என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள்
- ராஜபாளையம் அருகே அரசு பள்ளிகளில் ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகள் தொடங்கப்பட்டது.
- இதனை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள சோலைசேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் என ரூ. 4 லட்சம் நிதியில் உயர்தர (ஸ்மார்ட்) வகுப்பறை அமைக்கப் பட்டது. அதனை எம்.எல்.ஏ தங்கப்பாண்டியனும், யூனியன் சேர்மன் சிங்கராஜூம் மாணவ மாணவிகளின் பயன் பாட்டிற்கு திறந்து வைத்த னர்.
அப்போது தங்கபாண்டி யன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாகவும், ஏழை எளிய குழந்தைகளின் கற்றலை மேம்படுத்தும் நோக்கிலும் முதல்கட்டமாக ராஜ பாளையம் தொகுதியிலுள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கு தலா ரூ. 2 லட்சம், 30 லட்சம் நிதி ஒதுக்கி ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது அதில் முதல் பள்ளியாக சோலைசேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்க வேண்டுமெனும் நோக்கில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை மதுரையில் திறந்து வைத்து நல்லதொரு வழிகாட்டுதலை அடுத்த தலைமுறைக்கு உருவாக்கி தந்துள்ளார். இந்தியாவில் கல்வியில் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்திலும் உள்ளது.
ராஜபாளையம் தொகுதியிலுள்ள அரசு பள்ளிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்கையில் மாணவ-மாணவிகள் தங்கள் பள்ளிக்கும் ஆண்டு விழா நடத்த வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அதன்படி அந்த பள்ளிகளில் ஆண்டு விழா நடத்தியிருந்தோம் இதேபோல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்த சட்ட மன்ற கூட்டத்தொடரில் கல்வித்துறையின் மானியக்கோரிக்கையில் ரூ. 12கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர்கள் அழகு ராஜலட்சுமி, கவுன்சிலர் அனுசுயாகண்ணன், கிளைச்செயலாளர்கள் ரத்தினக்கனி, பிள்ளையார், வைரமுத்து ,ரமேஷ், கோவிந்தராஜ் மற்றும் ஆசிரியப்பெருமக்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்