என் மலர்
விருதுநகர்
- ரூ.1.5 லட்சம் மோசடி செய்த பெண் போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- கோவில்பட்டி இலுப்பையூரணியை சேர்ந்த பெண் போலீஸ் சேர்மக்கனி அறிமுகம் ஆனார்.
விருதுநகர்
சாத்தூர் அருகே சத்திரப்பட்டி பெரிய கொல்லம்பட்டி ரோடு பகுதியை சேர்ந்தவர் லதா. இவருக்கு கோவில்பட்டி இலுப்பையூரணியை சேர்ந்த பெண் போலீஸ் சேர்மக்கனி அறிமுகம் ஆனார்.
இருவருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் தான் பேறுகால விடுப்பில் இருப்பதாகவும், அதனால் லதாவின் தங்கை நடத்தி வரும் தீப்பெட்டி ஆபீசை லீசுக்கு தருமாறும் லதாவிடம் சேர்மக்கனி கேட்டார். லதாவும் அதற்கு ஏற்பாடு செய்தார்.
லீசுக்கான தொகையை சேர்மக்கனி சரியாக கொடுத்து வந்தார். இந்த நிலையில் அவசர தேவைக்கு ரூ.1.5 லட்சம் தேவைப்படுவதாக கேட்டு வாங்கினார். ஆனால் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் செக் ஒன்றை சேர்மக்கனி கொடுத்தார்.
ஆனால் அந்த காசோலை வங்கியில் இருந்து திரும்ப வந்தது. விசாரணையில் அந்த காசோலை வேறு ஒருவருடையது என தெரியவந்தது. இதனால் மீண்டும் சேர்மக்கனியிடம் பணத்தை தருமாறு லதா கேட்டார்.
அப்போது பணம்கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என்று கூறினார். மேலும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார். இதுகுறித்து சாத்தூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் லதா வழக்கு தொடர்ந்தார்.
கோர்ட்டு உத்தரவுப்படி சாத்தூர் தாலுகா போலீசார் பெண் போலீஸ் சேர்மக்கனி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிள்கள் மோதி ஒருவர் பலியானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
வத்திராயிருப்பு கோட்டையூரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 62). இவர் அழகாபுரி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்திசையில் தேனி மாவட்டம் பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த மூர்த்தி மோட்டார் சைக்கிளில் வந்தார். 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த மாரியப்பனை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் நடந்தது.
- போலீசார் 3 பெண்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அத்திக்குளம் கிராம நிர்வாக அலுவலர் திருப்பதி (44). இவர் மணல் திருட்டு தொடர்பாக உளுத்திமடை ஆற்றுப்பாலம் பகுதியில் வாகன சோதனைக்கு சென்றார்.
அப்போது அங்கு வந்த செங்கமடை கிராமத்தை சேர்ந்த ராமர் என்பவர் திருப்பதியுடன் தகராறு செய்து தாக்கினார். மேலும் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து திருப்பதி கொடுத்த புகாரின்பேரில் கட்டனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்-அழகாபுரி பகுதியை சேர்ந்தவர் பாண்டியம்மாள். இவர் செங்குன்றாபுரம் கிராம உதவியாளராக உள்ளார். இவரது கணவர் இறந்து விட்டார். இந்த நிலையில் இவருக்கு தங்கை கணவருடன் தொடர்பு இருப்பதாக நினைத்து குடும்பத்தினர் அவரை தாக்கி வீட்டை சேதப்படுத்தினர்.
மேலும் தங்க செயினை திருடி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த பாண்டியம்மாள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் ஆமத்தூர் போலீசார் 3 பெண்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- பெற்றோர் சிறுமியை தூத்துக்குடியில் உள்ள ஒரு பள்ளியில் சேர்த்தனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் பெருமாள்சேரியை சேர்ந்த ஊர்த்தடியான் என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த பெற்றோர் சிறுமியை தூத்துக்குடியில் உள்ள ஒரு பள்ளியில் சேர்த்தனர்.
இந்த நிலையில் விடுமுறைக்கு சிறுமி ஊருக்கு வந்தார். திருவண்ணாமலை கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றார். அப்போது அங்கு வந்த ஊர்த்தடியான் சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் தந்தை ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து ஊர்த்தடியானைதேடி வருகின்றனர்.
