என் மலர்
விருதுநகர்
- குடிநீர், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி தந்து விளம்பர பதாகை வைத்து தெரியப்படுத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
- போலீஸ் சூப்பி–ரண்டு சீனிவாசபெருமாள் முன்னிலை வகித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண் டாள் கோவில் ஆடிப்பூரத் தேர்த்திருவிழா தொடர் பான முன்னேற்பாடு பணி–கள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் வானமாமலை மண்டபத்தில் கலெக்ர் ஜெயசீலன் தலை–மை–யில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பி–ரண்டு சீனிவாசபெருமாள் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டத்தை சிறப்பான முறையில் நடத்திட ஒவ் வொரு துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண் டிய முன்னேற்பாடு பணி–கள் குறித்தும், எடுக்கப் பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் துறை வாரியாக விரிவான ஆலோசனை நடைபெற்றது.
அப்போது கலெக்டர் பேசியதாவது:-
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண் டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்ட திருவிழா வரு–கின்ற 22-ந்தேதி சனிக்கி–ழமை நடைபெறவுள்ளது. இத்திருவிழாவில் தமிழ–கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பங்கேற் பார்கள் என எதிர்பார்க்கப்ப–டுகிறது.
தமிழகத்தில் அனைத்து கோவில்களிலும் நடைபெ–றும் தேரோட்டங்கள் தங்கு–தடையின்றி, விபத்துகள் இன்றி சிறப்பாக நடைபெ–றுவதை உறுதிபடுத்தும் வித–மாக தமிழக அரசு அறி–வித்துள்ள தேரோட்ட வழி–பாட்டு நெறிமுறைகளை தொடர்புடைய அலுவலர் கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் பொதுமக்க–ளுக்கும், பக்தர்களுக்கும் போதிய பாதுகாப்பு ஏற் பாட்டுப்பணிகளை காவல் துறையினர் மேற்கொள்ள–வும், மேலும், போக்குவரத் தினை ஒழுங்குபடுத்தும் பணியிலும் காவல் துறையி–னரும், அவர்களுக்கு துணை–யாக கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாண–வர்களும், ஊர்க்காவல் படையினர், சாரணர்களும் கூட்ட நெரிசலை ஓழுங்கு–படுத்தும் பணியில் ஈடுப–டவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
கூட்ட நெரிசலை ஒழுங் கு–படுத்த காவல்துறை–யினர் மாற்றுப்பாதை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண் டும். குற்றங்களை தடுக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமிரா பொருத்தி கண்கா–ணிக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட் டுள்ளது. பக்தர்கள் சிரமம் இல்லாமல் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளது. வருகின்ற பொது மக்கள் மற்றும் பக்தர்க ளுக்குத் தேவையான குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகளை சிறப்பான முறையில் செய் திடவும், நகரின் முக்கிய பகுதிகளில் குறிப்பாக தேர் வலம் வரும் பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்க்குகள் அமைத்திடவும், லாரிகள் மூலமும், தண்ணீர் பந்தல் அமைத்தும் சுகாதாரமான குடிநீர் விநியோகிக்கப்பட–வுள்ளது.ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சி மூலம் தற்காலி–கமாக கழிப்பறை, நடமாடும் கழிப்பறை வசதிகள் செய்து தரப்பட தேவையான நடவ–டிக்கைகளை மேற்கொள்ள–வும், உணவு விடுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ் டிக் பொருட்கள் பயன்ப–டுத்தப்படுகிறதா என்பத–னையும் ஆய்வு செய்ய–வேண்டும். குடிநீர் வசதி, சுகாதார வளாகம், தற்கா–லிகமாக கழிப்பறை, நடமா–டும் கழிப்பறை வசதி போன்ற வசதிகள் எந்தெந்த இடங்களில் அமைக்கப்பட் டுள்ளது என்பதை பொது–மக்கள் எளிதாக தெரிந்து–கொள்ளும் வண்ணம் விளம்பர பதாகைகள் வைக்கப்பட வேண்டும்.
