எதுவும் செய்யப்பட்டுள்ளதா என தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆய்வில் கடந்த மூன்று மாதங்களில் ராஜபாளையம், அருப்புக்கோட்டை, சிவ–காசி, ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் விருதுநகர் பகுதிக–ளில் 19 பால் உணவு மாதிரி–கள் எடுக்கப்பட்டது. அதில் 8 பால் உணவு மாதிரிகள் தரம் குறைவாக இருப்பதாக ஆய்வில் கண்ட–றியப்பட்டுள்ளது. தரம் குறைவான பால் விற்பனை–யாளர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் நீதிமன்றங்களில் தொடுக்கப் பட்டு அபராதம் விதித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. பால் விற்பனை யாளர்கள் அனைவரும் உணவு பாது–காப்பு துறையில் பதிவு அல்லது உரிமம் பெற்றிருக்க வேண்டும். தாங்கள் விற் பனை செய்யும் பாலில் தண்ணீர், ஸ்டார்ச், யூரியா மற்றும் அனுமதிக்கப்படாத பவுடர்கள் கலப்படமின்றி தரமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தொடர் ஆய்வுகளின் போது உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் இன் றியோ, தரம் குறைவான பாலினை நுகர்வோருக்கோ அல்லது பிற உணவுப்பொ–ருள் நிறுவனங்களுக்கோ விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் அவர்க–ளின் மீது துறைரீதியான கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    உணவு பொருட்கள் மற்றும் பால்பொருட்கள் தொடர்பான புகார்கள் எதுவும் இருந்தால், விருது–நகர் மாவட்ட உணவு பாது–காப்புத்துறை அலுவல–கத்திற்கு 04562 252255 அல்லது 94440 42322 என்ற மாநில உணவு பாதுகாப்புத்துறை ஆணையர், அலுவலக வாட்ஸ்ஆப் எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • தகுதி இல்லாத ஆசிரியர்களை கொண்டு பாடங்கள் நடத்தப்படுவதாக எங்களின் பிள்ளைகள் தெரிவிக்கின்றனர்.
    • விடுதியில் சுகாதாரமான உணவு வழங்கப்படவில்லை என மாணவிகள் கூறுகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகரில் தனியார் மகளிர் ஓமியோபதி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி போதிய வசதிகள் இல்லாமல் செயல்படுவதாக இங்கு படிக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலனை சந்தித்து அவர்கள் புகார் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    விருதுநகரில் செயல்பட்டு வரும் தனியார் பெண்கள் ஓமியோபதி கல்லூரி மத்திய அரசு அங்கீகாரத்துடன் இயங்குவதாக வந்த விளம்பரங்களை பார்த்து எங்கள் பிள்ளைகளை அந்த கல்லூரியில் சேர்த்தோம். ஆனால் அந்த கல்லூரியில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை.

    தகுதி இல்லாத ஆசிரியர்களை கொண்டு பாடங்கள் நடத்தப்படுவதாக எங்களின் பிள்ளைகள் தெரிவிக்கின்றனர். கல்லூரிக்கு சுற்றுச்சுவர் கூட இல்லாத நிலை உள்ளது. கல்லூரி சேர்க்கையின்போது தங்கிப் படிக்கும் மாணவிகளுக்கு ஒரு அறையில் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 10-க்கும் மேற்பட்ட மாணவிகளை ஒரே அறையில் தங்க வைக்கின்றனர்.

    கல்லூரியில் 5 கழிப்பறைகள் மட்டுமே உள்ளது. இதனால் மாணவிகள் சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர். குளியல் அறைகளில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருக்கலாம் எனவும் மாணவிகள் சந்தேகிக்கின்றனர். மேலும் விடுதியில் சுகாதாரமான உணவு வழங்கப்படவில்லை எனவும் மாணவிகள் கூறுகின்றனர்.

    இரவு நேரங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் உள்ளதாகவும், அதனால் பயத்துடனேயே இருக்க வேண்டியுள்ளதாகவும் அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதனால் அந்த கல்லூரியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.

    இதுகுறித்து நிர்வாகத்திடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்க மறுக்கின்றனர். மாணவிகளின் பாதுகாப்பையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து மாணவிகளின் கல்வி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • சிறுதானிய உணவகம் அமைக்க மகளிர் சுய உதவிகுழு விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெண்களின் பொருளாதார மேம்பாடு என்பது வலுவான மற்றும் சமத்துவ சமுதாயத்தை வளர்ப்பதற் கான அடிப்படையாகும், வறுமை ஒழிப்பு, சிறந்த சுகாதாரம், கல்வி மற்றும் ஒட்டு மொத்த கிராமப்புற பொருளாதார மேம்பாடு ஆகியற்றிற்காக பெண்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்திட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    எனவே, ஊட்டச்சத்து குறைபாடு அற்ற சமுதாயத் தை உருவாக்கும் பொருட்டு பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் புதிய பாதையை உருவாக்கி வருகிறது.

