search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி தந்து விளம்பர பதாகை வைத்து தெரியப்படுத்த கலெக்டர் உத்தரவு
    X

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றபோது எடுத்தபடம்.

    குடிநீர், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி தந்து விளம்பர பதாகை வைத்து தெரியப்படுத்த கலெக்டர் உத்தரவு

    • குடிநீர், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி தந்து விளம்பர பதாகை வைத்து தெரியப்படுத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    • போலீஸ் சூப்பி–ரண்டு சீனிவாசபெருமாள் முன்னிலை வகித்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண் டாள் கோவில் ஆடிப்பூரத் தேர்த்திருவிழா தொடர் பான முன்னேற்பாடு பணி–கள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் வானமாமலை மண்டபத்தில் கலெக்ர் ஜெயசீலன் தலை–மை–யில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பி–ரண்டு சீனிவாசபெருமாள் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டத்தை சிறப்பான முறையில் நடத்திட ஒவ் வொரு துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண் டிய முன்னேற்பாடு பணி–கள் குறித்தும், எடுக்கப் பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் துறை வாரியாக விரிவான ஆலோசனை நடைபெற்றது.

    அப்போது கலெக்டர் பேசியதாவது:-

    ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண் டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்ட திருவிழா வரு–கின்ற 22-ந்தேதி சனிக்கி–ழமை நடைபெறவுள்ளது. இத்திருவிழாவில் தமிழ–கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பங்கேற் பார்கள் என எதிர்பார்க்கப்ப–டுகிறது.

    தமிழகத்தில் அனைத்து கோவில்களிலும் நடைபெ–றும் தேரோட்டங்கள் தங்கு–தடையின்றி, விபத்துகள் இன்றி சிறப்பாக நடைபெ–றுவதை உறுதிபடுத்தும் வித–மாக தமிழக அரசு அறி–வித்துள்ள தேரோட்ட வழி–பாட்டு நெறிமுறைகளை தொடர்புடைய அலுவலர் கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் பொதுமக்க–ளுக்கும், பக்தர்களுக்கும் போதிய பாதுகாப்பு ஏற் பாட்டுப்பணிகளை காவல் துறையினர் மேற்கொள்ள–வும், மேலும், போக்குவரத் தினை ஒழுங்குபடுத்தும் பணியிலும் காவல் துறையி–னரும், அவர்களுக்கு துணை–யாக கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாண–வர்களும், ஊர்க்காவல் படையினர், சாரணர்களும் கூட்ட நெரிசலை ஓழுங்கு–படுத்தும் பணியில் ஈடுப–டவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

    கூட்ட நெரிசலை ஒழுங் கு–படுத்த காவல்துறை–யினர் மாற்றுப்பாதை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண் டும். குற்றங்களை தடுக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமிரா பொருத்தி கண்கா–ணிக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட் டுள்ளது. பக்தர்கள் சிரமம் இல்லாமல் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளது. வருகின்ற பொது மக்கள் மற்றும் பக்தர்க ளுக்குத் தேவையான குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகளை சிறப்பான முறையில் செய் திடவும், நகரின் முக்கிய பகுதிகளில் குறிப்பாக தேர் வலம் வரும் பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்க்குகள் அமைத்திடவும், லாரிகள் மூலமும், தண்ணீர் பந்தல் அமைத்தும் சுகாதாரமான குடிநீர் விநியோகிக்கப்பட–வுள்ளது.ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சி மூலம் தற்காலி–கமாக கழிப்பறை, நடமாடும் கழிப்பறை வசதிகள் செய்து தரப்பட தேவையான நடவ–டிக்கைகளை மேற்கொள்ள–வும், உணவு விடுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ் டிக் பொருட்கள் பயன்ப–டுத்தப்படுகிறதா என்பத–னையும் ஆய்வு செய்ய–வேண்டும். குடிநீர் வசதி, சுகாதார வளாகம், தற்கா–லிகமாக கழிப்பறை, நடமா–டும் கழிப்பறை வசதி போன்ற வசதிகள் எந்தெந்த இடங்களில் அமைக்கப்பட் டுள்ளது என்பதை பொது–மக்கள் எளிதாக தெரிந்து–கொள்ளும் வண்ணம் விளம்பர பதாகைகள் வைக்கப்பட வேண்டும்.

    இப்பணிகளை ஸ்ரீவில்லி–புத்தூர் நகராட்சி ஆணையா–ளர் மேற்கொள்ள அறிவு–றுத்தப்பட்டுள்ளது. தீய–ணைப்பு வண்டிகளுடன் முன்னெச்சரிக்கை நடவ–டிக்கையாக தயார் நிலையில் இருக்கவு உத்தரவிடப்பட் டுள்ளது.

    ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசு மருத்துவமனையில் தேரோட்டம் நடைபெறும் நாளன்று எந்த நேரத்திலும் முதலுதவி சிகிச்சை அளித்தி–டும் வகையில் மருத்துவர் குழுவினர் போதிய மருந்து–கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுடன் தயார் நிலையில் இருக்கவும், ஆம்பு–லன்ஸ்சுகளும் தயார் நிலை–யில் வைக்கவும், கோவில் முன்புறமுள்ள ஆடிப்பூரக் கொட்டகையிலும் தற்காலிக முதலுதவி சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு, போதிய மருத்துவப் பணியாளர்கள் பணியில் இருக்கவும் அறிவு–றுத்தப்பட்டுள்ளது.

    ஆடிப்பூரத் தேர்த்திரு–விழா அன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க உரிய ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு போக்கு–வரத்துக் கழக மண்டல போக்குவரத்து அலுவலர், பொது மேலாளர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோர் மேற் கொள்ளவேண்டும். வெளி–யூர் பேருந்துகள் நிறுத்துவ–தற்கு வசதியாக தற்காலிக பேருந்துநிலையம் அமைக் கப்பட உள்ளது.

    தேரோட்ட தினத்தன்று சாலையின் குறுக்கே செல் லும் மின் கம்பிகளும், தொலைபேசி இணைப்பு–களும் தற்காலிகமாக தேரோட்டம் முடியும் வரை அகற்றப்பட்டு தேரோட்டம் முடிந்த உடன் சரிசெய்யவும், இப்பணிகளுக்கு உரிய ஏற்பாடுகளை மின்சார வாரிய ஊழியர்களும், தொலை தொடர்புத்துறை ஊழியர்களும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக் குமார், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநா–தன், நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன், ஆண்டாள் கோவில் செயல் அலுவலர் முத்துராஜா, தக்கார் ரவிச் சந்திரன் உட்பட பல்வேறு துறையைச் சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்துகொண் டனர்.

    Next Story
    ×