இப்பணிகளை ஸ்ரீவில்லி–புத்தூர் நகராட்சி ஆணையா–ளர் மேற்கொள்ள அறிவு–றுத்தப்பட்டுள்ளது. தீய–ணைப்பு வண்டிகளுடன் முன்னெச்சரிக்கை நடவ–டிக்கையாக தயார் நிலையில் இருக்கவு உத்தரவிடப்பட் டுள்ளது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசு மருத்துவமனையில் தேரோட்டம் நடைபெறும் நாளன்று எந்த நேரத்திலும் முதலுதவி சிகிச்சை அளித்தி–டும் வகையில் மருத்துவர் குழுவினர் போதிய மருந்து–கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுடன் தயார் நிலையில் இருக்கவும், ஆம்பு–லன்ஸ்சுகளும் தயார் நிலை–யில் வைக்கவும், கோவில் முன்புறமுள்ள ஆடிப்பூரக் கொட்டகையிலும் தற்காலிக முதலுதவி சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு, போதிய மருத்துவப் பணியாளர்கள் பணியில் இருக்கவும் அறிவு–றுத்தப்பட்டுள்ளது.
ஆடிப்பூரத் தேர்த்திரு–விழா அன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க உரிய ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு போக்கு–வரத்துக் கழக மண்டல போக்குவரத்து அலுவலர், பொது மேலாளர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோர் மேற் கொள்ளவேண்டும். வெளி–யூர் பேருந்துகள் நிறுத்துவ–தற்கு வசதியாக தற்காலிக பேருந்துநிலையம் அமைக் கப்பட உள்ளது.
தேரோட்ட தினத்தன்று சாலையின் குறுக்கே செல் லும் மின் கம்பிகளும், தொலைபேசி இணைப்பு–களும் தற்காலிகமாக தேரோட்டம் முடியும் வரை அகற்றப்பட்டு தேரோட்டம் முடிந்த உடன் சரிசெய்யவும், இப்பணிகளுக்கு உரிய ஏற்பாடுகளை மின்சார வாரிய ஊழியர்களும், தொலை தொடர்புத்துறை ஊழியர்களும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக் குமார், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநா–தன், நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன், ஆண்டாள் கோவில் செயல் அலுவலர் முத்துராஜா, தக்கார் ரவிச் சந்திரன் உட்பட பல்வேறு துறையைச் சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்துகொண் டனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் பள்ளி மாணவிகள் மாநில அளவிலான சைக்கிளிங் போட்டியில் அபார சாதனை படைத்தனர்.
- மாணவ, மாணவிகள் கலந்து ெகாண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 49-வது தமிழ்நாடு மாநில அளவி–லா ன ரோடு சைக்கிளிங் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்க–ளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து ெகாண்டனர்.
மாணவிகள் சாதனை
இதில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி சி.சுவா–திகா முதலிடத்தை பிடித்து ரூ.9 ஆயிரம் ரொக்கப்பரி–சையும் வென்றார்.
அதே பள்ளியில் படிக் கும் மாணவி மஞ்சரி இரண்டாமிடம் பிடித்து ரூ.7 ஆயிரம் ரொக்க பரிசை பெற்றார். மாநில அளவில் சாதனை படைத்து பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவி–கள் சி.சுவாதிகா, மஞ்சரி ஆகியோரை பள்ளி தாளா–ளர் ஆர்.வெங்கடாஜலபதி, பள்ளி முதல்வர் எம்.சுந்தர–மகாலிங்கம் மற்றும் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் ஆகி–யோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
பாராட்டு
அதேபோல் மாணவிக–ளுக்கு உரிய பயிற்சி அளித்து ஆக்கமும், ஊக்கமும் அளித்த உடற்கல்வி ஆசிரி–யர்கள் தர்மராஜ், சக்தி–வேல் ஆகியோரும் பாராட்டி கவுரவிக்கப்பட்ட–னர்.
- ராஜபாளையம் அருகே அரசு பள்ளிகளில் ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகள் தொடங்கப்பட்டது.
- இதனை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள சோலைசேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் என ரூ. 4 லட்சம் நிதியில் உயர்தர (ஸ்மார்ட்) வகுப்பறை அமைக்கப் பட்டது. அதனை எம்.எல்.ஏ தங்கப்பாண்டியனும், யூனியன் சேர்மன் சிங்கராஜூம் மாணவ மாணவிகளின் பயன் பாட்டிற்கு திறந்து வைத்த னர்.