    மேலும், சர்வதேச சிறு தானிய ஆண்டாக 2023-ம் ஆண்டு கொண்டாடப்படுவதால் தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்ட கலெக்டர் வளாகத்திலும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் சிறுதானிய உணவகம் அமைத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் சிறு தானிய உணவகம் அமைத் திட கீழ்க்கண்ட நிபந்தனை களுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சிறுதானிய உணவகம் நடத் திட கீழ்க்காணும் தகுதியுள்ள மற்றும் விரும்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்கள் அல்லது கூட்டமைப்புகளி லிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றது.

    அதன்படி மகளிர் சுய உதவிக்குழு தொடங்கப்பட்டு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும். தேசிய ஊரக வாழ்வாதார இயக்க மேலாண்மை தகவல் அமைப்பு இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

    கூட்டமைப்பாக இருக் கும் பட்சத்தில் தரமதிப்பீடு செய்யப்பட்டு சான்று பெற் றிருக்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு, உற்பத்தியாளர் குழு அல்லது கூட்ட மைப்பு சிறுதானிய உணவு உற்பத்தி மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் ஆர்வம் மற்றும் முன் அனுப வம் உள்ளவராக இருத்தல் வேண்டும். மேலும் விவரங் களுக்கு ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம் என அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • திருச்சுழி அருகே அரசு மேல்நிலைப்பள்ளி கழிவறைக்குள் பாம்பு புகுந்தது.
    • மாணவர்கள் அலறியடித்து ஓடினர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள ஆணைக்குளம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரு கின்றனர்.

    மேலும் இந்த அரசுப் பள்ளி காட்டு பகுதியில் அமைந்துள்ளதால் அவ்வப்போது விஷசந்துகள் வரு வது வழக்கமாக இருந்து வந்தது.

    இந்நிலையில் சிறப்பு வகுப்புகளுக்காக மாணவ, மாணவியர் படித்து கொண் டிருந்தனர். அப்போது பள்ளிகூடத்தின் கேட் பகுதி வழியாக சுமார் நான்கரை அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று அங்குள்ள பயன்படுத்தப்படாத கழிவறைக்குள் நுழைந்தது.

    இதனை கண்ட மாணவர் கள் கூச்சிலிட்ட நிலையில் அலறியடித்து கொண்டு அங்கும், இங்குமாக ஓடினர். இதனை அறிந்த பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக திருச்சுழி தீயணைப்பு துறை யினருக்கு தகவல் கொடுத்த னர். உடனே சம்பவ இடத் திற்கு விரைந்து வந்த திருச்சுழி தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் முனீஸ் வரன் தலைமையிலான தீய ணைப்பு குழுவினர் பள்ளிக்கூடத்தின் கழிவறை பகுதிக்குள் நுழைந்த சாரை பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அதனை காட்டு பகுதியில் விட்டனர்.

    மேலும் மாணவர்கள் பள்ளியில் படித்து கொண்டிருக்கும்போதே சாரை பாம்பு ஒன்று கழிவறைக்குள் புகுந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிவகாசியில் மாற்று கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பேசினார்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மாற்று கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி 300-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.

    அப்போது கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

    ஆளும் தி.மு.க. எல்லா வழிகளிலும் மக்களை துன்புறுத்தி வருகிறது. தி.மு.க. ஆட்சியில் தக்காளி விலை, உணவு பொருட்களின் விலை உயர்வடைந்து உள்ளது. மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள்தான் நாட்டை ஆள வேண்டும்.