- ராஜபாளையம் அருகே மாரியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- 9-ம் திருவிழாவை முன்னிட்டு திருத்தேர் வீதி உலா நடக்கிறது.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் இந்து நாடார் உறவின் முறை மகிமை பண்டுக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
முன்னதாக அம்மனுக்கு பால் பன்னீர் தேன் இளநீர் போன்ற 16-வகை அபி ஷேகங்கள் நடத்தப்பட்டு தீப ஆராதனை வழிபாடு நடைபெற்றது. அதிகாலை 3 மணி அளவில் கொடி யேற்று விழா சிறப்பாக நடை பெற்றது. ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனைத்தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது.
முதல்நாள் விழாவில் இன்று மாலையில் அம்மன் குடை சப்பரத்தில் எழுந் தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு இன்னிசை கச்சேரி நடை பெற்றது. 9-ம் திருவிழாவை முன்னிட்டு திருத்தேர் வீதி உலா நடக்கிறது. நிகழ்ச்சிக் கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
- கொலை செய்யப்பட்ட அன்பரசனுக்கும், பாண்டி முருகனுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.
- போலீசார் பாண்டி முருகன் மற்றும் கொலையை மறைக்க உதவிய வீரபாண்டி, ராஜபாண்டி, மாதவன், அன்பழகன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சுழி:
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள புலியூரான்-பி. தொட்டியங்குளம் இடையிலான ரெயில்வே தண்டவாள பகுதியில் சம்பவத்தன்று 50 வயது மதிக்கத்தக்க நபர் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த திருச்சுழி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக புலியூரான் கிராம நிர்வாக அலுவலர் பவானி தேவி கொடுத்த புகாரின் பேரில் திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் கொலை செய்யப்பட்டவரின் உடலில் வெட்டு காயங்கள் இருந்தது. எனவே மர்ம நபர்கள் அவரை கொலை செய்துவிட்டு தண்டவாளத்தில் வீசி சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டு ரெயில்வே தண்டவாளத்தில் வீசப்பட்டவர் திருச்சுழி அருகே உள்ள ஆலடிப்பட்டி மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த டீக்கடை தொழிலாளி அன்பரசன் (வயது 50) என தெரியவந்தது.
அன்பரசனை கொலை செய்தது தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க திருச்சுழி போலீஸ் டி.எஸ்.பி. ஜெகநாதன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அன்பரசனின் குடும்ப உறுப்பினர்கள், அவருடன் பழகியவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சின்ன கட்டங்குடி பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் பாண்டி முருகன் (25) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.
அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.
கொலை செய்யப்பட்ட அன்பரசனுக்கும், பாண்டி முருகனுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி மது குடித்து வந்துள்ளனர். சம்பவத்தன்று அன்பரசனும் பாண்டி முருகனும் சேர்ந்து சின்ன கட்டங்குடி பகுதியில் உள்ள தோப்பு வீட்டில் மது அருந்தினர். 2 பேருக்கும் போதை தலைக்கேறியது. அப்போது அன்பரசன் தரக்குறைவாக பாண்டி முருகனை பேசியதாக கூறப்படுகிறது. இதனால் 2 பேருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாண்டி முருகன் அருகில் இருந்த கட்டையை எடுத்து அன்பரசனை சரமாரியாக தலையில் அடித்து தாக்கினார். இதில் நிலைகுலைந்து விழுந்த அன்பரசன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாண்டி முருகன் உடனே தனது சகோதரர்கள் மற்றும் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் அதே பகுதியைச் சேர்ந்த சந்திரன் மகன் வீரபாண்டி (32), சோலை மகன் ராஜபாண்டி (27) மற்றும் பாண்டி முருகனின் சகோதரர்கள் மாதவன் (23), அன்பழகன் (32) ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் கொலை குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் பிணத்தை அப்புறப்படுத்த முடிவு செய்தனர்.
அதன்படி அன்பரசனின் உடலை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு புலியூரான்-பி. தொட்டி யங்குளம் பகுதியில் உள்ள தண்டவாள பகுதியில் தற்கொலை செய்து கொண்டது போல போட்டு விட்டு சென்றுள்ளனர்.
மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலீசார் பாண்டி முருகன் மற்றும் கொலையை மறைக்க உதவிய வீரபாண்டி, ராஜபாண்டி, மாதவன், அன்பழகன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
- சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- திருச்சுழி உட்கோட்ட பகுதியை சேர்ந்த சாலைப் பணியாளர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பூமிநாதர் கோவில் வாசலில் இருந்து தொடங் கிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை திருச்சுழி நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறி யாளர் கணேசன் தொடங்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் போக்குவரத்து சின்னங்களை பின்பற்றுதல், மது அருந்தி வாகனம் ஓட்டா தே, தலைக்கவசம் அணிவ தன் அவசியம் என்பது போன்ற பல்வேறு வாசகங் கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி விழிப்புணர்வு வாசகங்களை முழக்கமிட்ட வாறு முக்கிய வீதிகள் வழி யாக ஊர்வலமாக வந்தனர்.
மேலும் சாலையில் தலை கவசம் அணிந்து சாலை விதிகளையும், பாதுகாப்பு அம்சங்களோடு பின்பற்றி வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு கோஷங்கள் மற்றும் சாலை பாதுகாப்பு ஆண்டுக்கான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங் கப்பட்டன.
இந்த விழிப்புணர்வு பேரணி பூமிநாதர் கோவி லில் இருந்து தொடங்கி திருச்சுழி நெடுஞ் சாலைத் துறை உட்கோட்ட அலுவல கம் வரை நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு பேரணி யில் உதவிப்பொறியாளர் சுந்தரபாண்டியன், சாலை ஆய்வாளர்களான முத்து செல்வம், சுந்தர வள்ளி மற் றும் திருச்சுழி உட்கோட்ட பகுதியை சேர்ந்த சாலைப் பணியாளர் கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி வருகிற 11-ந் தேதி பள்ளி, கல்லூரியில் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது.
- ேபாட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
விருதுநகர்
தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி விருது நகரில் வருகிற 11-ந் தேதி பள்ளி கல்லூரி மாணவர்க ளுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது.
விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ள இந்த போட்டிகளில் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
போட்டிகள் குறித்த விவரங்கள், பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாகவும், கல்லூரிகளுக்குக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும் அனுப்பப் படும்.
போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம்பரிசு ரூ.3ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2ஆயிரம் வழங்கப்படும். மேலும் சிறப்பான பேச்சு திறனை வெளிப்படுத்தும் 2 அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.2ஆயிரம் சிறப்பு பரிசு வழங்கப்படும்.
ேபாட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி மன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சாத்தூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் கஞ்சம் பட்டி கிராமத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பராணி தலைமை தாங் கினார். துணைத் தலைவர் அருமை நாயகம் முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங் கியதும் ஊராட்சி மன்ற செயலாளர் கிராம வரவு செலவு கணக்குகளை வாசித்தார்.
இதனைத் தொடர்ந்து கிராமத்தின் வளர்ச்சி, அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது குறித்து தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் பொதுமக்கள் தங் கள் பகுதியில் உள்ள குறை கள், மேற்கொள்ள வேண் டிய பணிகள் குறித்து எடுத் துரைத்தனர்.
பின்னர் கூட்டத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் கிரா மத்தின் சுற்று பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தற்போது வரை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் விவசாயத்தை அழிக்கும் நோக்கில், தங்க ளது சுயலாபத்திற்காக சில விவசாய நிலங்களை அரசு விதிமுறைகளை மீறி வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு முயற்சி செய்து வருகின்ற னர்.
இதனால் இப்பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுவது மட்டு மின்றி நிலத்தடி நீரும் பாதிக் கப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு எவ்வித அனுமதி வழங்கக் கூடாது. அதற்கு ஊராட்சி நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தனது கோரிக்கை மனு வழங்கினார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி மன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- அழகிய மீனாள் கோவிலில் சுவாமி கும்பிடுவதில் இரு தரப்பினர் திடீரென மோதிக் கொண்டனர்.