அப்போது தங்கபாண்டி யன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாகவும், ஏழை எளிய குழந்தைகளின் கற்றலை மேம்படுத்தும் நோக்கிலும் முதல்கட்டமாக ராஜ பாளையம் தொகுதியிலுள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கு தலா ரூ. 2 லட்சம், 30 லட்சம் நிதி ஒதுக்கி ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது அதில் முதல் பள்ளியாக சோலைசேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்க வேண்டுமெனும் நோக்கில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை மதுரையில் திறந்து வைத்து நல்லதொரு வழிகாட்டுதலை அடுத்த தலைமுறைக்கு உருவாக்கி தந்துள்ளார். இந்தியாவில் கல்வியில் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்திலும் உள்ளது.
ராஜபாளையம் தொகுதியிலுள்ள அரசு பள்ளிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்கையில் மாணவ-மாணவிகள் தங்கள் பள்ளிக்கும் ஆண்டு விழா நடத்த வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அதன்படி அந்த பள்ளிகளில் ஆண்டு விழா நடத்தியிருந்தோம் இதேபோல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்த சட்ட மன்ற கூட்டத்தொடரில் கல்வித்துறையின் மானியக்கோரிக்கையில் ரூ. 12கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர்கள் அழகு ராஜலட்சுமி, கவுன்சிலர் அனுசுயாகண்ணன், கிளைச்செயலாளர்கள் ரத்தினக்கனி, பிள்ளையார், வைரமுத்து ,ரமேஷ், கோவிந்தராஜ் மற்றும் ஆசிரியப்பெருமக்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
- அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சி.டி.ஸ்கேன் எடுக்க முடியாமல் கர்ப்பிணிகள், நோயாளிகள் அலைகழிக்கப்படுகின்றனர்.
- ஊழியர்கள் பற்றாக்குறையை தீர்க்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையானது விருதுநகர் மாவட்டத்தின் முதன்மை மருத்துவமனை யாக விளங்குகிறது. இந்த அரசு மருத்துவமனையில் தினமும் 500-க்கும் மேற்பட்ட உள்புற வெளிப்புற நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறிப்பாக அருப்புக்கோட்டை சுற்று வட்டார கிராமங்களான ஆத்திப்பட்டி, திருச்சுழி, கல்லூரணி, மண்டபசாலை, ரெட்டியாபட்டி, பரளச்சி, பந்தல்குடி உள்பட பல கிராமங்களில் இருந்து மக்கள் சிகிச்சைக்கு இங்குதான் வருகின்றனர்.
கர்ப்பிணி பெண்களுக்கு இங்கு பிரசவத்திற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக சி.டி.ஸ்கேன் எடுக்கும் பணியாளர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
கர்ப்பிணி பெண்கள், எலும்பு முறிவு, தலைகாயம் உள்ளிட்டவற்றுக்கு ஸ்கேன் எடுக்க முடியவில்லை. அவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் நோயாளிகளின் நிலை பரிதாபமாக உள்ளது.
குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் அலைகழிக்கப்படுகின்றனர். எனவே அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சி.டி. ஸ்கேன் பிரிவில் ஊழியர்கள் பற்றாக்குறையை நீக்கி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கேரிக்கை விடுத்துள்ளனர்.
- விருதுநகரை சேர்ந்தவர்கள் நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
- இந்த தகவலை கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் இயற்கை விவசாய சாகுபடி யில் ஈடுபடும் விவசாயிகள் நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரசாயன உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றை தவிர்த்து இயற்கையுடன் இணைந்த உயிரியல் சுழற்சி, இயற்கை மற்றும் அங்கக எரு பயன்படுத்துதல் மூலம் பயிர் பாதுகாப்பு மற்றும் பயிர் சாகுபடி செய்யப் படுவதோடு மண்வளத்தை யும் பாதுகாப்பது விவசாய சாகுபடியாகும்.