    அ.தி.மு.க. ஆட்சி காலங்க ளில் மக்களை பாதிக்காத வகையில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. மக்கள் கஷ்டப்படும் நிலைமையை மாற்ற நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆளும் இயக்கமாக இருக்க வேண்டிய நாம் சூழ்நிலை சந்தர்ப்பத்தால் ஆட்சியை இழந்தோம். மீண்டும் ஆட்சிக்கு வருவோம். மக்களுக்கு நலத்திட்டங்களை நிறைவேற்றி தரு வோம். மாற்று கட்சியினரின் நடவடிக்கை பிடிக்கவில்லை என்பதால் மாற்று இயக்கத்தை சேர்ந்தவர்கள் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். அனைவரையும் வர வேற்போம். மதிப்பளிப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், சிவகாசி மாநகராட்சி பகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, கருப்பசாமிபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கியம், லட்சுமி நாராயணன், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் விஜய் ஆனந்த், தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாவட்ட செயலாளர் பாண்டியராஜன், தலைவர் செல்வம் பொதுக்குழு உறுப்பினர் சித்துராஜபுரம் பாலாஜி, ஒன்றிய கவுன்சிலர் ஜெகத்சிங்பிரபு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையத்தில் குடிநீர் சீராக வழங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்.
    • நீர்நிலைகளில் நகர்மன்ற தலைவி ஆய்வு செய்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகராட்சிக்கு சொந்தமான மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளான அய்யனார் கோவில் குடிநீர் தேக்க தொட்டிகளில் நீர்வரத்து குறைந்து கொண்டே வருவதால் நீர்நிலை அளவும் குறைந்து கொண்டு வருகிறது.

    இதனையடுத்து ராஜபாளையம் நகருக்கு குடிநீர் சீராக வழங்க முன்எச்சரிக்கை நடவ டிக்கைகளை நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் மேற்கொண்டார்.

    நீர் நிலைகளை மேம் படுத்த கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் மோட்டார் மூலமாக தண்ணீர் எடுத்து விநியோ கம் செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சேதமடைந்திருந்த மின் இணைப்புகள் மற்றும் மோட்டார்களை துரிதமாக சரிசெய்யப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

    நீர்த்தேக்க தொட்டி மற்றும் கிணறுகளின் நீர்நிலைகளை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பணிகளை துரிதப்படுத்தினார்.

    நகர்மன்ற உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணராஜா, குமார், ஞானவேல், சங்கர் கணேஷ், சுரேஷ், சிங்கராஜ், சுப்புலட்சுமி, வார்டு செயலாளர் கண்ணன், நகராட்சி பிட்டர் ராஜ்குமார், விஜி, மற்றும் பால் பாண்டி இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.

    • செட்டியார்பட்டி, சேத்தூர் பேரூராட்சிகளில் 13 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. உறுதியளித்துள்ளார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி மற்றும் சேத்தூர் பேரூராட்சிகளில் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்கு வது தொடர்பாகவும், பேரூராட்சியின் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆலோசனை கூட்டம் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் செட்டியார்பட்டி பேரூராட்சியில் 7 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுவதாக புகார் வந்த வண்ணம் உள்ளது. இதனை 3 நாட்ளுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாஸ்தா கோவில் நீர் ஏற்றும் பகுதியில் இரவு பகல் என இருவேளை களிலும் பணியாட்களை முறையாக நியமித்து பொது மக்களுக்கு குடிநீர் வழங்கும் பணியை செயல்படுத்த வேண்டும் என செயல் அலு வலரிடம் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

    அதற்கு பதிலளித்த செயல் அலுவலர் எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டதற்கிணங்க 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்தார். அதனை சேர்மன் கண் காணிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது,

    பொதுமக்களின் அடிப்படை தேவையான குடிநீர் வசதி, சுகாதரப்பணி மற்றும் தெரு விளக்கு வசதி பொதுமக்களுக்கு கிடைக்கிறதா? என்பதை சேர்மன், துணை சேர்மன், உறுப்பினர்கள் களப்பணி செய்து பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற வேண்டும் என தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. அறிவுரை வழங்கினார்.

    வாக்களித்த பொது மக்கள் தான் நமக்கு எஜ மானர்கள். அவர்களுக்கு பணியாற்றுவதே மக்கள் பிரதிநிதிகளின் தலையாய கடமையாகும். இதனை உணர்ந்து சேர்மன், துணை சேர்மன், கவுன்சிலர்கள் பணியாற்றுமாறு எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டார்.

    இக்கூட்டத்தில் செயல் அலுவலர் சந்திரகலா, பேரூர் சேர்மன்கள் ஜெயமுருகன், பாலசுப்ரமணியன், துணை சேர்மன் விநாயக மூர்த்தி, பேரூர் செயலாளர் இளங்கோவன், ஒன்றிய துணை செயலாளர் குமார் மற்றும் உறுப்பினர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டியில் எஸ்.பி.கே. பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • 6-ம் வகுப்பு மாணவர் தேஜஸ் ஒற்றையர் போட்டியில் 2-ம் இடம் பெற்று சான்றிதழ்கள் பெற்றனர்.