- திருவிழாவின் போது மாவட்ட காவல்துறை சார்பாக 100-க்கும் மேற் பட்ட போலீசார் குவிக்கப் பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ளது பள்ளப்பட்டி கிராமம். இந்த கிராமத்தினருக்கும், நரிக்கு டியிலுள்ள ஒரு தரப்பினர் மற்றும் இதர பிரிவை சேர்ந்த மக்களுக்கும் சாமி கும்பிடுவதில் சமீப காலமாக பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில் நரிக்குடி பகுதியில் அமைந்துள்ள அழகிய மீனாள் கோவிலில் பள்ளப்பட்டி கிராமத்தினர் தனியாக காப்புக்கட்டி திரு விழா நடத்த முடிவு செய்த தாக கூறப்படுகிறது. இத னையறிந்த நரிக்குடி பகு தியைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தினரும் மற்றும் இதர சமூகத்தினரும் பள்ளப்பட்டி கிராமத்தினர் திருவிழாவை தனித்து நின்று நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த னர்.
இதனால் பாதிக்கப்பட்ட பள்ளப்பட்டி கிராமத்தினர் திருச்சுழி தாசில்தாரிடம் புகார் அளித்தனர். இதனை யடுத்து திருச்சுழி தாலுகா அலுவலகத்தில் இரு தரப்பையும் சேர்ந்த தலா 5 பேரை ஊர் முக்கியதர்களாக அழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து இரண்டு மணி நேர பேச்சு வார்த் தைக்கு பிறகு இரு தரப்பிலும் உடன்பாடு ஏற்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
இதில் பள்ளப்பட்டி கிரா மத்தினர் நரிக்குடி பேருந்து நிலையம் அருகேயுள்ள அய்யனார் கோவிலில் காப் புக்கட்டும் நிகழ்ச்சியை நடத் திக்கொள்வது, கிராமத்தி னர் சார்பாக 5 பொங்கல் வைத்து சாமி கும்பிடுவது, கோவில் திருவிழாவின் போது மேள, தாளமின்றி அமைதியான முறையில் வழிபாடு செய்வது என்பது போன்ற பல்வேறு கட்டுப்பா டுகளுடன் சாமி கும்பிட கூட்டத்தில் முடிவு செய்து இரு தரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர்.
இந்தநிலையில் மேலும் பள்ளப்பட்டி கிராமத்தினர் நடத்தும் இந்த திருவிழா விற்கு இந்த ஆண்டு மட்டுமே அனுமதி எனவும், வரும் காலங்களில் அனுமதி யில்லை எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு இரு தரப்பினரும் சம்மதம் தெரி வித்தனர். பள்ளப்பட்டி கிராமத்தினர் அய்யனார் சுவாமிக்கு பல்வேறு பூஜை கள் நடத்திய நிலையில் ஆண்கள், பெண்கள் உட்பட ஏராளமானோர் காப்புக் கட்டி தங்களது விரதத்தை தொடங்கினர்.
இதற்கிடையே பள்ளப் பட்டி கிராமத்தினர் அதிக எண்ணிக்கையில் பொங்கல் வைத்து வழிபாடுகள் செய்வ தற்கு மீண்டும் அனு மதி கோரியதாக கூறப்படு கிறது. இந்தநிலையில் அருப்புக்கோட்டை கோட் டாட்சியர் அலுவலகத்தில் மீண்டும் சமாதான கூட்டம் நடைபெற்றது. இதனைய டுத்து பள்ளப்பட்டி கிரா மத்தினர் கோரிய அதிகப்ப டியான பொங்கல் வைக்கும் நிகழ்ச்சிக்கு நரிக்குடி பகு தியை சேர்ந்த ஒரு தரப்பினர் மற்றும் இதர வகுப்பை சேர்ந்தவர்களுக்கு உடன் பாடு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஏற்க னவே திட்டமிட்டப்படி நேற்று மாலை பள்ளபட்டி கிராமத்தினர் போலீசாரின் பாதுகாப்புடன் நரிக்குடி அழகிய மீனாள் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோவில் வளாகத் தில் பள்ளப்பட்டி கிராமத் தினர் பொங்கல் வைத்து வழிபாடுகள் செய்தனர்.