வேளாண்மையில் மண்ணில் உள்ள நுண்ணு யிர் கள் அங்கக கழிவுகளை நன்றாக மக்கச்செய்து, அதில் உள்ள ஊட்டச்சத்துகளை மண்ணிற்கு அளித்து பயிர்கள் கிரகித்துக்கொள்ள உதவுகின்றன. நுண்ணுயிர் கள் ஊட்டச்சத்துகளை மெதுவாகவும், சீராகவும் வெளியிடுகின்றன. இதனால், மாசற்ற சூழலில் பயிர்கள் வளர்வதனால் நஞ்சற்ற விளை பொருட்களை உற்பத்தி செய்ய முடியும்.
மக்களின் உடல் நலத்தை காக்கவும், மண்வளம், இயற்கை வளம் காப்பதற்கும், நீடித்த நிலையான வேளாண்மையினை உறுதி படுத்தவும் தமிழக அங்கக வேளாண்மை கொள்கையை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த மார்ச் 14-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
இயற்கை விவசாயம் செய்யும் தன்னார்வ விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்காக, 2023-24-ம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கி, மற்ற விவசாயிகளையும் ஊக்குவிக்கும் அங்கக விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும் என அறி விக்கப்பட்டுள்ளது.
நம்மாழ்வார் விருது பெற விரும்பும் விவசாயிகள், அக்ரிஸ்நெட் வலைதளத்தில் வரும் நவம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான பதிவுக்கட்ட ணம் ரூ.100 செலுத்த வேண் டும். குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பில் அங்கக வேளாண்மையில் சாகுபடி செய்ய வேண்டும். குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் அங்கக வேளாண்மையில் ஈடுபட்டி ருக்க வேண்டும். மேலும், அதற்கான சான்றும் பெற்றிருக்க வேண்டும். முழுநேர அங்கக விவசாயியாக இருக்க வேண்டும்.
மாநில அளவில் வெற்றி பெறும் 3 விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவற்றை குடியரசு தினத்தன்று முதல்வர் வழங்க உள்ளார். முதல் பரிசு ரூ.2.5 லட்சம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பதக்கம், இரண்டாம் பரிசு ரூ.1.5 இலட்சம் மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள பதக்கம், மூன்றாம் பரிசு ரூ.1 இலட்சம் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பதக்கம் வழங்கப்படும்.
விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள், அதற்கான வழிமுறைகள் குறித்து, அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
- அருப்புக்கோட்டைக்கு புதிய தாமிரபரணி கூட்டு குடிநீர் டிசம்பர் முதல் வழங்கப்படும்.
- இந்த தகவலை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அருப்புக்கோட்டை
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அருப்புக்கோட்டை விருதுந கர், சாத்தூர் ஆகிய நகராட்சி களுக்கு புதிய தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகி ன்றன. இதில் அருப்புக்கோட்டை நகராட்சிக்கு மட்டும் .226 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய தாமிரபரணி குடிநீர் திட்டம் மூலம் சீவலப்பேரியிலிருந்து தண்ணீர் சேகரிக்கப்பட்டு பகிர்மான குழாய்கள் மூலம் அருப்புக்கோட்டைக்கு கொண்டு வரப்படும். இதற்காக அருப்புக் கோட்டை நகர் பகுதிகளில் பகிர்மான குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்க வாய்ப்பு உள்ளது. இதுவரை 90 சதவீத பணிகள் முடி வடைந்துள்ளன. நவம்பர் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிந்து விடும். அதன் பின்னர் டிசம்பர் மாதத்தில் இருந்து குடிநீர் வழங்கப்படும். மேலும் வைகையில் இருந்தும் குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு விநியோ கம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வைகை வறண்ட நிலையில் உள்ளதால் வைகையில் இருந்து வரும் தண்ணீரின் தன்மை குறைந்து சுவை யற்ற நிலையில் வருவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் வைகை யில் இருந்து அருப்புக் கோட்டைக்கு குழாய்கள் மூலம் கொண்டு வரும் குடிநீரை கட்டங்குடியில் ரூ. 6 கோடி செலவில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீரை சுத்திகரிப்பு செய்து அதன்பின் அருப்புக்கோட்டைக்கு வினியோகம் செய்வதற்கு ஏற்பாடு நடந்து வருகிறது.