    அருப்புக்கோட்டை

    சிவகாசி ரோட்டரி கிளப் சார்பில் விருதுநகர் மாவட்ட அளவிலான மாணவ- மாணவிகளுக்கான டேபிள் டென்னிஸ் போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் நடை பெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. மேல்நிலைப் பள்ளி 12-ம் வகுப்பு மாணவர் சந்தோஷ், ஒற்றையர் போட்டியில் முதலிடம் பெற்றும் இரட்டையர் போட்டியில் 12-ம் வகுப்பு மாணவர்கள் சந்தோஷ், பிரகதீஸ்வரன், ஆகிய இருவரும் முதலிடம் பெற்று கேடயங்கள் சான்றிதழ்கள் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றனர்.

    ஒவ்வொரு பிரிவிலும் 58 மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் யூ 17 பிரிவில் 11-ம் வகுப்பு மாணவர் விமல் இரட்டையர் போட்டியில் 3-ம் இடம் பெற்றும், யூ-13 பிரிவில் 6-ம் வகுப்பு மாணவர் தேஜஸ் ஒற்றையர் போட்டியில் 2-ம் இடம் பெற்று சான்றிதழ்கள் பெற்றனர்.

    மேலும் இந்த பள்ளி மாணவர்கள் அதிக புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றனர். சாம்பியன் பட்டம் வென்ற எஸ்.பி.கே. மேல்நிலைப்பள்ளி டேபிள் டென்னிஸ் வீரர்களையும் ஊக்குவித்த உடற் கல்வி இயக்குனர் சவுந்தர பாண்டியன் மற்றும் உடற் கல்வி ஆசிரியர்களையும் நாடார்கள் உறவின்முறை தலைவர் காமராஜன், எஸ்.பி.கே. கல்வி குழும தலைவர் ஜெயக்குமார், பள்ளி செயலாளர் கவுன்சிலர் மணி முருகன், பள்ளி தலைவர் சிவராம கிருஷ்ணன், உதவி தலைவர் கனகவேல், உதவி செயலா ளர் தங்கராஜ், தலைமை ஆசிரியர் ஆனந்தராஜன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • ராஜபாளையத்தில் புதுப்பெண் கணவர் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
    • மோட்டார் சைக்கிள் கேட்டு துன்புறுத்தியதால் இந்த விபரீத முடிவு எடுத்ததாக தெரிகிறது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள வத்திராயிருப்பு சத்திரம் தெருவை சேர்ந்த வர் பொன்னன். இவரது மகள் லட்சுமி (வயது 24).

    இவருக்கும் ராஜபாளை யம் தெற்கு தேவதானம் கீழ மாரியம்மன் கோவிலைச் சேர்ந்தவர் சிவநேசன் என்பவருக்கும் கடந்த 20 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண் வீட்டார் சார்பில் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சனை யாக கொடுக்கப்பட்டது.

    கடந்த சில மாதங்களாக சிவநேசன் தனக்கு மோட்டார் சைக்கிள் பெற்றோர் வீட்டில் இருந்து வாங்கி வரும்படி லட்சுமியை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பெற்றோரின் குடும்ப சூழ்நிலையால் ேமாட்டார் சைக்கிள் வாங்கி தரமுடியாது என லட்சுமி மறுத்து விட்டார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது குறித்து சம்பவத்தன்று லட்சுமி தனது தந்தை பொன்னையா விடம் செல்போனில் கூறி யுள்ளார். அப்போது அவர் ஆறுதல் கூறியுள்ளார்.

    இந்த நிலையில் லட்சுமி நேற்று மதியம் வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மகளின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    இந்த நிலையில் சேத்தூர் போலீசில் பொன்னன் புகார் அளித்துள்ளார். அதில் எனது மகள் லட்சமி சாவில் மர்மம் இருக்கிறது. எனவே இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

    இதுகுறித்த புகாரின் அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் வழக்கு பதிவு செய்து லட்சமி வரதட்சணை பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்

    • விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவிகள்-இளம் பெண் உள்பட 5 பேர் மாயமானார்கள்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ராமலிங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவரது தம்பி மகள் நகரிகா (21). இவரை ஜெயலட்சுமி தனது வீட்டில் பராமரித்து வந்தார். சிவகாசி ரோட்டில் உள்ள கல்லூரியில் நகரிகா எம்.பி.ஏ. படித்து வருகிறார். தினமும் ஜெயலட்சுமியின் கணவர் நகரிகாவை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று கல்லூரி பேருந்தில் அனுப்பி வைத்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற நகரிகா மீண்டும் வீடு திரும்பவில்லை. கல்லூரியை தொடர்பு கொண்டு கேட்ட போது தற்போது கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டு ள்ளதாக தெரிவிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து அம்மாபட்டி போலீஸ் நிலையத்தில் ஜெயலட்சுமி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் ஆனைக்கு ட்டம் பகுதியை சேர்ந்தவர் முத்துசெல்வி. இவரது மகள் அபிராமி (19). தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ஆமத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை அருகே உள்ள பூலாங்கால் பகுதியை சேர்ந்தவர் சிவமணி. இவரது மகள் இந்திரா (19). பிளஸ்-2 முடித்து விட்டு வெளியூரில் நர்சிங் பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில் திருவிழாவிற்காக ஊருக்கு வந்தவர் செல்போனில் பேசிக் கொண்டே இருந்தார். சிவமணி அதனை கண்டித்து சிம்கார்டை எடுத்து வைத்து கொண்டார். இந்த நிலையில் திடீரென அபிராமி மாயமானார். பின்னர் அவரது தாயாரின் செல்போனில் என்னை தேட வேண்டாம் என செய்தி அனுப்பியிருந்தார். அந்த எண்ணை தொடர்பு கொண்டு கேட்ட போது அதில் பேசிய நபர் தஞ்சாவூர் செல்ல வேண்டும் என கூறி ஒரு பெண் தன்னிடம் செல்போனை வாங்கி செய்தி அனுப்பியதாக தெரிவித்தார். பின்னர் அந்த பஸ் கண்டக்டரை தொடர்பு கொண்ட போது அந்த பெண் தஞ்சாவூரில் இறங்கி சென்று விட்டதாக கூறியுள்ளார். பரலச்சி போலீசில் சிவமணி புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சாத்தூர் அருகே உள்ள படந்தால் பகுதியை சேர்ந்தவர் அனுசுயா. இவரது மகன் முத்துப் பாண்டி. ராணுவத்தில் பணிபுரிகிறார். மருமகள் துர்கா (27), பேத்தி ஹரிப்பிரியா(4) அனுசுயாவுடன் வசித்து வந்தனர். இந்தநிலையில் பெங்களூருவில் உள்ள கணவரின் சகோதரி சகுந்தலா வீட்டிற்கு செல்வதாக கூறி மகளுடன் துர்கா சென்றார். ஆனால் அவர் பெங்களூருக்கு செல்லவில்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை. இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகாசி சித்துராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் கற்பகம். இவரது மகள் காளீஸ்வரி (19). கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். வெளியே புறப்பட்ட பெற்றோரிடம் படிப்புக்காக செல்போன் வேண்டும் என வாங்கி வைத்துள்ளார். மீண்டும் அவர் திரும்பி வந்து பார்த்த போது மகள் வீட்டில் இல்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை. இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசில் கற்பகம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • திருச்சுழியில் சாலையில் தேங்கும் குப்பைகள், கழிவு நீரால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
    • சுகாதார சீர்கேட்டால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி நகரில் பொதுமக்கள் வந்து போகும் முக்கிய இடங்களாக சார்பதி வாளர் அலுவலகம், கூட்டுறவு வங்கி மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் அமைந்துள்ளது.

    திருச்சுழி ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரிலுள்ள போலீஸ் நிலையம் அருகே உள்ள பகுதிகளில் குப்பைகள் மலைபோல் தேங்கு வதால் அதிலிருந்து துர்நாற் றம் வீசி நோய்த்தொற்று ஏற்படும் அபாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் வீசும் காற்று காரணமாக கொட்டப்படும் குப்பைகளா னது அங்கும் இங்குமாக சிதறி காணப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

    இந்த நிலையில் திருச்சுழி போலீஸ் நிலையம் அருகே உள்ள பகுதிகளில் குப்பை கள் மற்றும் கழிவுநீர் வாறு காலில் தேங்கி வருவதுடன் அங்கிருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீரால் மேற்படி அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் அதனை கண்டு முகம் சுளிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருவதோடு கடும் நோய்த்தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

    எனவே சம்மந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் இது போன்ற குப்பைத்தொட்டி இல்லாத திருச்சுழி நகரின் முக்கிய பகுதிகளில் குப்பை தொட்டிகளை அமைத்து குப்பைகள் தேங்காத வண்ணம் ஊராட்சி ஊழி யர்கள் மூலமாக நாள்தோறும் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திருச்சுழி ஊராட்சி நிர்வாகத்திற்கு கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×