இந்த விழாவில் பள்ளப் பட்டி கிராமத்தினர் அனை வரும் ஒன்றிணைந்து அமை தியான முறையில் சாமி கும்பிட்டு வழிபாடுகள் செய்த நிலையில் நேற்று மாலை திருவிழா நிறைவ டைந்தது. இந்த திருவிழாவின் போது மாவட்ட காவல்துறை சார்பாக 100-க்கும் மேற் பட்ட போலீசார் குவிக்கப் பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- கல்லூரி மாணவி-மருந்துகடை ஊழியர் உள்பட 3 பேர் மாயமாகினர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான எலிசபெத் ராணியை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் காளிதாஸ். இவரது மகள் மாரிசெல்வி (வயது 22). இவர் நெல்லை அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். விடுமுறைக்காக ஊருக்கு வந்தவர் எப்பொதும் செல்போனில் பேசியபடி இருந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்தனர். இந்த நிலையில் வீட்டில் இருந்த மாரிசெல்வி திடீரென மாயமானார். எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் பலனில்லை. இதைத் தொடர்ந்து மகளை கண்டுபிடித்து தருமாறு ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் காளிதாஸ் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருந்துகடை ஊழியர்
விருதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் பிரகாஷ் ராஜ் (26) மருந்தாளுனர் படிப்பு முடித்துவிட்டு சூலக்கரையில் உள்ள ஒரு மருந்துக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் தனது கல்வி சான்றிதழ்களை புதுப்பிப்பதற்காக கோவை செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார்.
பின்னர் 4 நாட்களாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் விசாரித்தபோது விரைவில் வந்து விடுவதாக கூறியுள்ளார். ஆனால் அவர் வீட்டுக்கு வரவில்லை. அவரை தொடர்பு கொண்டபோது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவர் எங்கு சென்றார் என விசாரித்து கண்டுபிடிக்க முடியவில்லை.
இதைத் தொடர்ந்து ஆமத்தூர் போலீஸ் நிலையத்தில் பால்ராஜ் புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை பகுதியை சேர்ந்தவர் ஜவகர்ராஜ். இவரது மனைவி எலிசபெத் ராணி (40). தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றவர் அங்கு செல்ல வில்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடிய வில்லை.
இதைத் தொடர்ந்து மனைவியை கண்டுபிடித்துத் தருமாறு ஜவகர் ராஜ் ஸ்ரீவில்லி புத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான எலிசபெத் ராணியை தேடி வருகின்றனர்.
- தயாரித்து காய வைப்பதற்காக கொட்டப்பட்டிருந்த பேன்சி ரக பட்டாசுகள் மீதும் தீ பற்றியது.
- தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பட்டாசு ஆலைகள் முழு வீச்சில் தயாரிப்பு பணியில் இறங்கியுள்ளன.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த வெம்பக்கோட்டை அருகே காங்கர் செவல்பட்டி கிராமத்தில் சிவகாசியை சேர்ந்த ராஜேந்திரராஜா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. நாக்பூர் மாநில பதிவு கொண்ட இந்த ஆலையில் 30-க்கும் மேற்பட்ட அறைகளும், அங்கு 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்த ஆலையில் பேன்சி ரக பட்டாசுகள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. நேற்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மருந்து கலவை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்தது. அந்த சமயத்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதில் கீழே தயாரித்து காய வைப்பதற்காக கொட்டப்பட்டிருந்த பேன்சி ரக பட்டாசுகள் மீதும் தீ பற்றியது. அடுத்தடுத்து பரவிய தீயில் பணியில் ஈடுபட்டிருந்த லட்சுமியாபுரத்தை சேர்ந்த கணேசன் (வயது 42), ராஜா (38) மற்றும் ஆலங்குளத்தை சேர்ந்த முத்தம்மாள் (35) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் சிவகாசி உள்ளிட்ட இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜா, கணேசன் ஆகிய இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளாத விக்டோரியா பட்டாசு ஆலை உரிமையாளர் ராஜேந்திர ராஜா, எலக்ட்ரிக்கல் போர் மென் சங்கையா ஆகிய இருவர் மீதும் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பட்டாசு ஆலைகள் முழு வீச்சில் தயாரிப்பு பணியில் இறங்கியுள்ளன. அதேபோல் தயாரான பட்டாசுகள் குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக கையாள மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.