பழைய தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வல்லநாட்டில் இருந்து அருப்புக்கோட்டை வரை 19 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட குழாய்க ளில் ஆங்காங்கே அடிக்கடி உடைப்புகள் ஏற்பட்டு குடிதண்ணீர் வீணாகி வருகிறது. அதையும் நிவர்த்தி செய்யும் வகையில் புதிய குழாய்கள் அமைக்க குடிநீர் வடிகால் வாரியத்தி னரிடம் திட்ட மதிப்பீடு தயார் செய்ய கூறியுள்ளேன். திட்ட மதிப்பீடு தயார் செய்தவுடன் அரசுக்கு அனுப்பி நிதியை பெற்று குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கப்படும். மேலும் கட்டங்குடியில் இருந்து அருப்புக்கோட்டை வரை பழைய இரும்பு குழாய்களுக்கு பதிலாகரூ. 6 கோடி செலவில் டி.ஐ.பைப் பதிக்கப்பட உள்ளது.
தற்போது தாமிரபரணி, வைகை ஆகிய 2 குடிநீர் திட்டங்களிலும் குறைந்த அளவே குடிநீர் பெறப்ப டுவதால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நகர் மன்ற தலைவர் சுந்தரலட்சுமி, ஆணையாளர், அசோக்குமார், முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவப்பிரகாசம், நகர்மன்ற துணைத்தலைவர் பழனிச்சாமி மற்றும் தி.மு.க. நகர செயலாளர் ஏ.கே.மணி உடனிருந்தனர்.
- விஜயகரிசல் குளம் அகழாய்வில் பச்சை குத்தும் கருவி கண்டெடுக்கப்பட்டது.
- மேற்கண்ட தகவலை தொல்லியல் துறை இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.
சிவகாசி
சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதுவரை 16 குழிகள் தோண்டப்பட்ட நிலையில் சங்கு வளையல்கள், மண் சட்டி, நீர்க்கிண்ணம், யானைத் தந்ததால் செய்யப்பட்ட பகடைக்காய், சுடு மண்ணால் செய்யப்பட்ட பொம்மை, எடை கற்கள், நெசவுத் தொழிலுக்கு பயன்படு த்தப்பட்ட தக்களி, ஏற்றுமதிக்கு பயன்ப டுத்தப்பட்ட முத்திரை கருவி, கல் மணிகள், பாசிமணிகள் என 2800-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத் துள்ளன. நேற்று தோண்டப்பட்ட குழியில் பச்சை குத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட அச்சு கிடைத்துள்ளது. அதில் இலைகளுடன் கூடிய அழகாக வடிவமைக் கப்பட்டது. இதன்மூலம் பழங்கா லத்தில் நம் முன்னோர்க ளிடம் பச்சை குத்தும் வழக்கம் இருந்துள்ளது உறுதிப்ப டுத்தப்பட்டுள்ளது. மேலும் அகழாய்வு தோண்டப்பட்டதில் 6 குழிகள் முழுமையாக பணிகள் முடிவ டைந்துள்ளன.
இந்த குழியில் கிடைத்த பொருட்களின் நீளம், அகலம் ஆகியவற்றை வரைபடம் மூலம் ஆவணப்படுத்த முயற்சி மற்றும் அளவீடு செய்யும் முயற்சியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆவணப்படுத்தும் பணி தொடர்ந்து ஒரு வாரம் நடைபெறும். மேற்கண்ட தகவலை தொல்லியல் துறை இயக்குனர் பொன்பாஸ்கர் தெரிவித்தார்.
- ராஜபாளையம் நகரில் சாலைகளை சீரமைக்க கோரி கம்யூனிஸ்டு சார்பில் உச்சக்கட்ட போராட்டம் நடந்தது.
- பேட்ஜ் வொர்க் நடை–பெற்று ஓரிரு மாதங்களி–லேயே சாலை மீண்டும் மிக மோசமாக பழுதாகி விட்டது.
ராஜபாளையம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜபாளையம் நகர குழு கூட்டம் சுப்பிரம–ணியன் தலைமையில் நடந்தது. மாவட்டச் செயலா–ளர் அர்ஜூனன், நகரச் செயலா–ளர் மாரியப்பன் உள்ளிட்ட நகர குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் ராஜபாளையத்தில் பிரதான சாலையான பஞ்சு மார்க்கெட் முதல் சொக்கர்கோவில் வரை உள்ள தென்காசி சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
நகரில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப் பணி, தாமரபரணி திட்டத் திற்காக தோண்டப்பட்ட சாலை மேற்படி பணிகள் நிறைவு பெற்றது என தடை–யில்லா சான்று வழங்கி ஓராண்டுக்குப் பின்பும் கூட இன்னும் சாலை சீரமைக்கப் படவில்லை.
கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தச் சாலையை சீரமைக்க வலியுறுத்தி ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் கடையடைப்பு போராட் டத்தை நடத்தியது. அன்றைய தினம் அரசியல் கட்சிகளும் தன்னார்வ அமைப்புகளும் இணைந்து ஆர்ப்பாட்டத்தை–யும் நடத்தியது.
அதன் பின்பு அந்தச் சாலையில் தற்காலிகமாக பேட்ஜ் வொர்க் பார்ப்பது எனவும், வெகு விரைவில் தேசிய நெடுஞ்சாலைத்து–றையில் அனுமதி பெற்று நிதி பெற்று முழுமையாக சாலை அமைப்பது எனவும் அப்போது அரசு நிர்வாக தரப்பில் கூறப்பட்டு பேட்ச் ஒர்க் நடைபெற்றது.
பேட்ஜ் வொர்க் நடை–பெற்று ஓரிரு மாதங்களி–லேயே சாலை மீண்டும் மிக மோசமாக பழுதாகி விட்டது. தற்போது கிடைத் துள்ள தகவல்படி கிருஷ் ணன் கோவில் முதல் அமிழ் ஓட்டல் வரை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் வசம் இந்தச் சாலை ஒப்படைக்கப்பட்டி ருப்பதாகவும், நான்கு வழிச் சாலை பணிகள் முடிந்த பின்பு தான் சாலை அமைக்க முடியும் என கூறி வருகின்ற–னர்.
கடந்த ஓராண்டு காலமாக ராஜபாளையம் மக்களும், இந்த வழியாகச் செல்லும் பயணிகளும் மிகப்பெரும் துன்ப துயரங்களை சந்திப்ப–தோடு விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்பும் நடை–பெற்று உள்ளது. எனவே தேசிய நெடுஞ்சா–லைத்துறை காலம் கடத்தா–மல் ராஜபாளையம் நகரின் பிரதான சாலையான தென் காசி சாலையை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகஸ்ட் முதல் வாரம் கவன ஈர்ப்பு உச்சகட்ட போராட்டத்தை நடத்த தீர்மானம் நிறை–வேற்றி உள்ளது.
மேலும் காந்தி கலை மன்றம் முதல் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலை ஆங்காங்கே பழுதடைந்து விபத்துக்கள் ஏற்பட்டு வரு–கிறது. குறிப்பாக சங்க–ரன்கோவில் முக்கில் இருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் குழாய்கள் உடைந்து சாலை–கள் தோண்டப்பட்டு இருப்ப–தால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேற்படி சாலைகளையும் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை உட–னடியாக சரி செய்ய வேண்டுகிறோம்.
நகராட்சிக்கு உட்பட்ட ெரயில்வே பீடர் சாலையில் மூன்று பிரதான பள்ளிகள் உள்ளது. தினசரி ஆயிரக்க–ணக்கான மாணவ, மாணவி–களும் பொதுமக்களும் பயணிக்க கூடிய இந்த சாலை மிக மோசமாக உள்ளது. அடிக்கடி விபத்து ஏற்படும் வகையில் பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக உள் ளது. நகராட்சி நிர்வாகம் அதை சரிசெய்ய வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூ–னிஸ்ட் கட்சி ராஜபாளையம் நகர் குழு தீர்மானம் நிறை–வேற்றியுள்ளது.
- கலப்படம் செய்த, தரம் குறைவான பால் விற்பனை செய்பவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- விருதுநகர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளி–யிட்டுள்ள செய்திக்கு–றிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் மாநில உணவுப் பாதுகாப்புதுறை ஆணையர் மற்றும் மாவட்ட கலெக்டரின் ஆணைக்கிணங்க உணவுப் பாதுகாப்பு துறையின் மூலம் மாவட்டம் முழுவதும் பால் விற்பனையில் கலப்ப–டம் எதுவும் செய்யப்பட்டுள்ளதா என தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆய்வில் கடந்த மூன்று மாதங்களில் ராஜபாளையம், அருப்புக்கோட்டை, சிவ–காசி, ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் விருதுநகர் பகுதிக–ளில் 19 பால் உணவு மாதிரி–கள் எடுக்கப்பட்டது. அதில் 8 பால் உணவு மாதிரிகள் தரம் குறைவாக இருப்பதாக ஆய்வில் கண்ட–றியப்பட்டுள்ளது. தரம் குறைவான பால் விற்பனை–யாளர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் நீதிமன்றங்களில் தொடுக்கப் பட்டு அபராதம் விதித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. பால் விற்பனை யாளர்கள் அனைவரும் உணவு பாது–காப்பு துறையில் பதிவு அல்லது உரிமம் பெற்றிருக்க வேண்டும். தாங்கள் விற் பனை செய்யும் பாலில் தண்ணீர், ஸ்டார்ச், யூரியா மற்றும் அனுமதிக்கப்படாத பவுடர்கள் கலப்படமின்றி தரமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தொடர் ஆய்வுகளின் போது உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் இன் றியோ, தரம் குறைவான பாலினை நுகர்வோருக்கோ அல்லது பிற உணவுப்பொ–ருள் நிறுவனங்களுக்கோ விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் அவர்க–ளின் மீது துறைரீதியான கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
உணவு பொருட்கள் மற்றும் பால்பொருட்கள் தொடர்பான புகார்கள் எதுவும் இருந்தால், விருது–நகர் மாவட்ட உணவு பாது–காப்புத்துறை அலுவல–கத்திற்கு 04562 252255 அல்லது 94440 42322 என்ற மாநில உணவு பாதுகாப்புத்துறை ஆணையர், அலுவலக வாட்ஸ்ஆப் எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- தகுதி இல்லாத ஆசிரியர்களை கொண்டு பாடங்கள் நடத்தப்படுவதாக எங்களின் பிள்ளைகள் தெரிவிக்கின்றனர்.
- விடுதியில் சுகாதாரமான உணவு வழங்கப்படவில்லை என மாணவிகள் கூறுகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகரில் தனியார் மகளிர் ஓமியோபதி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி போதிய வசதிகள் இல்லாமல் செயல்படுவதாக இங்கு படிக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலனை சந்தித்து அவர்கள் புகார் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
விருதுநகரில் செயல்பட்டு வரும் தனியார் பெண்கள் ஓமியோபதி கல்லூரி மத்திய அரசு அங்கீகாரத்துடன் இயங்குவதாக வந்த விளம்பரங்களை பார்த்து எங்கள் பிள்ளைகளை அந்த கல்லூரியில் சேர்த்தோம். ஆனால் அந்த கல்லூரியில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை.
தகுதி இல்லாத ஆசிரியர்களை கொண்டு பாடங்கள் நடத்தப்படுவதாக எங்களின் பிள்ளைகள் தெரிவிக்கின்றனர். கல்லூரிக்கு சுற்றுச்சுவர் கூட இல்லாத நிலை உள்ளது. கல்லூரி சேர்க்கையின்போது தங்கிப் படிக்கும் மாணவிகளுக்கு ஒரு அறையில் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 10-க்கும் மேற்பட்ட மாணவிகளை ஒரே அறையில் தங்க வைக்கின்றனர்.
கல்லூரியில் 5 கழிப்பறைகள் மட்டுமே உள்ளது. இதனால் மாணவிகள் சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர். குளியல் அறைகளில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருக்கலாம் எனவும் மாணவிகள் சந்தேகிக்கின்றனர். மேலும் விடுதியில் சுகாதாரமான உணவு வழங்கப்படவில்லை எனவும் மாணவிகள் கூறுகின்றனர்.
இரவு நேரங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் உள்ளதாகவும், அதனால் பயத்துடனேயே இருக்க வேண்டியுள்ளதாகவும் அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதனால் அந்த கல்லூரியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.
இதுகுறித்து நிர்வாகத்திடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்க மறுக்கின்றனர். மாணவிகளின் பாதுகாப்பையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து மாணவிகளின் கல்வி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- சிறுதானிய உணவகம் அமைக்க மகளிர் சுய உதவிகுழு விண்ணப்பிக்கலாம்.
- இந்த தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பெண்களின் பொருளாதார மேம்பாடு என்பது வலுவான மற்றும் சமத்துவ சமுதாயத்தை வளர்ப்பதற் கான அடிப்படையாகும், வறுமை ஒழிப்பு, சிறந்த சுகாதாரம், கல்வி மற்றும் ஒட்டு மொத்த கிராமப்புற பொருளாதார மேம்பாடு ஆகியற்றிற்காக பெண்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்திட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
எனவே, ஊட்டச்சத்து குறைபாடு அற்ற சமுதாயத் தை உருவாக்கும் பொருட்டு பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் புதிய பாதையை உருவாக்கி வருகிறது.
மேலும், சர்வதேச சிறு தானிய ஆண்டாக 2023-ம் ஆண்டு கொண்டாடப்படுவதால் தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்ட கலெக்டர் வளாகத்திலும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் சிறுதானிய உணவகம் அமைத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் சிறு தானிய உணவகம் அமைத் திட கீழ்க்கண்ட நிபந்தனை களுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சிறுதானிய உணவகம் நடத் திட கீழ்க்காணும் தகுதியுள்ள மற்றும் விரும்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்கள் அல்லது கூட்டமைப்புகளி லிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றது.
அதன்படி மகளிர் சுய உதவிக்குழு தொடங்கப்பட்டு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும். தேசிய ஊரக வாழ்வாதார இயக்க மேலாண்மை தகவல் அமைப்பு இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
கூட்டமைப்பாக இருக் கும் பட்சத்தில் தரமதிப்பீடு செய்யப்பட்டு சான்று பெற் றிருக்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு, உற்பத்தியாளர் குழு அல்லது கூட்ட மைப்பு சிறுதானிய உணவு உற்பத்தி மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் ஆர்வம் மற்றும் முன் அனுப வம் உள்ளவராக இருத்தல் வேண்டும். மேலும் விவரங் களுக்கு ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம் என அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- திருச்சுழி அருகே அரசு மேல்நிலைப்பள்ளி கழிவறைக்குள் பாம்பு புகுந்தது.
- மாணவர்கள் அலறியடித்து ஓடினர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள ஆணைக்குளம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரு கின்றனர்.
மேலும் இந்த அரசுப் பள்ளி காட்டு பகுதியில் அமைந்துள்ளதால் அவ்வப்போது விஷசந்துகள் வரு வது வழக்கமாக இருந்து வந்தது.
இந்நிலையில் சிறப்பு வகுப்புகளுக்காக மாணவ, மாணவியர் படித்து கொண் டிருந்தனர். அப்போது பள்ளிகூடத்தின் கேட் பகுதி வழியாக சுமார் நான்கரை அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று அங்குள்ள பயன்படுத்தப்படாத கழிவறைக்குள் நுழைந்தது.
இதனை கண்ட மாணவர் கள் கூச்சிலிட்ட நிலையில் அலறியடித்து கொண்டு அங்கும், இங்குமாக ஓடினர். இதனை அறிந்த பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக திருச்சுழி தீயணைப்பு துறை யினருக்கு தகவல் கொடுத்த னர். உடனே சம்பவ இடத் திற்கு விரைந்து வந்த திருச்சுழி தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் முனீஸ் வரன் தலைமையிலான தீய ணைப்பு குழுவினர் பள்ளிக்கூடத்தின் கழிவறை பகுதிக்குள் நுழைந்த சாரை பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அதனை காட்டு பகுதியில் விட்டனர்.
மேலும் மாணவர்கள் பள்ளியில் படித்து கொண்டிருக்கும்போதே சாரை பாம்பு ஒன்று கழிவறைக்குள் புகுந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






